search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fire department"

    • பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு கருவிகளை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையிடம் வழங்கினார்.
    • முழு கவச உடை ரூ.1,16,435 என ஆகமொத்தம் ரூ.5,56,551 மதிப்பிலான 34 கருவிகள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டரின் தன்விருப்ப நிதி மற்றும் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு கருவிகளை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையிடம் வழங்கி, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    வருகின்ற வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இச்சூழ்நிலையில் தீயணைப்பு துறையின் மூலம் பயன்படுத்தப்படும் மேம்படுத்தப்பட்ட கருவிகளை கொண்டு பொதுமக்களை பேரிடர்களிலிருந்து மீட்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தன்விருப்ப நிதி மற்றும் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 2 எண்ணிக்கையிலான விபத்து மற்றும் மீட்பு பணியின் பொழுது இரும்பு கம்பிகளை சுலபமாக வெட்டும் கருவி ரூ.2,24,200 மதிப்பீட்டிலும்,

    மேலும் 2 எண்ணிக்கையிலான நீர் நிலைகள் மற்றும் கிணற்றுக்குள் மூழ்கி தவிப்பவர்களை தெரிந்துகொள்வதற்கான கேமரா, 2 எண்ணிக்கையிலான வெள்ளம் சூழ்ந்த இடங்களிலிருந்து நீரினை வெளியேற்றும் கருவி ஆகியவை ரூ.1,19,876 மதிப்பீட்டிலும், புகை சூழுந்த நிலையில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் கருவி ரூ.75,040 மதிப்பீட்டிலும்,

    5 எண்ணிக்கையிலான கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்கும் வகையில் கான்கிரிட் தளங்கள் மற்றும் இரும்புகளை அகற்றும் கருவி ரூ.21,000 மதிப்பீட்டிலும், 11 எண்ணிக்கையிலான பாம்பு பிடிக்கும் கருவி, 11 எண்ணிக்கையிலான முழு கவச உடை ரூ.1,16,435 என ஆகமொத்தம் ரூ.5,56,551 மதிப்பிலான 34 கருவிகள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இக்கருவிகளை முழுமையாக பயன்படுத்தி பேரிடர் காலங்களில் பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் உடைமைகளை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுபிரியா, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சூரியபிரபு மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
    • வாய்மேடு தீயணைப்புத்துறை நிலைய வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார்.ஒன்றிய க்குழு உறுப்பினர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமில்பேரிடர் மாவட்ட பயிற்றுனர் அன்னபூரணி மற்றும் வாய்மேடு தீயணைப்புத்துறை நிலைய வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் திருமறை செல்வன் நன்றி கூறினார்.

    • விளையாட்டுப் போட்டிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு 52 வீரர்கள் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் தீயணைப்பு துறை சார்பில் நாகப்பட்டினத்தில் நடைபெறும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு 52 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 36 வீரர்கள் அணிவகுப்பு மற்றும் கயிறு ஏறுதல் போன்ற தேர்வுகள் மூலம் தேர்வு செய்யபட்டனர். இதில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் குமார், நிலைய அலுவலர் விஜயகுமார், மற்றும் பண்ருட்டி நிலைய அலுவலர் ஜமுனா ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
    • நாகை மாவட்ட பேரிடர் பயிற்றுனர் அன்னபூரணி மற்றும் வாய்மேடு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் (பொறுப்பு) கண்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம்அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார் . பெண்கள் மற்றும் பேரிடர் குழு உறுப்பினர்களுக்கும் கிராம மக்களுக்கும் நாகை மாவட்ட பேரிடர்பயிற்றுனர் அன்னபூரணி மற்றும் வாய்மேடு தீயணைப்பு த்துறை நிலைய அலுவலர் பொறுப்பு கண்ணன்மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டுபயிற்சி அளித்தனர்.நிகழ்ச்சியில்ஊ ராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதி கள்உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இயற்கை பேரிடரின் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
    • இந்நிகழ்ச்சியில் பவானி தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மக்களை காப்பாற்றுவது என்பது குறித்து விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடந்து நடந்து வருகிறது.

    இதையொட்டி பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இயற்கை பேரிடரின் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    இதை தொடர்ந்து பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இயற்கை பேரிடரின்போது வெள்ளத்தில் சிக்கிய வர்களை மீட்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செய்து காண்பித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தீயணைப்பு துறையினர் காவிரி ஆற்றில் கயிறு கள் பயன்படுத்தி எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும், நீரில் மூழ்கி மயக்க நிலை அடைந்தவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும் செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் பவானி தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர் பி.ஆர்.சி. டெப்போ அருகே கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் பி.ஆர்.சி. டெப்போ அருகே டான்பெட் உரகிட்டங்கி உள்ளது. இங்குள்ள கழிவுநீர் தொட்டிக்குள் விருதுநகர் தாமரை தெருவை சேர்ந்த முத்து என்பவரது பசுமாடு விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் அங்கு வந்தனர்.

    கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆதீஸ்வரன் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அரை மணி நேரம் போராடி பசுமாட்டை பத்திரமாக மீட்டனர். பசுவை உயிருடன் மீட்டவர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர். கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த பசுமாடு சினையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    தீயணைப்புத்துறைக்கு கூடுதலாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் விஜயவேணி, நெட்டப்பாக்கம் தொகுதி கரையாம்புத்தூர் கிராமத்தில் தீயணைப்பு நிலையம் இந்த நிதியாண்டிலாவது அமைத்துத்தரப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் கமலகண்ணன், அரசின் நிதி நிலையை பொறுத்து தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என்றார்.

    அப்போது உறுப்பினர் விஜயவேணி, ஒரு தீயணைப்பு வாகனமாவது கொடுங்கள். அதை நாங்கள் கையில் இழுத்துச்சென்றாவது விபத்து நடக்கும்போது பயன்படுத்திக்கொள்கிறோம் என்றார்.

    காங்கிரஸ் உறுப்பினர்கள் தனவேலு, அனந்தராமன் ஆகியோர், கிராமங்களில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, தீயணைப்புத்துறைக்கு கூடுதலாக ரூ.2 கோடி நிதி அளிக்கவுள்ளோம். இதன்மூலம் உரிய தீயணைப்பு நிலையங்களை ஏற்படுத்தி தருவோம். உறுப்பினர்களின் கோரிக்கையை பரிசீலிப்போம் என்று கூறினார்.

    ×