search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Management Training"

    • நெல் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி நடந்தது.
    • வேளாண் இயக்குநர் தலைமை தாங்கினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண் விரிவாக்கப் பணியாளர்களுக்கான ஒருநாள் முன்பருவ பயிற்சி நடந்தது. வேளாண்மை இயக்குநர் சரசுவதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கி ணைப்பாளர் வள்ளல் கண்ணன் பயிற்சி அளித்தார். விதைநேர்த்தி முறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    நெற்பயிரில் இளம் பருவத்தில் தாக்கக்கூடிய பூச்சிகள், வளரும் பருவம், இனப்பெருக்க பருவம் மற்றும் முதிர்ச்சிப் பருவங்களில் பாதிக்கக்கூ டிய பூச்சிகளை வகைப்படுத்தி இவற்றால் ஏற்படக்கூடிய தாக்குதல் அறிகுறிகளும் இவற்றிற்கான ஒருங்கி ணைந்த பூச்சி மேலாண்மை தொழில் நுட்பங்கள், பல்வேறு பருவங்களில் தாக்கக்கூடிய நோய்களையும் வகைப் படுத்தப்பட்டு தாக்குதல் அறிகுறி மேலாண்மையில் முக்கியமாக நோய் எதிர்ப்புத்தன்மை உள்ள இரகங்களில் தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மையும், இவற்றின் காலநிலை மாற்றத்தை கணக்கில் கொண்டு எடுக்கப்பட வேண்டிய நோய் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

    பயிற்சியில், 42 வேளாண் விரிவாக்கப்பணியாளர்கள் பங்கேற்றனர். வேளாண் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி சம்பந்தமாக விரிவாக்க பணி ஒருங்கிணைப்பாளர் சிவக்குமாரை 88259 86445 என்ற எண்ணில் தொடர் கொண்டு பதிவு செய்துகொள்ளலாம் என திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    • பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
    • நாகை மாவட்ட பேரிடர் பயிற்றுனர் அன்னபூரணி மற்றும் வாய்மேடு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் (பொறுப்பு) கண்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம்அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார் . பெண்கள் மற்றும் பேரிடர் குழு உறுப்பினர்களுக்கும் கிராம மக்களுக்கும் நாகை மாவட்ட பேரிடர்பயிற்றுனர் அன்னபூரணி மற்றும் வாய்மேடு தீயணைப்பு த்துறை நிலைய அலுவலர் பொறுப்பு கண்ணன்மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டுபயிற்சி அளித்தனர்.நிகழ்ச்சியில்ஊ ராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதி கள்உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×