search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேலாண்மை பயிற்சி"

    • பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமை வகித்தார்.
    • 146 மகளிர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி ஆலோசணை படி காரிமங்கலம் வட்டார இயக்க மேலாண்மை அலகு மையத்தில் காலை உணவு திட்ட மகளிருக்கான உணவு பாதுகாப்பு மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா மேற்பார்வையில், வட்டார வள மைய இயக்க மேலாளர் அனுசுயா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் முருகம்மாள், சிவகாமி முன்னிலை வகித்தனர். காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமை வகித்தார்.

    காரிமங்கலம் ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு தயாரித்து அளிக்கும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களில் 146 பள்ளிகளில் இருந்து தலா ஒருவர் வீதம் 146 மகளிர்களுக்கு காலை, மாலை என 2 பிரிவுகளாக உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டது. நிகழச்சியில் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் பேசும்போது:-

    முதலைமைச்சரின் காலை உணவு திட்டம் உணவு தயாரிக்கும் கூடத்தில் தினந்தோறும் மாதிரி உணவு எடுத்து வைக்கவும், உணவு பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்தும், உணவுப் பொருள்களில் சிலவற்றில் வீட்டளவில் கலப்படம் கண்டறிதல் குறித்து உணவுப் பொருட்கள் கொண்டு நேரடி செயல் விளக்கமுடன், காலாவதி தன்மை கவனித்து உபயோகிக்கவும், பயிற்சியில் தெரிவித்த நடைமுறைகள் வழிமுறைகள் முறையாக பின்பற்ற படுதலுடன் பதிவேடுகளும் பராமரிக்கபட வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.

    • நெல் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி நடந்தது.
    • வேளாண் இயக்குநர் தலைமை தாங்கினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண் விரிவாக்கப் பணியாளர்களுக்கான ஒருநாள் முன்பருவ பயிற்சி நடந்தது. வேளாண்மை இயக்குநர் சரசுவதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கி ணைப்பாளர் வள்ளல் கண்ணன் பயிற்சி அளித்தார். விதைநேர்த்தி முறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    நெற்பயிரில் இளம் பருவத்தில் தாக்கக்கூடிய பூச்சிகள், வளரும் பருவம், இனப்பெருக்க பருவம் மற்றும் முதிர்ச்சிப் பருவங்களில் பாதிக்கக்கூ டிய பூச்சிகளை வகைப்படுத்தி இவற்றால் ஏற்படக்கூடிய தாக்குதல் அறிகுறிகளும் இவற்றிற்கான ஒருங்கி ணைந்த பூச்சி மேலாண்மை தொழில் நுட்பங்கள், பல்வேறு பருவங்களில் தாக்கக்கூடிய நோய்களையும் வகைப் படுத்தப்பட்டு தாக்குதல் அறிகுறி மேலாண்மையில் முக்கியமாக நோய் எதிர்ப்புத்தன்மை உள்ள இரகங்களில் தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மையும், இவற்றின் காலநிலை மாற்றத்தை கணக்கில் கொண்டு எடுக்கப்பட வேண்டிய நோய் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

    பயிற்சியில், 42 வேளாண் விரிவாக்கப்பணியாளர்கள் பங்கேற்றனர். வேளாண் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி சம்பந்தமாக விரிவாக்க பணி ஒருங்கிணைப்பாளர் சிவக்குமாரை 88259 86445 என்ற எண்ணில் தொடர் கொண்டு பதிவு செய்துகொள்ளலாம் என திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் அருகே தன்னார்வலர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.
    • இந்த பயிற்சியை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், சாத்தக்கோன் வலசை கிராமத்தில் உள்ள அரியமான் ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அபாய குறைப்பு முகமை மூலம் ஆப்தா மித்ரா திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெறுகிறது.

    இதை மாவட்ட கலெக்டர். ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார். ஆப்தா மித்ரா திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 300 தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்க தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் கட்டமாக 200 தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இந்த பயிற்சியானது தகுதி வாய்ந்த, பேரிடர் மேலாண்மையில் அனுபவ–மிக்க பயிற்றுநர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. பேரிடர் காலங்களில் அவசர சூழ்நிலைகளை கையாள்வது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

    பயிற்சியின் முடிவில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், காப்பீடு, மற்றும் அவசர கால பேரிடர் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மேதலோடை கிராமத்தில் உள்ள ஊரணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியிகளையும், வண்ணாங்குண்டு கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும், கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.

    கீழக்கரை வட்டம் குலபதம் கிராமத்தில் பட்டா மாறுதலுக்கான உத்தரவு ஆணையினை 22 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர், பேரிடர் மேலாண்மை பயிற்சி மைய இயக்குநர் சோனியா, ராமநாதபுரம் வருவாய் வட்டாட்சியர் முருகேசன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் முருகேசன், சரவணன் , திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
    • நாகை மாவட்ட பேரிடர் பயிற்றுனர் அன்னபூரணி மற்றும் வாய்மேடு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் (பொறுப்பு) கண்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம்அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார் . பெண்கள் மற்றும் பேரிடர் குழு உறுப்பினர்களுக்கும் கிராம மக்களுக்கும் நாகை மாவட்ட பேரிடர்பயிற்றுனர் அன்னபூரணி மற்றும் வாய்மேடு தீயணைப்பு த்துறை நிலைய அலுவலர் பொறுப்பு கண்ணன்மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டுபயிற்சி அளித்தனர்.நிகழ்ச்சியில்ஊ ராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதி கள்உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×