search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Management"

    • சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக பழைய குப்பைகள் தேங்கிய நிலையில் இருந்தது
    • இதில் அடிக்கடி சமூக விரோதிகள் தீவைப்பதால் அந்தபகுதி முழுவதும் புகைமயமாக காட்சியளிக்கும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக பழைய குப்பைகள் தேங்கிய நிலையில் இருந்தது. இதில் அடிக்கடி சமூக விரோதிகள் தீவைப்பதால் அந்த முழுவதும் பகுதி புகைமாக காட்சியளிக்கும்.இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதை உணர்ந்த பேரூராட்சி நிர்வாகம் இந்த தேங்கிய குப்பை கழிவு களை அகற்ற பேரூராட்சி துறையிடம் அனுமதி கேட்டப்பட்டது. இந்நிலையில் அந்த தேங்கி கிடக்கும் பழைய குப்பை கழிவுகளைஉயிரி அகழ்வு முறையில் இயந்திரம் மூலம் அகற்றுவதற்கு தனியார் நிறுவனத்திடம் ரூ.32.32 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டிருந்தது. இந்த குப்பைகளை அகற்றும் பணி செயல் அலுவலர் உஷா, தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ் ஆகியோர் மேற்பார்வையில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த இயந்திரத்தில் கல், மண் தனியாகவும், பிளாஸ்டிக்ல் பொருட்கள் தனியாகவும், மக்கிய குப்பைகள் தனியாகவும் வெளியேறும்.

    இந்நிலையில் உயிரி அகழ்வு முறையில் குப்பைகளை அகற்றும் பணியை நேற்று ' காலை கூடுதல் தலைமை செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாள ருமான சிவதாஸ்மீனா, கலெக்டர் ஷ்ரவன்குமார் மற்றும் அதிகாரிகளுடன் வந்து ஆய்வு செய்தார். மேலும் ஒப்பந்ததாரரிடம்இந்த பணியை காலதாமதம் இல்லாமல் விரைவாக நேர்த்தியாக செய்து முடிக்கும்படி துறை செயலாளர் உத்தரவிட்டார். இந்தநிலையில் பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் பேரூராட்சி துணை சேர்மன் ராகேஷ், வார்டு உறுப்பினர்கள் , சாரங்கன் ,உமா ஜெயவேல், காந்தி,பேபிகுமார், பத்மாவதி சிவகுமார், சுகாதார ஆய்வாளர் முத்துகுமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ராமநாதபுரம் அருகே தன்னார்வலர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.
    • இந்த பயிற்சியை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், சாத்தக்கோன் வலசை கிராமத்தில் உள்ள அரியமான் ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அபாய குறைப்பு முகமை மூலம் ஆப்தா மித்ரா திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெறுகிறது.

    இதை மாவட்ட கலெக்டர். ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார். ஆப்தா மித்ரா திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 300 தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்க தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் கட்டமாக 200 தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இந்த பயிற்சியானது தகுதி வாய்ந்த, பேரிடர் மேலாண்மையில் அனுபவ–மிக்க பயிற்றுநர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. பேரிடர் காலங்களில் அவசர சூழ்நிலைகளை கையாள்வது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

    பயிற்சியின் முடிவில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், காப்பீடு, மற்றும் அவசர கால பேரிடர் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மேதலோடை கிராமத்தில் உள்ள ஊரணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியிகளையும், வண்ணாங்குண்டு கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும், கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.

    கீழக்கரை வட்டம் குலபதம் கிராமத்தில் பட்டா மாறுதலுக்கான உத்தரவு ஆணையினை 22 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர், பேரிடர் மேலாண்மை பயிற்சி மைய இயக்குநர் சோனியா, ராமநாதபுரம் வருவாய் வட்டாட்சியர் முருகேசன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் முருகேசன், சரவணன் , திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த புத்தக திருவிழா வானது அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • அனைத்து வகையான புத்தகங்கள், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் உள்ள புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்னையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இனைந்து நடத்தும் புத்தக திருவிழாவை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீனவளர்ச்சி கழகத்தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ கழகத் தலைவர் மதிவாணன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த புத்தக திருவிழா வானது அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து 110 பதிப்பாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். அனைத்து வகையான புத்தகங்கள், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் உள்ள புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது. தினந்தோறும் மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை கல்லூரி, பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்சிகளும், தமிழ் அறிஞர்களின் கருத்தர ங்ககளும், சிந்தனையரங்கம் போன்ற நிகழ்சிகள் நடை பெற உள்ளன.இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, திட்ட இயக்குநர் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, வருவாய் கோட்ட அலுவலர்கள் முருகேசன் (நாகை), ஜெயராஜ்பௌலின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், நாகை நகரமன்ற தலைவர் மாரிமுத்து, தென்இந்திய புத்தக விற்பனையாளர் சங்க தலைவர் வைரவன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஆசனூரில் தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஆசனூர் நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் ஆசனூர் குளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

    தாளவாடி, ஜூன்.16-

    ஆசனூரில் தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆசனூர் நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் ஆசனூர் குளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

    வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தண்ணீரால் நனைந்த சாக்குப்பையை போட்டு அணைப்பது குறித்தும் விளக்கம் அளிக்க ப்பட்டது. இதில் கிராம மக்கள் பங்கேற்று தீத்தடுப்பு நடவடிக்கை குறித்து செயல்விளக்கத்தை பார்வையிட்டனர்.

    மேலும் பேரிடர் காலங்களில் வெள்ளம் வரும்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்து அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ×