search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தக கண்காட்சி
    X

    புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து அரங்கினை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டனர்.

    புத்தக கண்காட்சி

    • இந்த புத்தக திருவிழா வானது அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • அனைத்து வகையான புத்தகங்கள், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் உள்ள புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்னையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இனைந்து நடத்தும் புத்தக திருவிழாவை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீனவளர்ச்சி கழகத்தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ கழகத் தலைவர் மதிவாணன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த புத்தக திருவிழா வானது அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து 110 பதிப்பாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். அனைத்து வகையான புத்தகங்கள், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் உள்ள புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது. தினந்தோறும் மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை கல்லூரி, பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்சிகளும், தமிழ் அறிஞர்களின் கருத்தர ங்ககளும், சிந்தனையரங்கம் போன்ற நிகழ்சிகள் நடை பெற உள்ளன.இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, திட்ட இயக்குநர் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, வருவாய் கோட்ட அலுவலர்கள் முருகேசன் (நாகை), ஜெயராஜ்பௌலின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், நாகை நகரமன்ற தலைவர் மாரிமுத்து, தென்இந்திய புத்தக விற்பனையாளர் சங்க தலைவர் வைரவன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×