search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devendra Fadnavis"

    • மகாராஷ்டிர வாகனங்கள் மீது கர்நாடகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.
    • மகாராஷ்டிர துணை முதல்வர் பட்னாவிஸ், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் அதிருப்தி தெரிவித்தார்.

    மும்பை:

    கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் இடையே எல்லை பிரச்சினை மீண்டும் பூதாகரமாகி உள்ளது.

    கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் ஹிரேபாக்வாடி சுங்கச்சாவடி அருகில் கர்நாடக அமைப்பினர் மகாராஷ்டிரா மாநில வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி இரு மாநிலங்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கர்நாடக அரசைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன.

    இந்நிலையில், கர்நாடகாவில் மகாராஷ்டிர வாகனங்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு துணை முதல் மந்திரி பட்னாவிஸ், கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை போனில் தொடர்பு கொண்டு அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக துணை முதல்மந்திரிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், தேவேந்திர பட்னாவிஸ், கர்நாடக முதல் - மந்திரி பசவராஜ் பொம்மையை போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் ஹிரேபாக்வாடி தொடர்பாக பசவராஜ் பொம்மையிடம் அதிருப்தியை தெரிவித்தார். அதற்கு கர்நாடக முதல் மந்திரி சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகத்துக்கு வரும் வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதாகவும் பட்னாவிசிடம் உறுதி அளித்தார் என தெரிவித்தனர்.

    • இது 2012-ம் ஆண்டில் நடந்த பிரச்சினை.
    • எந்த கிராமங்களும் கர்நாடகத்துடன் செல்லாது.

    மும்பை :

    மகாராஷ்டிரா எல்லையில் உள்ள பெலகாவி மாவட்டம் கர்நாடக மாநில ஆட்சி எல்கையில் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள 80-க்கும் மேற்பட்ட மராத்தி மொழி பேசும் கிராமங்களை தங்களது மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

    இந்தநிலையில் எல்லை பிரச்சினை தொடர்பான வழக்கில் சட்ட குழுவை ஒருங்கிணைக்க மந்திரிகள் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் சம்புராஜ் தேசாய் ஆகியோரை மகாராஷ்டிரா அரசு நேற்று முன்தினம் நியமித்தது.

    இதேபோல எல்லை பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சில தகவல்களை எடுத்து வைத்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    மகாராஷ்டிராவில் உள்ள ஜாட் தாலுகாவில் கடும் வறட்சி மற்றும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது அங்குள்ள கிராமங்களை கர்நாடகத்துடன் இணைக்க வேண்டும் என்று அந்த கிராம பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றின. அப்போது கர்நாடக அரசு தலையிட்டு அந்த கிராமங்களுக்கு குடிநீர் வழங்க முன்வந்தது. இது குறித்து நாங்கள் இப்போதும் பரிசீலித்து வருகிறோம்.

    மேலும் மகாராஷ்டிராவில் உள்ள கன்னட பள்ளிகளுக்கு சிறப்பு மானியம் வழங்கவும், மாநிலத்தை ஒன்றிணைக்க போராடிய அம்மாநிலத்தில் உள்ள கன்னடர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும் எனது அரசு முடிவு செய்துள்ளது.

    எல்லை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரும்போது அதை எதிர்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு மற்றும் கர்நாடகத்தை சேர்ந்த மூத்த வக்கீல்கள் கொண்ட ஒரு வல்லமைமிக்க சட்ட குழு உருவாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடக முதல்-மந்திரிக்கு நேற்று பதிலடி கொடுக்கும் வகையில் மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    எங்களது சாங்கிலி மாவட்டத்தில் உள்ள சில கிராம பஞ்சாயத்துகள் தான் கர்நாடக முதல்-மந்திரி கூறியதுபோல தீர்மானங்கள் நிறைவேற்றின. இது 2012-ம் ஆண்டில் நடந்த பிரச்சினை. தற்போது எந்த பஞ்சாயத்தும் அதுபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றவில்லை. எந்த கிராமங்களும் கர்நாடகத்துடன் செல்லாது. அந்த கிராமங்களின் தண்ணீர் திட்டத்தை நிறைவேற்றப்போகிறோம். கொரோனா மற்றும் உத்தவ் தாக்கரே அரசால் இந்த தண்ணீர் திட்டம் தாமதமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல்-மந்திரி ஷிண்டே கட்சியை சேர்ந்த சம்புராஜ் தேசாய் கூறியதாவது:-

    கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சில ஆபத்தான கருத்துகளை முன் வைத்துள்ளார். இதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது. எனக்கு கிடைத்த தகவலின்படி, சாங்கிலியில் உள்ள ஜாட் தாலுகாவின் வறண்ட பகுதிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வழக்குவதற்கான திட்டத்தை மாநில அரசு ஏற்கனவே அனுமதித்துள்ளது. சுமார் ரூ.1,200 கோடியிலான இந்த திட்டம் குறித்து தொழில்நுட்ப ஆய்வு நடந்து வருகிறது. இதன்மூலம் அந்த கிராமங்களுக்கு கண்டிப்பாக மகாராஷ்டிராவில் இருந்து தண்ணீர் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதன் மூலம் எல்லைப்பிரச்சினையில் மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

    • அந்தேரி இடைத்தேர்தலில் வேட்பாளரை பா.ஜ.க. திரும்ப பெற்றது.
    • இந்த விவகாரத்தில் ராஜ் தாக்கரே துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

    மும்பை:

    அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தவேண்டாம் என பா.ஜ.க. துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசை நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கேட்டு கொண்டு இருந்தார்.

    இதற்கிடையே, அந்தேரி கிழக்கு தொகுதியில் நிறுத்தி இருந்த வேட்பாளரை பா.ஜ.க. திரும்ப பெற்றது. இதையடுத்து பா.ஜ.க. சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்த முர்ஜி பட்டேல் அதை திரும்ப பெற்றார்.

    இந்நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை பா.ஜ.க. திரும்ப பெற்ற விவகாரத்தில் ராஜ் தாக்கரே துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், நேர்மறையான அரசியல் கலாச்சாரத்தை கொண்டு இருப்பது அவசியமாகும். இதுபோன்ற நல்ல கலாச்சாரம் பரவ நவநிர்மாண் சேனா எப்போதும் ஆதரவாக இருக்கும். எனது கோரிக்கைக்கு செவி கொடுத்தற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

    • அந்தேரி கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
    • இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என பா.ஜ.க.வுக்கு ராஜ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.

    மும்பை:

    ராஜ் தாக்கரே ஆதரவு அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்தேரி கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பில் மறைந்த ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே போட்டியிடுகிறார். இதேபோல ஏக்நாத் ஷிண்டே அணி ஆதரவுடன் பா.ஜ.க. வேட்பாளராக முர்ஜி பட்டேல் நிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா வேட்பாளர் ருதுஜா லட்கேவுக்கு ராஜ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், அவர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என பா.ஜ.க.வுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

    இது தொடர்பாக ராஜ் தாக்கரே வெளியிட்டுள்ள கடிதத்தில், மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேர்தலில் நவநிர்மாண் சேனா போட்டியிடாது. எனவே நீங்களும் இடைத்தேர்தலில் ருதுஜா லட்கேவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மறைந்த ரமேஷ் லட்கேவின் அரசியல் பயணம், வளர்ச்சியை நான் பார்த்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • சிவசேனா சின்னம் முடக்கப்பட்டதற்கு சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • தேர்தல் ஆணையத்தால் தங்கள் அணிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.

    மும்பை

    அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சிவசேனா கட்சியின் 2 அணிகளும் சிவசேனா சின்னத்தையோ அல்லது பெயரையோ பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் சிவசேனா சின்னம் முடக்கப்பட்டதற்கு சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்தால் தங்கள் அணிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். இது குறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி தேர்தல் ஆணையத்தின் விசாரணை முன்பு பலவீனமாக இருப்பதை உணர்ந்துள்ளது. எனவே விசாரணை தேதிகளை வேண்டுமென்றே ஒத்திவைக்க கோருகிறது. ஆனால் ஒத்திவைப்பதன் மூலம் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது.

    சிவசேனா உத்தவ் தாக்கரே அணியும், காங்கிரஸ் கட்சியும் தங்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகள் அல்லது அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும்போதெல்லாம் தங்களுக்கு மத்திய அரசு மூலம் அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறி அவதூறாக அழுதுகொண்டு இருக்கின்றன.

    கடந்த 25 ஆண்டுகளாக ஒரு கட்சி உடையும் பிரச்சினையை எதிர்கொண்ட போதெல்லாம், அசல் சின்னத்தையும், பெயரையும் முடக்கி தேர்தல் ஆணையம் இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஷிண்டேவின் பேரனை குறிப்பிட்டு கருத்து தெரிவிப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
    • பிரதமர் நரேந்திர மோடி மக்களின் இதயத்தில் வாழ்க்கிறார்.

    மும்பை :

    சிவசேனா கட்சி 2-ஆக பிளவு பட்டுள்ள நிலையில் வழக்கமாக நடத்தப்படும் சிவசேனா கட்சியின் தசரா பொதுக்கூட்டம் மும்பை சிவாஜி பூங்காவில் உத்தவ் தாக்கரே தலைமையிலும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பேரணி பி.எம்.சி. மைதானத்திலும் 2 இடங்களில் நடைபெற்றது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசிக்கொண்டனர்.

    அப்போது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது உரையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் மகனான எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டேவை ஒரு ஏமாற்று பேர்வழி என்று கூறியதுடன், அவரது ஒன்றரை வயது பேரனையும் விமர்சிக்கும் வகையில் பேசியதாக தெரிகிறது.

    இவரின் பேச்சுக்கு எம்.பி.ஸ்ரீகாந்த் ஷிண்டே கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே போன்ற தலைவர்கள் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் பேரனை குறிப்பிட்டு கருத்து தெரிவிப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இது மிகவும் கீழ்த்தரமானது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பகிரங்கமாக தனது வார்த்தைகளை திரும்ப பெறவேண்டும்.

    மராட்டியத்தில் ஒன்றரை வயது குழந்தையை பற்றி கருத்து தெரிவித்தால் நாம் எங்கே செல்கிறோம்? இதுபோன்ற கருத்துகளுக்கு நான் கடும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரை சந்தித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளுக்கு இடையே இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து வருகிறது. ஆனால் இது அனைத்தும் வீணான முயற்சி தான். பிரதமர் நரேந்திர மோடி மக்களின் இதயத்தில் வாழ்க்கிறார்" என்றார்.

    • மகா விகாஸ் அகாடி அரசு சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு காரணமாக கவிழ்ந்தது.
    • மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியில் நெருக்கடிக்கு உத்தவ் தாக்கரே மட்டுமே காரணமாவார்.

    மும்பை :

    சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இயங்கிய உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு, சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு காரணமாக கவிழ்ந்தது. இந்த பிளவுக்கு பா.ஜனதா தான் காரணம் என சிவசேனா கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்தநிலையில் இது குறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியில் நிலைதன்மையின்மை மற்றும் நெருக்கடிக்கு உத்தவ் தாக்கரே மட்டுமே காரணமாவார். சிவசேனாவின் பிளவுக்கும் அவரது செயல்பாடு தான் காரணம். 40 எம்.எல்.ஏ.க்கள் அவரது மகாவிகாஸ் அகாடி கூட்டணியை விட்டு வெளியேறியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எப்போதும் வழக்கமாக , "நீங்கள் எனது அரசை கவிழ்க்க முயற்சி செய்வதாக கூறுவார்" ஆனால் நான், "உங்கள் அரசு ஒரு நாள் கவிழும் அதை நீங்கள் உணர மாட்டீகள் என்று கூறுவேன். கடைசியில் நான் கூறியது தான் நடந்துள்ளது.

    பா.ஜனதாவும், சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைக்க மக்கள் அளித்த தீர்ப்பை உத்தவ் தாக்கரே மாற்று கூட்டணி அமைத்து கேலி செய்தார். நாங்கள் கூட்டணியாக போட்டியிட்டபோது ஒவ்வொரு கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் அடுத்த முதல்-மந்திரி பா.ஜனதாவை சேர்ந்தவர் தான் என்று கூறினர். அப்போது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் மேடையில் அமர்ந்து கைத்தட்டினார். ஆனால் பேராசை திறன் அதிகரிக்கும்போது, இதுபோன்ற முடிவுகளை அவர்கள் எடுக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகாராஷ்டிர அரசின் மந்திரிசபையில் 18 பேர் மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
    • துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு உள்துறை மற்றும் நிதித்துறை ஒதுக்கப்பட்டது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநில முதல் மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்று 2 மாதங்களை நெருங்கியுள்ளது.

    இதற்கிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிர மாநில அரசின் மந்திரிசபை விரிவாக்கம் நடந்தது. அதில் 18 பேர் மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநில முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தேவேந்திர பட்னாவிஸ் - உள்துறை மற்றும் நிதித்துறை

    ராதாகிருஷ்ண விகே பாட்டீல்- வருவாய்த்துறை

    சுதிர் முங்கந்திவார் - வனத்துறை

    சந்திரகாந்த் பாட்டீல் - உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை. கூடுதலாக பாராளுமன்ற விவகாரங்களையும் கவனிப்பார்.

    தீபக் கேசர்கர் (ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா) - பள்ளிக் கல்வித் துறை

    அப்துல் சத்தார் - வேளாண்மைத் துறை

    நகர்ப்புற மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட மேலும் 11 அமைச்சகங்கள் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கும், தேவேந்திர பட்னாவிஸ் திட்ட அமைச்சகத்தையும் கூடுதல் பொறுப்பாக கையாளுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மந்திரி சபை விரிவாக்கத்தில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • நிதித்துறையை கைப்பற்ற பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது.

    மும்பை :

    ஜூன் 30-ந் தேதி ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். சுமார் 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது.

    ஏக்நாத் ஷிண்டே அணி மற்றும் பா.ஜனதாவை சேர்ந்த தலா 9 பேர் என மொத்தம் 18 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். இதனால் ஷிண்டே, பட்னாவிசை சேர்த்து மந்திரி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

    நீண்ட இழுபறிக்கு பிறகு நடந்த மந்திரி சபை விரிவாக்கத்தில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்த மந்திரி சபை விரிவாக்கத்தின் போது பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதி அளித்துள்ளார்.

    மந்திரி சபை விரிவாக்கத்தை தொடர்ந்து உடனடியாக இலாகா ஒதுக்கீடு செய்வது வழக்கம். ஆனால் மந்திரி சபை விரிவாக்கத்தை போல மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்வதிலும் இழுபறி நீடித்து வருகிறது. முக்கிய இலாகாக்களை கைப்பற்ற இரு தரப்பினர் இடையே போட்டி வலுத்து உள்ளதால், இந்த இழுபறி நீடிப்பதாக தெரியவந்தது.

    இருப்பினும் இலாகா பகிர்வு தொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முக்கிய இலாகாவான உள்துறையை தன்வசம் வைத்து கொள்வார் என பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினரை கண்காணிக்க இந்த இலாகா அவருக்கு உதவும் என்றும் அவர் கூறினார்.

    தேவேந்திர பட்னாவிஸ் 2014 முதல் 2019 வரை முதல்-மந்திரியாக இருந்தபோது, உள்துறையை தன் வசமே வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல மற்றொரு முக்கிய இலாகாவான நிதித்துறையை கைப்பற்ற பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது.

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே எந்த இலாகாவை நிர்வகிப்பார் என தெளிவாக தெரியவில்லை. எனினும் அவர் நகர்ப்புற வளர்ச்சி, மாநில அரசு போக்குவரத்து கழகம் ஆகிய இலாகாக்களை வகிப்பார் என கூறப்படுகிறது. கடந்த மகா விகாஷ் அகாடி ஆடசியில் அவர் பொதுப்பணித்துறை, நகர வளர்ச்சி, மாநில போக்குவரத்து கழகம் ஆகிய இலாகாக்களை வகித்தார்.

    பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மூத்த தலைவர் சுதீர் முங்கண்டிவார் ஆகியோருக்கு முக்கிய இலாகாக்கள் வழங்கப்படும் என தெரிகிறது. கடந்த பா.ஜனதா தலைமையிலான ஆட்சியில் சந்திரகாந்த் பாட்டீல் வருவாய் மற்றும் கூட்டுறவு இலாகாக்களையும், சுதீர் முங்கண்டிவார் நிதி மற்றும் வனத்துறையையும் வகித்தனர்.

    பா.ஜனதாவை சேர்ந்த மற்றொரு மந்திரியான விஜய்குமார் காவித்துக்கு பழங்குடியினர் நலத்துறை ஒதுக்கப்படும் என தெரிகிறது. மேலும் அந்த கட்சியை சேர்ந்த தலித் தலைவரான சுரேஷ் காடேக்கு சமூக நீதித்துறை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    • மகாராஷ்டிர முதல் மந்திரி, துணை முதல் மந்திரி ஆகியோர் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தனர்.
    • ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளனர்.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்துப் பேசினர்.

    தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது மகாராஷ்டிராவின் தற்போதைய நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியிருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

    மேலும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரையும் சந்தித்தனர்.

    ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளனர்.

    • ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியினரால் மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
    • மாநில அரசில் சமீபத்தில் நடைபெற்ற மாற்றங்கள் மிகவும் பரபரப்பாக இருந்தது.

    மும்பை :

    சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியினரால் மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த 30-ந்தேதி முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிசும் பதவி ஏற்றனர். இந்த நிலையில் புதிய அரசின் மந்திரி சபை எப்போது விரிவாக்கம் செய்யப்படும் என்ற கேள்வி எழுந்தது.

    இதுகுறித்த நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், "மந்திரி சபை விரிவாக்கம் விரைவில் செய்யப்படும். மந்திரிகள் இலாகா பங்கீடு குறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். இதேபோல முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவும் மந்திரி இலாகா ஒதுக்கீடு குறித்து விவாதிக்க சிறிது நேரம் தேவைப்படுவதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    முதலில் நாங்கள் சரியாக சுவாசிக்க முயற்சிக்கிறோம். மாநில அரசில் சமீபத்தில் நடைபெற்ற மாற்றங்கள் எங்களுக்கு மிகவும் பரபரப்பாக இருந்தது. நானும், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் அமர்ந்து இலாகாக்கள் ஒதுக்கீடு குறித்து விவாதிப்போம். பா.ஜனதாவின் தேசிய தலைவர்களிடம் இருந்தும் இதுகுறித்து ஆலோசனைகளை பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் அதிருப்தி அணியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய நோட்டீசு அனுப்பியது தொடர்பான வழக்கு, சிவசேனா கட்சியின் கொறடாவை மாற்றிய சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு ஆகியவை வருகிற 11-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என அரசு வட்டாரங்களின் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

    • நான் அரசில் பங்கேற்க மாட்டேன் என்பதும் முடிவு செய்யப்பட்டது.
    • நான் துணை முதல்-மந்திரியாக மனதளவில் தயாராகவில்லை.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமைக்கு எதிராக திரும்பி ஏக்நாத் ஷிண்டே அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தினார். அவர் மகாவிகாஸ் அகாடியில் இருந்து வெளியேறி ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தார். அவருக்கு பா.ஜனதா துணை முதல்-மந்திரி பதவி கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத வகையில் பா.ஜனதா அவருக்கு முதல்-மந்திரி பதவியை கொடுத்தது. இது பா.ஜனதாவின் தலைமை எடுத்த ராஜதந்திர முடிவு என கூறப்பட்டது.

    இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்-மந்திரி பதவியை கொடுக்குமாறு நான் தான் கூறினேன் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

    " எங்கள் தலைவர்கள் மோடி, அமித்ஷா, ஜே.பி. நட்டா என்னிடம் கேட்டு தான் ஏக்நாத் ஷிண்டேயை முதல்-மந்திரியாக்க முடிவு செய்தனர். ஏக்நாத் ஷிண்டேயை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என நான் தான் கூறினேன் என்று கூறினால் கூட தவறில்லை. நான் கூறியதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

    மேலும் நான் அரசில் பங்கேற்க மாட்டேன் என்பதும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஜே.பி. நட்டா என்னை தொடர்பு கொண்டு நான் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்க வேண்டும் என கட்சி முடிவு செய்து இருப்பதாக கூறினார். உள்துறை மந்திரி அமித்ஷாவும் பேசினார்.

    எனினும் துணை முதல்-மந்திரியாக நான் மனதளவில் தயாராகவில்லை. ஏக்நாத் ஷிண்டேவுக்கு வெளியில் இருந்து உதவி செய்யவே தயாராக இருந்தேன். எனினும் எனது தலைவர்களின் உத்தரவால் எனது முடிவை மாற்றிக்கொண்டேன். " என்றார்.

    ×