என் மலர்
இந்தியா

தாங்கள் பலவீனமாக இருப்பது உத்தவ் தாக்கரே அணிக்கு தெரியும்: தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம்
- சிவசேனா சின்னம் முடக்கப்பட்டதற்கு சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- தேர்தல் ஆணையத்தால் தங்கள் அணிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.
மும்பை
அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சிவசேனா கட்சியின் 2 அணிகளும் சிவசேனா சின்னத்தையோ அல்லது பெயரையோ பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் சிவசேனா சின்னம் முடக்கப்பட்டதற்கு சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்தால் தங்கள் அணிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். இது குறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி தேர்தல் ஆணையத்தின் விசாரணை முன்பு பலவீனமாக இருப்பதை உணர்ந்துள்ளது. எனவே விசாரணை தேதிகளை வேண்டுமென்றே ஒத்திவைக்க கோருகிறது. ஆனால் ஒத்திவைப்பதன் மூலம் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது.
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியும், காங்கிரஸ் கட்சியும் தங்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகள் அல்லது அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும்போதெல்லாம் தங்களுக்கு மத்திய அரசு மூலம் அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறி அவதூறாக அழுதுகொண்டு இருக்கின்றன.
கடந்த 25 ஆண்டுகளாக ஒரு கட்சி உடையும் பிரச்சினையை எதிர்கொண்ட போதெல்லாம், அசல் சின்னத்தையும், பெயரையும் முடக்கி தேர்தல் ஆணையம் இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






