search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delhi capitals"

    • ஜேக் ஃபிரேசர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.
    • லக்னோ சார்பில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 26 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய லக்னோ அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல். ராகுல் முறையே 19 மற்றும் 39 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 3 ரன்களிலும், மார்கஸ் ஸ்டாயினிஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பில் ஆயுஷ் பதோனி சிறப்பாக ஆடி 34 பந்துகளில் 55 ரன்களை குவித்தார். டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இஷாந்த் சர்மா, முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா நல்ல துவக்கம் கொடுத்தார். 22 பந்துகளில் 32 ரன்களை குவித்த பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டேவிட் வார்னர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஜேக் ஃபிரேசர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 35 பந்துகளில் 55 ரன்களை விளாசிய ஜேக் ஃபிரேசர் நவீன் உல் ஹக் பந்தில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய கேப்டன் ரிஷப் பந்த் 24 பந்துகளில் 41 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    18.1 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2024 ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

    லக்னோ சார்பில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும், யாஷ் தாக்கூர் மற்றும் நவீன் உல் ஹக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • கே.எல். ராகுல் 39 ரன்களை குவித்தார்.
    • குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 26 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லாங்கோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய லக்னோ அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல். ராகுல் முறையே 19 மற்றும் 39 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 3 ரன்களிலும், மார்கஸ் ஸ்டாயினிஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பில் ஆயுஷ் பதோனி சிறப்பாக ஆடி 34 பந்துகளில் 55 ரன்களை குவித்தார். டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இஷாந்த் சர்மா, முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • லக்னோ அணி ஒரே ஒரு போட்டியில் தோல்வியுற்றுள்ளது.
    • டெல்லி அணி நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 26 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

    லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் லக்னோ அணி ஒரே ஒரு போட்டியில் தோல்வியுற்றுள்ளது. டெல்லி அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது.

    அந்த வகையில், வெற்றி பெறும் முனைப்பில் டெல்லி அணியும், தொடர் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் லக்னோ அணியும் களமிறங்குகின்றன.

    • லக்னோ அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார்.
    • ஒருவார காலம் மருத்துவ மேற்பார்வையில் இருக்க வேண்டிய அவசியம்.

    ஐ.பி.எல். 2024 தொடரில் லக்னோ அணிக்காக களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ். இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் தனது அபாரமான பந்துவீச்சு காரணமாக பிரபலமாகியுள்ளார்.

    இந்த நிலையில் காயம் காரணமாக மயங்க் யாதவ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் களமிறங்க மாட்டார் என்று லக்னோ அணியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    அடிவயிற்று பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருவார காலம் மருத்துவ மேற்பார்வையில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் மயங்க் யாதவ் லக்னோ அணி விளையாட உள்ள அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மயங்க் யாதவ் லக்னோ அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார். 

    • கடைசி வரை போராடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • மும்பை தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது.

    இறுதி கட்டத்தில் டிம் டேவிட் மற்றும் ஷெப்பர்ட் வெளுத்து வாங்கினார். முக்கியமாக ஷெப்பர்ட் கடைசி ஓவரில் 32 ரன்கள் குவித்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 235 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அக்சர் படேல், நோர்க்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக வார்னர்- ப்ரித்விஷா களமிறங்கினர். வார்னர் 10 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ப்ரித்வி ஷா -போரல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அடுதனையடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 1 ரன்னிலும், அக்ஷர் படேல் 8 ரன்னிலும் லலித் யாதவ் 3 ரன்னிலும் குமார் குஷாக்ரா 0 ரன்னிலும் வெளியேறினர்.

    கடைசி வரை போராடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை 29 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. மும்பை தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • டிம் டேவிட் 45 ரன்னிலும் ஷெப்பர்ட் 39 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    • டெல்லி அணி தரப்பில் அக்சர் படேல், நோர்க்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது.

    அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 49 ரன்னில் அக்ஷர் படேல் பந்து வீச்சில் அவுட் ஆனார். 3 போட்டிகளில் விளையாடத சூர்யகுமார் அடுத்ததாக களமிறங்கினார். ஆனால் அவர் ரசிகர்களை ஏமாற்றும் வகையில் டக் அவுட்டில் வெளியேறினார்.

    அடுத்த சிறிது நேரத்தில் இஷான் கிஷன் 42 ரன்னிலும் திலக் வர்மா 6 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். இதனையடுத்து கேப்டன் பாண்ட்யா மற்றும் டிம் டேவிட் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். மெதுவாக விளையாடிய பாண்ட்யா 33 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதி கட்டத்தில் டிம் டேவிட் மற்றும் ஷெப்பர்ட் வெளுத்து வாங்கினார். முக்கியமாக ஷெப்பர்ட் கடைசி ஓவரில் 32 ரன்கள் குவித்தார்.

    இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 234 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அக்சர் படேல், நோர்க்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • டெல்லி அணி மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
    • மும்பை அணி இதுவரை ஒரு வெற்றியை கூட பெறவில்லை.

    ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி ஒரு வெற்றியை பெற்றுள்ளது. மும்பை அணி இதுவரை விளையாடி இருக்கும் மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. அந்த வகையில், இன்றைய போட்டியின் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் மும்பை அணி களமிறங்குகிறது. 

    • மும்பை அணியில் பேட்டிங்கில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், டிவால்ட் பிரேவிஸ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, டிம் டேவிட் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது.
    • லக்னோ அணி தன்னுடைய முதலாவது ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் வீழ்ந்தது.

    மும்பை:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் வெற்றி கணக்கை தொடங்காத ஒரே அணியாக தத்தளிக்கிறது. தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் குஜராத்திடம் தோல்வி கண்ட மும்பை அணி, ஐதராபாத்துக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் எதிரணிக்கு 277 ரன்களை வாரி வழங்கியதுடன், 31 ரன் வித்தியாசத்தில் பணிந்தது. சொந்த மண்ணில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் சரண் அடைந்தது. அந்த ஆட்டத்தில் மும்பை நிர்ணயித்த 126 ரன் இலக்கை 15.3 ஓவர்களில் ராஜஸ்தான் எளிதில் எட்டிப்பிடித்தது.

    மும்பை அணியில் பேட்டிங்கில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், டிவால்ட் பிரேவிஸ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, டிம் டேவிட் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது. இருப்பினும் திலக் வர்மா தவிர வேறு யாரும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் மாத்வால், ஜெரால்டு கோட்ஜீ ஆகியோர் நல்ல நிலையில் இருக்கின்றனர். இருந்தாலும் கூட்டாக பந்து வீச்சு எதிரணிக்கு அச்சுறுத்தலாக அமையவில்லை. மபாகா, பியுஷ் சாவ்லா ஆகியோர் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.

    ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டு ஹர்திக் பாண்ட்யாவை அந்த இடத்துக்கு அதிரடியாக கொண்டு வந்ததால் அதிருப்தி அடைந்துள்ள ரசிகர்கள் பாண்ட்யாவுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார்கள். அத்துடன் அது அணி வீரர்கள் மத்தியிலும் புகைச்சலை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடும் நெருக்கடிக்கு மத்தியில் கேப்டனாக பணியாற்றும் ஹர்திக் பாண்ட்யா களத்தில் சரியான முடிவை எடுப்பதில் திணறுவதை பார்க்க முடிந்தது.

    முந்தைய ஆட்டங்களில் பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியதில் இழைத்த தவறுகளை திருத்தி சரிவில் இருந்து மீண்டு வர அந்த அணி புதிய வியூகங்களுடன் வரும். அத்துடன் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு உடல் தகுதியை எட்டி இரு தினங்களுக்கு முன்பு அணியினருடன் இணைந்த 'அதிரடி சூறாவளி' சூர்யகுமார் யாதவ் களம் இறங்குவது அந்த அணிக்கு உத்வேகம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் 2 ஆட்டங்களில் முறையே 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சிடமும், 12 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடமும் தோற்றது. அடுத்த ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது. ஆனால் முந்தைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக பந்துவீச்சில் 272 ரன்களை விட்டுக்கொடுத்ததுடன், 106 ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது.

    டெல்லி அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரிஷப் பண்ட், டேவிட் வார்னர், பிரித்வி ஷா, டிரிஸ்டான் ஸ்டப்சும், பந்து வீச்சில் கலீல் அகமது, முகேஷ் குமார், அன்ரிச் நோர்டியா வலுசேர்க்கிறார்கள். ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் சோபித்தால் அந்த அணி மேலும் வலுப்பெறும். இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கடந்த 2 ஆட்டங்களை தவற விட்ட சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், காயத்தால் அவதிப்படும் மிட்செல் மார்ஷ் இன்றைய ஆட்டத்தில் ஆகியோர் ஆடுவது சந்தேகம் தான்.

    வெற்றிக் கணக்கை தொடங்க மும்பை அணியும், வெற்றிப் பாதைக்கு திரும்ப டெல்லியும் வரிந்து கட்டுவதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 18-ல் மும்பையும், 15-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன.

    லக்னோவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    லக்னோ அணி தன்னுடைய முதலாவது ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டங்களில் 21 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சையும், 28 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சையும் பதம்பார்த்து எழுச்சி பெற்றது. பேட்டிங்கில் குயின்டாக் டி காக், நிகோலஸ் பூரன் கைகொடுக்கிறார்கள். கேப்டன் லோகேஷ் ராகுல், குருணல் பாண்ட்யா ஆகியோரும் நல்ல பங்களிப்பை அளிக்கின்றனர். தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் பதோனி ஆகியோரின் ஆட்டம் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. பந்து வீச்சில் நடப்பு சீசனில் அதிவேகமாக பந்து வீசும் 21 வயது மயங்க் யாதவ் கடந்த 2 ஆட்டங்களிலும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் ஆட்டநாயகன் விருதையும் பெற்று கலக்கினார். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் சீராக வீசும் அவர் எதிரணியை கலங்கடிக்க காத்திருக்கிறார். அவரது பந்து வீச்சு லக்னோவுக்கு துருப்பு சீட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை சாய்த்தது. அடுத்த ஆட்டத்தில் 63 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் தோற்றது. அதற்கு அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை பந்தாடியது. முந்தைய ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சிடம் போராடி வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் சுப்மன் கில்லின் அரைசதம் (89 ரன்) மற்றும் சாய் சுதர்சனின் (33 ரன்) அதிரடியால் 199 ரன் குவித்த குஜராத் அணி இரு கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டதன் விளைவு சறுக்கலை சந்திக்க நேர்ந்தது. அந்த அணியில் பந்து வீச்சில் உமேஷ் யாதவ், ஒமர்ஜாய், ரஷித் கான், நூர் அகமது, மொகித் ஷர்மா ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் டேவிட் மில்லர் ஆடாததால் வில்லியம்சன் களம் இறங்கினார். மில்லரின் காயத்தன்மை குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. இதனால் இந்த ஆட்டத்திலும் வில்லியம்சன் ஆடுவார் என்று தெரிகிறது.

    சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 4 ஆட்டங்களிலுமே குஜராத் அணியே வாகை சூடியுள்ளது.

    இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • டெல்லி தரப்பில் பண்ட் 55 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 54 ரன்னில் வெளியேறினர்.
    • கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும் ஸ்டார்க், வைபவ் அரோரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் கொல்கத்தா- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்தது.

    கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நரேன் 85 ரன்களும் ரகுவன்ஷி 54 ரன்களும் விளாசினார். இறுதியில் வந்த ரஸல் 46 ரன்களும் ரிங்கு சிங் 26 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டும் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும் வீழ்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. பிரித்வி ஷா 10, மிட்செல் மார்ஷ் 0, அபிஷேக் போரல் 0, டேவிட் வார்னர் 18 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் டெல்லி அணி 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இதனையடுத்து கேப்டன் ரிஷப் பண்ட் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தனர். இந்த நிலையில் சக்கவர்த்தி வீசிய ஓவரில் இருவரும் ஆட்டமிழந்தனர். பண்ட் 55 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 54 ரன்னில் வெளியேறினர்.

    அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும் ஸ்டார்க், வைபவ் அரோரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • நரைன் 85 ரன்னிலும் ரகுவன்ஷி 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • டெல்லி தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டுகளையும் இஷான் சர்மா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதிவருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சால்ட்- சுனில் நரைன் களமிறங்கினர். சால்ட் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து நரைனுடன் இளம் வீரர் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்து டெல்லி அணியின் பந்து வீச்சை சரமாரியாக விளாசினர்.

    அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் விளாசினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது. நரைன் 85 ரன்னிலும் ரகுவன்ஷி 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து வந்த ரஸல் (41) - ரிங்கு சிங் (26) அவர்களது பங்குக்கு அதிரடியை காட்டினார்.

    இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டுகளையும் மிட்செல் மார்ஷ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

    • நார்ஜேவை கடைசி கட்டத்தில் பந்து வீச வைக்க விரும்பினோம். ஆனால் அது எங்களுக்கு நன்றாக அமையவில்லை.
    • இந்த தோல்வி நிச்சயமாக ஏமாற்றம் அளிக்கிறது.

    ஜெய்ப்பூர்:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் டெல்லியை 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது.

    முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது. ரியான் பராக் 45 பந்தில் 85 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் விளையாடிய டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 173 ரன்களே எடுத்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய ஆவேஷ்கான் 4 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார்.

    ராஜஸ்தான் அணி 2-வது வெற்றியை பெற்றது. டெல்லி அணி 2-வது தோல்வியை சந்தித்தது.

    தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:-

    இந்த தோல்வி நிச்சயமாக ஏமாற்றம் அளிக்கிறது. 16 ஓவர்கள் வரை பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் கடைசி கட்டத்தில் நிறைய ரன்களை விட்டு கொடுத்து விட்டோம். ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

    அடுத்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். பேட்டிங்கில் வார்னர்-மிட்செல் மார்ஷ் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ஆனால் அதை பயன்படுத்தி கொள்ள தவறி விட்டோம்.

    நார்ஜேவை கடைசி கட்டத்தில் பந்து வீச வைக்க விரும்பினோம். ஆனால் அது எங்களுக்கு நன்றாக அமையவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நார்ஜே வீசிய கடைசி ஓவரில் ரியான்பராக் 2 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 25 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு.
    • டேவிட் வார்னர் சிறப்பான துவக்கம் கொடுத்தார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 9 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜெய்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 7 பந்துகளில் 5 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய ஜாஸ் பட்லர் 16 பந்துகளில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார்.

     


    போட்டி முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்துள்ளது. ராஜஸ்தான் அணிக்கு ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்களை குவித்தார். ஹெட்மயர் 7 பந்துகளில் 14 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    டெல்லி அணி சார்பில் கலீல் அகமது, அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். முகேஷ் குமார் மற்றும் அன்ரிச் நார்ட்ஜே தலா விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து 186 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் சிறப்பான துவக்கம் கொடுத்தார். இவர் 34 பந்துகளில் 49 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 12 பந்துகளில் 23 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிக்கி புய் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றினார்.

     


    பிறகு களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் 28 ரன்களை குவித்தார். இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய அபிஷேக் பொரெல் 9 ரன்களில் ஆட்டமிழக்க அக்சர் பட்டேல் களத்துக்கு வந்தார். ட்ரிஸ்டன் டப்ஸ்-உடன் பொறுப்பாக ஆடிய அக்சர் பட்டேல் 15 ரன்களை குவித்தார்.

    போட்டி முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ராஜஸ்தான் சார்பில் நான்ட்ரி பர்கர் 2 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆவேஷ் கான் ஒரு விக்கெட் எடுத்தார்.

    இந்த சீசனில் ராஜஸ்தான் அணி விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×