search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கடைசி ஓவரில் 32 ரன்கள் விளாசிய ஷெப்பர்ட்: டெல்லிக்கு 235 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை
    X

    கடைசி ஓவரில் 32 ரன்கள் விளாசிய ஷெப்பர்ட்: டெல்லிக்கு 235 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை

    • டிம் டேவிட் 45 ரன்னிலும் ஷெப்பர்ட் 39 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    • டெல்லி அணி தரப்பில் அக்சர் படேல், நோர்க்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது.

    அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 49 ரன்னில் அக்ஷர் படேல் பந்து வீச்சில் அவுட் ஆனார். 3 போட்டிகளில் விளையாடத சூர்யகுமார் அடுத்ததாக களமிறங்கினார். ஆனால் அவர் ரசிகர்களை ஏமாற்றும் வகையில் டக் அவுட்டில் வெளியேறினார்.

    அடுத்த சிறிது நேரத்தில் இஷான் கிஷன் 42 ரன்னிலும் திலக் வர்மா 6 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். இதனையடுத்து கேப்டன் பாண்ட்யா மற்றும் டிம் டேவிட் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். மெதுவாக விளையாடிய பாண்ட்யா 33 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதி கட்டத்தில் டிம் டேவிட் மற்றும் ஷெப்பர்ட் வெளுத்து வாங்கினார். முக்கியமாக ஷெப்பர்ட் கடைசி ஓவரில் 32 ரன்கள் குவித்தார்.

    இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 234 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அக்சர் படேல், நோர்க்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    Next Story
    ×