search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "deadbody"

    • அரியலூர் வெள்ளாற்றில் ஆண் பிணம் கிடந்தது
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தெத்தேரியில் இருந்து செம்பேரி இடையே உள்ள வெள்ளாற்று கரையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுபான கடை அருகே உள்ள சாக்கடையில் வாலிபர் பிணம் கிடந்தது
    • திருச்சி பொன்மலை உடலை கைப்பற்றி விசாரணை

    திருச்சி

    திருச்சி பொன்மலை மிலிட்டரி காலனி பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 38).இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தார். இதற்கிடையே குடிப் பழக்கத்திற்கும் ஆளானார். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் நேற்று இரவு மது அருந்திவிட்டு அருகில் உள்ள சாக்கடை அருகே ஒரு திட்டில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக லோகநாதன் கழிவு நீர்சாக்கடைக்குள் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இன்று காலையில் அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் லோகநாதன் பிணமாக கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • மகள் வீட்டுக்கு வந்தவருக்கு நேர்ந்த சோகம்
    • பெரம்பலூர் அருகே பரபரப்பு


    அகரம் சீகூர்,

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொளார் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி (வயது 80)இவர் தனது மகளை பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்குட்பட்ட வசிஷ்டபுரம் கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மகளை பார்ப்பதற்காக கணபதி வசிஷ்டபுரம் வந்தார். பின்னர் வெளியே செல்வதாக கூறி புறப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மகள், தந்தையை கடந்த ஒரு வாரமாக தேடி வந்தார்.இந்த நிலையில் அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. பின்னர் கிராம மக்கள் கிணற்றில் எட்டி பார்த்தபோது அழுகிய நிலையில் ஒரு ஆண் பிணம் மிதந்து கொண்டிருப்பதை கண்டனர்.உடனே இது பற்றி குன்னம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் காவல் துறையும், தீயணைப்புத் துறையினரும் கிணற்றில் பிணமாக மிதந்த உடலை மீட்டனர்அதன் பின்னர் பார்த்தபோது கிணற்றில் சடலமாக மிதந்தவர் மாயமான கணபதி என்பது தெரியவந்தது.இவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது மர்ம நபர்கள் அவரை அடித்துக்கொண்டு கிணற்றில் வீசி விட்டார்களா? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.இதற்கிடையே மகளின் வீட்டுக்கு வந்த கணபதி அகரம் சீகூரில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான பாரில் மது அருந்தியதை சிலர் பார்த்துள்ளனர்.இதனால் போதையில் நிலை தடுமாறி பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து மடிந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.மகள் வீட்டுக்கு வந்த முதியவர் 8 நாட்களுக்குப் பின்னர் கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




    தீயணைப்பு துறையினர் உதவியோடு உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூரில் தேவனாம்பாளையம்-ராமம்பாளையம் பி. ஏ. பி. வாய்க்காலில் சுமார் 40 லிருந்து 55 வயது மதிக்கதக்க ஆணின் சடலம் எலும்புக்கூடாக கிடப்பதாக அவ்வழியே சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து, அவிநாசிபாளையம் போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியோடு உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் வெள்ளை நிறத்தில், ரோஸ் கலரில் கோடு போட்ட அரைக்கை சட்டை அணிந்துள்ளார். அவரை பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் அவிநாசி பாளையம் போலீஸ் நிலையத்திற்கு 94981 01329 என்ற எண்ணில் தகவல் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • ஜம்முனை ஓடை அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே ஏ.பி.டி. ரோடு ஜம்முனை ஓடை அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக திருப்பூர் மத்திய பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ராஜு ( வயது 48) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தாரா அல்லது யாராவதுதாக்கியதில் இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சின்ராஜ் ரம்யாவுடன் நீண்ட நேரம் பேசிவிட்டு அதன்பிறகு அங்கிருந்து சென்றுள்ளார்.
    • சின்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெல்லம்பட்டி பகுதியை சேர்ந்த கோபால்- மாசாணி தம்பதியரின் மகள் ரம்யா(வயது 23). இவருக்கும் பனப்பாளையம் பகுதியை சேர்ந்த கோபால் மகன் சின்ராஜ் (25) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இதையடுத்து ரம்யா வும், சின்ராஜூவும் தினமும் செல்போனில் பேசி வந்தனர். நேற்று ரம்யாவின் பெற்றோர் உறவினர்களுக்கு திருமண பத்திரிகை வழங்குவதற்காக சென்று விட்டனர். அப்போது அங்கு வந்த சின்ராஜ் ரம்யாவுடன் நீண்ட நேரம் பேசிவிட்டு அதன்பிறகு அங்கிருந்து சென்றுள்ளார்.

    நேற்று மாலை ரம்யாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது ரம்யா வீட்டிற்குள் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து தாராபுரம் போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இன்று காலை ரம்யாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுப ட்டனர்.

    சின்ராஜ் பேசி விட்டு சென்ற பிறகுதான் ரம்யா தற்கொலை செய்துள்ளார். எனவே சின்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • உயிரிழந்தவர்களின் உடலை எடுத்துச் செல்லக் கூடாது எனக் கூறி தடுப்புகள் வைத்து மறைத்தனர்.
    • ம்பவ இடத்திற்கு வந்த சேவூர் போலீசார் நீண்ட நேரம்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அவினாசி :

    அவினாசி அருகே லூர்துபுரம் பகுதியை சேர்ந்த, ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள், பொதுமக்கள் வழக்கமான வழித்தடத்தில் உடலை எடுத்துச்செல்ல முயன்றனர். அப்போது தனிநபர் சிலர் தங்களுக்கு சொந்தமான இடத்தில் உயிரிழந்தவர்களின் உடலை எடுத்துச் செல்லக் கூடாது எனக் கூறி தடுப்புகள் வைத்து மறைத்தனர்.

    இதனால் இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கூட்டத்தில் யாரோ கல்வீசியதில் மலையப்பன் (வயது 55) என்பவருக்கு முகத்தில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் அவினாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேவூர் போலீசார் நீண்ட நேரம்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் இரவு 9 மணியளவில் வழக்கமாக செல்லும் வழித் தடத்தில் உடலை எடுத்துச் சென்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக கல்லறையில் அடக்கம் செய்ய அரை கிலோ மீட்டர் தொலைவில் செல்லக் கூடிய இதே வழித்தடத்தில் தான் சென்று வருகிறோம்.

    இதை விட்டு, மாற்றுத் தடத்தில் சென்றால், 4 கிலோ மீட்டர் தொலைவு சென்று தான் அடக்கம் செய்ய முடியும். ஆனால் தற்போது வழக்கமான வழியில் செல்லக் கூடாது என தடுக்கின்றனர். ஆகவே அவர்கள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த சம்பவத்தால் சேவூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×