search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "deadbody"

    • கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் பகுதியில் உள்ள தென்கரை வாய்க்காலில் ஆண் பிணம் கிடந்தது
    • கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து தண்ணீரில் இறந்து கிடந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை

    கரூர்,

    கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் பகுதியில் உள்ள தென்கரை வாய்க்காலில் ஆண் பிணம் கிடப்பததாக வைகநல்லூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் சதீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில்,இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கலாம் என்று தெரிய வந்தது. உடலை முகம் உள்ளிட்ட உள்ளிட்ட இடங்களில் மீன்கள் கடித்ததற்கான அடையாளம் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மேலும் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து தண்ணீரில் இறந்து கிடந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நொய்யல் ஆற்றில் மிதந்த முதியவர் பிணத்தை கைப்பற்றி விசாரணை
    • ஆடு மேய்க்க சென்றவர் ஆற்றுக்குள் விழுந்தது எப்படி என்று போலீசார் விசாரணை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி ( 67). இவர் தனக்கு சொந்தமான 4 மாடுகள், 10 ஆடுகளை தினசரி மேய்த்து வந்தார். வழக்கம்போல ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக நொய்யல் பகுதியில் உள்ள வாய்க்கால் மேட்டு ஆற்றங்கரை பகுதிக்கு ஓட்டி சென்றுள்ளார். அங்கு ஆடு ,மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. ஆனால் மாலை 5 மணிக்கு மேல் ஆகியும் துரைசாமி வீட்டிற்கு திரும்பவில்லை. ஆடு, மாடுகளும் திரும்பி வரவில்லை.சந்தேகம் அடைந்த துரைசாமியின் மகன் விக்னேஷ் (23) என்பவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை .இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் துரைசாமி அணிந்திருந்த செருப்பு, அவரதுஉடை நொய்யல் ஆற்று கரையில் கிடந்துள்ளது. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நொய்யல் ஆற்றின் இடது கரை வழியாக சென்றுள்ளனர். அப்போது அங்கு முதியவர் துரைசாமி இறந்த நிலையில் பிணமாக காவிரி ஆற்று தண்ணீரில் மிதந்து கொண்டிருந்ததை பார்த்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வேலாயுதம்பாளையம் போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து துரைசாமியின் பிரேதத்தை தண்ணீரில் இருந்து மீட்டனர். உடலை கைப்பற்றிய போலீசார் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • பெரம்பலூர் அருகே கிணற்றில் மிதந்த விவசாயி பிணத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்
    • முதற்கட்ட விசாரணை அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது

    பாடாலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், பொம்மனப்பாடி இந்திரா நகரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 58), விவசாயி. இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள அவரது விவசாய கிணற்றில் இறந்து கிடப்பதாக பாடாலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து அன்பழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அன்பழகனுக்கும், அவரது உறவினர்களுக்குமிடையே நிலத் தகராறு இருப்பது தெரியவந்தது. அன்பழகன் அதே பகுதியில் பிரச்சினைக்குரிய காலி இடத்தில் வீடு கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வந்தார். இதனால் ஏற்பட்ட தகறாரில் அன்பழகன் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • குளித்தலையில் கேட்பாரற்று நின்ற காரில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் கிடந்தது
    • கொலையா? தற்கொலையா? என்று பிணத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    குளித்தலை,

    திருச்சி கோணக்கரை பகுதி சாலையில் 4 நாட்களாக ஒரு கார் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் காருக்குள் பார்த்தபோது, காருக்குள் ஆண் ஒருவர் படுத்து இருந்தார். ஏ.சி. ஓடிக்கொண்டு இருந்தது. துர்நாற்றம் வீசியது.இதனால் அச்சம் அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் உறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரின் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது, காருக்குள் இருந்தவர் உடல் அழுகிய நிலையில் இருந்தது.காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை செய்ததில் அவர் கரூர் மாவட்டம் குளித்தலை முதலைப்பட்டி விதைப்பண்ணை ரோட்டை சேர்ந்த ஆடலரசு (வயது 38) என்பதும் இவர் மார்க்கெட்டிங் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விசாரணையில், அவர் தனது மனைவி லட்சுமி பிரியா, 2 வயது மகளை தஞ்சை திருப்பந்துருத்தி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு கடந்த 31-ந்தேதி காலை 7 மணிக்கு குளித்தலைக்கு புறப்பட்டுள்ளார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு செல்லவில்லை. அவரை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகம் அடைந்த அவருடைய மனைவி குளித்தலை போலீசில் தனது கணவரை காணவில்லை என்று புகார் அளித்திருந்தது தெரியவந்தது.அவர் காரை ஓட்டி வந்தபோது உடல்நலக்குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நசியனூர் அருகே சென்ட்ரிங் தொழிலாளி அழுகிய நிலையில் சடலமாக மீட்கபட்டது
    • இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம், நசிய னூர், கந்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(32). இவரது மனைவி நித்யா (22). இருவரும் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெங்கடேஷ் செண்டரிங் வேலை செய்து வருகிறார். மதுவுக்கு அடிமையான வெங்கடேஷ் வேலை செய்து கிடைக்கும் பண த்தில் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம்.இதனால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.இந்த நிலையில் கடந்த ஒன்றரை மாதமாக நித்யா கணவரைப் பிரிந்து, குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று வெங்கடேஷின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி யுள்ளது. அருகில் இருந்த வர்கள் இது குறித்து நித்யாவின் தாயாருக்கு போன் மூலமாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.அதன்பேரில் அங்கு வந்த நித்யாவும், வெங்கடேஷின் தாயாரும் வீட்டினுள் சென்று பார்த்தபோது, பெட்ரூமில் உடல் அழுகிய நிலையில் வெங்கடேஷ் சடலமாக கிடந்துள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, பெரு ந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காணாமல் போன முதியவர் வாய்க்காலில் பிணமாக மீட்கப்பட்டார்
    • போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தட்டாங்காடு பகுதியை சேரந்தவர் சுப்பிரமணி (வயது 71). இவர் விவசாய வேலை செய்து வந்தார். இவருக்கு ரமேஷ்குமார் (41) என்ற மகன் உள்ளார். சுப்பிரமணி நோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுப்பிரமணி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் ரமேஷ்குமாருக்கு ஈரோடு வைராபாளையத்தில் உள்ள ஒரு வாய்க்காலில் 70 வயது மதிக்கதக்க ஒருவர் இறந்து கிடந்ததாகவும், அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு சென்று பார்த்த போது இறந்தவர் சுப்பிரமணி தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ்குமார் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்துள்ளது
    • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் 50 வயது மதிக்கதக்க ஒரு ஆண் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார். உடனே அவரை டவுண் குரூப் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் ராஜசேகர் (வயது 39) என்பவர் ஆம்புலன்ஸ் மூலம் சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து அந்த அடையாளம் தெரியாத ஆண் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விராலிமலை அருகே மாயமான இளம்பெண்ணின் பிணம் கிணற்றில் மிதந்தது
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    விராலிமலை.

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் புதுநகரை சேர்ந்தவர் காஜாமைதீன் இவரது மகள் தஜ்லீன்பானு (வயது24). இவர் தாய் தந்தை இறந்த நிலையில் சகோதர்களுடன் வசித்து வந்தார்.இந்த நிலையில், இவரை திருமணம் செய்துகொள்ள சொல்லி சகோதரர்கள் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் இருந்த தஜ்லீன்பானு திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.இதனையடுத்து அவரது சகோதரர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அதே பகுதியில் சுரேஷ் என்பவரது வீட்டு கிணற்றில் தஜ்லீன்பானு பிணமாக கிடந்துள்ளார்.உடனடியாக இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி பெண்ணின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பின்னர் போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஜ்லீன் பானுவை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசியிருப்பார்களா அல்லது தற்கொலை செய்து இருப்பாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தோட்டத்தில் ரத்தக்காயத்துடன் விவசாயி பிணம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை

    கரூர்,

    கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள திருமாணிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவா் ராஜலிங்கம் (வயது 58). விவசாயி. இவர் நேற்று காலை தனது தோட்டத்திற்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறி விட்டு வெளியே சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லையாம். இதையடுத்து ராஜலிங்கத்தின் மகன் ரத்தினவேல் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது, ராஜலிங்கம் கிணற்றின் அருகே ரத்தக்காயத்துடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து ராஜலிங்கம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவர் தவறி விழுந்து இறந்தாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி மத்திய பஸ் நிலையம் - அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இரண்டு பிணங்கள்
    • போலீசாரால் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

    திருச்சி,

    திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஹோட்டல் அருகாமையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் ஒன்று கிடப்பதாக கோ-அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி ஸ்டீபன் தன்ராஜ் கண்டோன்மென்ட் போலீசுக்கு புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை பிரேத கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    இதேபோன்று திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கேண்டில் அருகாமையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இறந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் கணேசன் அரசு மருத்துவமனை போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள் ஜோதி பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். 

    • திருச்சி உறையூரில் அடையாளம் தெரியாத ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆண் பிணம்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    திருச்சி, 

    திருச்சி உறையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட உறையூர் ராமலிங்க நகர் 2-வது மெயின் ரோடு அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர், முகவரி தெரியாத ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் அவர் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் ஐந்தரை அடி உயரம் கொண்ட அவர் சிவப்பு நிற அரைக்கால் டவுசர், சிவப்பு நி அரைஞான் கயிறு கட்டியிருந்தார். இடது இடுப்பில் கருப்பு புள்ளி மச்சம், இடது நெற்றியில் காயத்தழும்பு காணப்பட்டது. இதுகுறித்து உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

    • தில்லைநாயகம் படித்துறையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம்
    • கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை

    திருச்சி, 

    திருச்சி காவிரி ஆறு தில்லைநாயகம் படித்துறையில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து தேவதானம் கிராம நிர்வாக அதிகாரி அனீஸ் பாத்திமா கோட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×