search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "David Warner"

    • ஷிகர் தவான் 213 இன்னிங்சில் 50 அரை சதம் அடித்துள்ளார்.
    • ஐ.பி.எல். போட்டியில் 50-வது அரைசதம் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை தவான் பெற்றார்.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தியது.

    இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் 47 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 57 ரன் எடுத்தார். ஐ.பி.எல். போட்டியில் அவரது 50-வது அரை சதமாகும். 213 இன்னிங்சில் 50-வது அரை சதத்தை எடுத்துள்ளார்.

    ஐ.பி.எல். போட்டியில் 50-வது அரைசதம் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை தவான் பெற்றார். டேவிட் வார்னர், விராட் கோலி ஆகியோருடன் அவர் இணைந்தார்.

    வார்னர் 57 அரைசதம் அடித்து முதல் இடத்திலும், கோலி, தவான் 50 அரை சதத்துடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

    • டெல்லி- ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஆட்டநாயகனாக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டார்.

    டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாரின் காலில் விழுந்து வணங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 34-வது போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. பின்னர், ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து தனது சொந்த மைதானத்தில் 7 ரன்களில் தோல்வி அடைந்தது.

    இதற்கு முன்னதாக டெல்லியில் நடந்த போட்டியில் ஹைதரபாத் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.


    இந்த நிலையில், இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனான டேவிட் வார்னர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாரின் காலில் விழுந்து அதன் பிறகு அவரை கட்டியணைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    2016-ம் ஆண்டு வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டத்தைச் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய முன்னனி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் உள்ளார்.
    • அவரது தலைமையின் கீழ் விளையாடிவரும் அந்த அணி முதல் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.

    டெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய முன்னனி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் உள்ளார்.

    அவரது தலைமையின் கீழ் விளையாடிவரும் அந்த அணி முதல் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து கடைசியாக நடைபெற்ற இரு ஆட்டங்களில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    இந்த நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேலை அந்த அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார். அவர் ஒரு சிறந்த வீரர் என்றும், சிறந்த பார்மில் உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘புஷ்பா -2’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    புஷ்பா

    தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் புஷ்பாவாக மாறிய புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


    டேவிட் வார்னர் பதிவு

    அதாவது, டேவிட் வர்னர், 'புஷ்பா -2' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரில் உள்ள அல்லு அர்ஜுன் புகைப்படத்திற்கு பதிலாக தனது புகைப்படத்தை பதிவிட்டு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவை தற்போது அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    டேவிட் வார்னர் தனது இணையப் பக்கத்தில் அடிக்கடி இவ்வாறு பல புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • பவர் பிளேயில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று திட்டமிடுவோம்.
    • எங்களின் பந்து வீச்சு குழுவை நினைத்து நாங்கள் பெருமை படுகிறோம்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு டெல்லியில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீழ்த்தியது.

    முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 127 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 43 ரன்னும் ஆந்த்ரே ரசல் 38 ரன்னும் எடுத்தனர். டெல்லி தரப்பில் இஷாந்த் சர்மா, நார்ஜே, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    பின்னர் விளையாடிய டெல்லி அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் டேவிட் வார்னர் 57 ரன்கள் எடுத்தார். 6-வது ஆட்டத்தில் விளையாடிய டெல்லி அணிக்கு இது முதல் வெற்றியாகும். கொல்கத்தா 4-வது தோல்வியை (6 ஆட்டம்) சந்தித்தது.

    வெற்றி குறித்து டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:-

    இரண்டு புள்ளிகளை பெறுவது மிகவும் அருமை. முதல் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களின் பந்து வீச்சு குழுவை நினைத்து நாங்கள் பெருமை படுகிறோம்.

    பவர் பிளேயில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று திட்டமிடுவோம். அதை சரியாக செய்தோம்.

    நாங்கள் பேட்டிங்கில் மீண்டும் விக்கெட்டுகளை இழந்தோம். ஒருவருக் கொருவர் நாங்கள் மிகவும் நேர்மையாக இருக்கிறோம். மேம்படுத்த வேண்டிய பகுதிகள் குறித்து விவாதிப்போம். நாங்கள் சரியான விலையாட்டை விளையாடினோம் என்றார்.

    கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ரானா கூறும்போது, 'நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். ஆடுகளம் எளிதானதல்ல என்பது எங்களுக்கு தெரியும். நான் அதிக நேரம் பேட்டிங் செய்திருக்க வேண்டும்.

    அந்த நேரத்தில் எனது விக்கெட் முக்கியமானது. நாங்கள் ஒரு அணியாக நன்றாக விளையாட வேண்டும்.

    இவ்வளவு குறைந்த ஸ்கோரை வைத்து கொண்டு போராடினோம். இப்போட்டியில் பந்து வீச்சில் செயல்பட்டது போல் அடுத்து ஆட்டங்களில் பந்துவீச வேண்டும் என்று விரும்புகிறோம்' என்றார்.

    • டேவிட் வார்னர் ஐ.பி.எல். தொடரில் 6,000 ரன்களை கடந்தார்.
    • 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனை படைத்தார்.

    கவுகாத்தி:

    ஐபிஎல் தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி டெல்லியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து 199 ரன்கள் குவித்தது.

    ராஜஸ்தான் தரப்பில் பட்லர் 79 ரன்னும், ஜெய்ஸ்வால் 60 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    இந்நிலையில், இந்த போட்டியில் டெல்லியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 26 ரன்கள் எடுத்திருந்த போது ஐ.பி.எல். தொடரில் 6,000 ரன்களைக் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    அதுமட்டுமின்றி, ஐ.பி.எல். தொடரில் குறைந்த இன்னிங்சில் (165) 6,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார்.

    இந்தப் பட்டியலில் விராட் கோலி (188 இன்னிங்ஸ்), ஷிகர் தவான் (199) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

    • பிட்ச்சில் ஸ்விங் இருக்கும் என்பது எதிர்பார்த்தது தான். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக பந்து ஸ்விங்கானது.
    • இதே மைதானத்தில் இன்னும் 6 போட்டிகளில் விளையாட உள்ளோம்.

    16-வது ஐபிஎல் தொடரின் 7-வது போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் நேருக்கு நேர் மோதியது. இப்போட்டியில், டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 162 ஆட்டங்களை சேர்த்தது.

    இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில் அக்சர் படேல் ஏன் பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறித்து கேப்டன் டேவிட் வார்னர் விளக்கம் கொடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பிட்ச்சில் ஸ்விங் இருக்கும் என்பது எதிர்பார்த்தது தான். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக பந்து ஸ்விங்கானது. ஆனால் பிட்ச்சின் இன்னொரு பக்கத்தில் ஸ்விங் அந்த அளவிற்கு ஆகவில்லை. ஒரு மைதானத்தின் சூழலுக்கு தகுந்தாற்படி எப்படி விளையாட வேண்டும் என்பதை குஜராத் அணி செய்து காட்டி இருக்கிறது.

    இதே மைதானத்தில் இன்னும் 6 போட்டிகளில் விளையாட உள்ளோம். சாய் சுதர்சன் தொடக்கம் முதலே சிறப்பாக பேட்டிங் செய்து வந்தார். குறைந்தது டெல்லி மைதானத்தில் 180 முதல் 190 ஆட்டங்கள் வரை எடுக்க வேண்டும்.

    ஐபிஎல் தொடரில் நீண்ட ஆண்டுகளாக அக்சர் படேல் பந்து வீசி வருகிறார். இந்தியாவின் பிரதான சுழற்பந்து வீச்சாளர். அவர் பந்து வீசாததற்கு பிட்ச் மற்றும் விக்கெட் தான் காரணம். மற்றபடி அவருக்கு காயம் எதுவும் இல்லை.

    என்று வார்னர் கூறினார்.

    இந்த போட்டியில் அக்சர் படேல் ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை.

    • துணை கேப்டனாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்த சீசனில் ரிஷப் பந்திற்கு பதிலாக வார்னர் கேப்டனாக செயல்பட உள்ளார் என டெல்லி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    2023 ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் டெல்லி அணியின் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வந்தார். அவர் கடந்த ஆண்டு டிசம்பரில் கார் விபத்தில் சிக்கி குணமடைந்து வருவதால் இந்த சீசனில் ரிஷப் பந்திற்கு பதிலாக வார்னர் கேப்டனாக செயல்பட உள்ளார் என டெல்லி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    மேலும் துணை கேப்டனாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

    அதில் டேவிட் வார்னர், அக்சர் படேல் இந்த இருவரின் தலைமையில் இந்த #IPL2023 சத்தமாக கர்ஜிக்க தயாராக உள்ளது என்று தலைப்பிட்டிருந்தது.

    வார்னர் தனது ஐபிஎல் வாழ்க்கையை 2009-ல் டெல்லி உரிமையுடன் (அப்போது டெல்லி டேர்டெவில்ஸ்) தொடங்கினார். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மாறினார். அவர் 2016 -ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றினார்.

    போட்டியின் கடந்த பதிப்பில், வார்னர் 12 போட்டிகளில் கேபிடல்ஸ் அணிக்காக 150.62 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் 432 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் அவர் ஐந்து அரை சதங்களை அடித்தார்.

    • இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் தொடர் மார்ச் 17-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

    ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. முதல் டெஸ்ட் மற்றும் 2-வது டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் மற்றும் விளையாடிய வார்னர் காயம் காரணமாக விலகி உள்ளார்.

    அடுத்ததாக ஒருநாள் தொடர் மார்ச் 17-ந் தேதி தொடங்குகிறது. இதில் காயம் காரணமாக விலகி இருந்த டேவிட் வார்னர் இடம் பெற்றுள்ளார். இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் டேவிட் வார்னர் மும்பையில் உள்ள ஒரு தெருவில் கிரிக்கெட் விளையாடியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    இதை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கிரிக்கெட் விளையாட அமைதியான இடம் கிடைத்துள்ளது என தலைப்பிட்டிருந்தார்.

    • தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற போட்டியுடன் அவர் விடை பெற்றிருக்க வேண்டும்.
    • பேட்ஸ்மேனாக இருக்கும் நீங்கள் ரன்களை அடிக்கவில்லை என்றால் நீங்களாகவே உங்களது இடத்தை காலி செய்ய வேண்டும்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரன் குவிக்க திணறினார். முதல் டெஸ்டில் 2 இன்னிங்சிலும் சேர்த்து 11 ரன்னே எடுத்தார். 2-வது டெஸ்டில் முதல் இன்னிங் சில் 15 ரன் எடுத்த அவர் காயம் காரணமாக 3-வது டெஸ்டில் விலகினார்.

    இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்தால் அவர் தனது 100-வது போட்டியை மெல்போர்னில் விளையாடி இரட்டை சதம் அடித்த பிறகு ஓய்வு பெற்றிருக்க வேண்டும். சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் ஓய்வு பெறும் சிறந்த தருணத்தை அவர் தவற விட்டு விட்டார். அனைத்து வீரர்களும் இதைதான் விரும்புவார்கள். ஆனால் இந்த வாய்ப்பு வார்னருக்கு வராமல் கூட போகலாம். ஏனென்றால் அதற்கு இன்னும் 12 மாதங்கள் இருக்கிறது.

    தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, ஆஷஸ் தொடருக்கு முன்பாக நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் வார்னரை விளையாட வைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரும்பும் என்று கருதுகிறேன்.

    அதே போல் ஆஷஸ் தொடரின் கடைசி போட்டி வரை அவர் விளையாட வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் ரன்களை அடிக்கவில்லை என்றால் நீங்களாகவே உங்களது இடத்தை காலி செய்ய வேண்டும். இதுபோன்ற நிலைமை என்னை போன்றவர்களுக்கும் நடந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு வார்னர் இந்நேரம் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிட்னியில் நடந்த போட்டியுடன் அவர் விடை பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் மெல்போர்னில் தனது 100-வது போட்டியில் இரட்டை சதம் அடித்திருந்தார். சொந்த ஊரான சிட்னியில் தனது 101-வது போட்டியில் சிறப்பாக தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்திருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    36 வயதான டேவிட் வார்னர் 103 டெஸ்டில் 8,158 ரன்கள் எடுத்துள்ளார். 25 சதம், 34 அரை சதம் அடித்துள்ளார்.

    • ரிஷப் பண்டுக்கு விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியவில்லை.
    • வார்னர் ஏற்கனவே ஐபிஎல்-ல் ஐதராபாத் அணியை வழிநடத்தி கோப்பை வென்றுக்கொடுத்த அனுபவம் இருக்கிறது.

    மும்பை:

    2023-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி வரும் மார்ச் 31-ம் தேதியன்று அகமதாபாத்தில் லீக் போட்டிகள் தொடங்குகின்றன. இறுதிப்போட்டி மே 28-ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக அனைத்து அணிகளும் முதற்கட்ட பயிற்சிகளுக்காக ஏற்பாடு செய்து வருகின்றன. நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே அகமதாபாத்தில் பயிற்சி முகாமை தொடங்கிவிட்டது.

    அனைத்து அணிகளும் வீரர்களை தயார்படுத்த தொடங்கிய சூழலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டனையே அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு கடந்த மாதம் கார் விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியவில்லை. எனவே அணியை வெற்றிகரமாக வழிநடத்தி செல்ல டேவிட் வார்னரை போன்ற அனுபவ வீரரை தேர்வு செய்துள்ளனர்.

    வார்னர் ஏற்கனவே ஐபிஎல்-ல் ஐதராபாத் அணியை வழிநடத்தி கோப்பை வென்றுக்கொடுத்த அனுபவம் இருக்கிறது. அணியின் துணைக்கேப்டனாக நட்சத்திர ஆல்ரவுண்டர் அக்ஷர் பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    • டெல்லி டெஸ்டின் போது வார்னருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது.
    • டெஸ்ட் தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் வார்னர் இடம்பெறமாட்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

    இந்திய அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்டில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது.

    இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் வருகின்ற மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். டெல்லியில் நடந்த டெஸ்டின்போது முகமது சிராஜ் வீசிய பந்தில் வார்னரின் கையில் காயம் ஏற்பட்டு தற்போது தீவிரமானது. அதற்காக உரிய சிகிச்சை பெற வார்னர் ஆஸ்திரேலியா திரும்ப இருக்கிறார்.

    டெஸ்ட் தொடரை தொடர்ந்து நடைபெறும் ஒருநாள் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் வார்னர் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

    டெல்லி டெஸ்டின் போது வார்னருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் வார்னர் இடம்பெறமாட்டார்.

    என்று தெரிவித்தது.

    வார்னர் விளையாடாத நிலையில், கவாஜாவுடன் தொடக்க ஆட்டக்காரராக யார் களமிறங்குவார்கள் என்பதை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால் வருகிற டெஸ்ட் போட்டிகளில் கவாஜாவுடன் தொடக்க வீரராக டிராவிஸ் ஹெட் மட்டுமே களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

    டெல்லி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில், வார்னர் பேட்டிங் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது, ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் ஹெட்டை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது.

    ×