search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புவனேஸ்வர்குமார்"

    • டெல்லி- ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஆட்டநாயகனாக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டார்.

    டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாரின் காலில் விழுந்து வணங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 34-வது போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. பின்னர், ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து தனது சொந்த மைதானத்தில் 7 ரன்களில் தோல்வி அடைந்தது.

    இதற்கு முன்னதாக டெல்லியில் நடந்த போட்டியில் ஹைதரபாத் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.


    இந்த நிலையில், இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனான டேவிட் வார்னர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாரின் காலில் விழுந்து அதன் பிறகு அவரை கட்டியணைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    2016-ம் ஆண்டு வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டத்தைச் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

    • கார் விபத்தில் சிக்கி தற்போது கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளார்.
    • ஏ + பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. 7 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இந்த வருடத்துக்கான (2022-2023) வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த வருடாந்திர ஒப்பந்தம் அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை தேதியிடப்பட்டுள்ளது.

    பிசிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. வீரர்களின் திறமைக்கேற்ப ஏ+, ஏ, பி, சி என நான்கு பிரிவுகளில் வீரர்களை தரம் பிரித்து சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் ஏ + பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. 7 கோடியும், ஏ பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. 5 கோடியும், பி பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. 3 கோடியும், சி பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. 1 கோடியும் சம்பளமாக வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்த வருட (அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை) வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி ஏ+ பிரிவில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, காயத்தால் ஓய்வில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆல்-ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா ஆகிய 4 பேர் இடம் பிடித்துள்ளனர்.

    பிரிவு ஏ-வில் ஹர்த்திக் பாண்ட்யா, தமிழக வீரர் அஷ்வின், முகமது ஷமி, கார் விபத்தில் சிக்கி தற்போது கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல் ஆகிய 5 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    பிரிவு பி-யில் செத்தேஷ்வர் புஜாரா, கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் ஆகிய 6 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    அதேபோல் பிரிவு சி-யில், உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், இஷன் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத் உள்ளிட்ட 11 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரிவு ஏ+ ( ரூ. 7 கோடி) - ரோகித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா.

    பிரிவு ஏ (ரூ. 5 கோடி) - ஹர்த்திக் பாண்ட்யா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல்.

    பிரிவு பி (ரூ. 3 கோடி) - செத்தேஷ்வர் புஜாரா, கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், சுப்மன கில். பிரிவு சி (ரூ. 1 கோடி) - உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், இஷன் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ் பரத்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த தொடரில் புவனேஸ்வர்குமார் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
    • பவர் பிளேயில் 130 ஓவர் வீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் புவனேஷ்வர்குமார் முதல் இடத்தில் உள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 4-வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு குஜராத் மாநிலம் ராஜ்கோர்ட்டில் நடக்கிறது.

    இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் உலக சாதனை படைக்க உள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த தொடரில் புவனேஸ்வர்குமார் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வந்துள்ளார். சீனியர் வேகப்பந்து வீச்சாளர்களில் இவர் மட்டுமே அணியில் இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக பும்ரா, முகமது சமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் பவர் பிளேயில் ஒரு விக்கெட் எடுத்தால் புவனேஸ்வர்குமார் உலக சாதனை படைப்பார். பவர் பிளேயில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் புவனேஸ்வர் குமார் 33 விக்கெட்டுகள் எடுத்து 3-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த சாமுவேல் பத்ரி (33), இரண்டாது இடத்தில் நியூசிலாந்து அணியை சேர்ந்த டிம் சவுத்தி(33) ஆகியோர் உள்ளனர்.




     டி20 வரலாற்றில் பவர்பிளேயில் 100 ஓவர்களுக்கு மேல் வீசிய முதல் மூன்று பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார், பத்ரீ மற்றும் சவுத்தி ஆகியோர் ஆவர். டி20 போட்டிகளில் பவர் பிளேயில் 130 ஓவர் வீசி இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் புவனேஷ்வர்குமார் முதல் இடத்தில் உள்ளார்.

    டி20 போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர்களில் பும்ராவை(67 விக்கெட்) முந்துவதற்கு புவனேஸ்வர்குமாருக்கு (64 விக்கெட்) வாய்ப்பு இருக்கிறது. இந்த 2 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினால் அவரை முந்தி விடுவார். முதல் இடத்தில் சாஹல் உள்ளார். அவர் 72 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

    முதல் மூன்று போட்டிகளில் புவனேஸ்வர்குமார் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சிறந்த பந்து வீச்சாக இரண்டாவது டி20-யில் 4 ஒவர்கள் பந்து வீசி 13 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ×