search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CRPF Killed"

    வயது முதிர்வால் என்னால் துப்பாக்கியை தூக்க முடியாது. ஆனால் தேவைப்பட்டால் வீரர்களுக்கு உதவியாக ராணுவ வாகனம் ஓட்ட முடியும் என மருத்துவமனையில் ஹசாரே கூறினார். #JammuKashmir #CRPF #AnnaHazare

    சமூக ஆர்வலர் மற்றும் காந்தியவாதியான கிசன் பாபுராவ் ஹசாரே, அனைவராலும் அன்னா என அழைக்கப்பட்டு அன்னா ஹசாரே என அறியப்பட்டார்.  அவர் மத்தியில் லோக்பால் மற்றும் மராட்டியத்தில் லோக்ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜனவரி 30ந்தேதி தனது சொந்த கிராமமான அகமதுநகர் மாவட்டம் ராலேகான் சித்தியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.  

    அதன்பின் மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார். ஆனால் உண்ணாவிரத போராட்டத்தால் அவரது உடல் நிலை மிகவும் மோசமாகி சுமார் 5 கிலோ வரை  உடல் எடை குறைந்திருந்தார்.

    இதனால் மகாராஷ்டிராவின் அகமதுநகரில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ராணுவ வாகன ஓட்டுனராக பணிபுரிந்தவரான ஹசாரே, தீவிரவாத தாக்குதல் பற்றி அறிந்தவுடன் கூறும்பொழுது, வயது முதிர்வால் என்னால் துப்பாக்கியை தூக்க முடியாது.  ஆனால் தேவை ஏற்பட்டால், நாட்டுக்காக போரிடும் நம்முடைய ராணுவ வீரர்களுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கான வாகனம் ஓட்ட என்னால் முடியும் என கூறியுள்ளார்.

    கடந்த 1960ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த ஹசாரே அங்கு ராணுவ வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.  அதன்பின் கடந்த 1965ம் ஆண்டு நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரில் கேம் கரன் பிரிவில் பணியாற்றி உள்ளார்.#JammuKashmir #CRPF #AnnaHazare
    தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ரெயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார். #JammuKashmir #CRPF #RailwayEmployee
    புனே:

    காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்) 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறையில் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பாதுகாப்புக்கு கவச வாகனங்கள் உடன் சென்றன. மாலை 6 மணிக்குள் அவர்கள் சென்றடைய திட்டமிட்டிருந்தனர்.

    அவர்களது வாகனங்கள், ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.

    அப்போது பயங்கரவாதி ஒருவன் சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்களில் ஒன்றை குறிவைத்து வேகமாக மோதினான். அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின. அதில் அந்த பஸ் முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன.  இதில் துணை ராணுவ படையினர் 44 பேர் பலியாகி உள்ளனர்.



    இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றனர்.

    இந்நிலையில், தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட நபர் இன்று கைது செய்யப்பட்டார்.

    அவரது பெயர் உபேந்திரா பகதூர் சிங் (39).  இவர் ரெயில்வே துறையில் இளநிலை டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.

    இதுபற்றி மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, இன்று காலை லோனாவாலா பகுதியில் சிவாஜி சவுக் என்ற இடத்தில் உள்ளூர் குடியிருப்புவாசிகள் சிலர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர்.

    அந்த இடத்திற்கு வந்த சிங் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷங்களை எழுப்பினார்.  இதனால் அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அவரை அடிக்க முற்பட்டனர்.

    ஆனால் அங்கு குவிக்கப்பட்டு இருந்த காவல் துறை அதிகாரிகள் அவரை உடனடியாக கைது செய்தனர்.  அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அவருக்கு பிப்ரவரி 18ந்தேதி வரை போலீஸ் காவல் விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. #JammuKashmir #CRPF #RailwayEmployee
    புல்வாமா மாவட்டத்தில் 40 வீரர்களின் உயிரை பறித்த தாக்குதலை கண்டித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஜம்முவின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. #CurfewinJammu #Pulwamaattack
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் உள்பட மத்திய துணை ராணுவப் படையை சேர்ந்த 40 பேர் உடல் சிதறி, உயிரிழந்தனர்.

    பாகிஸ்தானில் இயங்கிவரும் ஜெய்ஷ்-இ-முஹம்மத் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள நிலையில் கொடூரமான இந்த  தாக்குதலை கண்டித்து ஜம்மு பகுதிக்கு உள்பட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஜம்முவின் சில பகுதிகளில் ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக, ஜம்மு நகருக்கு உட்பட்ட ஜிவல் சவுக், புரானி மண்டி, ரேஹாரி, சக்திநகர், பக்கா டங்கா, ஜானிப்பூர், காந்திநகர், பக்‌ஷிநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தானை கண்டித்து பஜ்ரங் தள், சிவசேனா கட்சியினரும் பொதுமக்களும் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


    குஜ்ஜார் நகர் பகுதியில் வாகனங்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சில இடங்களில் சாலைகளில் சிலர் டயர்களை எரித்து போக்குவரத்துக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்மு நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்தின்றி பல சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

    ஜம்மு-காஷ்மீர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோர்ட் நடவடிக்கைகளை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல், தெலுங்கானா மாநில வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

    இந்நிலையில், ஜம்மு பகுதியில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் இரு சமுதாயத்தினருக்கு இடையிலான மோதலாக திசை திரும்பலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு போலீஸ் துணை கமிஷனர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கையில் ராணுவத்தின் உதவி கோரப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். #CurfewinJammu #Pulwamaattack
    பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கான தலைமை தூதரை உடனடியாக டெல்லி வருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. #PulwamaAttack #IndianHighCommissioner #AjayBisaria
    புதுடெல்லி:

    புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தலைமை தூதரை நேரில் வரவழைத்து  இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே இன்று பிற்பகல் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், நேற்றைய தாக்குதல் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்த பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கான தலைமை தூதர் அஜய் பிசாரியா-வை உடனடியாக டெல்லி வருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.



    புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடம் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையிலான சில ஆதாரங்களை முன்வைத்து இந்த பிரச்சனையை மையப்படுத்தி இந்திய தூதரகத்தின் மூலம் பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி அளிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. #PulwamaAttack #IndianHighCommissioner #AjayBisaria 
    காஷ்மீர் மாநிலத்தில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் இருவரின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். #PulwamaAttack
    சென்னை:

    காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வாகனத்தின்மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    கடமையின்போது வீரமரணம் அடைந்த அவர்களில் இருவர் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன், மற்றொருவர் அரியலூர் மாவட்டம் கார்குடி பகுதியை சேர்ந்த சிவச்சந்திரன் என்பது இன்று தெரியவந்துள்ளது.


    இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் இருவரின் குடும்பங்களுக்கும் தலா 20 லட்சம் ரூபாய் கருணைத்தொகையாக அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #PulwamaAttack #TNCM #Rs20lakhsolatium #CRPFpersonnel  
    காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதல் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. #PMModi #CRPF #PulwamaAttack
    புதுடெல்லி:

    காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதையடுத்து இன்று டெல்லியில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த மந்திரி சபையை கூட்டினார்.

    அதன்படி காலையில் மோடி தலைமையில் மந்திரிசபை அவசர ஆலோசனை நடத்த கூடியது. இதில் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


    நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. காஷ்மீரில் உள்ள நிலைமை குறித்தும் அங்கு எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் தற்கொலை தாக்குதலுக்கு எப்படிப்பட்ட பதிலடி கொடுப்பது என்றும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

    காஷ்மீர் தாக்குதலையடுத்து பா.ஜனதா தலைவர்களின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்பட்டன. #PMModi #CRPF #PulwamaAttack 
    துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நடந்த தற்கொலை தாக்குதலில் சமீப காலங்களில் நடந்த மோசமான, மிகப்பெரிய தாக்குதல் ஆகும். #JammuKashmir #CRPF #PulwamaAttack
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பினர்.

    அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து பள்ளதாக்கு பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள் அணி வகுத்து செல்ல பாதுகாப்புக்கு கவச வாகனங்களும் உடன் சென்றன.

    ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் சென்றபோது பயங்கரவாதி ஒருவன் வெடி குண்டுகள் நிரப்பிய சொகுசு காரை வேகமாக ஓட்டி வந்து ராணுவ வீரர்கள் வந்த ஒரு பஸ் மீது மோதினான்.

    இதில் வெடிகுண்டுகள் பலத்த சத்தத்துடன் பயங்கரமாக வெடித்தது. பஸ்சில் இருந்த 76-வது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் அனைவரும் உடல் சிதறி விழுந்தனர். அருகில் வந்த மற்ற வாகனங்களும் சேதமடைந்தன.

    இந்த தற்கொலை தாக்குதலில் 44 துணைநிலை ராணுவ வீரர்கள் பலியானார்கள். அவர்களது உடல்கள் சாலையில் சிதறி கிடந்தன. படுகாயம் அடைந்து கிடந்த வீரர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.



    இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது.

    தற்கொலை தாக்குதல் நடத்தியது அதில் அகமது என்பதும் புல்வாமா மாவட்டம் காக்கபோரா பகுதியைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. இவன் கடந்த ஆண்டுதான் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளான்.

    இந்த தாக்குதலையடுத்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஜம்மு-காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்கை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    மேலும் மாநில தலைமை செயலாளர் ராஜீவ்கூபா, பாதுகாப்பு பிரிவு இயக்குனர் பத்நகர் ஆகியோரையும் தொடர்பு கொண்டு பேசினார். ராஜ்நாத்சிங் இன்று மேற்கு வங்காள சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு காஷ்மீர் செல்கிறார்.

    துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நடந்த தற்கொலை தாக்குதலில் சமீப காலங்களில் நடந்த மோசமான, மிகப்பெரிய தாக்குதல் ஆகும்.

    கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி காஷ்மீரில் உரி ராணுவ தளத்தில் நடந்த தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலையும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புதான் நடத்தியது.

    2016-ம் ஆண்டு ஜூன் 3-ந்தேதி பாலமோர் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்போது நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

    அதே ஆண்டு ஜனவரி மாதம் பதான்கோர்ட்டு ராணுவ தளத்தில் 6 பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 ராணுவ வீரர்கள், ஒரு அதிகாரி உயிரிழந்தனர்.

    கடந்த 2002-ம் ஆண்டு மே 14-ந்தேதி ஜம்முவில் உள்ள காலுசாக் ராணுவ பாசறையில் 3 பயங்கரவாதிகள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 36 வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இதுவரை நடந்துள்ள தாக்குதல்களில் தற்போது நடந்த தற்கொலை தாக்குதல் மிக மோசமானதாக கருதப்படுகிறது.

    ஒரே நாளில் 44 இந்திய ராணுவ வீரர்கள் தங்களது உயிரை தியாகம் செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    காஷ்மீர் தற்கொலை தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. #JammuKashmir #CRPF #PulwamaAttack
    காஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்களை குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. #JammuKashmir #CRPF #PulwamaAttack
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தியதற்கு ஜெய்ஷ்- இ -முகமது பொறுப்பேற்றுள்ளது.

    இந்த தாக்குதல் நடத்தியது ஆதில்அகமது தர் என்பது தெரியவந்தது. அவனை பற்றிய பரபரப்பு தகவல் வருமாறு:-

    ஆதில் அகமதுதர் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் கண்டிபா பகுதியை சேர்ந்தவன். தாக்குதல் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் கண்டிபா இருக்கிறது. இவன் தந்தை பெயர் ரியாஷ் அகமது. சிறிய கடை ஒன்றை அங்கு நடத்தி வருகிறார்.

    பிளஸ்-2 வரை படித்த ஆதில் படிப்பை பாதியிலேயே கைவிட்டுள்ளான். அவ்வப்போது அருகே உள்ள மில் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளான். இவனது உறவினர் ஒருவர் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில், ஆதிலுக்கும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்களின் மூளை சலவையில் கிறங்கிய அவன் கடந்த ஆண்டு திடீரென காணாமல் போனான். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளான். அவர்கள் ஆதிலை தற்கொலை தாக்குதலுக்கு பயிற்சி கொடுத்து தயார் படுத்தி உள்ளனர்.



    பெரிய தாக்குதல் நடத்துவதற்கு நேரம் பார்த்து இருந்துள்ளான். இதற்காக வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துள்ளான். அதன்படி இந்த தாக்குதலை நிறைவேற்றி உள்ளான்.

    இவன் அந்த அமைப்பில் ‘சி’ பிரிவை சேர்ந்த பயங்கரவாதி ஆவான்.

    தற்கொலை தாக்குதலுக்கு முன்பு ஆதில் அகமது தர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தான். அதில், என்னுடைய பெயர் ஆதில். நான் ஒரு ஆண்டுக்கு முன்பு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் சேர்ந்தேன். ஒரு ஆண்டு காத்திருப்புக்கு பிறகு நான் எதற்காக அந்த அமைப்பில் சேர்ந்தேனோ அந்த வாய்ப்பு கிடைக்க இருக்கிறது.

    இந்த வீடியோ உங்களை சென்று அடையும் போது நான் சொர்க்கத்தில் இருப்பேன். இதுதான் காஷ்மீர் மக்களுக்கு என்னுடைய கடைசி செய்தி. என்னை போல மேலும் பல இளைஞர்கள் இதே வழியில் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக” தெரிவித்துள்ளான்.

    ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதி அமைப்பு காஷ்மீர் இளைஞர்களை மூளை சலவை செய்து அவர்களை தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்துவதை தொடர்ந்து செய்து வருகிறது.

    2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி பர்தீன் அகமதுகான் என்ற 16 வயது சிறுவன் தற்கொலை தாக்குதலுக்கு ஈடுபடுத்தப்பட்டான். இவனை போல உள்ளூரை சேர்ந்த 3 பேரை அந்த பயங்கரவாத அமைப்பு தற்கொலைக்கு பயன்படுத்தி உள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். #JammuKashmir #CRPF #PulwamaAttack
    காஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 வீரர்கள் பலியானது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது. #JammuKashmir #CRPF #PulwamaAttack
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்) 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறையில் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பாதுகாப்புக்கு கவச வாகனங்கள் உடன் சென்றன. மாலை 6 மணிக்குள் அவர்கள் சென்றடைய திட்டமிட்டிருந்தனர்.

    வழக்கமாக ஒரே நாளில் ஆயிரம் வீரர்கள் அணிவகுத்து செல்வதுதான் வழக்கம். ஆனால் கடந்த 2, 3 நாட்களாக அந்த நெடுஞ்சாலையில் மோசமான வானிலை மற்றும் நிர்வாக காரணங்களால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அதனால்தான் துணை ராணுவ வீரர்கள் ஒரே நாளில் 78 வாகனங்களில் மொத்தமாக சென்றனர்.



    அவர்களது வாகனங்கள், ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புலவாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.

    அப்போது பயங்கரவாதி ஒருவன் சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்களில் ஒன்றை குறிவைத்து வேகமாக மோதினான். அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின. அதில் அந்த பஸ் முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன.

    தாக்குதலுக்கு உள்ளான பஸ்சில் பயணம் செய்த வீரர்கள் அனைவரும் உடல் சிதறிப்போய் விழுந்தனர்.

    இந்த கொடூர தாக்குதலில் 44 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடம் ரத்தக்களறிகளாலும், வீரர்களின் உடல் உறுப்புகளாலும் போர்க்களம் போல காணப்பட்டது.

    கார் குண்டு தாக்குதல் நடைபெற்ற இடம் காஷ்மீர் மாநிலத்தின் கோடை கால தலைநகரான ஸ்ரீநகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற தகவல், காட்டுத்தீ போல பரவியது. அங்கு உடனடியாக மீட்பு படையினர் விரைந்தனர். பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். தடய அறிவியல் வல்லுனர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர். தாக்குதல் நடந்த இடம் பாதுகாப்பு படைவீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டது.

    படுகாயம் அடைந்த வீரர்கள் அங்கிருந்து உடனடியாக மீட்கப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றனர்.

    தாக்குதல் நடத்திய பயங்கரவாதி புலவாமா மாவட்டம், காக்கபோரா பகுதியை சேர்ந்த அதில் அகமது எனவும், அவன் கடந்த ஆண்டுதான் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளான் எனவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட காரில் நிரப்பப்பட்டிருந்தவை, ஐ.இ.டி. வகையை சேர்ந்த பயங்கர வெடிகுண்டுகள் என தெரிய வந்துள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி காஷ்மீரில் உரி ராணுவ தளத்திலும் இதே ஜெய்ஷ் இ பயங்கரவாத அமைப்பினர்தான் கொடூரமான தாக்குதல் நடத்தி 18 வீரர்களை கொன்று குவித்தது நினைவுகூரத்தக்கது.

    அந்த தாக்குதலுக்கு பின்னர் இந்த கார் குண்டு தாக்குதல்தான் மிக மோசமான தாக்குதலாக அமைந்துள்ளது.

    தாக்குதலுக்கு ஆளான பஸ்சில் பயணம் செய்த வீரர்கள், மத்திய ஆயுதப்படை போலீசின் 54-வது பட்டாலியனை சேர்ந்தவர்கள்.



    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என நாட்டு மக்களுக்கு உறுதியளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்இ முகம்மது பயங்கரவாத அமைப்பு நடத்தியுள்ளது. இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். வீரமரணம் அடைந்த நமது வீரர்களுக்கு நாட்டு மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் வங்கதேசம் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.  உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயம் அடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகளின் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று சோனியா காந்தி  தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் கூறுகையில் தன்னலமின்றி நாட்டுக்காக பணியாற்றிய சிஆர்பிஎப் வீரர்களின் உயிர் தியாகம் மறக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறுகையில் பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் கோழைத்தனமானது எனவும்,  மிகுந்த மன வருத்தத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  தாக்குதலில் காயமடைந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

    பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு மத்திய மந்திரி அருண் ஜெட்லி, மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரிகள் உமர் அப்துல்லா, மெகபூபா, உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #JammuKashmir #CRPF #PulwamaAttack 
    ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சிஆர்பிஎப் வீரர்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #JammuKashmir #CRPF #MKStalin
    சென்னை:

    திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சிஆர்பிஎப் வீரர்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் கண்டனத்திற்குரியது. சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது.

    உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார். #JammuKashmir #CRPF #MKStalin
    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலால் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியானதால், பிரியங்கா காந்தி தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்தார். #JammuKashmir #CRPF #PriyankaGandhi

    பாராளுமன்ற தேர்தலுக்கான உத்தர பிரசேத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் கடந்த நான்கு நாட்களாக உத்தர பிரதேசத்தில் கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் முதன்முதலாக இன்று மாலை பிரியங்கா காந்தி பத்திரிகையாளர்களை சந்திக்க முடிவு செய்தார். பேட்டிக்கு தயாரானபோது, ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் செய்தி குறித்து அறிந்தார். இதனால் உடனடியான தனது முதல் பேட்டியை ரத்து செய்தார். அத்துடன் இரங்கல் தெரிவித்தார்.



    பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘‘இப்போது அரசியலைப் பற்றி பேசுவது பொருத்தமாகாது என நினைக்கிறேன். பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற தாக்குதல் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஒட்டுமொத்த நாடே உறுதுணையாக இருக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். #JammuKashmir #CRPF #PriyankaGandhi
    ஜம்மு-காஷ்மீரில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் பலியான சிஆர்பிஎஃப் வீரர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. #JammuKashmir #CRPF
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்கள். விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் இணைவதற்காக 2500-க்கும் மேற்பட்ட வீரர்கள் 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தார்கள்.

    வீரர்கள் சென்ற வாகனம் லடூமோடு பகுதியில் சென்றபோது வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை பயங்கரவாதிகள் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரமாக மோதச் செய்தனர். இதில் ஒரு வாகனம் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது.

    இதில் இருந்த வீரர்களில் 8 பேரும், அதன்பின் 18 பேரும் இறந்ததாக முதலில் தகவல் வெளியானது. அதன்பின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.



    இந்த கொடூர தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மத்திய நிதியமைச்சர் இதற்கு பதிலடி கொடுக்கும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி, வீரர்களின் தியாகம் வீண் போகாது என்று டுவிட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், நாளை ஸ்ரீநகர் விரைகிறார். #JammuKashmir #CRPF
    ×