search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CRPF Killed"

    பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். #Pulwamaattack #Trump
    வாஷிங்டன்:

    பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, “புல்வாமாவில் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதி நடத்திய தாக்குதல் மிகவும் கொடூரமானது. அது குறித்த அறிக்கைகள் எனக்கு கிடைத்துள்ளது.

    தாக்குதல் நடத்தியவர்களை பாகிஸ்தான் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றார்.

    அமெரிக்க அரசின் துணை செய்தி தொடர்பாளர் ராபர்ட் பல்லாடினோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    இத்தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு பாகிஸ்தான் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதுகுறித்து பாகிஸ்தானுடன் தொடர்பு கொண்டு பேசினோம். சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.


    அவரை தொடர்ந்து டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்பால்டன், ராணுவ மந்திரி மைக்பாம்பியோ, வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் ஆகியோரும் பேட்டி அளித்தனர்.

    அனைவரும் இந்தியாவுக்கு ஆதரவு அளித்தனர். ஜெய்ஷ் இ- முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதிகளின் சொர்க்க புரியாக்க ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினர். #Pulwamaattack #Trump
    காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவத்தில் காலியாக உள்ள 111 பணியிடங்களுக்கு 2,500 இளைஞர்கள் விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்றனர். #PulwamaAttack
    பாரமுல்லா:

    காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதியின் தற்கொலைப்படை தாக்குதலில் 40 மத்தியப்படை வீரர்கள் பலியானார்கள்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. ராணுவம் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் ராணுவத்தை பலப்படுத்துவதற்காக காலி இடங்களை நிரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவத்தில் காலியாக உள்ள 111 பணியிடங்களுக்கு வீரர்களை தேர்வு செய்யும் பணி நேற்று நடந்தது.

    இதற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதையடுத்து ராணுவத்தில் சேர நேற்று காஷ்மீர் இளைஞர்கள் பெருமளவில் திரண்டனர். மொத்தம் உள்ள 111 இடங்களுக்கு 2,500 இளைஞர்கள் திரண்டனர். அவர்களுக்கு பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு இறுதியாக அவர்களில் இருந்து 111 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.



    இதுபற்றி தேர்வுக்கு வந்த இளைஞர்கள் கூறுகையில், நாங்கள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக சேவை செய்ய ஆர்வமாக இருக்கிறோம். மேலும் எங்கள் குடும்பத்தை காப்பாற்றவும், நல்ல வேலைவாய்ப்பாக அமைந்துள்ளது என்றனர்.

    மேலும் சில இளைஞர்கள் கூறுகையில், நாங்கள் வேலைக்காக காஷ்மீரை விட்டு செல்ல மாட்டோம். ராணுவத்தில் வேலை என்பது மிகப்பெரிய வாய்ப்பு. காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்களை வேலைக்கு சேர்த்து உள்ளூரில் பிரச்சனைக்குரிய இடங்களில் பணி நியமனம் செய்தால், அவர்களால் மக்களுடன் எளிதில் அணுகி பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று தெரிவித்தனர்.

    ஜம்மு- காஷ்மீரில் மொத்தம் 22 மாவட்டங்கள் உள்ளன. இதில் ஸ்ரீநகர், அனந்தநாக், பாரமுல்லா, குல்காம், புல்வாமா ஆகிய 5 மாவட்டங்கள் மட்டுமே பயங்கரவாதிகளால் பாதிக்கப்படுகிறது.

    இங்குள்ள மக்களில் ஒரு பிரிவினர் தான் தனி நாடு கோ‌ஷத்துக்கு ஆதரவாக உள்ளனர். மற்ற 17 மாவட்டங்கள் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. காஷ்மீர் மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர்தான் பிரிவினையை ஆதரிக்கிறார்கள் என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #PulwamaAttack
    நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க் டீலர்களும் மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை 15 நிமிடங்கள் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளனர். #PulwamaAttack
    சென்னை:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி தாக்குதலில் 40 துணை ராணுவ படை வீரர்கள் பலியானார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களும் உயிர் இழந்தனர்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள இந்திய மக்களின் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திறது. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

    பள்ளி, கல்லூரிகள், கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் அனைத்து பொது நல அமைப்புகள் சார்பாகவும் மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டன.

    தமிழ்நாடு பெட்ரோலியம் வணிகர்கள் சார்பில் கடந்த 16-ந்தேதி ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 15 நிமிடங்கள் மூடப்பட்டன. இரவு 8 மணி முதல் 8.15 மணி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 4,800 பெட்ரோல் பங்குகளில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க் டீலர்களும் மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை 15 நிமிடங்கள் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்க தலைவர் கே.பி.முரளி கூறியதாவது:-



    தேசத்திற்காக 40 வீரர்கள் உயிர் இழந்துள்ள சம்பவம் நாட்டு மக்களை வேதனை அடைய செய்துள்ளது. உயிர் இழந்துள்ள வீரர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவிக்கும் வகையில் இன்று இரவு 7 மணிக்கு தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து பெட்ரோலிய பங்குகளிலும் விளக்குகளை அனைத்து விற்பனையை நிறுத்துகிறோம். 15 நிமிடங்கள் விற்பனை நடைபெறாது.

    அப்போது பங்குகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த வீரர்களின் ஆன்மா சாந்தி அடையும் வகையில் பேனர் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #PulwamaAttack
    புல்வாமா தாக்குதலை கண்டித்து இந்தியா மிரட்டல் விடுத்ததை அடுத்து ஐ.நா.சபை தலையிடும் படி பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரேஷி கேட்டுக்கொண்டுள்ளார். #PulwamaAttack
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இது இந்திய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரேஷி ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்டானியோ குட்டெரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.



    அதில் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு காஷ்மீரை சேர்ந்தவரே காரணம். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பழி சுமத்தி அப்பகுதியில் பதட்டத்தை உருவாக்கியுள்ளது.

    எனவே, இதில் ஐ.நா.சபை தலையிட்டு இப்பகுதியில் அமைதி ஏற்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து ஒளிவுமறைவற்ற விசாரணை நடத்த வேண்டும்.

    பதட்டத்தை தணிக்க பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் மக்களுடன் பேச்சு நடத்த இந்தியாவை வற்புறுத்த வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. #PulwamaAttack #UN
    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு புல்வாமா தாக்குதலில் பலியான நமது வீரர்களின் தியாகம் விரயமாகப்போக அனுமதிக்காது. நமது ராணுவம் சரியான பதிலடி தரும் என அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். #Modigovernment #sacrificeofjawans #AmitShah
    ஜெய்ப்பூர்:

    பாஜக தலைவர் அமித் ஷா ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று உரையாற்றினார்.

    'எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மட்டும் முக்கியமான தேர்தல் அல்ல. ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கே முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது அமையும்.

    பாஜக தோல்வியினால் துவண்டு விடாது, வெற்றியால் மமதையும் கொள்ளாது. மக்களுக்கு சேவை செய்வதற்காகதான் நாங்கள் அரசியலில் இருக்கிறோம்.

    மோடியை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மாபெரும் கூட்டணியின் முழக்கமாக உள்ளது. இந்த கூட்டணியின் தலைவர் யார் என்பதை ராகுல் காந்தி அறிவிக்க வேண்டும்.


    புல்வாமா தாக்குதலில் பலியான நமது வீரர்களின் தியாகம் விரயமாகப்போக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதிக்காது. நமது ராணுவம் இதற்கு சரியான பதிலடியை கொடுத்தே தீரும்’ என இந்த கூட்டத்தில் பேசிய அமித் ஷா தெரிவித்தார்.  #Modigovernment #sacrificeofjawans #AmitShah #Pulwamajawans #Pulwamaattack
    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் குடும்பங்களுக்காக தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் நடிகர் சல்மான் கான் நிதி திரட்டி வருகிறார். #SalmanKhan #BeingHuman #Pulwamamartyrs #PulwamaAttack
    புதுடெல்லி:

    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசுகளும் தனிநபர்களும் பெருமளவில் நிதியுதவி செய்து வருகின்றனர். இந்தி நடிகர் அமிதாப் பச்சன் 40 வீரர்களின் குடும்பங்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அளிப்பதாக அறிவித்தார்.



    இந்த வரிசையில் இந்தி திரையுலகின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக உள்ள சல்மான் கானும் தற்போது இணைந்துள்ளார்.

    தனது ‘பீயிங் ஹியூமன்’ (Being Human) அறக்கட்டளை மூலம் நடிகர் சல்மான் கான் நிதி திரட்டி வருகிறார். சல்மான் கானின் இந்த முயற்சிக்கு மத்திய உள்துறை இணைமந்திரி கிரண் ரிஜுஜு பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார். #SalmanKhan #BeingHuman #Pulwamamartyrs #PulwamaAttack
    புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் சுப்பிரமணியன் உடல் தூத்துக்குடி மாவட்டம், சவலாப்பேரி கிராமத்தில் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. #PulwamaAttack #Subramanian
    கயத்தாறு:

    காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள சவலாப்பேரி கிராமம், மேலத்தெருவை சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன்(30) வீரமரணம் அடைந்தார்.

    இவர் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வீரராக பணியாற்றினார். இவருக்கு கிருஷ்ணவேணி(23) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.

    சுப்பிரமணியன் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் 10-ந்தேதி காலையில் மீண்டும் பணிக்கு புறப்பட்டு சென்றார்.

    நேற்று முன்தினம் சுப்பிரமணியன் ஸ்ரீநகர் சென்று மீண்டும் பணியில் சேர்ந்ததாக தன்னுடைய மனைவியிடம் செல்போனில் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பயங்கரவாதி நடத்திய திடீர் தாக்குதலில் சகவீரர்களுடன் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் சவலாப்பேரி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

    சுப்பிரமணியன் உடல் இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் மற்ற வீரர்கள் உடல்களுடன் திருச்சி வந்தது.



    திருச்சியில் இருந்து மதுரைக்கு விமானம் வந்தது.  அங்கு கயத்தாறு வீரர் சுப்பிரமணியனின் உடல் இறக்கப்பட்டது. அவரது உடலுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கலெக்டர் நடராஜன், போலீஸ் ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன், டி.ஐ.ஜி. பிரதீப்குமார், போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அஞ்சலி செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியனின் உடல் தனி வாகனத்தில் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு சுப்பிரமணியன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். அப்போது, தமிழக அரசு அறிவித்த 20 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு அரசு பணி நியமன உத்தரவை துணை முதல்-அமைச்சர் அளித்தார்.

    சவலாப்பேரி கிராமத்தை சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சவலாப்பேரி கிராமத்திற்கு திரண்டு வந்து சுப்பிரமணியன் படத்தை அலங்கரித்து வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.



    பின்னர் சுப்பிரமணியன் உடல் வீட்டின் அருகாமையில் உள்ள அவரது குடும்பத்துக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் காவல் துறை உயரதிகாரிகளும், அரசு உடரதிகாரிகளும் சுப்பிரமணியன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    மாலை சரியாக 6.15 மணியளவில் 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் சுப்பிரமணியனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. #PulwamaAttack #Subramanian 
    புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான அரியலூர் மாவட்டம், கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் உடல் அரசு மரியாதையுடன் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. #PulwamaAttack
    அரியலூர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனத்தின் மீது பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், பயங்கரவாதிகளுக்கு எதிராக மக்களிடம் ஆவேசத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகிய 2 வீரர்கள் பலியானார்கள்.

    சிவச்சந்திரன் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். சுப்பிரமணியனுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு.

    பலியான மற்ற வீரர்கள் உடலுடன் தமிழக வீரர்களின் உடல்களும் டெல்லி கொண்டு வரப்பட்டு பிரதமர் மோடி , உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் அஞ்சலிக்கு பின் சொந்த ஊர்களுக்கு உடல்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.

    தமிழக வீரர்கள் சுப்பிரமணியன், சிவச்சந்திரன் உடல்களுடன் கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த 2 வீரர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் திருச்சி விமான நிலையம் வந்து சிவச்சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    அப்போது சிவச்சந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அவர்களுக்கு நிர்மலா சீதாராமன் ஆறுதல் கூறினார்.

    இதைத்தொடர்ந்து சிவச்சந்திரனின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றி சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.


    கார்குடி கிராமத்தில் உறவினர்கள் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக சிவச்சந்திரனின் உடல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.  நிர்மலா சீதாராமன் இங்கும் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசனும் அஞ்சலி செலுத்தினார்.

    சிவச்சந்திரனின் உடலுக்கு அவருடைய மகன் ராணுவ உடையில் அஞ்சலி செலுத்தினான்.

    அரசு அறிவித்த ரூ.20 லட்சத்துக்கான கருணை உதவி காசோலை சிவச்சந்திரனின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

    சுமார் 5.10 மணியளவில் சிவச்சந்திரன் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. #PulwamaAttack #CRPFAttack #SivaChandran 
    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதலால் இந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் பழி தீர்க்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். #Pulwamaattack
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம், துலே மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அம்மாநில மந்திரிகள் பங்கேற்றனர்.



    தனது உரையினிடையே புல்வாமா தாக்குதல் தொடர்பாக பேசிய மோடி, ‘இது மிகவும் துயரமான நேரமாகும். நமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திகொண்டு அறிவார்த்தமாக சிந்திக்க வேண்டிய நேரமுமாகும். புல்வாமா தாக்குதலால் இந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்க்கப்படும்’ என சூளுரைத்துள்ளார். #Pulwamaattack #Pulwamaattackavenge #Modi 
    புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொல்கத்தாவில் இன்று மம்தா பானர்ஜி தலைமையில் அமைதி பேரணி நடந்தது. #Mamatamarch #candlelightmarch #Pulwamaattack
    கொல்கத்தா:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விவாதிப்பதற்காக டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எல்லா வகையிலான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



    இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் இன்று மாலை கொல்கத்தா நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி, வாயில் கருப்புத்துணி கட்டியவாறு,  நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். #Mamatamarch  #candlelightmarch #Pulwamaattack
    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் பலியானா 2 தமிழக வீரர்கள் குறித்து அவர்களது உறவினர்கள் தெரிவித்த உருக்கமான தகவல்களை பார்க்கலாம். #JammuKashmir #CRPF
    தூத்துக்குடி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது நேற்று முன்தினம் வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோதவிட்டு பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 40-க்கு மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

    அவர்களில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சவலாப்பேரி மேல தெருவைச் சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியனும் (வயது 30) வீர மரணம் அடைந்தார். சுப்பிரமணியன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரராக பணியாற்றினார். இவருக்கு கிருஷ்ணவேணி (23) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    சுப்பிரமணியன் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் கடந்த 10-ந் தேதி காலையில் மீண்டும் பணிக்கு புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் சுப்பிரமணியன் ஸ்ரீநகர் சென்று மீண்டும் பணியில் சேர்ந்ததாக தன்னுடைய மனைவியிடம் செல்போனில் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் சகவீரர்களுடன் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் சவலாப்பேரி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

    இதுகுறித்து சுப்பிரமணியனின் உறவினர்கள் தெரிவித்த உருக்கமான தகவல்கள் வருமாறு:-

    சுப்பிரமணியன் ஐ.டி.ஐ. படித்து விட்டு, கடந்த 5 ஆண்டு களாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி வந்தார். அவர் முதலில் சென்னையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரராக பயிற்சி பெற்றார். பின்னர் அவர் உத்தரபிரதேசத்திலும், தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் பணியாற்றினார். பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சுப்பிரமணியம் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் விடுமுறை முடிந்து அவர் மீண்டும் பணியில் சேர்ந்த அன்றே இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. முன்னதாக அவர் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு தான் பணியில் சேர்ந்த தகவலை தெரிவித்து இருக்கிறார். ஆனால், அவருக்கு இந்த நிலை ஏற்படும் என்று நாங்கள் யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

    இவ்வாறு அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    சுப்பிரமணியனின் தந்தை கணபதி விவசாயி ஆவார். தாயார் மருதம் அம்மாள். சுப்பிரமணியனுக்கு பேச்சியம்மாள், வேல்தாய் ஆகிய 2 அக்காள்களும், கிருஷ்ணசாமி என்ற அண்ணனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

    வீரமரணம் அடைந்த சுப்பிரமணியனின் குடும்பத்தினருக்கு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், தாசில்தார் லிங்கராஜ் மற்றும் வருவாய் துறையினர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

    சுப்பிரமணியனின் உடல் இன்று (சனிக்கிழமை) அவரது சொந்த ஊரான சவலாப்பேரிக்கு கொண்டுவரப்பட்டு, ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

    இதே போல் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் சிவசந்திரன் பலியாகி உள்ளார். அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவசந்திரன் குறித்த விவரம் வருமாறு:-

    உடையார்பாளையம் தாலுகா தா.பழூர் அருகே கார்குடி கிராமத்தில் உள்ள காலனி தெருவை சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி சிங்காரவள்ளி. இந்த விவசாய தம்பதிக்கு 2-வது மகனாக பிறந்தவர் சிவசந்திரன் (வயது 33). எம்.ஏ. பிஎட். பட்டதாரியான இவருக்கு நாட்டின் மீது அதிக பற்று ஏற்பட்டதால், ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் கடந்த 2010-ம் ஆண்டில் நடந்த ராணுவத்திற்கான ஆட்கள் தேர்வில் கலந்து கொண்டு தேர்வானார். 2010-ம் ஆண்டு முதல் சிவசந்திரன் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்களை குறி வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் நடத்திய வெடி குண்டு தாக்குதலில் இவரும் பலியான சம்பவம் அந்த கிராமத்தை மட்டுமல்லாமல் அரியலூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    சிவசந்திரன் தனது கிராமத்தை சேர்ந்த காந்திமதி (28) என்கிற பெண்ணை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது 2 வயதில் சிவமுனியன் என்கிற மகன் உள்ளான். மேலும் காந்திமதி தற்போது கர்ப்பமாக உள்ளார். கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி சிவசந்திரன் காஷ்மீரில் இருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

    பின்னர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து விட்டு, கடந்த வாரம் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று தரிசனம் செய்தார். பின்னர் விடுமுறை முடிந்து மீண்டும் ராணுவத்தில் பணியாற்ற கடந்த 9-ந் தேதி சிவசந்திரன் சொந்த ஊரில் இருந்து புறப்பட்டு காஷ்மீர் சென்றார்.

    நேற்று முன்தினம் மதியம் தான் சிவசந்திரன் தனது குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனது மனைவி காந்திமதியிடம் மகன் சிவமுனியனை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறும், கர்ப்பமாக உள்ள நீயும் தவறாமல் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறும், நன்கு உடலை கவனித்து கொள்ளுமாறும் சிவசந்திரன் பேசியதாக தெரிவித்தார்.

    வீர மரணம் அடைந்த சிவசந்திரனுக்கு ஜெயந்தி என்கிற அக்காவும், ஜெயசித்ரா என்கிற தங்கையும், செல்வசந்திரன் என்கிற தம்பியும் உள்ளனர். இதில் செல்வசந்திரன் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஆண்டு வேலை பார்த்தபோது மின்சாரம் தாக்கி பலியானார். ஜெயந்தி திருமணமாகி கார்குடி கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். மனநிலை பாதிக்கப்பட்டவரான ஜெயசித்ரா வீட்டில் பெற்றோரின் பராமரிப்பில் உள்ளார். சின்னையன்- சிங்காரவள்ளி தம்பதி ஏற்கனவே இளைய மகன் செல்வசந்திரனை மின்சாரம் தாக்கியதில் பறி கொடுத்தனர். இந்நிலையில் சிவசந்திரனையும் பறிகொடுத்து விட்டு தவித்து வருகின்றனர்.

    சிவசந்திரனின் தந்தை சின்னையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிறு வயது முதலே சிவசந்திரன் நாட்டுப்பற்று மிக்கவராக இருந்து வந்தார். எப்போதும் நாடு, நாடு என்று கூறுவார். நாட்டை காப்பாற்ற சென்றவர் வீட்டில் உள்ளவர்களை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டார். விடுமுறையில் வந்திருந்தவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பே பணிக்கு சென்றார். நேற்று மதியம் (அதாவது நேற்று முன்தினம் மதியம்) 12 மணியளவில் சிவசந்திரன் அவரது மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அரசு என்னதான் சலுகைகள் கொடுத்தாலும் இனி என் மகனின் உயிர் வராது. நாட்டுக்காக அவரை அர்ப்பணித்து கொண்டார். இப்படி ஒரு பிள்ளையை பெற்றதற்காக பெருமைப்படுகிறேன்.

    இவ்வாறு கூறி கதறி அழுதார்.

    மேலும் சிவசந்திரன் வீட்டிற்கு அருகில் உள்ள அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. #JammuKashmir #CRPF 
    துணை ராணுவ படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக அரசியல் கட்சிகள், பாகிஸ்தானுக்கு இந்திய அரசு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். #TNPolitical #JammuKashmir #CRPF
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் இந்திய துணை ராணுவப்படையினரின் வாகன அணி வகுப்பு மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் துயரத்தையும், வேதனையையும் தருகிறது.

    இந்தியாவில் அமைதியை சீர்குலைக்கவும், குழப்பத்தை ஏற்படுத்தவும் முயன்றதற்காக பாகிஸ்தானுக்கு பல்வேறு தருணங்களில் இந்திய படைகள் பாடம் புகட்டியுள்ளன. அதற்கு பிறகும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் ஊக்குவித்து வருவது கண்டிக்கத்தக்கது.

    இனி வரும் காலங்களில் இத்தகைய தாக்குதல்கள் நடக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, இனி வரும் காலங்களில் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவது குறித்தோ, ஊக்குவிப்பது குறித்தோ நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு பாகிஸ்தானுக்கு ராணுவ அளவிலும், ராஜிய அளவிலும் கடுமையான பாடம் புகட்டப்பட வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் இல்லை என்று ராணுவ மந்திரி சொல்லிவந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவு ராணுவத்திற்கு 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் நிலையில், நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் பாதுகாப்பையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

    பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அழிக்க மத்திய அரசு தயங்கக்கூடாது. மத்திய அரசின் முயற்சிக்கு இந்த தேசமே எழுந்து வந்து உறுதுணையாக இருக்க வேண்டும். பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இந்த தாக்குதல் கண்டிக்கத்தக்கது’ என்று கூறியுள்ளார்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த துணை ராணுவப்படை வீரர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோர் உள்பட 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. வருத்தம் அளிக்கிறது. இச்செய்தி நாடு முழுவதும் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை த.மா.கா வன்மையாக கண்டிக்கிறது. இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை உடனடியாக கண்டுபிடித்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை. பயங்கரவாதத்தை முறியடிக்க வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் மத்திய அரசு ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசம் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப்படையினர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர்தியாகம் செய்திருப்பதற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிக்க வேண்டிய தருணம் இது. இந்த தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாத அமைப்பையும், அதில் ஈடுபட்டவர்களையும் ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டிய தருணம் இது.

    பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க, இந்திய ராணுவம் முன் வரவேண்டும். இந்து முன்னணி, தமிழக முழுவதும் கோவில்களில் மோட்ச தீபம் ஏற்றி பலியான வீரர்களின் ஆன்மா நற்கதியடை பிரார்த்தனை செய்ய இருக்கிறது. மேலும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், ‘வீரம் நிறைந்த நம் படைவீரர்களின் உயிர் வீணாக்கப்பட்டது. இதுபோன்ற கோழைத்தனமான செயல் செய்வோரை உறுதியோடும், கண்டிப்போடும் கையாள வேண்டும். முடிவெடுப்பதில் உள்ள குறைபாட்டினால் நம் நாடு பெரும் விலை கொடுத்து வருகிறது’ என்றார். #TNPolitical #JammuKashmir #CRPF
    ×