search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் - மோடி சபதம்
    X

    புல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் - மோடி சபதம்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதலால் இந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் பழி தீர்க்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். #Pulwamaattack
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம், துலே மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அம்மாநில மந்திரிகள் பங்கேற்றனர்.



    தனது உரையினிடையே புல்வாமா தாக்குதல் தொடர்பாக பேசிய மோடி, ‘இது மிகவும் துயரமான நேரமாகும். நமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திகொண்டு அறிவார்த்தமாக சிந்திக்க வேண்டிய நேரமுமாகும். புல்வாமா தாக்குதலால் இந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்க்கப்படும்’ என சூளுரைத்துள்ளார். #Pulwamaattack #Pulwamaattackavenge #Modi 
    Next Story
    ×