search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "continuous rain"

    • சேலத்தில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
    • இதேபோல் நேற்று இரவு, மாவட்டத்தில் ஆணைமடுவு, ஏற்காடு, காடையாம்பட்டி, சேலம் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    சேலம்:

    சேலத்தில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மாலை நேரம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், குளிர்ந்த காற்று வீசுகிறது. தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    இதேபோல் நேற்று இரவு, மாவட்டத்தில் ஆணைமடுவு, ஏற்காடு, காடையாம்பட்டி, சேலம் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலைகளில் ஓடியது. இதனால் பல இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    ஆணைமடுவு - 5, ஏற்காடு-2.8, கடையாம்பட்டி-1, சேலம் - 0.3 என மொத்தமாக 9.10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • இடி மின்னலுடன் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது.
    • அணைகளின் நீர்மட்டம் உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி, திண்டுக்கல் உள்பட மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி கடந்த சில நாட்களாக தேனி, திண்டு க்கல் மாவட்டத்தில் தொட ர்ந்து மழை பெய்துவருகிறது. நேற்று பகல் பொழுதில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலையில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

    தேனியில் மரம் முறிந்து விழுந்ததில் கார் சேதமடைந்தது. பெரியகுளத்தில் இடி மின்னலுடன் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது. ஆண்டிபட்டி பகுதியில் மாலை நேரத்தில் சாரல் மழையுடன் குளிர்ந்தகாற்று வீசியது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.

    தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைகளின் நீர்மட்டம் உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதன்மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்திற்கு முதல்போக சாகுபடி தண்ணீர் திறப்பதில் சிக்கல் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 116.20 அடியாக உள்ளது. அணைக்கு 413 கனஅடிநீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 100 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. வைகை அணையின் நீர்மட்டம் 53.97 அடியாக உள்ளது. 247 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.40 அடியாக உள்ளது. 4 கனஅடிநீர் வருகிறது. 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 57.89 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 32, தேக்கடி 4.2, கூடலூர் 4.6, உத்தமபாளையம் 7.2, சண்முகாநதி அணை 16.4, போடி 2, வைகை அணை 12.4, சோத்துப்பாறை 18, மஞ்சளாறு 3, பெரியகுளம் 75, வீரபாண்டி 30.4, அரண்மனைப்புதூர் 32.4, ஆண்டிபட்டி 21.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
    • அரசு தரப்பில் உதவிகள் வழங்கப்படவில்லை என புகார்

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கத் தில் தொடரும் மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெல்வயல்கள் சேதமடைந் துள்ளன. கலசப்பாக்கம், புதுப்பாளையம், துரிஞ்சா புரம் ஆகிய ஒன்றிய பகு திகளில் கடந்த ஆடி மாதம் சம்பா பயிரான பொன்னி விதைக்கப்பட்டது.

    நெல் விதைத்து நடவு செய்து 6 மாதத்துக்குப் பின் தற்போது அறுவடை செய்யும் நிலையில் பயிர் தயாரானது. பல இடங்க ளில் பயிர் அறுவடை முடிந்த நிலையில் மழை தொடர்ந்துவருகிறது.

    அறுவடை செய்வதற்கு ஏந்திரங்களும், தொழிலாளர்களும் கிடைக்காத நிலையில் அறுவடைப் பணிகளை விவசாயிகள் தொடங்காமல் உள்ளனர்.

    இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்களில் விடப்பட்டுள்ள நெற்கதிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. இதனால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகினர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கலசப்பாக்கம் பகுதியில் எந்த தொழிற்சாலையும் கிடையாது. இதனால் வெளி மாநிலங்களில் சென்று தான் வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    கொரோனா தாக்குதலினால் கடந்த 2 ஆண்டுகள் விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வந்தனர். ஆறுதலாக சம்பா பருவம் கைகொடுக்கும் என நம்பினோம். தற்போது நெல்கொள்மு தல் விலையும் சற்று அதி கரித்துள்ளது. இந்நிலை யில் அறு வடைக்காலத்தில் மழைபெய்தால் பயிர்கள் நீரில் மூழ்கின.

    கடந்த 2 ஆண்டுகளாக விவசாயம் பாதித்த பகுதிகளில் பயிர்க்காப்பீடு செய்தவர்களுக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்தது. அரசு தரப்பில் நிவாரண உதவிகள் அளிக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் வேதனைக்குள்ளா கியுள்ளனர்.

    தற்போது, மாவட்ட நிர்வாகம் மூலம் மழை பாதிப்புக்குள்ளான நெற் பயிர்களை கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • மதுரை மாவட்டத்தில் தொடர் மழையால் சாத்தியாறு அணை நிரம்புகிறது.
    • 13 ஆண்டுகளுக்கு பின் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியாறு அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான திண்டுக்கல் சிறுமலை, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் இந்த அணைக்கு வருகிறது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய பருவமழை இல்லாத காரணத்தால் அணை முழுவதுமாக வறண்டு காணப்பட்டது. இதனால் இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறும் 11 கிராம கண்மாய்களும் முழுவதுமாக வறண்டு காணப்பட்டது.

    போதிய நீர் வசதியின்றி விவசாயிகள் கடும் வறட்சிக்கு உள்ளாகினர். இதனால் வைகை அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் இந்த அணைக்கு ராட்சத பைப் மூலம் கொண்டு வந்து அணையை நிரப்ப வழிவகை செய்ய வேண்டும் என பாசன வசதி பெரும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக அவ்வப்போது பெய்த பருவமழை காரணமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து ஓரளவு தண்ணீர் வந்த நிலையில் அணை முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்தது. இதனால் இந்த அணையில் இருந்து பாசன வசதி பெறும் 11 கிராம கண்மாய்களும் நிரம்பியது.

    இருப்பினும் தற்போது பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக கடந்த ஒரு மாதமாக அணை முழுவதுமாக நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்தும் அணைக்கு நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் பாசன வசதி பெறும் 11 கிராம கண்மாய்களும் முழுவதுமாக நிரம்பி விவசாயப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    அனைத்து கிராம கண்மாய்களும் நிரம்பி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அணையில் இருந்து வரும் தண்ணீர் மதுரை வைகை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. பாசன வசதி பெறும் எர்ரம்பட்டி, கீழச்சின்னம்பட்டி முடுவார்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் 13 ஆண்டுகளுக்குப் பின் நெல் நடவு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வானம் பார்த்த பூமியாக இருந்த இப்பகுதி விவசாய நிலங்கள் தற்போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சை ஆடை போர்த்தியபடி கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

    • நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நெல் வயல்களை மழைநீர் தேங்கும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்படுகிறது.
    • நோய் தாக்குதல்களை தடுக்க 1 கிலோ சூடோமோனாஸ் எதிர் பூச்சாணக்கொல்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து 10 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை வேளாண்மை இணை இயக்குனர் முருகா னந்தம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நெல் வயல்களை மழைநீர் தேங்கும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்படுகிறது.

    வயலில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வடிகட்ட வேண்டும். இளமஞ்சள் நிறத்தில் காணப்படும் பயிர்களுக்கு இலைவழி உரமிட வேண்டும். 1 கிலோ சிங்க் சல்பேட், 2 கிலோ யூரியா 200 லிட்டர் தண்ணீரில் கலந்து இலை மூலம் தெளிக்க வேண்டும்.

    நோய் தாக்குதல்களை தடுக்க 1 கிலோ சூடோமோனாஸ் எதிர் பூச்சாணக்கொல்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து இலை மூலம் தெளிக்க வேண்டும்.

    நோய் தாக்குதல்களை தடுக்க 1 கிலோ சூடோமோனாஸ் எதிர் பூச்சாணக்கொல்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து 10 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும்.

    மகசூல் இழப்பில் இருந்து பயிர்களை காப்பாற்ற 4 கிலோ டி.ஏ.பி.உரத்தினை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் ஊற வைத்து மறுநாள் வடிகட்டிய கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ பொட்டாஷ் உரத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

    பூச்சி தாக்குல் அதிகமாக காணப்படும் பொழுது வேம்பு சார்ந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

    மேலும் விவசாயிகள் தங்கள் நெல், உளுந்து, பாசிப்பயிறு மற்றும் மக்காச்சோள பயிர்களை முன்கூட்டியே பயிர் காப்பீடு செய்தால் எதிர்பாராத இழப்பில் இருந்து விவசாயி கள் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெள்ள அபாய எச்சரிக்கை
    • பொதுமக்கள் ஆறுகளை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தல்

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 11-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை பரவலான கன மழை பெய்தது. வரும் நாட்களிலும் மழை தொடரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    தமிழக -ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணை 37.72 அடி உயரம் கொண்டது. அணையில் 261.36 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணை ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கான நீர்வரத்து முழுவதும் உபரி நீராக ஆற்றில் கலந்து வருகிறது.

    தொடர் மழையின் காரணமாக அணைக்கான நீர்வரத்து நேற்று 250 கன அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரே நீர்த்தேக்க அணையான ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் 26.64 அடி உயரம் கொண்டது.

    அணை ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தொடர் மழையால் அணைக்கு வரும் 43.79 கன அடி நீரையும் வெளியேற்றி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் 12 முழுமையாக நிரம்பியுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளில் 137 ஏரிகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 49 ஏரிகளில் 31 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 519 ஏரிகளில் 180 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன.

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக பாலாற்றுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் இருந்து 415 கன அடிக்கும், மண்ணாற்றில் இருந்து 100, கல்லாற்றில் இருந்து 50, மலட்டாற்றில் இருந்து 250, அகரம் ஆற்றில் இருந்து 340, மோர்தானாவில் இருந்து 250, பேயாற்றில் இருந்து 40, வெள்ளக்கல் கானாறு, ஆணைமடுகு கானாறு, கண்டித்தோப்பு கானாறுகளில் இருந்து 20 என பாலாற்றில் 1,460 கன அடிக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. 

    பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

    ''மாவட்டத்தில் பெய்த கன மழையால் பாலாறு, கொட்டாறு, பொன்னையாறு, பேயாற்றில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    மேலும், அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் பொதுமக்கள் ஆறுகளை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ மற்றும் குழந்தைகள் ஆற்றுப்படுகைகளில் விளையாட அனுமதிக்க வேண்டாம்'' என தெரிவித்துள்ளார்.

    • குளத்தில் நிரம்பி வழியும் உபரிநீர், வாய்க்கால் வழியாக சென்று ஊத்துக்குளி அருகே நொய்யலில் கலக்கிறது.
    • குளத்தில் உள்ள பறவைகள், மீன்களை உட்கொள்வதால், அவற்றிக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில், நொய்யல் ஆற்றை ஆதாரமாக கொண்ட குளம், குட்டைகள் உள்ளன. மாவட்டத்தின் முதல் குளமாக இருப்பது சாமளாபுரம் குளம். செந்தேவிபாளையம் அணைக்கட்டில் இருந்து குளத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.

    ஏற்கனவே 80 சதவீத தண்ணீருடன் நிரம்பியிருந்த சாமளாபுரம் குளம் தற்போது நிரம்பி வழிகிறது. சாமளாபுரம் குளத்தில் இருந்து வெளியேறும் உபரிநீர், வழங்குவாய்க்கால் வழியாக பள்ளபாளையம் குளம் செல்கிறது.

    பள்ளபாளையம் குளமும் வேகமாக நிறைந்து, உபரிநீர் பரமசிவம்பாளையம் ஓடை வழியாக வெளியேறிக்கொண்டிருக்கிறது. வாய்க்கால்கள் புனரமைக்கப்பட்டு பள்ளபாளையம் குளத்தின் கசிவு நீரும் வாய்க்கால்களில் சென்று கொண்டிருக்கிறது.

    இதேபோல், ஆண்டி பாளையம் குளமும் நிரம்பி, அடர்மரங்கள் வளர்ந்த இரு தீவுகளுடன் கண்கொள்ளா காட்சியாக, அமைந்துள்ளது. முக்கியமான குளங்கள் நிரம்பியுள்ளதால் நஞ்சராயன் குளத்துக்கு வரும் பறவைகள், ஓய்வு நேரத்தில், சாமளாபுரம், பள்ளபாளையம், ஆண்டிபாளையம் குளங்களுக்கும் திரும்பி கொண்டிருக்கின்றன.பருவமழையால் குளம், குட்டைகள் நிரம்பி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயருமென விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அவிநாசி, திருமுருகன்பூண்டி வழியாக வரும் நல்லாறு, திருப்பூர் மாநகராட்சி பகுதி வழியாக செல்கிறது. நல்லாற்றின் குறுக்கே, 450 ஏக்கரில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. குளத்தில் நிரம்பி வழியும் உபரிநீர், வாய்க்கால் வழியாக சென்று ஊத்துக்குளி அருகே நொய்யலில் கலக்கிறது.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுகள் நேரடியாக நல்லாற்றில் கலக்கின்றன. முறைகேடாக இயங்கும் சில சாயப்பட்டறைகள், 'பட்டன் - ஜிப்' பட்டறைகள் நல்லாற்றில் சாயக்கழிவை வெளியேற்றுகின்றன.

    நல்லாறு முழுமையாக மாசுபட்டு, கடும் துர்நாற்றத்துடன், ஆகாயத்தாமரை படர்ந்து காணப்படுகிறது. சிறிய மழை பெய்தாலும், சாயக்கழிவை நல்லாற்றில் திறந்துவிடுவதாகவும், பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதற்கு ஆதாரமாக, நஞ்சராயன் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை சாட்சியாக காட்டுகின்றனர்.

    கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக நல்லாற்றிலும் மழைநீர் செல்கிறது. இந்நிலையில், சாயக்கழிவை கலந்துவிடுவதால் குளத்தில் இருக்கும் மீன்கள் ஆங்காங்கே செத்து மிதப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

    விவசாயிகள் கூறுகையில், மழை பெய்யும் வாரங்களில், குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக்கும்.பல நாட்களுக்கு அகற்றாமல் இருக்கும் போது, கடும் துர்நாற்றம் வீசுகிறது. குளத்தில் உள்ள பறவைகள், மீன்களை உட்கொள்வதால், அவற்றிக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது.

    வலை மூலமாகவும், தூண்டில் போட்டும் குளத்தில் மீன் பிடிக்கின்றனர். சில நேரம் ஆபத்தை உணராமல் குளத்திற்குள் இறங்கி மீன் பிடிக்கின்றனர். சில நேரங்களில் இங்கு பிடிக்கப்படும் மீன்கள் சாப்பிட தகுதியற்றவையாகவும் இருக்கும்.மாவட்ட நிர்வாகம், குளத்தில் அடிக்கடி மீன்கள் செத்து மிதப்பதற்கான காரணத்தை கண்டறிந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றனர்.

    பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பினர் கட்டுப்பாட்டில் அவிநாசியில் தாமரைக்குளம், சங்கமாங்குளம், சேவூர், கிளாக்குளம், நடுவச்சேரி, கருவலூர், அவிநாசிபாளையம் உள்ளிட்ட இடங்களில் பல 100 ஏக்கர் பரப்பளவில் குளங்கள் உள்ளன.

    இதில் கிளாக்குளம், புஞ்சை தாமரைக்குளம் உள்ளிட்ட சாலையை ஒட்டியுள்ள குளங்களில், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்துக்கு, குழாய் பதிக்கும் பணி நடந்தது. தோண்டப்பட்ட குழி சரிவர மூடப்படாததால் குளக்கரை பலவீனமடைந்தது.

    இதே போன்று புஞ்சை தாமரைக்குளமும் பலவீனமடைந்தது. அதோடு எஞ்சிய பிற குளங்களின் கரைகளை பலப்படுத்தவும், குளங்களை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றவும் 7 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் துவங்கியுள்ளன.

    திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், சேவூர் அருகே தத்துனூர்ஊராட்சியில் 846 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க கடந்த அ.தி.மு.க., அரசு திட்டமிடப்பட்டது. இதற்காக தத்தனூர், புலிப்பார், புஞ்சைத்தாமரைக்குளம் என 3 ஊராட்சிகளில் உள்ள, 845 ஏக்கர் நிலம் சிப்காட் நிறுவனத்துக்கு ஒப்படைக்க நில அளவை பணி மேற்கொள்ளப்பட்டது.அங்கு பேட்டரி கார்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைய தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டது. இதனால், ஆயிரம் வேலை வாய்ப்பு பெறுவர் என தெரிவிக்கப்பட்டது.இத்திட்டத்துக்கு அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் விளைவாக, 'சிப்காட் திட்டம் கைவிடப்படுகிறது என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட மாட்டாது என்பதே முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலினின் எண்ணம் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தெரிவித்தார்.

    தற்போது அவிநாசி அருகேயுள்ள அன்னூரில் தொழிற்பேட்டை அமைப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்

    தத்தனூர் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பெய்யும் மழையால் பசுமை திரும்பியுள்ளது. குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இப்பகுதியில் விவசாயம் மேற்கொள்ளவே விவசாயிகள் விரும்புகின்றனர். தத்தனூர் மட்டுமின்றி, புலிப்பார், புஞ்சை தாமரைக்குளம், போத்தம்பாளையம் உட்பட அருகிலுள்ள ஊராட்சிகளில் 'சிப்காட்' தொழிற்பூங்காவுக்கு ஆட்சேபனை தெரிவித்து, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியுள்ளோம். எனவே சிப்காட் தொழிற்பேட்டை வராது என நம்புகிறோம் என்றனர்.

    • வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான ஒரு வாரத்திற்கான காய்கறி மளிகை சாமான்கள் வாங்கி செல்வார்கள்.
    • வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான ஒரு வாரத்திற்கான காய்கறி மளிகை சாமான்கள் வாங்கி செல்வார்கள்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வாரந்தோறும் ஞாயிறு அன்று வார சந்தை செயல்படும். இந்த வார சந்தைக்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறி பயிர் வகைகள் கொண்டுவந்து விற்பனை செய்வார்கள். வெள்ளகோவில் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான ஒரு வாரத்திற்கான காய்கறி மளிகை சாமான்கள் வாங்கி செல்வார்கள்.

    கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்ததால் விவசாயிகள் அதிக அளவில் விற்பனைக்கு விளை பொருட்களை கொண்டு வரவில்லை. காய்கறிகளை விவசாயிகளிடம் வாங்கி விற்கும் வியாபாரிகளும் அதிக அளவில் வரவில்லை. இதனால் வார சந்தையில் வியாபாரம் குறைவாகவே காணப்பட்டது.

    • தொடர் மழையால் பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் வருகை குறைந்தே காணப்பட்டது.
    • குதிரையாறு, பாலாறு பொருந்தலாறு அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கடந்த சில நாட்களாக இங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் முதல் சாரலாக தொடர்ந்து இரவு வரை பெய்தது.

    வழக்கமாக விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிகளவில் குவிவார்கள். ஆனால் தொடர் மழையால் பக்தர்கள் வருகை குறைந்தே காணப்பட்டது. இதனால் மலைக்கோவில் , அடிவாரம், கிரிவீதி, பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் கேரள மாநில பக்தர்கள் கூட்டம் மட்டும் இருந்தது.

    தொடர்மழையால் சாலைகள் இருள்சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர். பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன. குதிரையாறு, பாலாறு பொருந்தலாறு அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.

    மேலும் தொடர் மழையால் பொதுமக்கள் வீட்டில் முடங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் சாலைகளிலும் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

    • ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் தொடர் மழை பெய்து வந்தது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பின.
    • தொடர் மழை காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படவில்லை.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து 2-வது நாளாக மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் தொடர் மழை பெய்து வந்தது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பின. வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதம் அடைந்தது. கடந்த 4 நாட்களாக ராசிபுரம் பகுதியில் மழை பெய்யவில்லை.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு முதல் இன்று காலை 10 வரை நிற்காமல் சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றவர்கள் மழையால் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

    தொடர் மழை காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படவில்லை. அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்து அளவில் காணப்பட்டது. தினசரி மார்க்கெட்டில் குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வந்திருந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். ராசிபுரம் மாரியம்மன் திருவிழாவை ஒட்டி போடப்பட்டு இருந்த கடைகளில் மழையின் காரணமாக வியாபாரம் மிகவும் மந்த நிலையில் காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்தி வேலூர்

    பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து மழை வேகமாக பெய்ய தொடங்கியதால், சாலை ஓரங்களில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த சிறு வியாபார கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைக் காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

    இன்று காலையும் இடை விடாது மழை பெய்து வருவதால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். தொடர் மழையால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என்பதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    • மழை நீரை வெளியேற்ற முடியாததால் நெல்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • கிராமப்புறங்களில் உள்ள கிணறுகள் வற்றிய நிலையில் உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் பலத்த மழை பெய்ததன் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள உபரி நீர் கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்ததன் காரணமாக மழைநீர் ஆங்காங்கே உள்ள வீடுகளுக்குள் புகுந்தது . அதேபோல் மிகப் பலத்த மழை பெய்த காரணமாக விவசாயிகள் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை, வெற்றிலை, நெல் உள்ளிட்ட பல்வேறு பணப் பயிர்களில் ஏராளமான மழை நீர் தேங்கி நின்றது. மழை நீரை வெளியேற்ற முடியாததால் நெல்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள கிணறுகள் வற்றிய நிலையில் உள்ளது.

    மிக பலத்த கன மழையின் காரணமாக வற்றிய கிணறுகளில் நீரூற்று எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அதேபோல் வாடிய பணப்பயிர்கள் செழித்து வளரும் நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். மழை நீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    • அடுத்தடுத்த மாதங்களில் விவசாய பணிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
    • அடுத்தடுத்த மாதங்களில் விவசாய பணிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதிகளில் மழைப்பொழிவானது கடந்த 15 ஆண்டுகளாகவே படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் விவசாய கிணறுகள், போர்வெல்களின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. 30 அடி கிணற்றில் விவசாயம் செய்ய போதுமான தண்ணீர் ஊற்றெடுத்த நிலை மாறி 100 அடி கிணறு வெட்டினாலும் போதிய தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகி இருந்தது.

    200 அல்லது 300 அடி போர்வெல்லில் கிடைத்து வந்த தண்ணீர் இன்று ஆயிரத்து 500 அடியில் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக மழைப்பொழிவு குறைவு என கருதப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் காங்கயம் பகுதியில் கீழ்பவானி பாசனம் பெறும் பகுதிகள் மற்றும் பி.ஏ.பி. பாசன பகுதிகளிலும் ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் விவசாயிகளின் கிணறுகளில் நீர்மட்டம் படிப்படியாக உயரத்தொடங்கியுள்ளது. மேலும் தற்போது காங்கயம் பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளில் தற்போது கிணறுகளின் மேல் திட்டு வரை தண்ணீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் அடுத்தடுத்த மாதங்களில் விவசாய பணிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    ×