என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பழனியில் தொடர் மழையால் பக்தர்கள் வருகை குறைவு
- தொடர் மழையால் பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் வருகை குறைந்தே காணப்பட்டது.
- குதிரையாறு, பாலாறு பொருந்தலாறு அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கடந்த சில நாட்களாக இங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் முதல் சாரலாக தொடர்ந்து இரவு வரை பெய்தது.
வழக்கமாக விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிகளவில் குவிவார்கள். ஆனால் தொடர் மழையால் பக்தர்கள் வருகை குறைந்தே காணப்பட்டது. இதனால் மலைக்கோவில் , அடிவாரம், கிரிவீதி, பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் கேரள மாநில பக்தர்கள் கூட்டம் மட்டும் இருந்தது.
தொடர்மழையால் சாலைகள் இருள்சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர். பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன. குதிரையாறு, பாலாறு பொருந்தலாறு அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.
மேலும் தொடர் மழையால் பொதுமக்கள் வீட்டில் முடங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் சாலைகளிலும் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்