search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழையால் பொதுமக்கள் பாதிப்பு
    X

    தொடர் மழையால் பொதுமக்கள் பாதிப்பு

    • மழை நீரை வெளியேற்ற முடியாததால் நெல்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • கிராமப்புறங்களில் உள்ள கிணறுகள் வற்றிய நிலையில் உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் பலத்த மழை பெய்ததன் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள உபரி நீர் கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்ததன் காரணமாக மழைநீர் ஆங்காங்கே உள்ள வீடுகளுக்குள் புகுந்தது . அதேபோல் மிகப் பலத்த மழை பெய்த காரணமாக விவசாயிகள் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை, வெற்றிலை, நெல் உள்ளிட்ட பல்வேறு பணப் பயிர்களில் ஏராளமான மழை நீர் தேங்கி நின்றது. மழை நீரை வெளியேற்ற முடியாததால் நெல்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள கிணறுகள் வற்றிய நிலையில் உள்ளது.

    மிக பலத்த கன மழையின் காரணமாக வற்றிய கிணறுகளில் நீரூற்று எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அதேபோல் வாடிய பணப்பயிர்கள் செழித்து வளரும் நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். மழை நீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    Next Story
    ×