search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "commit suicide"

    நிலம் கொடுத்த தங்களுக்கு பெல் நிறுவனம் வேலை வழங்காததால் விரக்தியடைந்த 4 பேர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #DemandJob
    சிப்காட்:

    ராணிப்பேட்டையில் பெல் நிறுவனம் தொடங்க நிலம் கொடுத்த பலருக்கு அந்த நிறுவனம் வேலை வழங்கியது. சிலருக்கு அந்த நிறுவனம் வேலை வழங்காததால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி வேலை வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    இதன் பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெல் நிறுவனம் நிலம் கொடுத்தவர்களில் 109 பேருக்கு வேலை கொடுத்தது. மற்ற 15 பேர் குறைந்தபட்ச கல்வித்தகுதியான 8-ம் வகுப்பு படிக்கவில்லை என கூறி அவர்களுக்கு பெல் நிறுவனம் வேலை தரவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிப்காட் பகுதியை சேர்ந்த பாலு (வயது 40), லாலாப்பேட்டையை சேர்ந்த பாஸ்கர் (48), சம்பத் (40), புளியந்தாங்கலை சேர்ந்த முனிசாமி (44) ஆகிய 4 பேரும் நேற்று காலை சுமார் 8 மணிஅளவில் ராணிப்பேட்டை பெல் நிறுவனம் அருகே உள்ள செல்போன் டவரின் மீது ஏறி, மண்எண்ணெய் மற்றும் விஷ பாட்டிலுடன், கழுத்தில் பச்சை துண்டு அணிந்து கொண்டு தற்கொலை செய்யப்போவதாக கூச்சலிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் வந்த மற்றவர்கள் கீழே நின்று கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செல்போன் டவரின் மீது ஏறியவர்களை கீழே இறங்கி வருமாறு ஒலிபெருக்கியில் பேசி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு போராட்டக்காரர்கள் உடன்படவில்லை.

    இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் சிதம்பரம் தலைமையில் தீயணைப்பு வீரர்களும், தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தகவல் அறிந்த ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன், வாலாஜா தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் வைத்திருந்த செல்போன் மூலம் பேசி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

    பி.ஏ.பி. இ.ஜி.டி.யூ. ஐ.என். டி.யூ.சி.சங்க பொதுச்செயலாளர் கணேஷ், துணைத்தலைவர் தண்டபாணி, பி.ஏ.பி.எம்ப்ளாயிஸ் யூனியன் பொதுச் செயலாளர் சிவகுமார் உள்பட தொழிற்சங்க நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி கீழே இறங்கி வர வேண்டு கோள் விடுத்தனர்.

    இதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களை கீழே இறங்கி வரக் கூறி தொடர்ந்து வற்புறுத்தினால் தாங்கள் எடுத்து வந்துள்ள மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டோ, விஷம் குடித்தோ தற்கொலை செய்து கொள்வோம் என தெரிவித்தனர்.

    பின்னர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தினர், நிலம் கொடுத்து வேலை கிடைக்காதோர் அமைப்பை சேர்ந்த முரளி உள்பட மற்றவர்களும் சேர்ந்து கண்ணீர் மல்க கீழே வருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

    அப்போது உதவி கலெக்டர், தாசில்தார், போலீசார், தொழிற்சங்க தலைவர்கள், ஊழியர்கள் ஆகிய அனைவரும் விடுத்த வேண்டுகோளை ஏற்று சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சுமார் 12 மணி அளவில் செல்போன் டவரில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரும் கீழே இறங்கி வந்தனர்.

    அவர்களில் முனிசாமி கூறுகையில், “நாங்கள் நிலம் கொடுத்து விட்டு வேலை வழங்கக்கோரி பல வருடங்களாக போராடி வருகிறோம். கல்வித்தகுதியை காரணம் காட்டி எங்களுக்கு வேலை கொடுக்க நிர்வாகம் மறுக்கிறது. நாங்கள் குறைந்த பட்ச கல்வித்தகுதியை பாஸ் செய்து விட்டோம். எங்களுக்கு வேலை வேண்டும் அல்லது எங்களது நிலத்தை திருப்பி தர வேண்டும். வேலை தராவிட்டால் நாங்கள் உயிரை விடுவதை தவிர வேறு வழியில்லை” என்றார்.

    பின்னர் செல்போன் டவரின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும், வேலை கிடைக்காத மற்றவர்களிடமும் உதவி கலெக்டர் வேணுசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிற்பகலில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள், நிர்வாகம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆகிய அனைவரையும் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உதவி கலெக்டர் கூறியதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 4 மணி நேரமாக நீடித்த இந்த தற்கொலை மிரட்டல் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டக்காரர்கள் ஏறிய செல்போன் டவர் தற்போது உபயோகத்தில் இல்லை என கூறப்படுகிறது. 
    கேரள மாநிலம் கண்ணூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 270 அடி உயர பாறை உச்சியில் இருந்து குதித்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பாப்பினஞ்சேரியை சேர்ந்தவர் கமல் குமார் (24). இவர் அதே பகுதியை சேர்ந்த அஸ்வதி (20) என்ற பெண்ணை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார்.

    இந்த விவகாரம் இரு வீட்டு பெற்றோருக்கும் தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வெறுப்படைந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியது.

    அவர்கள் பாப்பினஞ்சேரி அருகே உள்ள சுற்றுலா தலமான செசிபாறைக்கு சென்றனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மன வேதனையில் இருந்த கமல் குமாரும், அஸ்வதியும் அங்கிருந்த 270 அடி உயரபாறையில் இருந்து குதித்தனர்.

    இதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இந்த நிலையில் கமல்குமார், அஸ்வதியை காணாதது குறித்து அவர்களது பெற்றோர் பாப்பினஞ்சேரி போலீசில் புகார் கொடுத்து இருந்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் காதல் ஜோடி பாறையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. கமல் குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பாறை அருகே கிடந்தது.

    அதனை போலீசார் கைப்பற்றினார்கள். தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தேர்வு தோல்வி பயத்தால் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்து பிளஸ்-2 மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்து பிளஸ்-2 மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். தேர்வு தோல்வி பயம் காரணமாக அவர் இந்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    வேலூர் சத்துவாச்சாரி பகுதி 3-ல் உள்ள வசந்தம் நகரை சேர்ந்தவர் காந்திரூபன், பி.எஸ்.என்.எல். அதிகாரி. இவருடைய மகன் ஷாம்பிரதீப் (வயது 18). ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ்-2 படித்துவந்தார். ஆனால் சரியாக தேர்வு எழுதவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகிறது. இதனால் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்று மாணவருக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த சில நாட்களாக அவர் சோகமாக இருந்துள்ளார்.

    நேற்றுமுன்தினம் அவர் தூக்கம் இல்லாமல் இருந்துள்ளார். பின்னர் நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் இருந்து ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்திற்கு வந்துள்ளார். மேம்பாலத்தில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு கத்தியால் தனது கையில் வெட்டியிருக்கிறார்.

    பின்னர் சுமார் 30 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவருக்கு இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    உடனடியாக போலீசார் விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவர் ஷாம்பிரதீப்பை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    இட்டமொழி அருகே வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால் மனவேதனை அடைந்த விவசாயி, தோட்டத்து வாய்க்கால் தண்ணீரில் மின்சாரத்தை பாய்ச்சி, அதில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
    இட்டமொழி:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா இட்டமொழி அருகே உள்ள வடக்கு விஜயநாராயணம் வேதகோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 48). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை பயிரிட்டு இருந்தார்.

    இதற்காக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நெல்லையில் உள்ள ஒரு வங்கியில் ரூ.10 லட்சம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், வாழையில் சரிவர மகசூல் கிடைக்கவில்லை. இதனால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். இந்த நிலையில் வங்கியில் இருந்து பணத்தை திருப்பி செலுத்தும்படி நோட்டீசு வந்ததாக தெரிகிறது.

    இதனால் மனம் உடைந்த முருகன் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது தோட்டத்துக்கு சென்றார். அங்கு அமர்ந்து இருந்த அவர், தற்கொலை செய்து கொள்வது என்று முடிவெடுத்ததாக தெரிகிறது. அப்போது தோட்டத்து வாய்க்காலில் தண்ணீர் தேங்கி கிடந்தது. தண்ணீரில் கட்டு கம்பிகளை போட்டு வைத்தார். அங்குள்ள மின்சார பெட்டியில் இருந்து மின்ஒயரை இணைத்து அந்த வாய்க்கால் தண்ணீரில் மின்சாரத்தை பாய்ச்சினார்.

    பின்னர் அந்த தண்ணீரில் விழுந்தார். இதில் மின்சாரம் தாக்கியதில் முருகன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் முருகன் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வடக்கு விஜயநாராயணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் வெர்ஜின் சேவியோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, முருகனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பின்னர் மோட்டார் அறையை போலீசார் பார்வையிட்ட போது அங்கு ஒரு கடிதம் கிடந்தது. அந்த கடிதம், முருகன் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்து இருந்த உருக்கமான கடிதம் என்பது தெரியவந்தது. அந்த கடிதத்தில், வங்கியில் இருந்து ரூ.10 லட்சம் கடன் வாங்கி இருப்பதாகவும், அதை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் யார், யாருக்கு கடன் கொடுக்க வேண்டி உள்ளது என்பது குறித்தும் அவர் அதில் எழுதி வைத்து இருந்தார்.

    விசாரணைக்கு பிறகு முருகனின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த னர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    இறந்த முருகனுக்கு புஷ்பம் (45) என்ற மனைவியும், சுபத்ரா, சுபிதா ஆகிய 2 மகள்களும், ஜெகநாதபெருமாள் என்ற மகனும் உள்ளனர். சுபத்ராவுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. சுபிதா சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியிலும், ஜெகநாதபெருமாள் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். வங்கிக்கடனை திருப்பி செலுத்த முடியாததால் விவசாயி ஒருவர் தண்ணீரில் மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    ×