search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கிக்கடன்"

    • பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
    • தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் 3,494 சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூா் மாவட்டம், சங்கரமநல்லூா் பேரூராட்சியில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் புதிய சுயஉதவிக்குழுக்கள் அமைத்தல், சுழல்நிதி வழங்குதல் மற்றும் வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் முகாம் நடைபெற்றது.

    இதில் 32 புதிய சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு 11 சுயஉதவிக் குழுக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் சுழல்நிதி வழங்கியதுடன், 15 சுயஉதவிக் குழுக்களுக்கு நேரடி வங்கிக் கடனாக ரூ.64.70 லட்சத்தை கலெக்டர் எஸ்.வினீத், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கு.சண்முகசுந்தரம் ஆகியோா் வழங்கினா்.

    பின்னா் கலெக்டர் வினீத் பேசியதாவது:- தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சுயஉதவிக் குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுயசாா்புத் தன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

    திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் 3,494 சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவா்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    நகா்ப்புறத்தைச் சோ்ந்த 2,484 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.131.42 கோடி வங்கிகளின் மூலமாக நேரடியாக கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுயதொழில் தொடங்க தொழிற்கடனாக நகா்ப்புறத்தைச் சோ்ந்த 854 குழுக்களுக்கு ரூ.19.08 கோடியும், 1,982 தனி நபா்களுக்கு ரூ.1.38 கோடியும், 1,135 பயனாளிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லட்சுமணன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) மதுமிதா, மாவட்ட முன்னோடி வழங்கி மேலாளா் அலெக்ஸாண்டா் மற்றும் மகளிா் சுயஉதவிக் குழுவினா் பங்கேற்றனா்.

    • சுயதொழில் தொடங்க பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, வங்கிக்கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
    • ஜவுளி, வங்கி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களில் இலவச பயிற்சி பெற மாணவ- மாணவிகளின் தேர்வு.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் கோ.க.அண்ணாதுரை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் இளைஞர் திறன் விழாவில் தமிழக அரசு சார்பில் பல்வேறு வகையான சுயதொழில் தொடங்க பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, தொழில் துவங்க வங்கிக்கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

    பயிற்சி முடிவில், பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    இந்த சான்றிதழை கொண்டு, தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கலாம்.

    இதில் மோட்டார் வாகனம், ஆடை, ஜவுளி, வங்கி மற்றும் நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களில் இலவச பயிற்சி பெற மாணவ மாணவிகளின் தேர்வு நடைபெற்றது.

    இலவச பயிற்சியில் பங்கு பெறுவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் தங்களது சான்றிதழ்களுடன் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் வருகை தந்தனர்.

    தொடர்ந்து திறன் திருவிழாவிற்கு வந்திருந்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர்.

    • மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 37 மனுக்கள், அடிப்படை வசதிகோரி 5 மனுக்கள் என மொத்தம் 175 மனுக்கள் பெறப்பட்டன.
    • மாணவனுக்கு ரூ.23,000-க்கான காசோலையை தாய் சித்ராவிடம் கலெக்டர் வழங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடைபெற்றது.

    மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர்.

    இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், கோரி 40 மனுக்களும், வேலைவாய்ப்புகோரி 30 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகை கோரி 38 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 25 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 37 மனுக்களும், அடிப்படை வசதிகோரி 5 மனுக்களும், மொத்தம் 175 மனுக்கள் பெறப்பட்டன.

    இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என தெரிவித்தார்.

    முன்னதாக மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வானதிராஜபுரத்தை சேர்ந்த ஜெயவசந்தன் கல்வி உதவி கேட்டு, கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்திருந்தார்.

    மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு வாரக் காலத்திற்குள் அம்மாணவனுக்கு மாவட்ட கலெக்டரின் தன் விருப்ப நிதியில் இருந்து ரூ.23,000-க்கான காசோலையினை அவரின் தாயார்சித்ரா விடம் கலெக்டர் லலிதா வழங்கினார்.

    இக்கூட்டத்தில், மாவட்டவருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி ஆணையர் கலால் அர.நரேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்பாலாஜி மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

    • கள்ளக்குறிச்சியில் தாட்கோ மூலம் வங்கிக்கடன் பெற்று சிறந்த தொழில் முனைவோராக திகழ வேண்டும் என கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • 50 சதவீத மானியத்துடன்கூடிய கடனுதவியும் வழங்கிட வங்கிகளுக்கு இசைவுக்கடிதம் மூலம் பரிந்துரை செய்யப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறுவதற்கான நேர்க்காணல் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் தாட்கோ மாவட்ட மேலாளர் ரஞ்சித்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது. அப்போது மாவட்ட கலெக்டர் கூறியதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடிய இனத்தைச் சேர்ந்த 210 பேர் தொழில் முனைவோர்களுக்கான கடன் வசதி, வாகன கடன்வசதி, சிறு தொழில் செய்ய கடன்வசதி, கால்நடைகள் வளர்ப்புத்தொழில் ஆகியவற்றிற்கான மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெற தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) இணையதளம் வழியே விண்ணப்பித்திருந்தனர்.

    அதன்படி தேர்வுக்குழு உறுப்பினர்கள் மூலமாக பல்வேறு கடனுதவி கோரி விண்ணப்பித்துள்ள தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பத்தினை ஆய்வு செய்து, ஆதிதிராவிடர் பிரிவைச் சார்ந்தவர்களுக்கு 30 சதவீத மானியத்துடன் கடனுதவியும், பழங்குடியின பிரிவைச் சார்ந்தவர்களுக்கு 50 சதவீத மானியத்துடன்கூடிய கடனுதவியும் வழங்கிட வங்கிகளுக்கு இசைவுக்கடிதம் மூலம் பரிந்துரை செய்யப்படும். இந்த கடனுதவிகளை பெறுபவர்கள் சிறந்த தொழில்முனைவோராக உருவாகிட வேண்டும். அவ்வாறு சிறந்த தொழில்முனைவோராக உருவாகிட தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார். இதில் தேர்வுக்குழு உறுப்பினர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, மெஹுல் சோஸ்கி வழக்கில் சிபிஐ இன்று முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. #NiravModi #CBI #PNBScam
    புதுடெல்லி:

    குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோஸ்கிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சோதனையை அடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ இன்று முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.


    பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைவரும், அலகாபாத் வங்கியின் தற்போதைய தலைவருமான உஷா அனந்தசுப்பிரமணியன், செயல் இயக்குநர்கள் ப்ரஹ்மாஜி ராவ், சஞ்சிப் ஷரன், பொது மேலாளர் நேஷா அஹாத் ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    எனினும், வங்கி மோசடியில் மெஹுல் சோஸ்கியின் பங்கு என்ன என்பது குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. உஷா அனந்தசுப்பிரமணியன் உள்ளிட்ட பல வங்கி உயரதிகாரிகள் ஏற்கனவே சிபிஐயால் விசாரிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    #NiravModi #CBI #PNBScam
    ×