என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "college student suicide"
- மேலகிருஷ்ணன் புதூர் அருகே கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கல்லூரி மாணவன் தற்கொலை குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்.ஜி.ஓ.காலனி:
மேலகிருஷ்ணன் புதூர் அருகே பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 58), மீனவர். இவரது மனைவி ரூபின் மேரி (52).
இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 2-வது மகன் ரூபிக்சன் காஸ்ட்ரோ (22). இவர் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக ரூபிக்சன் காஸ்ட்ரோ தனது தாயாரிடம் படிப்பு சரிவர புரியவில்லை என்று கூறிவந்துள்ளார். இதற்கு தாயார் அவரை சமாதானம் செய்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ரூபின் மேரி வேலைக்கு சென்றார்.
வீட்டில் ரூபிக்சன் காஸ்ட்ரோ மட்டும் இருந்தார். வேலைக்கு சென்ற அலெக்ஸ் மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த ரூபிக்சன் காஸ்ட்ரோவை சாப்பிடுமாறு கூறினார். அதற்கு அவர் தனக்கு தற்பொழுது சாப்பாடு வேண்டாம் என்று கூறி விட்டு வெளியே சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற ரூபின் மேரி வீடு திரும்பினார். அப்போது மகனை கேட்டபோது கணவர் அலெக்ஸ் வெளியே சென்று இருப்பதாக கூறினார். ஆனால் ரூபிக்சன் காஸ்ட்ரோவின் மோட்டார் சைக்கிள் மற்றும் செருப்பு வீட்டின் வெளியே கிடந்ததால் ரூபின் மேரிக்கு சந்தேகம் வந்தது. மகனை வீட்டில் தேடினார்கள். அப்போது வீட்டில் உள்ள அறையில் ரூபிக்சன் காஸ்ட்ரோ தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். தூக்கில் பிணமாக தொங்கிய ரூபிக்சன் காஸ்ட்ரோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.
- காதல் தோல்வியால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற சிவானந்தமணி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார்.
- உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிவானந்த மணி பரிதாபமாக இறந்தார்.
மதுரை:
மதுரை கீரைத்துறை ஆதி மூலம் பிள்ளை சந்து பகுதியைச் சேர்ந்தவர் கணேசன், ஆசாரி. இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களது ஒரே மகன் சிவானந்த மணி (வயது 21). இவர் திருப்பாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சில வருடங்களாக சிவானந்த மணி அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பெண் அவரது காதலை ஏற்கவில்லை.
இதனால் விரக்தியிலிருந்த சிவானந்த மணி கடந்த சில நாட்களாக யாருடனும் சரியாக பேசவில்லை. எதையோ இழந்தது போல் இருந்துள்ளார். கல்லூரிக்கும் செல்லாமல் வீட்டில் இருந்த சிவானந்த மணியிடம் பெற்றோர்கள் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளனர். ஆனால் அவர் எதுவும் இல்லை எனக்கூறி மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் காதல் தோல்வியால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற சிவானந்தமணி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார்.
சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் பார்த்து உடனே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிவானந்த மணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
ஒரே மகன் என்பதால் கணேசனும் அவரது மனைவியும் அதிக பாசம் வைத்து சிவானந்த மணியை வளர்த்தனர். ஆனால் மகனின் திடீர் தற்கொலை அவர்களை கதிகலங்க செய்து விட்டது.
போலீசாரின் உரிய சட்ட நடவடிக்கைக்கு பின் மாணவரின் உடல் குடும்பத்தினரும் ஒப்படைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இறுதிச்சடங்குகள் நடந்தன. சுடுகாட்டில் தான் பாசமாக வளர்த்த மகனின் உடலுக்கு கணேசன் மனதை கல்லாக்கி தீ வைத்தார். அப்போது அவர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இதைத் தொடர்ந்து உறவினருடன் வீட்டுக்கு வந்த கணேசன் சிறு வயதிலேயே மகன் இறந்து விட்டானே என்று புலம்பியுள்ளார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த கணேசன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார்.
மகன் இறந்த சோகம் தீராத நிலையில் தந்தையும் மாரடைப்பால் இறந்தது குடும்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்த தகவல் அறிந்த கீரைத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் சம்பவத்திற்கு வந்து கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
காதல் தோல்வியால் மகன் தற்கொலை செய்து கொள்ள, மகனின் சாவை தாங்கிக் கொள்ளாத தந்தை மாரடைப்பால் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோழவந்தான்:
சோழவந்தான் அருகே உள்ள அய்யப்பன் நாயக்கன் பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் விஜி (வயது 43) விவசாயி.
இவரது மகள் லாவண்யா (19). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார்.
வீட்டில் பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் லாவண்யா மட்டும் தனியே இருந்தார். மன உளைச்சலுடன் இருந்த அவர், அங்குள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். வெளியே சென்றிருந்த குடும்பத்தினர் வீடு திரும்பியதும் லாவண்யா, தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து காடுபட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ஜோதிமுத்து தலைமையில் போலீசார் விரைந்து சென்று லாவண்யா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு லாவண்யாவின் சகோதரர், இதே வீட்டில் தற்கொலை செய்துள்ளார். அதில் இருந்தே லாவண்யா, மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
ஒரே வீட்டில் அண்ணன்- தங்கை அடுத்தடுத்து தற்கொலை செய்திருப்பது அந்தப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள கோவைபுதூர் பிரிவு இ.பி.காலனியை சேர்ந்தவர் கங்காதரன். இவரது மகள் அஸ்வினி (வயது 18). இவர் கே.ஜி.சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று வீட்டில் இருந்த அஸ்வினி வழக்கம் போல இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்குவதற்காக சென்றார். இன்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் அறையில் இருந்து அவர் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த பெற்றோர் சென்று பார்த்தனர். அப்போது அறையில் அஸ்வினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட அஸ்வினியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்வினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் சிறுமுகை அடுத்துள்ளது சடையம்பாளையம். இந்த பகுதியில் உள்ள தொட்டபாவியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் சுவேதா (வயது 18). இவர் கோவையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 7-ந்தேதி வீட்டில் இருந்த சுவேதா குளியல் அறைக்கு சென்றார். அங்கு திடீரென தூக்குப் போட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தங்கை சத்தம்போட்டு அலறினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சுவேதாவை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுவேதா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது சுவேதா செல்போனில் அதிக நேரம் பேசி விளையாடிததால் பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவருவதாக போலீசார் கூறினர்.
மாதவரம்:
மாதவரம் பிரகாஷ் நகரில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் கவுதம் (22). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் இந்த நிலையில் இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. இதை பெற்றோர்கள் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன முடைந்த அவர் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில மின் விசிறியில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மாதவரம் பொன்னியம் மன்மேடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் நாகராஜ் (25) அரிசி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாதவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
கோவை கணுவாய் காமராஜர் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது 2-வது மகன் ஜெயசூர்யா (வயது 19). தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ., படித்து வந்தார்.
ஜெயசூர்யாவும் ஒரு மாணவியும் காதலித்து வந்ததாக தெரிகிறது. காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த ஒரு வாரமாக ஜெயசூர்யா விரக்தியில் இருந்தார். பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரியாது.
இந்நிலையில் வீட்டில் தனியே இருந்து ஜெயசூர்யா தாயின் சேலையில் தூக்குப்போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது ஜெயசூர்யா தூக்கில் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் ஜெயசூர்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தண்டராம்பட்டு:
தண்டராம்பட்டு அருகே உள்ள கனந்தம்பூண்டியை சேர்ந்தவர் கண்ணன் அவரது மகன் அஜித்குமார் (வயது 21). திருவண்ணாமலையில் உள்ள அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு தமிழ் படித்து வந்தார்.
இந்நிலையில் அஜித்குமார் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த தண்டராம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பிராமணவயலைச் சேர்ந்தவர் பழனிவேலு மகள் சரண்யா (வயது 20). இவர் அரசு கல்லூரியில் படித்து வந்தார்.
அவருக்கு அடிக்கடி சிறிய அளவில் மனநிலை பாதிப்பு ஏற்படுவது வழக்கம். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் மாணவி முழுமையாக குணமடையவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சரண்யா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்