search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவன் தற்கொலை"

    • மேலகிருஷ்ணன் புதூர் அருகே கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • கல்லூரி மாணவன் தற்கொலை குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    என்.ஜி.ஓ.காலனி:

    மேலகிருஷ்ணன் புதூர் அருகே பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 58), மீனவர். இவரது மனைவி ரூபின் மேரி (52).

    இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 2-வது மகன் ரூபிக்சன் காஸ்ட்ரோ (22). இவர் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக ரூபிக்சன் காஸ்ட்ரோ தனது தாயாரிடம் படிப்பு சரிவர புரியவில்லை என்று கூறிவந்துள்ளார். இதற்கு தாயார் அவரை சமாதானம் செய்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ரூபின் மேரி வேலைக்கு சென்றார்.

    வீட்டில் ரூபிக்சன் காஸ்ட்ரோ மட்டும் இருந்தார். வேலைக்கு சென்ற அலெக்ஸ் மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த ரூபிக்சன் காஸ்ட்ரோவை சாப்பிடுமாறு கூறினார். அதற்கு அவர் தனக்கு தற்பொழுது சாப்பாடு வேண்டாம் என்று கூறி விட்டு வெளியே சென்றார்.

    நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற ரூபின் மேரி வீடு திரும்பினார். அப்போது மகனை கேட்டபோது கணவர் அலெக்ஸ் வெளியே சென்று இருப்பதாக கூறினார். ஆனால் ரூபிக்சன் காஸ்ட்ரோவின் மோட்டார் சைக்கிள் மற்றும் செருப்பு வீட்டின் வெளியே கிடந்ததால் ரூபின் மேரிக்கு சந்தேகம் வந்தது. மகனை வீட்டில் தேடினார்கள். அப்போது வீட்டில் உள்ள அறையில் ரூபிக்சன் காஸ்ட்ரோ தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். தூக்கில் பிணமாக தொங்கிய ரூபிக்சன் காஸ்ட்ரோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

    ×