என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சடையம்பாளையம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் சிறுமுகை அடுத்துள்ளது சடையம்பாளையம். இந்த பகுதியில் உள்ள தொட்டபாவியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் சுவேதா (வயது 18). இவர் கோவையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 7-ந்தேதி வீட்டில் இருந்த சுவேதா குளியல் அறைக்கு சென்றார். அங்கு திடீரென தூக்குப் போட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தங்கை சத்தம்போட்டு அலறினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சுவேதாவை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுவேதா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது சுவேதா செல்போனில் அதிக நேரம் பேசி விளையாடிததால் பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவருவதாக போலீசார் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்