search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சடையம்பாளையம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை
    X

    சடையம்பாளையம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை

    சடையம்பாளையம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் சிறுமுகை அடுத்துள்ளது சடையம்பாளையம். இந்த பகுதியில் உள்ள தொட்டபாவியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் சுவேதா (வயது 18). இவர் கோவையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 7-ந்தேதி வீட்டில் இருந்த சுவேதா குளியல் அறைக்கு சென்றார். அங்கு திடீரென தூக்குப் போட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தங்கை சத்தம்போட்டு அலறினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சுவேதாவை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுவேதா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது சுவேதா செல்போனில் அதிக நேரம் பேசி விளையாடிததால் பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவருவதாக போலீசார் கூறினர்.

    Next Story
    ×