search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Election Commissioner"

    அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று ஆலோசனை நடத்தினார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்படுகின்றன. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று காணொலி காட்சி வாயிலாக, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.



    வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை தலைமை தேர்தல் ஆணையர் வழங்கினார். 
    பாராளுமன்றத் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 2-ம் தேதி சென்னை வர உள்ளார். #LokSabhaElectoins2019 #ElectionCommissioner
    சென்னை:

    நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன. தேர்தலை சுமுகமாக நடத்தி முடிக்க, தேர்தல் அதிகாரிகள் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர். வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்கும்படி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் செலவுகளை கண்காணிக்க அனைத்து தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

     


    தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகள், 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் வரும் 2-ம் தேதி சென்னை வர உள்ளனர். தேர்தல் தொடர்பாக 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த உள்ளார். #LokSabhaElectoins2019 #ElectionCommissioner
    பாராளுமன்ற தேர்தல் குறித்து அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்பதற்காக இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோரா அடுத்த வாரம் தமிழகம் வருகிறார். #ParliamentElection #SunilArora
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தப் பணிகளை மேற்கொள்ள வருகிற 23 மற்றும் 24 ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1 லட்சத்து 31 ஆயிரத்து 931 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் சென்னையில் அதிக பட்சமாக 14,221 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்பதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அடுத்த வாரம் சென்னை வருகிறார்.

    அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்ட பிறகு அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார்.



    தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 21 சட்டசபை தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருவதால் அது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஓசூர் தொகுதி இன்னும் காலி இடம் என அறிவிக்கப்படவில்லை. எனவே மீதம் உள்ள 19 தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ParliamentElection #SunilArora
    தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு இனி திரும்ப முடியாது என்று தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறினார். #SunilArora #CEC #India #Ballot
    புதுடெல்லி:

    கடந்த 1-ந் தேதி தலைமை தேர்தல் கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்ட சுனில் அரோரா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமீபத்தில் நடந்துமுடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் 1.76 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் மிக குறைந்த அளவு (ஒரு சதவீதத்துக்கும் குறைவான) எந்திரங்களில் மட்டுமே கோளாறு ஏற்பட்டது. இதில் எங்களுக்கு திருப்தி இல்லை. எந்திரங்களில் கோளாறு ஏற்படுவதை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    எந்திரங்கள் சேதப்படுத்தப்படுவது வேறு, கோளாறு ஏற்படுவது வேறு. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வாக்குகளை பதிவு செய்யும் ஒரு கருவி தான். அது கம்ப்யூட்டர் போல திட்டமிடப்பட்டதோ, பண்பட்டதோ அல்ல.

    2014 நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் ஒரு தேர்தல் முடிவு வந்தது. அடுத்து அங்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் முற்றிலும் மாறுபட்ட முடிவு வந்தது. சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் இப்போது ஒரு முடிவும், அங்கு முன்பு நடந்த இடைத்தேர்தல் களில் ஒரு முடிவும் வந்தது.

    ஒருவேளை தேர்தல் முடிவு ‘எக்ஸ்’ என்று வந்தால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றி யாரும் குறை கூறுவதில்லை. அதே முடிவு ‘ஒய்’ என்று வந்தால் மின்னணு எந்திரங்களில் கோளாறு என்கிறார்கள். தேர்தல் கமிஷனையோ, அதன் பாரபட்சமற்ற நடவடிக்கையையோ தேர்தலில் முக்கிய பங்கேற்பாளர்கள் என்ற முறையில் அரசியல் கட்சிகள் கேள்வி கேட்கின்றன. அது அவர்களது உரிமை.

    ஆனால் மின்னணு எந்திரங்களை கால் பந்தாட்டத்தில் ‘டாஸ்’ போடுவதுபோல பயன்படுத்துவது எங்களை காயப்படுத்துகிறது. தேர்தலில் வாக்காளர்களுக்கு அடுத்ததாக அரசியல் கட்சிகள் தான் முக்கிய பங்கேற்பாளர்கள். தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு இனி திரும்ப முடியாது. இப்போதுள்ள நடை முறையே தொடரும்.

    அடுத்து நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வர உள்ளது பற்றி நாங்கள் அறிவோம். அதற்கான அலுவலக ரீதியான முன்னேற்பாடு நடவடிக்கைகள் ஏற்கனவே சில நாட்கள் முன்பு தொடங்கிவிட்டது. அனைத்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் கவனத்துடன் தயாரிக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

    முக்கிய நிகழ்வான நாடாளுமன்ற பொதுத்தேர்தலை வெற்றிகரமாக நடத்த அரசியல் கட்சிகள், வாக்காளர்கள், தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரின் முழு ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு சுனில் அரோரா கூறினார். #SunilArora #CEC #India #Ballot
    தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு அதிகம் உள்ளதால், 20 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளி வைக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டால் பரிசீலிப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் பதில் அளித்துள்ளார். #GajaCyclone #TamilNaduBypolls
    புதுடெல்லி:

    தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் மற்றும் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த தொகுதிகளுக்கு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் தமிழகத்தில் கஜா புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. 

    தற்போது கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால், குறித்த காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தல் குறித்து டெல்லியில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கஜா புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள 20 தொகுதிகளிலும் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை எதுவும் வைக்கவில்லை. இதற்காக தமிழக அரசு கடிதம் எழுதினால் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து பரிசீலிப்போம். புயல் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

    தேர்தலை தள்ளி வைக்கும்படி கடிதம் எழுதவில்லை என்றாலும், ஆணையமே தமிழக அரசிடம் கருத்து கேட்கும். தமிழக அரசு தனது கருத்துக்களை தெரிவிக்க 24 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படும். அதன்பின்னர் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #TamilNaduBypolls
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், காலியாக உள்ள தொகுதிகளில் 6 மாதங்களில் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். #OPRawat #18MLACase
    புதுடெல்லி:

    தமிழகத்தில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்து இருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என்றும், இடைத்தேர்தலை நடத்த தடை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், காலியாக உள்ள தொகுதிகளில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதி இருப்பதால், 6 மாதங்களுக்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளார்.

    இதன்மூலம், விரைவில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புகள் இருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. #OPRawat #18MLACase
    தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த இப்போதுள்ள சட்டங்கள் போதாது என தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் கூறினார். #ChiefElectionCommissioner #OPRawat
    புதுடெல்லி:

    டெல்லியில் ‘இந்திய தேர்தல் ஜனநாயகத்துக்கு உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனநாயகம், யதார்த்தத்தில் இயங்காது. ஜனநாயகத்துக்கு என்று ஒரு துணிச்சல், தன்மை, நேர்மை, அறிவு தேவைப்படுகிறது. அவைகளெல்லாம் இப்போது மங்கிப்போய் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்வதானால், அவையெல்லாம் இப்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

    தூய்மையான தேர்தல்கள், தலைமைக்கு சட்டப்பூர்வமான வசந்தம் போல் இருக்கும்.

    தேர்தல்கள் மாசுபட்டால், நாட்டு மக்கள் ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பின் மீதும் குறை கூறுவார்கள். எனவே இது கவனிக்க வேண்டிய அம்சம் ஆகும்.

    போலிச்செய்திகள் வெளியாவதும், மக்களை நம்ப வைப்பது பெருகி வருவதும், தகவல்கள் திருட்டு நடைபெறுவதும், லாபம் பார்ப்பதும், தகவல் தொடர்பை குறிவைத்து செயல்படுதலும் நடக்கின்றன.

    நமது நாட்டைப் பொறுத்தமட்டில் சைபர் பாதுகாப்பு (இணைய பாதுகாப்பு), தகவல் பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதை தேர்தல் கமிஷன் உணர்ந்து இருக்கிறது.

    கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா போன்று சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் நமது நாட்டில் நடைபெறாமல் பார்த்துக்கொள்வோம். (கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்பது ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் உபயோகிப்பாளர்களின் தகவல்களை திருடி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்திய நிறுவனம் ஆகும்.)

    தேர்தல்களில் பணம் தவறாக பயன்படுத்தப்படுவது பற்றி பேசப்படுகிறது. தேர்தலில் பணத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதை உறுதி செய்வதற்கு தற்போதைய சட்டங்கள் போதாது. எனவேதான் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுகளை அரசாங்கமே ஏற்றுக்கொள்வது இப்போது சாத்தியம் இல்லை.

    இந்தியாவில் இப்போது தேர்தல்களில் பணம் ஆதிக்கம் செலுத்துவது என்பது கவலை அளிக்கிற பிரச்சினையாக உள்ளது. பிரசாரத்துக்கு பணம் செலவு செய்வதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர வேண்டும் என்று நிறைய பேசப்படுகிறது. வேட்பாளர்களுக்கான செலவை அரசே ஏற்பது பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

    ஆனால் இவை தொடர்பாக இப்போதுள்ள சட்டங்கள், இந்த விவகாரங்களை கவனிப்பதற்கு போதுமானவை அல்ல.

    எனவேதான் இதில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறி வந்து உள்ளது.

    செய்தி ஊடகங்களை பயனுள்ள விதத்தில் பயன்படுத்துதல், போலி செய்திகள் நடமாட்டத்தை குறைத்தல், பணம் கொடுத்து செய்திகள் வெளியிடுதல் ஆகியவை குறித்தும் கவனிக்க வேண்டியது இருக்கிறது. இது தொடர்பாகவும் தேர்தல் கமிஷன் ஆராய்ந்து வருகிறது. சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்களை நிர்வகிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ChiefElectionCommissioner #OPRawat
    பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தற்போது சாத்தியம் இல்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியுள்ளார். #ChiefElectionCommissioner #parliament #election
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். வருடத்தின் பல மாதங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிப்பதாலும், மக்கள் பணம் செலவழிவதாலும் அதை தவிர்க்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்று அவர் கருதுகிறார்.

    அவரது யோசனைக்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

    இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு சட்ட ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, வரும் 7ம் தேதி மற்றும் 8-ம் தேதி அனைத்துக் கட்சி பிரநிதிகளிடம் கருத்து கேட்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பார்வையற்றோருக்கான பிரெய்லி வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கினார். 

    அப்போது அவரிடம் பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்துவது குறித்து நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையர், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்டத்தில் இடமில்லை; சட்டத்திருத்தம் கொண்டு வந்தால்தான் இது சாத்தியம் எனக் கூறினார்.

    அரசியலமைப்பு மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளின் படி தேர்தல் ஆணையம் செயல்படும். எனவே, தற்போதைய நிலையில் தேர்தலை தொடர்ந்து நடத்துவோம் என்றும் தேர்தல் ஆணையர் கூறினார்.  #ChiefElectionCommissioner #parliament #election
    ×