என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "burned"
தேவதானப்பட்டி:
பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 35). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். தனது ஆட்டோவை வீட்டில் நிறுத்தி வைத்து விட்டு தூங்கினார்.
இன்று வீட்டின் முன் தீ எரிந்து கொண்டிருந்துள்ளது. வெளியே கதவு திறந்து பார்த்த போது ஆட்டோ தீ எரிவதை பார்த்து பின்னர் தண்ணீரை வைத்து அணைத்தனர். பின்னர் தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். தீ வைத்தது யார் என்று தெரியவில்லை?
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து இப்பகுதியில் ஆட்டோக்களில் டயர், பேட்டரி, டீசல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருட்டு நடந்து கொண்டிருக்கிறது. இது சம்மந்தமாக தேவதானப்பட்டி விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையம்:
தேனி அருகே போடி மேலசொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர் தனது மனைவி ஜெயந்தி, மகன்கள் தினேஷ், ரித்திஷ் மற்றும் உறவினர் முத்துக்குமார் ஆகியோருடன் பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு காரில் வந்து கொண்டு இருந்தார்.
உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சின்னமனூர் வழியாக கம்பம் சென்றனர். அப்போது சீலையம்பட்டி அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் காரின் முன் பக்கம் நொறுங்கி சேதமடைந்தது.
அதில் இருந்து புகை வெளியானது. இதைபார்த்த அனைவரும் காரை விட்டு உடனடியாக வெளியேறினர். சிறு காயங்களுடன் அவர்கள் உயிர் தப்பினர்.
சிறிது நேரத்தில் கார் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இருந்த போதும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. காயமடைந்த 5 பேரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி அருகே உள்ள கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமு. கூலித்தொழிலாளி. நேற்று மாலை இவரது வீட்டில் கியாஸ் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்தது.
இதனால் அந்த வீடு முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக தீ அருகில் வசிக்கும் முரளி, செல்வம், ராஜன்பாபு, கர்லின், காசியம்மாள் ஆகியோரின் வீடுகளுக்கும் பரவியது. இதானல் அந்த வீடுகளில் தீப்பற்றி எரிந்தது. இதனால் 6 வீட்டில் அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.
ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
தீவிபத்து நடந்த இடத்தை தாசில்தார் கிருஷ்ணவேனி, வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், அ.தி.மு.க.நகர செயலாளர் சதாசிவம், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம்பாஷா மற்றும் நிர்வாகிகள் சென்று பார்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
ராயபுரம்:
காசிமேடு ஜீவரத்தினம் நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்யும் கம்பெனி உள்ளது. இதன் அருகே மீன்களை சேமித்து வைக்கும் குடோன் உள்ளது.
இங்கு ஏற்றுமதி செய்வதற்காக ரூ.5 லட்சம் மதிப்புள்ள திருகை மீன்களை சேமித்து வைத்து இருந்தார். இதன் அருகே ஏற்றுமதி கம்பெனியின் அலுவலகம் உள்ளது.
இன்று காலை 8 மணியளவில் இந்த குடோன் தீப்பிடித்து எரிந்தது. காசிமேடு மீன்பிடி துறைமுகம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த ரூ.5 லட்சம் மீன்கள் எரிந்து நாசமாகின. அலுவலகமும் எரிந்தது. இங்கு இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் சேதமாகின.
காசிமேடு மீன்பிடி துறை முகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
பாகூர்:
பாகூர் அருகே சோரியாங்குப்பத்தை அடுத்த திடீர் குப்பத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 57) கூலித்தொழிலாளி.
இன்று காலை அவர் விவசாய வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரதுமனைவி விமலா மற்றும் குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில் பகல் 12 மணியளவில் வைத்தியநாதன் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமலா குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார்.
அதற்குள் தீ வீடு முழுவதும் பரவி எரிந்தது. மேலும் அருகில் உள்ள வைக்கோல் போரிலும் தீ பற்றி எரிந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகூர் தீயணைப்புத்துறை அதிகாரி பக்கிரி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானதால் வீட்டில் இருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அருகே உள்ளது சேடாபாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவரது மகன் வெற்றிவேல் (வயது 19). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்தஜோதி, முகுந்தன், விஜயகுமார் ஆகியோருக்கிடையே செல்போனில் வாட்ஸ்-அப் அனுப்புவதில் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை ஆனந்தஜோதி உள்பட 6 பேர் சுமதி வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த அவரிடம் தகராறு செய்தனர். அப்போது அங்கு வந்த சுமதியின் உறவினர் கார்த்திக் (29) என்பவர், ஏன் தகராறு செய்கிறீர்கள்? என்று தட்டி கேட்டார்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தஜோதியும், அவரது நண்பர்களும் கார்த்திகை சரமாரியாக தாக்கினர்.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த கார்த்திக் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தனது அண்ணன் கார்த்திக் தாக்கப்பட்ட சம்பவம் அவரது தம்பி விக்னேசுக்கு தெரியவந்தது. அவரும், அவரது நண்பர் செந்தில்குமாரும் நேற்று இரவு ஆனந்தஜோதியின் வீட்டுக்கு சென்றனர். பின்பு அவரது கூரைவீட்டுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென்று குடிசை வீடு முழுவதும் பரவியது. வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அருகில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
சிலிண்டர் வெடித்ததில் அருகில் இருந்த தனசேகர், செல்வம், வெங்கடேசன், ராஜவேலு, மாரியம்மாள் ஆகியோரின் வீடுகளுக்கும் தீ பரவியது. உடனே பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.
மேலும் இது குறித்து கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஆனந்தஜோதி வீடு உள்பட 6 பேரின் வீடுகளும் எரிந்து சாம்பலானது.
வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமாகின. இந்த தீ விபத்தில் 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் முகுந்தன், விஜயகுமார், செந்தில்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சேடாபாளையம் கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்