search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fire house"

    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டுக்கு தீவைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான இரும்பை காலனியை சேர்ந்தவர் பாபு (வயது33), எலக்ட்ரிசீயன். இவருக்கு கலைவாணி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

    மதுகுடிக்கும் பழக்கம் உள்ள பாபு அடிக்கடி மதுகுடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வார். அதுபோல் சம்பவத்தன்றும் பாபு மதுகுடித்துவிட்டு வீட்டில் மனைவி கலைவாணியிடம் தகராறு செய்தார். இதனால் கணவருடன் கோபித்துக்கொண்டு கலைவாணி குழந்தைகளை திருச்சிற்றம்பலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி விட்டு அவரும் அவரது அண்ணன் ஆனந்து வீட்டுக்கு சென்று விட்டார்.

    மனைவி கோபித்து சென்றதால் ஆத்திரம் அடைந்த பாபு, மனைவியின் ஆடையை எடுத்து தீவைத்து கொளுத்தி தனது கூரை வீட்டில் வீசிவிட்டு ஓடிவிட்டார். இதில் வீடு தீப்பிடித்து எரிந்ததுடன் தீ மளமளவென பரவி அருகில் உள்ள பாபுவின் மாமியார் செல்வராணி வீடு மற்றும் சுப்பராயன் வீட்டிலும் பரவி எரிந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வானூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் 3 வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் செல்வராணி வீடு மற்றும் சுப்புராயன் வீடுகளில் வைத்திருந்த நகை-பணம் தீயில் கருகி போனது.

    இதுபற்றிய புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குபதிவு செய்து பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாகூர் அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் வீடு எரிந்து சாம்பல் ஆனது. ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

    பாகூர்:

    பாகூர் அருகே சோரியாங்குப்பத்தை அடுத்த திடீர் குப்பத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 57) கூலித்தொழிலாளி.

    இன்று காலை அவர் விவசாய வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரதுமனைவி விமலா மற்றும் குழந்தைகள் இருந்தனர்.

    இந்த நிலையில் பகல் 12 மணியளவில் வைத்தியநாதன் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமலா குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார்.

    அதற்குள் தீ வீடு முழுவதும் பரவி எரிந்தது. மேலும் அருகில் உள்ள வைக்கோல் போரிலும் தீ பற்றி எரிந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகூர் தீயணைப்புத்துறை அதிகாரி பக்கிரி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    எனினும் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானதால் வீட்டில் இருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    ×