என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாகூர் அருகே திடீர் தீ விபத்தில் வீடு எரிந்து சாம்பல்
பாகூர்:
பாகூர் அருகே சோரியாங்குப்பத்தை அடுத்த திடீர் குப்பத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 57) கூலித்தொழிலாளி.
இன்று காலை அவர் விவசாய வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரதுமனைவி விமலா மற்றும் குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில் பகல் 12 மணியளவில் வைத்தியநாதன் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமலா குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார்.
அதற்குள் தீ வீடு முழுவதும் பரவி எரிந்தது. மேலும் அருகில் உள்ள வைக்கோல் போரிலும் தீ பற்றி எரிந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகூர் தீயணைப்புத்துறை அதிகாரி பக்கிரி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானதால் வீட்டில் இருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்