search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "home fire"

    • படுக்கை அறை முழுவதும் தீ பரவத் தொடங்கியது.
    • விஜய லட்சுமி சுதாரித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் படுக்கையறையில் இருந்து வெளியில் ஓடி வந்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் சுபாஷ் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கணேஷ் குமார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 31).

    இவர் நேற்று இரவு வழக்கம் போல தனது வேலைகளை முடித்துவிட்டு தனது மகன்கள் ஸ்ரீ பிரணவ்(11),ஸ்ரீ ஆரவ்(4) ஆகியோருடன் படுக்கை அறையில் உறங்கி விட்டார்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் படுக்கை அறையில் இருந்த ஏ.சி.யில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்துள்ளது. இதனால் விஜயலட்சுமி திடுக்கிட்டு கண் விழித்து பார்த்தார். அப்போது படுக்கை அறை முழுவதும் தீ பரவத் தொடங்கியது. பின்னர் அவர் படுத்திருந்த கட்டிலுக்கும் தீ பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய லட்சுமி சுதாரித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் படுக்கையறையில் இருந்து வெளியில் ஓடி வந்துள்ளார்.

    மேலும் இது குறித்து முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் தெர்மல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ் தலைமையில் ரவிக்குமார் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் விஜயலட்சுமி வீட்டில் படுக்கை அறையில் பற்றிய தீ சமையலறை வரை பரவி எரிந்தது. அதனை மேலும் பரவாமல் தீயணைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டு உடனடியாக அணைத்தனர். சாமர்த்தியமாக செயல்பட்டதால் விஜயலட்சுமியை தனது குழந்கதைளையும் தன்னையும் காப்பாற்றிக் கொண்டார்.

    விரைந்து செயல்பட்டு தீயை அணைத்த தெர்மல் நகர் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கும், போலீசாருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    பெருந்துறை அருகே தீப்பிடித்து குடிசை வீடு எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த பெத்தாம்பாளையம் நரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி அம்மணியம்மாள் (வயது 60).

    இவர் அந்த பகுதியில் குடிசை வீடு அமைத்து வசித்து வருகிறார். கூலித் தொழிலாளி. நேற்று மாலை வீட்டில் இருந்த சுவிட்ச் பாக்சில் மின் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டின் மேற் கூரையில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

    இதனைக்கண்ட முனியம்மாள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடிய வில்லை.

    இதையடுத்து பெருந்துறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

    ஆனால் வீட்டில் இருந்த பேன், டிவி, பொருட்கள் மற்றும் ரேசன் கார்டு உள்பட ஆவணங்கள் அனைத்தும் எரிந்தது.

    திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது.
    கே.கே.நகர்:

    திருச்சி கே.கே.நகர் சுப்பிரமணியபுரம் பகுதியில் அமைந்துள்ளது பென்சனர் காலனி. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் அதிக அளவில் குடிசை வீடுகளும் இருக்கிறது. இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் சேர்ந்த குப்பைகளுக்கு யாரோ தீ வைத்துள்ளனர். இதில் காற்றின் வேகம் காரணமாக குப்பையில் பற்றிய தீயானது அருகில் இருந்து குடியிருப்புகளுக்கும்  பரவியது. மேலும் நெருப்பு துகள் கள் அருகிலிருந்த தனியார் நிறுவனத்தில் மேல் இருந்த கூரையில் விழுந்து மளமள வென தீ பரவியது. இதனை பார்த்த  அப்பகுதியினர் அணைக்க முயன்றும் முடிய வில்லை. உடனடியாக தீய ணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வேமாக பரவிய தீ அதே பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் வீடு உள்பட 5 பேரின் வீடுகளில் பிடித்து எரிந்தது. தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைக்க முற்பட்டனர். பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு  துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். 

    இந்த விபத்தில் அந்த வீடுகளில் இருந்த பணம் மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலானது. மொத்தம் சேத மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட இடத்தை திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப. குமார் எம்.பி. நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.

    மேலும் தீ விபத்தில் பாதிக்கப்படாத அளவிற்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  தீ விபத்து குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×