search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "godown fire"

    சாக்கு குடோனில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான சாக்குகள் எரிந்து நாசமாயின.
    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் கருப்புக்கோவில் பகுதியில் தனியார் வணிக வளாகத்தில் சாக்கு குடோன் வைத்துள்ளார். அங்கு பிளாஸ்டிக் சாக்குகள் தயாரித்து பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் ஏராளமான சாக்குகள் எப்போதும் குடோனில் வைக்கப்பட்டு இருக்கும்.

    நேற்று இரவு ஊழியர்கள் வழக்கம் போல் குடோனை அடைத்துச் சென்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு குடோனில் இருந்து கரும் புகை வெளிவந்துள்ளது. இதனைக்கண்ட அக்கம், பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உசிலம்பட்டி தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் குடோனில் புகை, தீயாக மாறி கொழுந்து விட்டு எரிந்தது.

    தீயணைப்பு துறையினர் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். குடோனில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடோனில் 60 ஆயிரம் சாக்குகள் வைக்கப்பட்டு இருந்ததாகவும், அவை தீயில் எரிந்து நாசமானதாகவும் போலீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயில் எரிந்து நாசமான சாக்குகளின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் என்று தெரிகிறது.
    ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் எதிரே ஆரஞ்சு பழ குடோனில் ஏற்பட்ட தீவிபத்தை 4 மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் எதிரே தனியார் வணிகவளாக காம்ப்ளக்ஸ் உள்ளது. நேற்று மாலை ஆயுதபூஜைக்காக இங்குள்ள அலுவலகங்களில் பூஜை நடைபெற்றது. கீழ்தளத்தில் ஆரஞ்சு பழ குடோன் வைத்திருந்த நபர் பூஜையை முடித்துவிட்டு கதவை பூட்டி சென்றுவிட்டார்.

    தீபத்தை அணைக்காமல் சென்றதால் அதிலிருந்து ஏற்பட்ட தீ அறைமுழுவதும் பரவியது. இரவு 8.30 மணியளவில் குடோனில் இருந்து தீ வெளியே மளமளவென எரிந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து இரவு 12 மணிவரை போராடி தீயை அணைத்தனர். குடோன் அமைந்துள்ள மேல்தளத்தில் வங்கி, ஜெராக்ஸ் அலுவலகம், கம்ப்யூட்டர் சென்டர் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.

    தீவிபத்து மேலும் பரவாமல் தவிர்க்கப்பட்டதால் பெரும் சேதம் தடுக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காசிமேட்டில் இன்று காலை மீன் ஏற்றுமதி குடோன் எரிந்து சாம்பல் ஆனது. இதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்கள் எரிந்து நாசமாகின.

    ராயபுரம்:

    காசிமேடு ஜீவரத்தினம் நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்யும் கம்பெனி உள்ளது. இதன் அருகே மீன்களை சேமித்து வைக்கும் குடோன் உள்ளது.

    இங்கு ஏற்றுமதி செய்வதற்காக ரூ.5 லட்சம் மதிப்புள்ள திருகை மீன்களை சேமித்து வைத்து இருந்தார். இதன் அருகே ஏற்றுமதி கம்பெனியின் அலுவலகம் உள்ளது.

    இன்று காலை 8 மணியளவில் இந்த குடோன் தீப்பிடித்து எரிந்தது. காசிமேடு மீன்பிடி துறைமுகம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த ரூ.5 லட்சம் மீன்கள் எரிந்து நாசமாகின. அலுவலகமும் எரிந்தது. இங்கு இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் சேதமாகின.

    காசிமேடு மீன்பிடி துறை முகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    ×