என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "paint godown fire"

    • தீயை அணைக்கும் பணியில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • தீ மேலும் பரவாமல் இருக்க குடோனில் இருந்த பெயிண்ட் பேரல்களை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

    சென்னை:

    சென்னை மணலி புதுநகர் அருகே தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    பெயிண்ட் குடோனில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். தீயை அணைக்கும் பணியில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    தீ மேலும் பரவாமல் இருக்க குடோனில் இருந்த பெயிண்ட் பேரல்களை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

    தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×