search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auto fire"

    நெசப்பாக்கத்தில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போரூர்:

    எண்ணூர் தாழம்குப்பம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகணேஷ். ஆட்டோ டிரைவர். இவர் இன்று காலை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சவாரி ஏற்றிக்கொண்டு ராமாபுரம் வந்தார்.

    பின்னர் அவர் திரும்பி சென்று கொண்டு இருந்தார்.நெசப்பாக்கம் ஏரிக்கரை சர்வீஸ் சாலையில் வந்த போது தீடீரென ஸ்ரீகணேஷ் அமர்ந்து இருந்த இருக்கையின் கீழ் பகுதியில் இருந்து கரும் புகை கிளம்பியது.

    உடனடியாக ஸ்ரீகணேஷ் ஆட்டோவை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் ஆட்டோ மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கும் எம்.ஜி.ஆர். நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அசோக் நகரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் ஆட்டோ முற்றிலும் எரிந்து நாசமானது.

    ஆட்டோ தீப்பிடித்ததும் இறங்கியதில் அதிர்ஷ்ட வசமாக ஸ்ரீகணேஷ் உயிர் தப்பினார். பேட்டரி வெடித்து அதில் ஏற்பட்ட மின் கசிவால் ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    தேவதானப்பட்டி அருகே ஆட்டோவை தீ வைத்து எரித்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேவதானப்பட்டி:

    பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 35). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். தனது ஆட்டோவை வீட்டில் நிறுத்தி வைத்து விட்டு தூங்கினார்.

    இன்று வீட்டின் முன் தீ எரிந்து கொண்டிருந்துள்ளது. வெளியே கதவு திறந்து பார்த்த போது ஆட்டோ தீ எரிவதை பார்த்து பின்னர் தண்ணீரை வைத்து அணைத்தனர். பின்னர் தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். தீ வைத்தது யார் என்று தெரியவில்லை?

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து இப்பகுதியில் ஆட்டோக்களில் டயர், பேட்டரி, டீசல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருட்டு நடந்து கொண்டிருக்கிறது. இது சம்மந்தமாக தேவதானப்பட்டி விசாரித்து வருகின்றனர்.

    ×