search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Big Temple"

    • அம்மன் நான்கு வீதிகளில் திருவீதி உலா நடந்தது.
    • வராகி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், விநாயகர், கருவூரார், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர் ஆகிய சன்னதிகள் உள்ளன. மேலும் வராகி அம்மன் தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்

    இந்த வராகி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட நவராத்திரி விழா 11 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா கடந்த மாதம் 28-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் வராகி அம்மனுக்கு தினமும் அலங்காரமும், மாலையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் வராகி அம்மன் மஞ்சள், குங்குமம், சந்தனம், தேங்காய்ப்பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், கனிவகைகள், காய்கனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஆஷாட நவராத்திரி விழாவின் நிறைவு நாளான நேற்று வராகி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாலை 5 மணி அளவில் கோவில் வளாகத்தில் நாதஸ்வரம், கரகாட்டம், ஒயிலாட்டம், சாமி வேடமணிந்த கலைஞர்களின் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு அம்மன் நான்கு வீதிகளில் திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள், ஆஷாட நவராத்திரி விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • ஆஷாட நவராத்திரி விழா வருகிற 8-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • ஆஷாட நவராத்திரி விழா வருகிற 8-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், விநாயகர், கருவூரார், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர் ஆகிய சன்னதிகள் உள்ளன. மேலும் வராஹி அம்மன் தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த வராகி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட நவராத்திரி விழா 11 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து கணபதி அபிஷேகம், வராகி அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் வராகி அம்மன் இனிப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு தினமும் அலங்காரமும், மாலையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு அம்மன் நான்கு வீதிகளில் திருவீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள், ஆஷாட நவராத்திரி விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    தஞ்சை பெரியகோவிலில் வருகிற 29-ந்தேதி 2-வது சோமவாரமும், அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதி 3-வது சோமவாரமும், 13-ந்தேதி கடைசி சோமவாரமும் கடைபிடிக்கப்படுகிறது.
    கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலிலுள்ள பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பெருவுடையார் சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதனையடுத்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    வருகிற 29-ந்தேதி 2-வது சோமவாரமும், அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதி 3-வது சோமவாரமும், 13-ந்தேதி கடைசி சோமவாரமும் கடைபிடிக்கப்படுகிறது.

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு நேற்று மாலையில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக 1008 சங்குகளில் பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நீர் புனித தலங்களின் மண் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்த புனித நீர் நிறைந்த கலயம் மற்றும் சங்குகளுக்கு ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் ஐயாறப்பர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது.
    கார்த்திகை திருநாளை முன்னிட்டு பவுர்ணமி தினமான நேற்று தஞ்சை பெரியகோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. எரிகின்ற சொக்கப்பனையை அக்னிமய லிங்கமாக பக்தர்கள் வணங்கினர்.
    கார்த்திகை திருநாள் இன்று (வெள்ளிக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் பெண்கள் கோலமிட்டு அகல்விளக்குகளை ஏற்றி சாமிக்கு வெல்லம், அவல்பொரி படைத்து வழிபாடு செய்வார்கள். இதேபோல் கோவில்களிலும் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். கார்த்திகை திருநாளை முன்னிட்டு பவுர்ணமி தினமான நேற்று தஞ்சை பெரியகோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. முன்னதாக பெருவுடையார்- பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் நுழைவு கோபுரவாசல் அருகே சொக்கப்பனை வைத்திருக்கும் இடத்தில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு ஆராதனை காண்பிக்கப்பட்டு, அந்த தீபச்சுடரால் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

    எரிகின்ற சொக்கப்பனையை அக்னிமய லிங்கமாக பக்தர்கள் வணங்கினர். மேலும் சொக்கப்பனைக்குள் பட்டாசுகள் போடப்பட்டு இருந்ததால், அந்த பட்டாசுகளும் வெடித்தன. சொக்கப்பனை கொளுத்தி முடித்தபிறகு அந்த சாம்பலை பக்தர்கள் எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டனர். மேலும் அந்த சாம்பலை தங்கள் வீடுகளுக்கும் கொண்டு சென்றனர்.
    தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் 1036-வது சதய விழா வருகிற 13-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடத்தப்படுகிறது.
    தஞ்சை பெரியகோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டினார். இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் முடிவடைந்தும் இன்னும் கம்பீரமாக காட்சிஅளிக்கிறது.இந்த கோவில் இந்திய அரசின் கட்டுப்பாட்டில்உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.

    இந்த கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா ஒவ்வொருஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 2 நாட்கள் விழா நடைபெறும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு 1 நாள் மட்டும் கொண்டாடப்பட்டது. அதன்படி இந்த ஆண்டும் 1036-வதுசதய விழா வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) 1 நாள் கொண்டாடப்படுகிறது.

    இது குறித்து சதய விழாக்குழு தலைவர் து.செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா வருகிற 13-ந்தேதி காலை 6.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து 7 மணிக்கு கோவில் ஊழியர்களுக்கு புத்தாடைகளை தருமபுரம்ஆதீனம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்குகிறது. 7.30 மணிக்கு திருமுறை திருவீதி உலா கோவில் உள்பிரகாரத்தில் நடைபெறுகிறது.

    காலை 8 மணிக்கு மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. 8.50 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் 1மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தேவாரன இன்னிசை நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு கோவில் வளாகத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. என்றார். பேட்டியின் போது உதவி ஆணையர் கிருஷ்ணன், கோவில்செயல் அலுவலர் மாதவன் மற்றும் சதய விழாக்குழுவினர் உடன் இருந்தனர். சதய விழாவையொட்டி கோவிலில் மின் விளக்கு உள்ளிட்ட அலங்கார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    தஞ்சை பெரியகோவிலில் வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ள 1036-வது சதய விழாவையொட்டி நேற்றுகாலை பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் இன்றைக்கும் தமிழர்களின் கட்டிட கலைக்கும், ஓவிய கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவிலை கட்டி தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்த நாளை அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதன்படி மாமன்னன் ராஜராஜசோழனின் 1036-வது சதய விழா வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. வழக்கமாக இடம்பெறும் கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், வீதிஉலா ஆகியவற்றுடன் 2 நாட்கள் நடைபெறும் இந்த விழா கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் ஒரு நாள் மட்டுமே நடத்தப்படுகிறது.

    சதயவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நேற்றுகாலை நடந்தது. இதற்கு சதய விழாக்குழு தலைவர் து.செல்வம் தலைமை தாங்கினார். இதில் துணைத் தலைவர் மேத்தா, தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் மாதவன், மேற்பார்வையாளர் ரெங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சத்ய விழா நடைபெறும் 13-ந் தேதி காலை 7 மணிக்கு பெரியகோவிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 9 மணிக்கு பெருவுடையாருக்கு 36 வகை பொருள்களால் பேரபிஷேகமும், பிற்பகல் 1 மணிக்கு பெருந் தீப வழிபாடும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்திற்குள் சுவாமி உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
    மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றது. உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. மேலும் பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தஞ்சை மேலவீதியில் உள்ள தேர்நிலையில் தேர் அலங்கரிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி வழியாக தேர் வலம் வரும். இதனால் அந்த சாலைகளில் குண்டும், குழியுமாக காணப்படும் பகுதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் சாலையோரம் காணப்படும் மண் திட்டுகளும் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. தேரோட்டத்திற்கு கூட்டம் அதிகமாக வரும். அப்படி வருபவர்கள் நெரிசலில் சிக்கி சாலையோரம் இருக்கும் சாக்கடைக்குள் விழுந்துவிடாமல் இருக்க கம்புகளால் ஆன தடுப்புகள் மேலவீதி மற்றும் வடக்குவீதியில் உள்ள சாக்கடை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.

    மின்கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் தேர் செல்லும்போது தட்டும் என்பதால் அந்த மின்விளக்குகளை எல்லாம் மாநகராட்சி பணியாளர்கள் திருப்பி வைத்துள்ளனர். மேலும் சாலையோரத்தில் வெள்ளை நிற வர்ணம் அடிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேரோட்டத்தை பார்க்க வரும் மக்களின் தாகத்தை போக்க மேலவீதியில் ஆங்காங்கே மாநகராட்சி சார்பில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.

    சித்திரை தேரோட்டத் துக்காக தஞ்சை பெரியகோவில் தேர் அலங்கார பணிகள் தொடங்கப்படுவதையொட்டி பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
    தஞ்சை பெரியகோயில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதோடு கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி உலகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 88 கோவில்களுள் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா 20 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு சித்திரைப் பெருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் காலை, மாலை வேளைகளில் சாமி புறப்பாடும், பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வருகிற 16-ந் தேதி தஞ்சையில் 4 ராஜ வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தேர் அலங்கரிக்கப்படவுள்ளது. இதற்காக நேற்று காலை 8 மணிக்கு மேல் தேரில் பந்தக்கால் நடப்பட்டது. அதைத்தொடர்ந்து அலங்கார பணிகள் தொடங்கின. இதையொட்டி சுரேஷ்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாதவன், மேற்பார்வையாளர் ரங்கராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தினந்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு நேரங்களில் தஞ்சையில் ராஜ வீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. வருகிற 19-ந் தேதி மாலை கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கோவிலில் இடி விழுந்ததால் கோவில் கோபுரத்தில் சேதமடைந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர். #Thanjavur #BigTemple #LIghtning
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பெரிய கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சமீபத்தில் இந்த கோவிலில் திருடு போன ராஜராஜ சோழன் மற்றும் அம்மன் சிலைகள் ஆகியவற்றை மீட்டு மீண்டும் கோவிலில் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
     
    இந்நிலையில், தஞ்சையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது. இதில், பெரிய கோவிலின் இரண்டாவது நுழைவு வாயிலான கேரளாந்தகன் கோபுரத்தின் இடது புறத்தில் இடி தாக்கியது.

    இடி தாக்கியதில் 90 அடி உயரம் உள்ள அந்த கோபுரத்தின் மேல் பகுதியில் இருந்த யாழி சிற்பம் சேதம் அடைந்தது. சேதம் அடைந்த யாழி சிற்பம் கோபுரத்தின் மேலே விழுந்துவிட்டதால் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். #Thanjavur #BigTemple #LIghtning
    ×