search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharat Ratna"

    இந்திய வரலாற்றில் கடந்த 70 ஆண்டுகளாக ஒரு சன்னியாசிக்கு கூட பாரத ரத்னா விருது தரப்படாதது துரதிர்ஷ்டவசமானது என யோகா குரு பாபா ராம்தேவ் வேதனை தெரிவித்துள்ளார். #BharatRatna #BabaRamdev
    புதுடெல்லி:

    இந்த ஆண்டுக்கான  ‘பாரத ரத்னா’ விருதுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நானாஜி தேஷ்முக், பூபேன் ஹசாரிக்கா ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்திய வரலாற்றில் கடந்த 70 ஆண்டுகளாக ஒரு சன்னியாசிக்கு கூட பாரத ரத்னா விருது தரப்படாதது துரதிர்ஷ்டவசமானது என யோகா குரு பாபா ராம்தேவ் வேதனை தெரிவித்துள்ளார்.

    நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட மஹரிஷி தயானந்த சரஸ்வதி, சுவாமி விவேகானந்தா, சிவகுமார சுவாமிஜி ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் காலமான சித்தகங்கா மடத்தின் தலைமை ஜீயர்  சிவகுமார சுவாமிஜி-க்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் நிலையில் பாபா ராம்தேவ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #BharatRatna #BabaRamdev
    பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். #PranabMukherjee #BharatRatna #EdappadiPalanisamy
    சென்னை:

    முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று அறிவித்தார். மேலும் சமூக சேவகர் நானாஜி தேஷ்முக், கவிஞர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பிரணாப் முகர்ஜி கூறுகையில், நாட்டு மக்களுக்கு நன்றி என்றார்.



    இந்நிலையில், பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைசிறந்த அரசியல் மேதையான பிரணாப் முகர்ஜி நம் நாட்டுக்காக தன்னலமின்றி சேவையாற்றினார் என குறிப்பிட்டுள்ளார். #PranabMukherjee #BharatRatna #EdappadiPalanisamy
    எனக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு நாட்டு மக்களுக்கு நன்றி என முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். #PranabMukherjee #BharatRatna
    புதுடெல்லி:

    முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். மேலும் சமூக சேவகர் நனாஜி தேஷ்முக், கவிஞர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

    இந்நிலையில் பிரணாப் முகர்ஜி கூறியதாவது:

    எனக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு நாட்டு மக்களுக்கு நன்றி. எப்போதும் சொல்வதைபோல் இப்போதும் சொல்கிறேன் மக்களிடம் இருந்து பலவற்றை பெற்றுள்ளேன் எனக்கூறியுள்ளார். #PranabMukherjee #BharatRatna
    பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். #PranabMukherjee #BharatRatna #Rahulgandhi
    புதுடெல்லி:

    குடியரசு தினவிழா கொண்டாடப்படும் நிலையில், 3 பேருக்கு (பிரணாப் முகர்ஜி,சமூக சேவகர் நனாஜி தேஷ்முக், கவிஞர் பூபென் ஹசாரிகா)  இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 4 பேருக்கு பத்ம விபூஷண் , 14 பேருக்கு பத்ம பூஷண், 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் என 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.

    இந்நிலையில், பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்துக்கள். நாட்டின் கட்டமைப்பு, பொதுசேவைக்கான பிரணாப்பின் பங்களிப்பால் காங்கிரஸ் பெருமை கொள்கிறது என பதிவிட்டுள்ளார். #PranabMukherjee #BharatRatna #Rahulgandhi
    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நானாஜி தேஷ்முக், பூபேன் ஹசாரிக்கா ஆகியோர் நாட்டின் மிகவும் உயரிய ‘பாரத ரத்னா’ விருதுக்கு இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளனர். #NanajiDeshmukh #BhupenHazarika #PranabMukherjee #BharatRatna
    புதுடெல்லி:

    கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புறங்களின் தன்னிறைவு ஆகியவற்றுக்காக தொண்டாற்றிய பிரபல சமூகச்சேவகரான நானா தேஷ்மும் பாரதிய ஜனசங்க தலைவர்களில் குறிப்பிடத்தக்கவராவார்.  கடந்த 2010-ம் ஆண்டு காலமான இவர் முன்னர் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். பத்ம விபூஷன் விருதும் பெற்றுள்ளார்.

    அசாம் மாநிலத்தை சேர்ந்த பூபேன் ஹசாரிக்கா பிரபல கவிஞர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக திறமைகள் பெற்றவராவார். கடந்த 2011-ம் ஆண்டில் இவர் காலமானார்.

    பாராளுமன்ற உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி(83), காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய மந்திரிசபைகளில் நிதி, ராணுவம் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ‘பாரத ரத்னா’ விருதுக்கு  தேர்வு செய்யப்பட்டுள்ள இவர்கள் மூவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார். #NanajiDeshmukh #BhupenHazarika #PranabMukherjee #BharatRatna
    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ‘பாரத ரத்னா’ விருதை திரும்பப்பெற தீர்மானம் நிறைவேற்றுவதற்காக பஞ்சாப் மாநில சட்டசபையை அவசரமாக கூட்டுமாறு சிரோன்மணி அகாலி தளம் வலியுறுத்தியுள்ளது. #RajivGandhis #BharatRatna
    சண்டிகர்:

    தமிழ்நாட்டில் 1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரம் செய்யவந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 21-5-1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்த ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கவரவிக்கும் வகையில் நாட்டின் மிகமிக உயரிய 'பாரத ரத்னா' விருது அவருக்கு கடந்த ஆண்டில் அளிக்கப்பட்டது.
     
    ராஜீவ் காந்தியின் தாயாரும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984 அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

    டெல்லியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இருவரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் டெல்லி போலீசார் போதிய ஆதாரங்கள் இல்லை என வழக்கை முன்னர் மூடி விட்டனர். எனினும், சிறப்பு புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

    இவ்வழக்கில் கடந்த 20-11-2018 அன்று தீர்ப்பளித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி அஜய் பான்டே, குற்றவாளி யஷ்பால் சிங் என்பவருக்கு மரண தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் நரேஷ் ஷெராவத் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். இருவருக்கும் தலா 35 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    முன்னர் இந்த கலவர வழக்கில் இருந்து நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த வன்முறைகளில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தொடர்பு இருந்ததாக ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், ராஜீவ் காந்திக்கு கடந்த 1991-ம் ஆண்டில் அளிக்கப்பட்ட 'பாரத ரத்னா’ விருதை திரும்பப்பெற வேண்டும் என டெல்லி சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த தகவலுக்கு டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா மறுப்பு தெரிவித்தார். அப்படி எந்தவொரு தீர்மானமும் சட்டசபையில் நிறைவேற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், பஞ்சாப் மாநில சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருக்கும் சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் இவ்விவகாரம் தொடர்பாக இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

    டெல்லி சட்டசபையில் முதலில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு பின்னர் ‘பல்டி’ அடித்ததன் மூலம் ஆம் ஆத்மி கட்சி மற்றும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் நிலைப்பாடு என்ன? என்பது தெளிவாக விளங்குகின்றது.

    காங்கிரஸ் தலைமை வற்புறுத்தியதால் டெல்லி சட்டசபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை டெல்லி அரசு மறைத்து விட்டது. இந்த பொய்யின் மூலம் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கள்ளத்தொடர்பு வைத்துள்ளது நன்றாக புரிகிறது.

    ராஜீவ் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் தூண்டுதலின்படி டெல்லியில் சீக்கியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர்களின் நிலைப்பாடு தொடர்பாக அவர்கள் விளக்கம் அளித்தாக வேண்டும். 

    இதற்கிடையில், இதுதொடர்பாக இங்குள்ள சீக்கியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட ‘பாரத ரத்னா’ விருதை திரும்பப்பெறுமாறு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்படுமா? என்பதை முதல் மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங் தெளிவுப்படுத்த வேண்டும்.

    இனப்படுகொலை வெறியாட்டத்தில் ஈடுபட்ட யாருக்கும் இதைப்போன்ற நாட்டின் மிக கவுரவத்துக்குரிய விருது பெறும் தகுதி இல்லை என்ற செய்தியை இதன் மூலம் பஞ்சாப் மாநில காங்கிரஸ் பதிவு செய்தாக வேண்டும். இதற்காக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். 

    இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறவும், மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்களுக்கு இந்த சமூகத்தில் இடமில்லை என்பதை  இதன் வாயிலாக உணர்த்தவும் சிரோன்மணி அகாலி தளம் அனைத்து வகையிலும் துணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். #RajivGandhis #BharatRatna
    ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெறுவது தொடர்பான தீர்மானத்திற்கு டெல்லி சட்டமன்ற உறுப்பினர் அல்கா லம்பா ஆதரவு அளிக்காததால் அவரை கட்சியில் இருந்து விலகும்படி ஆம் ஆத்மி கூறியுள்ளது. #MLAAlkaLamba
    புதுடெல்லி:

    சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதால் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெறவேண்டும் என்று டெல்லி சட்டமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இது தேசிய அளவில் பரபரப்பான சில மணி நேரங்களில் அப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவில்லை என ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது.

    இந்நிலையில், ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஆம் ஆத்மி கட்சியின் அல்கா லம்பா எம்எல்ஏ ஆதரவு அளிக்க மறுத்துள்ளார். இதனால் அவரை கட்சியில் இருந்து விலகும்படி கட்சி தலைமை நெருக்கடி கொடுத்த தகவல் வெளியாகி உள்ளது.



    இதுதொடர்பாக அல்கா லம்பா கூறுகையில், “ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானத்திற்கு நான் ஆதரவு அளிக்க மாட்டேன் என கூறியதால் என் மீது கட்சியினர் கோபம் கொண்டனர். ராஜினாமா செய்யுமாறு கட்சி என்னை கேட்டுக்கொண்டுள்ளது. நான் ராஜினாமா செய்யத் தயாராகவே இருக்கிறேன். ராஜீவ் காந்தி நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளார். எனவே அவருக்கு எதிரான தீர்மானத்தை நான் ஆதரிக்கவில்லை. எனவே, கட்சியின் விருப்பத்துக்கு எதிராக நின்றதால், என்னை பதவி விலகுமாறு கேட்கின்றனர்” என்றார். #MLAAlkaLamba

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கவரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட ‘பாரத ரத்னா’ விருதை திரும்பப்பெற டெல்லி சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #DelhiAssembly #BharatRatna #RajivGandhi
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டில் 1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரம் செய்யவந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 21-5-1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்த ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கவரவிக்கும் வகையில் நாட்டின் மிகமிக உயரிய 'பாரத ரத்னா' விருது அவருக்கு கடந்த ஆண்டில் அளிக்கப்பட்டது.

    இந்த விருதினை திரும்பப்பெற வேண்டும் என டெல்லி சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    ராஜீவ் காந்தியின் தாயாரும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984 அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

    டெல்லியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இருவரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் டெல்லி போலீசார் போதிய ஆதாரங்கள் இல்லை என வழக்கை முன்னர் மூடி விட்டனர். எனினும், சிறப்பு புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

    இவ்வழக்கில் கடந்த 20-11-2018 அன்று தீர்ப்பளித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி அஜய் பான்டே, குற்றவாளி யஷ்பால் சிங் என்பவருக்கு மரண தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் நரேஷ் ஷெராவத் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். இருவருக்கும் தலா 35 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    முன்னர் இந்த கலவர வழக்கில் இருந்து நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த வன்முறைகளில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தொடர்பு இருந்ததாக ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், அளிக்கப்பட்ட 'பாரத ரத்னா’ விருதை திரும்பப்பெற டெல்லி சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #DelhiAssembly #BharatRatna #RajivGandhi
    ஆந்திர முன்னாள் முதல் மந்திரி மறைந்த எம்.டி.ராமாராவுக்கு நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருது அளிக்கப்பட வேண்டும் என சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். #NTRamaRao #BharatRatna #ChandrababuNaidu
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் ஆளும்கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு விஜயவாடா நகரின் அருகேயுள்ள கனூரு பகுதியில் அமைந்துள்ள சித்தார்த் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், இன்றைய மாநாட்டில் பேசிய ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான மறைந்த எம்.டி.ராமாராவுக்கு நாட்டின் மிக உயரிய விருதானபாரத ரத்னா அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #NTRamaRao #BharatRatna #ChandrababuNaidu
    மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உடலில் உண்மையான இந்து ரத்தம் ஓடினால் வீர சவர்க்காருக்கு பாரத ரத்னா பட்டம் தர வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது. #NDA #pureHindublood #BharatRatnatoSavarkar
    மும்பை:

    மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உடலில் உண்மையான இந்து ரத்தம் ஓடினால் வீர சவர்க்காருக்கு பாரத ரத்னா பட்டம் தர வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா’ பத்திரிகையின் இன்றைய பதிப்புடன் வெளியாகியுள்ள இணைப்பு பகுதியில் ஒரு சிறப்பு கட்டுரை வெளியாகியுள்ளது. சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ரவத் எழுதியுள்ள அந்த கட்டுரையில் கூறியுள்ளதாவது:-

    பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவைப் போல் வீர சவர்க்காரும் ‘பாரிஸ்ட்டர்’ பட்டம் பெற்றவர்தான். ஆனால், ஜின்னா தனது படிப்பை பாகிஸ்தான் பிரிவினைக்கு பயன்படுத்தி கொண்டார்.

    வீர சவர்க்கார் தனது படிப்பை இந்த நாட்டுக்காக தியாகம் செய்தார். இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணாசிரம கொள்கையை அவர் கடுமையாக எதிர்த்து வந்தார். அசைவ உணவு சாப்பிடும் பழக்கத்தை அவர் ஆதரித்தார். இந்துத்துவா கொள்கைகளை மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தாலும், மதம்சார்ந்த மூடப்பழக்கங்களை கண்மூடித்தனமாக அவர் ஆதரித்தது கிடையாது.

    அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இருந்து முகமது அலி ஜின்னா புகைப்படத்தை நீக்கியதற்கு பதிலடி தரும் விதமாக சில அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள வீர சவர்க்காரின் புகைப்படம் நீக்க வேண்டும் என்று கூக்குரல் எழுந்துள்ளது. ஜின்னாவை ஆதரிப்பவர்கள் வீர சவர்க்காரை வெறுப்பதை வைத்தே அவர் இந்து மதத்தின் எவ்வளவு பெரிய அடையாளமாக கருதப்படுகிறார்? என்பதை புரிந்து கொள்ளலாம்.

    இப்படிப்பட்ட வீர சவர்க்காருக்கு மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உடலில் உண்மையான இந்து ரத்தம் ஓடினால் பாரத ரத்னா பட்டம் தர வேண்டும். இல்லாவிட்டால், அரசியலுக்காக மட்டுமே நாங்கள் இந்துத்துவாவை பயன்படுத்துகிறோம் என்று அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #NDA #pureHindublood #BharatRatnatoSavarkar 
    ×