search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு நாட்டு மக்களுக்கு நன்றி - பிரணாப் முகர்ஜி
    X

    பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு நாட்டு மக்களுக்கு நன்றி - பிரணாப் முகர்ஜி

    எனக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு நாட்டு மக்களுக்கு நன்றி என முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். #PranabMukherjee #BharatRatna
    புதுடெல்லி:

    முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். மேலும் சமூக சேவகர் நனாஜி தேஷ்முக், கவிஞர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

    இந்நிலையில் பிரணாப் முகர்ஜி கூறியதாவது:

    எனக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு நாட்டு மக்களுக்கு நன்றி. எப்போதும் சொல்வதைபோல் இப்போதும் சொல்கிறேன் மக்களிடம் இருந்து பலவற்றை பெற்றுள்ளேன் எனக்கூறியுள்ளார். #PranabMukherjee #BharatRatna
    Next Story
    ×