என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bakrid"
- பாவூர்சத்திரத்தில் உள்ள அரசு ஆட்டுச்சந்தையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆடு மற்றும் கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.
- இன்று காலையில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆட்டு வியாபாரிகள் தங்களின் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
தென்காசி:
பக்ரீத் பண்டிகை நெருங்குவதை ஒட்டி இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள அரசு ஆட்டுச்சந்தையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆடு மற்றும் கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.
இன்று காலையில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆவுடையானூர், மேலப்பாவூர், கீழப்பாவூர், சாலைப்புதூர், திரவிய நகர், மருதடியூர், திப்பனம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆட்டு வியாபாரிகள் தங்களின் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் குவிந்ததால் அதனை வாங்குவதற்காக கடையம், சம்பன்குளம், தென்காசி, பொட்டல்புதூர், கடையநல்லூர், செங்கோட்டை, சுரண்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து அதிக அளவில் மக்கள் குவிந்தனர்.
ஒவ்வொரு ஆடுகளின் மதிப்பும் ரூ.6 ஆயிரத்தில் தொடங்கி ரூ. 25,000 வரையில் விற்பனையானது. மொத்தத்தில் பாவூர்சத்திரம் அரசு ஆட்டுச் சந்தையில் இன்று மட்டும் ரூபாய் 2 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளது.
- ஆடுகளை ஏலத்தில் எடுப்பதற்காக, வியாபாரிகள், பொதுமக்கள் வருகை அதிகளவு காணப்பட்டது.
- 2 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விலை போனது.
உடுமலை :
உடுமலை நகராட்சி வாரச்சந்தையில், வாரம் தோறும் திங்கள் கிழமை காலை, ஆடு மற்றும் நாட்டுக்கோழி சந்தை கூடி வருகிறது.உடுமலை சுற்றுப்புற கிராமங்களிலிருந்து விவசாயிகள்ஆடு, மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.வழக்கம் போல் நேற்று முன்தினம் கால்நடைச்சந்தை கூடியது.
இஸ்லாமியர்களால் வரும் 10ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை நெருங்குவதால்ஆட்டுச்சந்தைக்கு அதிகாலை, 5:30 மணி முதலே ஆடுகள் வரத்தும் வியாபாரிகள், பொது மக்கள் வரத்தும் காணப்பட்டது.வழக்கமாக உடுமலை சந்தைக்கு 700 ஆடுகள் வரத்து இருக்கும்.
பக்ரீத் பண்டிகை காரணமாக, ஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்த நிலையில் ஏலத்தில் எடுப்பதற்காக, வியாபாரிகள், பொதுமக்கள் வருகையும் அதிகளவு காணப்பட்டது.அதிலும்செம்மறி ஆடுகள் எண்ணிக்கை அதிகளவு காணப்பட்டதோடு, விற்பனையும் களைகட்டியது.ஆடுகளும் கூடுதல் விலைக்கு விற்பனையானது.குறைந்தபட்சம் குட்டிகள் 2 ஆயிரம் முதல் பெரிய அளவில் கொம்புகள் அழகாக உள்ள ஆடுகள் என 30 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விலை போனது.அதே போல் கோழிச்சந்தைக்கு நாட்டுக்கோழிகள், சேவல், கட்டுச்சேவல் என 500க்கும் மேற்பட்டவை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
ரகத்திற்கு ஏற்ப 350 முதல் 5,700 ரூபாய் வரை விற்றன.வியாபாரிகள் கூறுகையில், பக்ரீத் பண்டிகை காரணமாக உடுமலை சந்தைக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் வரத்து காணப்பட்டன. வழக்கமான விலையை விட 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்றன என்றனர்.
- வருகிற 10-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வியாபாரிகள் லாரி உள்ளிட்ட வாகனங்களில் கால்நடைகளை கொண்டு வந்து இறக்கினர்.
- அதனை வாங்குவதற்கு வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகமாக வந்திருந்தனர். இன்று நாட்டுகிடா, பொட்டுகிடா என பல்வேறு இன கிடாக்களை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
நெல்லை:
தென்மாவட்டங்களில் உள்ள கால்நடை சந்தைகளில் எட்டயபுரத்துக்கு அடுத்த படியாக மேலப்பாளையம் ஆட்டுச்சந்தை மிகவும் புகழ் பெற்றது.
இந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள்.
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்த சந்தையில் ஆடு, மாடுகள் மட்டுமின்றி கோழி, மீன், கருவாடு உள்ளிட்டவற்றின் விற்பனையும் தனித்தனியே நடைபெறும். பண்டிகை காலங்களில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில் வருகிற 10-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வியாபாரிகள் லாரி உள்ளிட்ட வாகனங்களில் கால்நடைகளை கொண்டு வந்து இறக்கினர்.
அதனை வாங்குவதற்கு வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகமாக வந்திருந்தனர். இன்று நாட்டுகிடா, பொட்டுகிடா என பல்வேறு இன கிடாக்களை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
பண்டிகை நெருங்குவதால் விலையை பற்றி யோசிக்காமல் அதிக விலை கொடுத்து ஆடுகளை வாங்கி சென்றனர். நாட்டு கிடாக்கள் ஒன்று ரூ.45 ஆயிரம் வரை விற்பனையானது.
மயிலம்பாடி ஆடுகள் ரூ.25 ஆயிரம் வரையிலும், பொட்டுகிடா ரூ.40 முதல் ரூ.45 ஆயிரம் வரையிலும் விற்கப்பட்டது. இன்று ஒரே நாளில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. அவை அனைத்தும் மதியத்திற்குள் விற்று தீர்ந்தது.
- பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆட்டுச்சந்தை நடந்தது.
- அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் வழக்கத்தைவிட அதிகளவு கூட்டம் காணப்பட்டது. 10,000 முதல் 20,000 ஆடுகள் வரை விற்கப்பட்டது.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுசந்தையில் ஒவ்வொரு வாரமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வியாபாரிகள் ஆடுகள், கோழிகளை வாங்கிச் செல்வது வழக்கம். அதிகாலை 4 மணியிலிருந்து 9 மணி வரை கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும்.
இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆட்டுச்சந்தை நடந்தது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் வழக்கத்தைவிட அதிகளவு கூட்டம் காணப்பட்டது. 10,000 முதல் 20,000 ஆடுகள் வரை விற்கப்பட்டது.
வருகிற 10-ந் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்த வார வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தையில் ரூ. 5 ஆயிரம் வரை விலை அதிகரித்து 15 முதல் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல்தான் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்று நடந்த ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இறைத்தூதர் இபுறாஹீம் நபியின் புனிதமும், அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த தன்னலமற்ற தியாக வாழ்வின் மேன்மையைப் போற்றும் நன்னாளே பக்ரீத் திருநாளாகும்.
அவ்வகையில் இந்தியாவில் இந்த ஆண்டு இன்று பக்ரீத் பண்டிகை இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள மசூதிகள் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.
இந்த நாளில் ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை குர்பானி கொடுக்கும் இஸ்லாமியர்கள், அவற்றின் இறைச்சியை ஏழைகள், நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்கின்றனர்.
பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். #EidAlAdha #Bakrid #EidMubarak
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு கேரளாவிற்கும், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.
கேரளாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக குறைந்த அளவு காய்கறிகளே அனுப்பி வைக்கப்பட்டன. தினசரி 80 லாரிகளில் கேரளாவிற்கு காய்கறிகள் செல்லும். ஆனால் கடந்த ஒரு வாரமாக 25 லாரிகளில் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக காய்கறிகளின் ஆர்டர்களும் குறைந்தது. இதனால் மார்க்கெட்டிற்கு கொண்டு வந்த காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. விவசாயிகள் கிடைத்த விலைக்கு காய்கறிகளை விற்று சென்றனர்.
தற்போது கேரளாவில் மழை முற்றிலும் நின்றுவிட்டதால் நேற்று முதல் வழக்கம்போல் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் நாளை பக்ரீத் பண்டிகை வருவதாலும் அடுத்து 2 நாட்கள் முகூர்த்த நாளாக இருப்பதால் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது.
எனவே கடந்த ஒரு வாரமாக தேங்கி கிடந்த காய்கறிகளுக்கும் கூடுதல் விலை கிடைத்துள்ளது.
கிலோ ரூ.17-க்கு விற்ற வெண்டை ரூ.40-க்கும், சின்ன வெங்காயம் ரூ.45, பல்லாரி ரூ.30, தேங்காய் ரூ.45, இஞ்சி ரூ.120, பூண்டு ரூ.120, கத்தரிக்காய் ஒரு பை ரூ.450, தக்காளி ஒரு பெட்டி ரூ.150, புதினா ரூ.50, மல்லி ரூ.30, எலுமிச்சை ரூ.30, பீட்ரூட் ரூ.15, பீன்ஸ் ரூ.40, முருங்கைக்காய் ரூ.18, பச்சை மிளகாய் ரூ.50 என கொள்முதல் செய்யப்பட்டது.
பெரும்பாலான காய்கறிகளின் விலை 2 மடங்கு அதிகரித்தது. இதனால் விவசாயிகளிடமும் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு நிலமை சீரடைந்துள்ளதால் கேரளாவிற்கும் அதிக அளவு காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர் அருகே உள்ள பொய்கை வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. வாரம் பிறந்து செவ்வாய்க்கிழமை என்றாலே பொய்கை சந்தை களை கட்டும். கால்நடைகள், கோழி மட்டுமின்றி காய்கறி, விதைகள் போன்றவையும் விற்கப்படுகிறது.
ஆனாலும், பொய்கை சந்தையை மாட்டு சந்தை என்றே அழைப்பர். இங்கு வேலூர், திருவண்ணாமலை உள்பட ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் காளை, பல்வேறு இன கறவை மாடுகள் விற்பனைக்கு வருகின்றன.
வாரம் ஒருநாள் சந்தையில் மட்டும் ரூ.1 கோடி முதல் ரூ.1½ கோடி வரை வியாபாரம் நடைபெறுகிறது. மாடுகள் விற்பனை மட்டுமே ரூ.1 கோடியை எட்டும். சந்தைக்கு முந்தைய நாள் இரவிலேயே வெளியூர்களில் இருந்து மாடுகள் கொண்டு வந்து இறக்கப்பட்டுவிடும்.
மாடுகளின் பல்லை பிடித்தும், கன்று ஈன்றதை வைத்தும், நாளொன்றுக்கு எவ்வளவு லிட்டர் பால் கறக்கும் என்பதை கேட்டும் இடைத்தரகர்கள் மூலம் விலை நிர்ணயித்து மாடுகள் உடனடியாக விற்கப்படும்.
பக்ரீத் பண்டிகை நாளை நடைபெறுவதை யொட்டி இறைச்சிக்காக மாடுகள் வாங்குபவர்கள் அதிகளவில் சந்தைக்கு வந்திருந்தனர். கடந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையின் போது கேரள மாநில வியாபாரிகள் அதிகளவில் பொய்கை சந்தைக்கு வந்திருந்தனர்.
கடந்த ஆண்டு கேரளாவுக்கு மட்டும் 7 ஆயிரம் மாடுகள் வாங்கி சென்றனர். இந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்பு காரணமாக கேரளாவில் பக்ரீத் பண்டிகை களையிழந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று வாழவச்சனூரில் நடந்த வாரச்சந்தைக்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளையும், மாடுகளையும் விற்பனைக்காக கொண்டு வந்தனர். நாளை (புதன்கிழமை) பக்ரீத் பண்டிகை என்பதால் ஆடுகள் விற்பனை களைகட்டியது. ஆடுகளை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
இதனால் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது. மேலும் முஸ்லிம்கள் குர்பானி வழங்குவதற்காகவும் ஆர்வமுடன் ஆடுகளை வாங்கி சென்றனர்.
நேற்று மட்டும் ரூ.1 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Best wishes for the team.
— A.R.Murugadoss (@ARMurugadoss) August 21, 2018
India’s first Camel based movie.#bakridthemovie#bakrid@vikranth_offl@Jagadeesan_subu@immancomposer@MsMurugaraj@AntonyLRuben
@DilipSuburayan#M10productionpic.twitter.com/GSW0il4zij
பக்ரீத் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்- அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
இறைவனுக்கு அஞ்சிய தூய வாழ்வு வாழ்ந்த பெருந்தகை இப்ராஹிம் அவர்கள் இறைவன் தனக்கு விடுத்த அழைப்பினை ஏற்று, தனது ஒரே மகன் இஸ்மாயிலை பலியிட முன்வந்த உன்னத நாளை நினைவுகூறும் நாள் தான் “பக்ரீத்” எனப்படும் தியாகத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இறைவனை அஞ்சி, அவரது கட்டளைக்கு ஏற்ப வாழ்வோர் என்றென்றும் நிறை வாழ்வு பெற்றிருப்பார்கள் என்பது தான் இத்திருநாள் நமக்குக் கூறும் பாடம். போற்றுதலுக்குரிய இப்பெருநாளில், இறைவன் திருவுள்ளத்திற்கு ஏற்ப நாம் அனைவரும் வாழ உறுதி ஏற்போம்.
அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த தியாகத் திருநாளாம் “பக்ரீத்” திருநாள் நல்வாழ்த்துகள் உரித்தாகுக.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-
மனிதருக்கு மனிதர் சுய தேவைகளை குறைத்து, சிறு தியாகங்கள் செய்து, பிறருக்கு உதவி, மத, மொழி, இனப் பாகுபாடுகளை அகற்றி, சமாதானம், சகோதரத்துவம், சகவாழ்வு என்று நபிகள் நாயகம் காண்பித்த நன்னெறியினை பின்பற்ற இத்தியாகத் திருநாளில் சூளுரைப்போம். மதநல்லிணக்கம் ஒற்றுமை காப்போம். சிறுபான்மை மக்களின் நலன் காத்திட செயல்படுவோம்.
இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தியாகத் திருநாள் எனும் பக்ரீத் நல்வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும், என் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
தியாகத் திருநாளான பக்ரீத் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. பக்ரீத் திருநாளின் போது ஆடுகளை பலியிடும் இஸ்லாமியர்கள் அதை மூன்று பிரிவுகளாக பிரித்து ஒன்றை அண்டை வீட்டார்கள் மற்றும் உறவினர்களுக்கும், மற்றொன்றை ஏழைகளுக்கும் கொடுத்து மூன்றாவது பங்கை மட்டும் தாங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இது ஈகையையும், நல்லுறவையும் வலியுறுத்துகிறது.
கேரளத்தில் மழைவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவதில் கூட இஸ்லாமிய நாடுகள் தங்களின் ஈகைத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பக்ரீத் திருநாளை கொண்டாடாமல் அதற்கான செலவுக்காக வைத்திருந்த தொகையை கேரளத்திற்கு நிவாரண நிதியாக வழங்கி பக்ரீத் திருநாள் வலியுறுத்தும் தத்துவங்களுக்கு வலிமை சேர்த்துள்ளனர்.
மதசார்பற்ற தன்மையின் பாதுகாப்பில்தான் அனைத்து சமய மக்களின் நல்லிணக்கமும், அமைதி வாழ்வும் நிலைநிறுத்தப்படும். அண்மைக் காலமாக மதவாத சக்திகளால் உருவாக்கப்படும் ஆபத்துக்களை எதிர் கொண்டு முறியடிக்க இத்திருநாளில் உறுதி கொள்வோம்.
தமிழ்நாட்டில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணர்வுபூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம் பெருமக்கள், இந்நாளில் சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும்.
விடுதலைச்சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-
‘குர்பானி’ கொடுக்கும் இந்நாளில் ஏழை எளியோருக்கு அன்னமிடும் கடமையை இஸ்லாமியர் நிறைவேற்றுவதுடன் 5 வகை கடமைகளுள் ஒன்றான ‘ஹஜ்’ என்னும் புனிதப் பயணம் செல்லும் கடமையையும் இந்தப் புனித நாளில் இஸ்லாமியர்கள் நிறைவேற்றுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நன்னாளில் இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-
இஸ்லாமிய சமுதாயத்தினர் சாதி, மத, இன, மொழி ஆகிய வேறுபாடுகளை கடந்து அனைத்து தரப்பு மக்களிடமும் ஒற்றுமையோடு பழகுவது சாலச்சிறந்தது.
நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் பக்ரீத் பண்டிகையும் உந்துதலாக இருப்பது இஸ்லாமியர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறது.
இறைப்பற்றிலும், கொண்ட கொள்கையிலும் உறுதியாக இருப்பவர்கள் இஸ்லாமியர்கள் என்பது போற்றுதலுக்குரியது. எனவே பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவன் துணை நிற்க வேண்டும்.
தே.மு.தி.க. நிறுவன தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த்:-
இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த அனைவரும், நலமுடனும், எல்லா வளமுடனும், சம வாய்ப்பும், சம உரிமையும் பெற்றிட வேண்டுமென இந்த இனிய நாளில் வாழ்த்துகிறேன். மனித உறவுகள் உன்னதம் பெற்றிட அன்பை விதைப்போம். பல ஆண்டு காலமாக நான் தே.மு.தி.க. சார்பில் இஸ்லாமிய நண்பர்களுடன் இணைந்து, குர்பானி வழங்கி, தியாகத் திருநாளை கொண்டாடி வருகிறேன்.
அதே போல் இந்த ஆண்டு கோயம்பேடு தலைமை கழகத்தில் நாளை மாலை 5 மணியளவில் இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த பெரியோர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்களோடு குர்பானி வழங்கி பக்ரீத்தை கொண்டாட உள்ளேன். இதேபோல் தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் குர்பானி வழங்கி “இயன்றதை செய்வோம், இல்லாதவற்கே” என்ற கொள்கையோடு பக்ரீத்தை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா:-
சகோதரத்துவம், ஒற்றுமையுணர்வு, நிலைகுலையாமை, இரக்கம் மற்றும் தியாகத்தின் செய்தியை நமக்கு உணர்த்தும் திருநாளாக தியாகத் திருநாள் விளங்குகின்றது. இந்தத் திருநாளில் இந்த நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும், பிறர் இன்பத்தில் மகிழுறும் மனநிலை ஏற்படவும் நாம் உறுதி எடுத்துக்கொள்வோமாக.
நமது நாட்டு மக்களிடையே சகோதரத்துவமும், அன்பும், கருணையும், இரக்கமும் தழைத்தோங்குவதற்கு இறைவனிடம் பிரார்த்திப்போமாக. கேரளா மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்கள் நீங்கவும் பிரார்த் திப்போமாக. துயருற்று நிற்கும் அம்மக்களுக்கு நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதற்கு முன் வருவோமாக.
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் கூட்டுத் தொழுகை மேற்கொள்ளுவதுடன், விலங்குகளை இறைவனுக்கு பலியிட்டு பின்னர் அதில் ஒரு பகுதியை தங்களுக்கும், மற்றொரு பகுதியை உறவினர், நண்பர்கள், அண்டை அயலார் மற்றும் ஏழை எளியோர்க்கு அளிப்பது வழக்கமாகும். இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு அளிப்பதே ஈகை. இந்த பக்ரீத் ஈகை திருநாள் என்றே இஸ்லாமியர்களால் அழைக்கப்படுகின்றது. ஈகை செய்வதன் மூலம் எல்லாம் வல்ல இறைவனின் பேரன்பை பெறலாம் என்பது இஸ்லாமியர்களின் இறை நம்பிக்கையாகும்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார்:-
"தியாகத்திருநாள்" எனப்போற்றப்படும் இந்தபுனித பக்ரீத் பண்டிகை தினத்தில் உலகெங்கும் வாழும் மனிதர்களுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் நிரந்தரமாக கிடைக்க வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்வோம்.
நபிகள் நாயகத்தின் போதனையை மனதில் கொண்டு உலகெங்கும் சமத்துவம் நிலைத்திட, சகோதரத்துவம் தழைத்திட ஒற்றுமையுணர்வுடன் வாழ்வோம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், டாக்டர் அன்புமணி ராமதாஸ், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், அகில இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் ஏ.அபுபக்கர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்டோர் பக்ரீத் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். #Bakrid
தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய மக்கள் அனைவரது வாழ்விலும் எல்லா வளமும், நலமும் பெருகிட ஈகைத்திருநாள் எனப்படும் பக்ரீத் பெருநாளையொட்டி எனது இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
தி.மு.க. ஆட்சியிலிருந்த நேரத்தில் இஸ்லாமிய பெரு மக்களுக்கு பல சாதனைத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது; எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போதெல்லாம் அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்திருக்கிறது. அந்தப் பணியை தி.மு.க. என்றைக்கும் தொடரும் என்று தெரிவித்துக் கொள்ளும் இந்த நேரத்தில், ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை பக்ரீத் பெருநாளில் ஏழை எளியோரின் இன்னல் தீர மனமுவந்து வழங்கி மகிழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு மீண்டும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #MKStalin #Bakrid
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்