search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டுச்சந்தை"

    • தீபாவளியை முன்னிட்டு வீரசோழன் ஆட்டுச்சந்தை களைகட்டியது.
    • ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையிலான சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகிறது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள வீரசோழன் வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. பல ஆண்டுகளாக பாரம்பரிய மிக்க இந்த சந்தையானது வாரந்தோறும் திங்கட் கிழமை நடைபெறு வது வழக்கம். மேலும் வீர சோழன் சந்தையானது தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் மற்றும் ரம்ஜான் பண்டிகைகளில் ஆடு வியாபாரம் களை கட்டும்.

    வாரம்தோறும் நடை பெறும் இந்த சந்தைக்கு விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து ஆடுகள், கோழிகளை விற்பனை செய்யவும், வாங்கவும் வந்து செல்கின்றனர்.

    வருகிற 12-ந்தேதி தீபா வளி பண்டிகை கொண்டா டப்பட உள்ளது. இதை யொட்டி வீரசோழன் வாரச் சந்தை நடைபெற்றது. அதிகாலை 2 மணி முதலே வீரசோழன் வாரச்சந்தை திடலில் திரளாக கூடிய ஆட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக ளவில் ஆடுகள் மற்றும் கோழிகளை வாங்கி சென்றனர்.

    வீரசோழன் வாரச்சந்தை யில் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையிலான சுமார் 1200-க்கும் மேற் பட்ட ஆடுகள் விற்பனை யான தாகவும் அதன் மூலம் சுமார் ரூ.95 லட்சம் ரூபாய் அளவிற்கு வியாபாரம் நடைபெற்றதாகவும் வீரசோழன் டிரஸ்ட் போர்டு நிர்வாகம் தெரிவிந்துள்ளது.

    மேலும் வருகிற 12-ந்தேதி கொண்டா டப்படும் தீபாவளி பண்டி கையானது ஞாயிற்றுக்கி ழமை கொண்டாடப்படு வதால் வழக்கமாக திங்கட் கிழமை நடைபெறுகின்ற வீரசோழன் வாரச்சந்தையை பொதுமக்களின் நலன் கருதி 11-ந் தேதி அதாவது முன் கூட்டியே சனிக்கிழமை நடைபெறும் எனவீரசோழன் டிரஸ்ட் போடு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும் அன்றைய தினம் (சனி) எட்டையாபுரம், இளையான்குடி பகுதிகளில் வாரச்சந்தை செயல் படுவதால் தீபாவளிக்கு முதல் நாள் அதாவது சனிக்கிழமை நடைபெறவுள்ள வீர சோழன் வாரச்சந்தையில் ஆடு விற்பனை சற்று குறை வதற்கும் அதிக வாய்ப்புள்ள தாக டிரஸ்ட் போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ரம்ஜான் விற்பனையை எதிர்பார்த்திருந்த நிலையில் கரூர் மணல்மேடு ஆட்டுச்சந்தை களை இழந்துள்ளது
    • குறைவான விற்பனையால் விவசாயிகள் கவலை

    கரூர்:

    கரூர் மாவட்டம், மணல்மேடு பகுதியில் கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகில் வாரம் தோறும் ஆட்டு சந்தை நடைபெற்று வருவது வழக்கம். தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றுவரும் இந்த ஆட்டு சந்தையில் நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, பழனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு கடந்த வாரம் ரூ.75 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையான நிலையில், இந்த வாரம் ஆட்டு சந்தையில் ரூ.50 லட்சத்திற்கு மட்டுமே விற்பனை ஆனதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.கடந்த வாரம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. ஆனால் இந்த வாரம் சுமார் 10,000 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளன.

    ஆடுகளை வாங்க வியாபாரிகள் வராததாலும், ஆடு உரிமையாளர்கள், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.ரம்ஜான் பண்டிகை காலம் என்பதால் ஆட்டுச் சந்தையில் இறைச்சிக்காக ஆடுகள் அதிக அளவில் விற்பனை ஆகும். ஆனால் இந்த ஆண்டு இறைச்சி ஆடுகள் கூட விற்பனை மந்தமானதால் ஆடுகள் வளர்ப்பு தொழில் செய்து பிளைக்கும் விவசாயிகள் பெரும் ஏமாற்றத்துடன் கவலையுடன் திரும்பி சென்றனர்.பண்டிகைைய முன்னிட்டு இந்த வாரம் ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆடுகள், வியாபாரிகள் வரத்து குறைவானதால் ரூ.50 லட்சத்திற்கும் குறைவான அளவிலான வியாபாரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


    • பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆட்டுச்சந்தை நடந்தது.
    • அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் வழக்கத்தைவிட அதிகளவு கூட்டம் காணப்பட்டது. 10,000 முதல் 20,000 ஆடுகள் வரை விற்கப்பட்டது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுசந்தையில் ஒவ்வொரு வாரமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வியாபாரிகள் ஆடுகள், கோழிகளை வாங்கிச் செல்வது வழக்கம். அதிகாலை 4 மணியிலிருந்து 9 மணி வரை கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும்.

    இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆட்டுச்சந்தை நடந்தது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் வழக்கத்தைவிட அதிகளவு கூட்டம் காணப்பட்டது. 10,000 முதல் 20,000 ஆடுகள் வரை விற்கப்பட்டது.

    வருகிற 10-ந் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்த வார வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தையில் ரூ. 5 ஆயிரம் வரை விலை அதிகரித்து 15 முதல் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல்தான் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்று நடந்த ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • வடமதுரை, அய்யலூர் பகுதியில் உள்ள கோவில்களில் திருவிழா நடைபெற்று வருகிறது.
    • இதனால் ஆடு, கோழிகள் வாங்க அய்யலூர் சந்தையில் வியாபாரிகள் குவிந்தனர்

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவ ட்டம் அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை கூடி வருகிறது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் கால்நடைகள், காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.

    சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வந்து கால்நடைகளை வாங்கிச் செல்கின்றனர்.

    கோவில் திருவிழாவுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால் கிராமங்களில் அதிக அளவில் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    பொதுமக்கள்தங்கள் வேண்டுதல் நிறைவேறி யவுடன் கிடா வெட்டு தல் உள்ளிட்ட நேர்த்திக்க டன்களை செலுத்தி வரு கின்றனர்.

    இதனால் அய்யலூர் சந்தையில் அதிக அளவு வியாபாரிகள் வந்தனர். மேலும் ஆடு மற்றும் கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கோவில் திருவிழாக்களில் பெரும்பாலும் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவதால் சந்தையில் கிடா அதிக அளவில் விற்பனையானது. எடை மற்றும் தரத்துக்கு ஏற்ப ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. நாட்டுக்கோழி 1 கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விலை கேட்கப்பட்டது. மேலும் செம்மறி ஆடுகள் மற்றும் சேவல்களும் அதிக அளவு விற்கப்பட்டன.

    வாரம் தோறும் கூடும் அய்யலூர் சந்தையில் குடிநீர் மற்றும் மின் விளக்கு வசதி இல்லாததால் வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் ஆடு வாங்க வரும் வியாபாரிகள் பணத்தை ஒரு வித அச்சத்துடனேயே கொண்டு வருகின்றனர். இருளை பயன்படுத்தி மர்ம நபர்கள் கை வரிசை காட்டி வருகின்றனர்.

    எனவே இதற்கு தீர்வு காண வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




    ×