search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Imman"

    • இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம்.
    • அந்த துரோகத்தை நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன்.

    முன்னணி இசையமைப்பாளரான டி.இமான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், "இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம். அவர் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. அதனால் இனி வரும் காலங்களில் அவருடன் சேர்ந்து பயணிக்க இயலாது.

    ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் நானும் இசையமைப்பாளராக இருந்து, அவரும் நடிகராக இருந்தால் நடக்க வாய்ப்புள்ளது. இது நான் மிகவும் கவனத்துடன் எடுத்த முடிவு. அந்த துரோகத்தை நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். இது குறித்து அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். ஆனால் அவரது பதிலை என்னால் சொல்லமுடியாது" என்று கூறினார். இதன் பிறகு இமான் விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது.


    இந்நிலையில், இந்த நேர்காணல் குறித்து இமானின் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட் கூறியுள்ளதாவது, சிவகார்த்திகேயனுக்கும் இமானுக்கும் நல்ல நட்பு உண்டு. எங்களுக்கு விவாகரத்து நடக்கக்கூடாதுன்னு பல முயற்சிகளை எடுத்தார். இமானோட விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் பண்ணவில்லை. அது இமானுக்கு பிடிக்கவில்லை.

    ஒரு வருடத்திற்கு முன்னாடி பொண்ணையெல்லாம் பார்த்து வைத்துவிட்டுதான், இமான் எனக்கு விவாகரத்தே கொடுத்தார். நான் முடியாதுன்னு சொன்னதுக்கு, அரசியல்வாதிகளை வைத்து 'உங்கப்பாவைக் கொன்னுடுவோம்'னு மிரட்டல் எல்லாம் கொடுத்து 46 நாட்களிலேயே விவாகரத்தும் வாங்கினார். இப்போ, இமானுக்கு பட வாய்ப்புகள் சரியாக இல்லை. அதனால்தான், இப்படியெல்லாம் பேசி பட வாய்ப்புகளை பிடிக்க நினைக்கிறார்" என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பக்ரீத்’ படக்குழுவினரின் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
    விக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. ஜெகதீசன் சுபு இயக்கி வரும் இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இப்படத்தினை தயாரித்து வருகிறார்.

    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ஆலங்குருவிகளா என்ற பாடல் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இப்படத்தின் இசையை மே 17ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.



    ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
    இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு என்று இசையமைப்பாளர் இமான் கூறியுள்ளார். #Imman
    கனடா இசைக்கலைஞர்கள் சப்தஸ்வரங்கள் 2 என்ற இசை ஆல்பத்தை வெளியீட்டார்கள். இந்த விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் டி.இமான், தினா, பாடலாசிரியர் அருண்பாரதி உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

    விழாவில் இசை அமைப்பாளர் இமான் பேசும்போது, ‘இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் யுனிவர்செல் வோக்கல் டீமிக்கு எனது வாழ்த்துகள். கனடாவில் நான் இரண்டு இசை ஆல்பம் பண்ணியிருக்கிறேன். கனடா எனக்கு நிறைய கெளரவம் கொடுத்திருக்கிறது. தமிழ் இருக்கை அமைப்பிற்கான அம்பாசிடராக இருக்கும் பெருமையையும் பெற்றிருக்கிறேன். அங்குள்ள திறைமையாளர்கள் இங்குள்ளவர்களோடு இணைந்து இப்படி ஒரு ஆல்பத்தை கொடுத்திருக்கிறார்கள். 



    இதுபோல் இன்னும்  நிறைய ஆல்பங்கள் அவர்கள் பண்ண வேண்டும். இந்தவிழா சாதாரண இசை ஆல்ப வெளியீட்டு விழா போல் அல்ல. ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா போன்று இருந்தது. இந்தக் குழந்தைகள் இன்னும் பெரிதாக சாதிக்க வேண்டும். அவர்கள் மொழியை உச்சரிக்கும் விதமும் அவ்வளவு அழகாக இருந்தது. இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு" என்று வாழ்த்த்தினார்.

    விழாவில் கன்னட ஒருங்கிணைப்பாளர் டொனால்ட் ஜே அனைவரையும் வரவேற்று பேசினார். யுனிவர்செல் வோக்கல் நிறுவனர் ரூபன்ராம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
    விஸ்வாசம் படம் பற்றி இயக்குனர் சிவா கூறும்போது கஷ்டத்தை இஷ்டப்பட்டு செய்பவர் அஜித் என்று மாலைமலருக்கு பேட்டியளித்துள்ளார். #Viswasam #Ajith
    சிவா - அஜித் கூட்டணியில் தற்போது உருவாகி இருக்கும் படம் விஸ்வாசம். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ‘வீரம், வேதாளம், விவேகம்’ போன்ற படங்கள் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றதால், இப்படம் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி உள்ளது. 

    இப்படம் குறித்து மாலைமலருக்கு இயக்குனர் சிவா அளித்த பேட்டியளித்தார். இதில் விவேகம் படத்தில் சண்டைக்காட்சிகளில் அஜித்திடம் நிறைய வேலை வாங்கி இருக்கீங்க? அதுபோல் இந்த விஸ்வாசம் படத்தில் அதிக வேலை வாங்கி இருக்கீங்களா? என்ற கேள்விக்கு, ‘கஷ்டத்தை இஷ்டப்பட்டு செய்பவர் அஜித். அவரை பொறுத்தவரை ஸ்டண்ட் காட்சிகள் ரியலாக இருக்க விரும்புவார். 



    என் படங்களில் சண்டைக்காட்சிகளில் அதிக மெனக்கெடுவேன். திலிப் சுப்பராயன் இப்படத்திற்கு சண்டைக் காட்சிகளை பிரமாதமாக அமைத்திருக்கிறார். அவருக்கு 100 மதிப்பெண்கள் கொடுக்கலாம். அந்தளவிற்கு திறமையாக வேலை செய்திருக்கிறார். அஜித்தின் கம்பீரத்தை சண்டைக் காட்சிகளில்தான் காண்பிக்க முடியும். அதை நாங்கள் சரியாக செய்து வருகிறோம் என்று நம்புகிறோம்’ என்றார்.  #Viswasam #Ajith
    அஜித் - சிவா கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் ‘அடிச்சு தூக்கு...’ என்ற சிங்கள் டிராக் ரிலீசாகி புதிய சாதனை படைத்துள்ளது. #Viswasam #ViswasamPongal2019 #Adchithooku
    அஜித் - சிவா கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

    நேற்று, இப்படத்தின் பர்ஸ்ட் சிங்களான ‘அடிச்சு தூக்கு...’ என்ற பாடலை வெளியிட்டார்கள். இமான் இசையில் வெளியாகி இருக்கும் இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது. தற்போது இந்த பாடல் 5 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து, 5 லட்சம் லைக்குகளை பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் முதலாவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 



    2019 பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். #Viswasam #ViswasamPongal2019 #ViswasamThiruvizha
    அஜித் - சிவா கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் ‘அடிச்சி தூக்கு...’ என்ற சிங்கள் டிராக் ரிலீசாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. #Viswasam #ViswasamPongal2019 #ViswasamThiruvizha
    அஜித் - சிவா கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

    தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் சிங்களான ‘அடிச்சி தூக்கு...’ என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். இமான் இசையில் வெளியாகி இருக்கும் இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    2019 பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். #Viswasam #ViswasamPongal2019 #ViswasamThiruvizha


    அஜித் இரண்டு வேடங்களில் நடித்து வரும் விசுவாசம் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. #Viswasam #Ajith #viswasammotionposter
    சிவா இயக்கத்தில் அஜித் 4-வது முறையாக நடித்து வரும் படம் ‘விசுவாசம்’. ஐதராபாத்தில் தொடங்கிய இதன் முதல் கட்டப்படப்பிடிப்பு தற்போது முடிந்து அடுத்த கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

    இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விவேக், யோகிபாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

    இப்படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இவருடன் சேர்ந்து இந்த படத்தில் தம்பி ராமையாவும் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இந்தப் படம் பொங்கல் திருநாளில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடிக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.

    அந்த மோஷன் போஸ்டரில், விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. #Viswasam #Ajith #viswasammotionposter
    பிரபல இசையமைப்பாளர் இமான், தவறு செய்தவர்கள் தான் மீடூ விசயத்தில் பயப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். #Imman #MeToo
    சினிமாவில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை மீடூ இயக்கம் மூலம் பகிரங்கப்படுத்தி வருகிறார்கள்.

    இதுபற்றி இசையமைப்பாளர் டி.இமானிடம் கேட்டதற்கு “எந்தத் துறையில்தான் இல்லாமல் இருக்கிறது. திரைத்துறை ஒன்றும் விதிவிலக்கு கிடையாது. ஒரு சில துறைகளில் நடக்கும் போது அது சம்மந்தப்பட்டவர்களோடு முடிந்துவிடுகிறது.

    திரைத்துறை என்று வரும் போது அது எல்லோருக்கும் தெரிகிறது. ஒரு பூதக்கண்ணாடி போட்டு, ஊடகம் மூலம் எல்லோரிடமும் சொல்கிறோம். அதனால் பூதாகரமாக பார்க்கப்படுகிறது.

    ஒரு மனிதனாக நாம் சரியாக இருக்கும் போது எந்த ஒரு பிரச்சினையும் இருக்காது. அது சரியாக இல்லாத போது வருகிற குழப்பங்கள்தான் இதெல்லாம். என்னதான் மற்றவர்கள் மீது விரல் நீட்டி காட்டினாலும், மீதமிருக்கிற மூன்று விரல் நம்மை நோக்கிப் பாய்கிறது.

    எனவே நாம் உண்மையாக இருந்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று தோன்றுகிறது. தவறு செய்தவர்கள்தான் எல்லா வி‌ஷயத்திற்கும் அஞ்ச வேண்டும். தவறு செய்யாமல் உண்மையாக இருப்பவர்களுக்கு மீ டூ என எந்த வி‌ஷயம் வந்தாலும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தர்மம் எப்போதும் வெல்லும். யார் பக்கம் நியாயம் இருந்தாலும் அதற்குண்டான சரியான விடை கிடைக்கும் என நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘சீமராஜா’ திரைப்படம் ரசிகர்களுக்கு பண்டிகை விருந்தாக இருக்கும் என்று இசையமைப்பாளர் இமான் கூறியுள்ளார். #Seemaraja
    இமான் இசையில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சீமராஜா’. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. குத்துபாடல், நாட்டுப்புற பாடல் மற்றும் மெல்லிசை பாடல் என சீமராஜா ஒரு ஹிட் ஆல்பமாக மாறியிருக்கிறது. "சீமராஜா திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு பண்டிகை விருந்தாக இருக்கும் என நம்பிக்கையோடு கூறுகிறார் இசையமைப்பாளர் டி.இமான். 

    "திரை இசையை பொறுத்தவரை இசையமைப்பாளர்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். முதல் வகையில், சில திரைப்படங்கள் மொத்த படப்பிடிப்பும் முடிந்த பிறகு, பின்னணி இசை கோர்ப்பில் இசையமைப்பாளர்களின் மாயாஜாலத்தால் படத்தை மேலும் மெறுகேற்ற அவர்களை சார்ந்திருப்பார்கள். இன்னொரு பிரிவில், படக்குழுவில் உள்ள மற்றவர்களின் உழைப்போடு போட்டி போட்டு தங்களை நிரூபிக்க இசையமைப்பாளர்கள் சிறப்பான இசையை வழங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். சீமராஜா இதில் இரண்டாவது வகையை சார்ந்தது. இந்த படத்தில் நடிகர்கள் முதல் அரங்க அமைப்பு, ஒளிப்பதிவு என அனைத்தும் என்னை வியக்க வைத்தது. நான் பின்னணி இசையமைப்பில் என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்காமல் போனால் நான் படத்தில் தெரியாமல் போகும் வாய்ப்பு உள்ளது. மேலும், சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் சீமராஜா ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். அது தான் இசையில் மிகப்பெரிய விஷயங்களை செய்ய என்னை தூண்டியது" என்றார் டி.இமான்.



    பாடல்கள் படமாக்கப்பட்டதை பற்றி அவர் கூறும்போது, "சகோதரர் சிவகார்த்திகேயன் உடன் பல படங்களில் பணியாற்றியதால் அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் உறுதியாக இருந்தேன். எனினும், நான் இறுதியாக பாடல்களை பார்த்தபோது, ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்தின் அழகான ஒளிப்பதிவு மற்றும் நடன இயக்குனர் ஷோபியின் சிறப்பான நடன அசைவுகள் என பாடலை மேலும் மெறுகேற்றியதாக உணர்ந்தேன்" என்றார்.

    விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 13) அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் முன்பதிவு துவங்கி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து வருகின்றன. 24AM ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சூரி, சிம்ரன், லால் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
    விநாயகர் சதுர்த்தி அன்று நடிகர் சிவகார்த்திகேயன், தன்னுடைய ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்க இருக்கிறார். #Sivakarthikeyan #Seemaraja
    பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

    சமீபத்தில் படத்தை முடித்து சென்சாரில் யு சான்றிதழ் பெற்ற சீமராஜா, செப்டம்பர் மாதம் 13ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயன் சீமராஜா மற்றும் கடம்பவேல் ராஜா என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார். இது ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைய இருக்கிறது.

    கிராமப் பின்னணியில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் மிரட்டும் வில்லியாக சிம்ரனும், முக்கிய கதாபாத்திரங்களில் நெப்போலியன், சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.



    24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். #Seemaraja #Sivakarthikeyan #Samantha
    சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தை அடுத்து விக்ராந்த் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ‘பக்ரீத்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். #Vikranth #Bakrid
    விக்ராந்த் நடிப்பில் தற்போது ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தில் நடித்து வருகிறார். இவருடன் மிஷ்கின், சுசீந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார். இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இப்படத்தை அடுத்து சிகை படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு படத்தில் நடிக்கிறார் விக்ராந்த். 

    இந்த புதிய படத்திற்கு ‘பக்ரீத்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பக்ரீத் திருநாள் முன்னிட்டு இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டிருக்கிறார்.



    ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகும் இதில் விக்ராந்த்திற்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். எம்.எஸ்.முருகராஜ் இப்படத்தை தயாரிக்கிறார். இமான் இசையமைக்கிறார்.
    விஜய் ஆண்டனி, ஜிவி.பிரகாஷ் வரிசையில் இசையமைப்பாளர் டி.இமானும் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த எண்ணம் இல்லை என்று அவர் கூறியிருக்கிறார். #Imman
    விஜய் ஆண்டனி, ஜிவி.பிரகாஷ் வரிசையில் இசை அமைப்பாளர் டி.இமானும் ஹீரோவாக இருப்பதாக சில நாட்களுக்கு முன் செய்தி வந்தது. இதுபற்றி டிக் டிக் டிக் படநிகழ்ச்சிக்கு வந்த இமானிடம் கேட்டோம். 

    செய்தியை பார்த்து தான் நானும் அதை தெரிந்து கொண்டேன். அதிகமாக இருந்த உடல் எடையை ஆரோக்கியத்துக்காக தான் குறைத்தேனே தவிர நடிப்பதற்காக அல்ல. நடிக்கும் எண்ணம் சுத்தமாக இல்லை. இசை அமைப்பதில் பிசியாக இருக்கிறேன். வேறு எந்த கவன சிதறலும் இல்லை’ என்றார். 



    இமான் இசையில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் விரைவில் வெளியாகிறது. விசுவாசம் படம் மூலம் முதன்முறையாக அஜித் படத்துக்கு இசை அமைத்து வருகிறார். 
    ×