search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seemaraja"

    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க எனக்கு பல வருடங்கள் ஆச்சு என்று கூறியிருக்கிறார். #Samantha
    யு டர்ன் மூலம் தனி கதாநாயகியாகவும் வெற்றி பெற்றுவிட்ட சமந்தா அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பட தேர்வு பற்றி கேட்டதற்கு ’நான் சினிமாவுக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

    கமர்ஷியல் படங்கள், கலைப் படங்கள்னு எல்லாவிதமான படங்களிலும் நடித்துவிட்டேன். இனி பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்று நினைக்கிறேன்.

    நான் சினிமாவுக்கு வந்தவுடனேயே `யுடர்ன்’ மாதிரியான கதைகள்ல நடித்திருந்தால் யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். இப்போது சமந்தா என்றால் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தனி ஆளா ஒரு படத்தைத் தாங்கிப் பிடிக்க முடியும்னு நம்பிக்கை வந்திருக்கு.



    இந்த நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்குறதுக்கே எனக்குப் பல வருடங்கள் ஆச்சு. எனக்கு இப்போதான் நடிப்பதற்கு அதிக முக்கியத்துவம் உள்ள வேடங்கள் வருகின்றன. நடிக்க வந்ததுல இருந்து, கதைகளை நான்தான் முடிவு பண்றேன். இனியும் நான்தான் முடிவு பண்ணுவேன்’ என்று கூறியுள்ளார்.
    மதுரையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகை சமந்தா, சினிமா துறையில் உள்ள கருப்பு ஆடுகளால்தான் அந்த பிரச்சனை ஏற்படுகிறது என்று கூறியிருக்கிறார். #Samantha
    சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியான யு டர்ன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கச்சிதமான திரைக்கதையும், பட உருவாக்கமும் படத்தை வெற்றிபெறச் செய்தன. பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சமந்தா இரு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருவதும் வெற்றிக்கான முக்கிய காரணமாக உள்ளது. 

    சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த சீமராஜா திரைப்படமும் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவருகின்றன. திருமணத்திற்குப் பின் நடிப்பைக் கைவிட்ட நடிகைகள் மத்தியில் சமந்தா தன் வேகத்தை குறைத்துக் கொள்ளாமல் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில், மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சமந்தா, ‘நான் திரைத்துறையில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறேன். ஒரு நடிகரைத்தான் திருமணம் செய்திருக்கிறேன். சினிமாதான் எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறது. அதை நான் கடவுளாக மதிக்கிறேன். 



    எனக்கு பாலியல் தொந்தரவு இருந்ததில்லை. நல்ல நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர்கள் படங்களில் இரண்டு மூன்று முறை தொடர்ந்து நடித்திருக்கிறேன். எல்லாத்துறைகளிலும் ஒரு கருப்பு ஆடு இருக்கிறார்கள். அவர்களால் அந்த துறையே கெட்டுப் போகிறது. அதுபோல் சினிமாத்துறையிலும் இருக்கிறார்கள். அவர்களால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது’ என்றார்.
    சீமராஜா, யு டர்ன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக பிரபல பெண் இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். #Samantha
    சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியான யு டர்ன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கச்சிதமான திரைக்கதையும், பட உருவாக்கமும் படத்தை வெற்றிபெறச் செய்தன. பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சமந்தா இரு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருவதும் வெற்றிக்கான முக்கிய காரணமாக உள்ளது. 

    சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த சீமராஜா திரைப்படமும் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவருகின்றன. திருமணத்திற்குப் பின் நடிப்பைக் கைவிட்ட நடிகைகள் மத்தியில் சமந்தா தன் வேகத்தை குறைத்துக் கொள்ளாமல் பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து ஒரு படம் மட்டுமே வெளிவந்துள்ளது.

    சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்துப் படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன. தற்போது இவர் நடிக்க உள்ள அடுத்த படத்தை பி.வி.நந்தினி இயக்க உள்ளார். 2013ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘ஜபார்தஸ்த்’ படத்தை இவர் இயக்கி உள்ளார்.

    நந்தினி தனது திரைக்கதையை சமந்தாவிடம் கூற, அவரை திரைக்கதையின் சுவாரஸ்யம் மிகவும் ஈர்த்துள்ளது. உடனே படத்தில் நடிக்கச் சம்மதித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இது தவிர சமந்தா நடிப்பில் தமிழில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் தயாராகிவருகிறது. தெலுங்கில் அவரது கணவர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.
    திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து வரும் சமந்தாவிற்கு நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Samantha
    தெலுங்கு நடிகரும் நாகார்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யாவை கடந்த ஆண்டு திருமணம் செய்த சமந்தா தொடர்ந்து, தான் ஒப்புக்கொண்ட படங்களில் நடித்தார். அப்படி ஒப்புக்கொண்ட படங்கள் எல்லாம் வரிசையாக வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெறவே தொடர்ந்து புதிய படங்களிலும் நடித்துவருகிறார்.

    சமந்தா நடிப்பில் சீமராஜா, யூ டர்ன் ஆகிய படங்கள் கடந்த வாரம் வெளியானது. சீமராஜாவை விட சமந்தா லீட் ரோலில் நடித்த யூடர்ன் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து வரும் சமந்தா, சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளார். தற்காலிக ஓய்வுக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பார் என கணவர் நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.



    இந்த அறிவிப்பை சமந்தா வெளியிடாமல் நாகசைதன்யா வெளியிட்டுள்ளதால் ஒருவேளை சமந்தா நடிப்பதற்கு அவரது கணவர் வீட்டில் தடை போடுகிறார்களா? என்ற கேள்வி சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தன்னுடைய கணவர் நாக சைதன்யாவிற்கு சிறப்பு பரிசு ஒன்றை அளிக்க இருக்கிறார். #Samantha
    சமந்தாவுக்கு கறுப்பு நிற கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இதுபற்றி கூறும்போது ‘ஆமாம். அது மட்டுமல்ல. அதுல கண்டிப்பா சின்னதா தலையணை இருக்கணும். எனக்கு கார் ஓட்டத் தெரியாது. ஆனால் நாக சைதன்யா கார் ஓட்டுறதை ரசிக்கப் பிடிக்கும். 

    நேரம் கிடைத்தால் அவருடன் பயணம் செய்ய கிளம்பிவிடுவேன். கல்யாணத்துக்கு முன்னாடி நாகசைதன்யாவுக்கு பைக் பரிசாக அளித்தேன். இப்போது அவருக்கு எனக்கு பிடித்த கறுப்பு நிறத்தில் ஒரு கார் பரிசளிக்கப்போறேன்’ என்று கூறி உள்ளார். 



    ஒரு பேட்டியில் சமந்தாவிடம் விஜய், அஜித்திடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன? என்று கேட்டதற்கு விஜய்யிடம் இளமையின் ரகசியத்தையும் அஜித்திடம் எல்லோருக்கும் உங்களை பிடிப்பதற்கான காரணம் என்ன என்றும் கேட்க விரும்புவதாக கூறி உள்ளார்.
    திருமணத்திற்குப் பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டியில் கீர்த்தி சுரேஷை புகழ்ந்து பேசியிருக்கிறார். #Samantha #KeerthySuresh
    சமந்தா திருமணத்துக்கு பின் நடிக்கும் படங்கள் எல்லாம் வரிசையாக வெற்றி பெறுகின்றன. தனி கதாநாயகியாக நடித்து இந்த வாரம் வெளியாகி இருக்கும் யு டர்ன் படமும் பெரிய வெற்றி பெற்றதோடு அவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்துள்ளது. இது சமந்தாவுக்கு உற்சாகம் அளித்து இருக்கிறது. 

    இதுபற்றி கூறும்போது ‘‘படம் பார்க்கிற எல்லோருமே நல்ல கதையை சமந்தா தேர்வு செய்திருக்காங்க என்று பாராட்டுகிறார்கள். முதன்முறையாக நாயகி சம்பந்தப்பட்ட கதை என்பதால் உள்ளுக்குள் பதற்றம் இருந்தது. என் மீது எத்தனை பேர் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை, நானே பார்த்து தெரிந்துகொண்டேன்’ என்றார். 



    நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷ் வேடத்தில் நடித்து இருக்கலாம் என்று தோன்றியதா? என கேட்டதற்கு ‘கீர்த்தி சுரேசுக்கு ‘நடிகையர் திலகம்’ படம் மூலமாக ஒரு நல்ல வாய்ப்பு வந்தது. அதை நன்கு பயன்படுத்திக்கொண்ட அவர், தன் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி, அனைவரையும் தன்னைப் பற்றி பேச வைத்தார். அசர வைத்தார். உரிய வாய்ப்புகள் வந்தால், எல்லோரும் தங்கள் திறமையை நிரூபிப்பார்கள். நானும் அதுபோன்ற வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’ என்றார்.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் நேற்று ரிலீசாகிய நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. #Seemaraja #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் நேற்று ரிலீசானது. படத்தில் சிவகார்த்திகேயன் அரச குடும்பத்தை சேர்ந்தவராக நடித்திருக்கிறார்.

    சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறைாயக சமந்தா நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். சிம்ரன், லால் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கின்றனர்.

    பொன்ராம் இயக்கத்தில் டி.இமான் இசையில் படத்திற்கு முதல் நாள் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏ.எம். ஸ்டூடியோஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் சாதனைகளையும் சீமராஜா முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தகவல்படி, முதல் நாள் வசூலே 13.5 கோடி ஆனதாக கூறப்படுகிறது.



    முதல் நாள் வசூலே 13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது. 550 காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும். அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என்று படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தெரிவித்துள்ளார். #Seemaraja #Sivakarthikeyan #Samantha

    சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், ரசிகர்களுடன் இணைந்து நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை பார்த்தார். #Seemaraja #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் இன்று ரிலீசாகி இருக்கிறது. படத்திற்கு இதுவரை ஓரளவு பாசிட்டிவான விமர்சனங்களே வந்த வண்ணமாக உள்ளன. படத்தில் சிவகார்த்திகேயன் அரச குடும்பத்தை சேர்ந்தவராக நடித்திருக்கிறார்.

    சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறைாயக சமந்தா நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். சிம்ரன், லால் வில்லத் தனத்தில் மிரட்டியிருக்கின்றனர்.

    பொன்ராம் இயக்க சிவகார்த்திகேயன், சூரி, டி.இமான், பாலசுப்ரமணியம், விவேக் ஹர்ஷன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அந்த வகையில் டி.இமான் இசையில் பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒளிப்பதிவும் பிரம்மாண்டமாக உணர வைக்கிறது.

    படம் இன்று ரிலீசாகிய நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் குரோம்பேட்டையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் ரசிகர்களுடன் படத்தை பார்த்து ரசித்தார். படம் பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன் பேசியதாவது, படம் முழுவதையும் ரசிகர்களுடம் இணைந்து பார்த்தேன். நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் வரலாறு அதாவது 14-ஆம் நூற்றாண்டு சம்பந்தப்பட்ட கதை ஒன்று உள்ளது. அந்த காட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அனைவருக்கும் நன்றி. குடும்பத்துடன் பார்க்கும் படமாக சீமராஜா இருக்கும். #Seemaraja #Sivakarthikeyan #Samantha

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சீமராஜா' படத்தின் விமர்சனம். #SeemarajaReview #Sivakarthikeyan #Samantha
    சிங்கப்பட்டி சமஸ்தானத்தை சேர்ந்த அரச குடும்பத்தின் வாரிசு தான் சிவகார்த்திகேயன். அவரது அப்பா நெப்போலியன். ஊரையே கட்டி ஆண்டு வந்த ராஜா குடும்பத்தினரின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய முயற்சிக்கிறது. இந்த நிலையில், தங்களுக்கு சொந்தமான நிலங்களை தனது ஊர் மக்களுக்கு பிரித்து கொடுக்கிறார் நெப்போலியன்.

    கடைசியில் ஒரு வீடு மற்றும் சில வயல்வெளிகள் மட்டுமே இவர்களுக்கு சொந்தமாக இருக்கிறது. இருப்பினும் அந்த ஊர் மக்கள் நெப்போலியனை பெரிய ராஜா என்றும், சிவகார்த்திகேயனை சின்ன ராஜா என்றும் அழைக்கின்றனர்.



    ஒரு ராஜாவுக்கு அளிக்கப்படும் மரியாதையையும் அளித்து வருகின்றனர். சிவகார்த்திகேயனும் ஒரு ராஜாவுக்கு உண்டான கெத்துடனும், மிடுக்குடனும் எப்போதும் குதிரை வண்டியிலேயே பயணம் செய்கிறார். ஒரு ராஜாவாக ஜாலியான வாழ்க்கையை வாழ்கிறார். அவரது கணக்கு பிள்ளையாக சூரியும் எப்போதும் அவருடனேயே இருக்கிறார்.

    சிங்கப்பட்டி ஊருக்கும், பக்கத்து ஊரான புளியம்பட்டிக்கும் இடையே சந்தை போடுவதில் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. புளியம்பட்டியில் பெரிய பணக்காரர் லால். அவரது மனைவி சிம்ரன். என்னதான் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், புளியம்பட்டி மக்களும் சிவகார்த்திகேயன் குடும்பத்தையே ராஜாவாக பார்க்கின்றனர். இதனால் கடுப்பாகும் லால் மற்றும் சிம்ரன், சிவகார்த்திகேயனை சரிக்க வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்.



    இதற்கிடையே புளியம்பட்டியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் சமந்தாவை பார்க்கும் சிவகார்த்திகேயன் அவர் மீது காதல் வயப்படுகிறார். தனது காதலை சமந்தாவிடம் சொல்ல பல்வேறு இடங்களில் முயற்சி செய்கிறார். ஆனால் சமந்தா, சிவகார்த்திகேயனின் காதல் ஏற்பதாக இல்லை.

    ஒரு கட்டத்தில் சந்தை போடுவதில் இரு ஊருக்கு இடையேயான சண்டை முற்ற, பிரச்சனை தீரும் வரையில் யாரும் அங்கு சந்தை போடக்கூடாது என்று நீதிமன்றம் ஆணையிடுகிறது. இந்த பிரச்சனையை தீர்க்கவும், சமந்தாவின் சம்மதத்தை பெறவும் ராஜாவான சிவகார்த்திகேயன் முயற்சி செய்து வருகிறார். அதேநேரத்தில் எதிலும் பெரியதாக சிரத்தை காட்டாத சிவகார்த்திகேயனுக்கு தனது மூதாதையரின் பெருமை என்னவென்பதும் தெரியாமலேயே இருக்கிறார்.



    கடைசியில் சின்ன ராஜா சிவகார்த்திகேயன் தனது பூர்வ பெருமையை தெரிந்து கொண்டாரா? சந்தை போடுதில் உள்ள பிரச்சனையை எப்படி தீர்த்தார்? சிவகார்த்திகேயனின் காதல் தூதை சமந்தா ஏற்றுக் கொண்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஒரு ராஜாவாக சிவகார்த்திகேயன் தனக்கே உண்டான குறும்புத்தனத்துடன் சிறப்பாகவே நடித்திருக்கிறார். எப்போதும் குதிரை வண்டியிலேயே பயணிப்பதும், கணக்குப்பிள்ளை சூரியை தன்னுடனேயே வைத்துக் கொள்வது, சமந்தாவுடன் காதல் என காமெடி, ஆக்‌ஷன், காதல், அதிரடி என அனைத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். சிவகார்த்திகேயனுடனேயே பயணிக்கும் சூரிக்கும் படத்தில் பெரிய பங்கு இருக்கிறது. படம் முழுவதும் சிவகார்த்திகேயன் உடனேயே பயணிக்கிறார். எப்போதும் போல் இருவரும் சேர்ந்து செய்யும் காமெடி, சண்டை எல்லாமே ரசிக்க வைக்கிறது. காதல் காட்சி, ரொமேன்ஸ் காட்சிகளில் கூட சூரி வரும் அளவுக்கு தனக்கு சமமான கதாபாத்திரத்தை சூரியுடன் சிவகார்த்திகேயன் பகிர்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். அதற்காக சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுக்கள். சூரி இனி சிக்ஸ்பேக் சூரி என்று அன்போடு அழைக்கப்படுவார். சிக்ஸ் பேக்குக்கான அவரது உழைப்பை பார்க்க முடிகிறது.



    உடற்கல்வி ஆசிரியராக சமந்தா படம் முழுக்க அழகு தேவதையாக வலம் வருகிறார். சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படங்கள் அனைத்துமே ஹிட்டடித்த நிலையில், இந்த படமும் வெற்றிப்படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. படத்தில் சமந்தாவில் சிலம்பம் சுற்றுவது சிறப்பாக வந்துள்ளது. சிறப்பு தோற்றத்தில் ராணியாக வரும் கீர்த்தி சுரேஷ் காட்சியும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்ரன், வில்லி கதாபாத்திரத்தில் வந்து மிரட்டுகிறார். சிவகார்த்திகேயனுக்கு, சிம்ரன் சவால் விடும் காட்சிகளில் அனல் பறக்கிறது. லால் வில்லனுக்குண்டான மிடுக்குடன் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிம்ரன் - லால் கூட்டணி சிறப்பாக வந்துள்ளது. நெப்போலியன் தான் ராஜா எனபதையே மறந்து ஒரு சாதாரண மனிதராக, ராஜாவுக்குண்டான குணநலன்களுடன் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். 

    மற்றபடி மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, சரண்தீப் சுர்னேனி, ரகு என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.



    தனது முதல் இரண்டு படங்களையும் கிராமத்து சாயலில் எடுத்தது போல், இந்த படத்தையும் ராஜா கதையை மையப்படுத்தி கிராமத்து சாயலில் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் பொன்ராம். இவரது படங்களில் இருக்கும் காதல், காமெடி காட்சிகள் இதிலும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள். வசனங்களும் படத்திற்கு பலம் தான். 

    இசையும் மற்றும் ஒளிப்பதி தான் படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளது. டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக டைட்டில் கார்டில் வரும் பின்னணி இசை அற்புதமாக இருக்கிறது. பாலசுப்ரமணியனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `சீமராஜா' விருந்து. #SeemarajaReview #Sivakarthikeyan #Samantha

    சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா திரைப்படத்தின் 5 மணி சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டது. #Sivakarthikeyan #Seemaraja
    சென்னை:

    பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இந்த படத்துக்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. சீமராஜா திரைப்படம் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா திரைப்படத்தின் காலை 5 மணி சிறப்பு காட்சி இன்று ரத்து செய்யப்பட்டது. இதனால் தியேட்டர்களில் படத்தை காணவந்த ரசிகர்கள் வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இதுகுறித்து தியேட்டர்களின் உரிமையாளரிடம் கேட்ட போது, எங்களுக்கு படத்துக்கான லைசென்ஸ் வரவில்லை. எனவே படத்தை திரையிட முடியவில்லை என தெரிவித்தனர்.

    சீமராஜா படத்தை காண ஆன்-லைனில் முன்பதிவு செய்திருப்பவர்களுக்கு அவர்களது கணக்கில் பணம் திரும்ப செலுத்தப்பட்டு விடும். கவுன்டரில் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு கட்டணம் திரும்ப செலுத்தப்படும் என தெரிவித்தனர்.

    சிவகார்த்திகேயன் படத்தை காண வந்த ரசிகர்கள் படம் திரையிடப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    #Sivakarthikeyan #Seemaraja
    சீமராஜா படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிம்ரன், முதலில் இந்த கதையில் நடிக்க தயங்கினேன் என்று கூறியிருக்கிறார். #Simran
    கோலிவுட்டில் தவிர்க்க முடியாத, மகாராணியாக தனி இடத்தை பிடித்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் எவ்வளவோ நடிகைகள் வந்து போயிருக்கிறார்கள், ஆனால் இன்றைக்கும் தனக்கென தீவிர ரசிகர்களை கொண்டிருக்கும் ஒரு நாயகி என்றால் அது சிம்ரன் தான்.

    தனது படைப்புகள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை பெற்று மிகப்பெரிய உயரத்தை அடைந்த சிம்ரன், நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று யாராவது நினைத்திருப்போமா?. சீமராஜா படத்தில் ஒரு எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பொன்ராம் சார் என்னை அணுகிய போது எனக்கும் அந்த மனநிலை தான் இருந்தது. நான் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ள உண்மையிலேயே தயங்கினேன். ஆனால் கதையை என்னிடம் சொல்ல எனக்காக பொன்ராம் சார் பொறுமையாக காத்திருந்ததால் தான் இது நடந்தது. ஒருமுறை, நான் கதையை கேட்ட பிறகு, என் கதாபாத்திரம் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பார்த்த பிறகு இந்த படத்தில் நடிக்கும் தீர்மானத்துக்கு வந்தேன். 

    இந்த படத்தில் எனக்கு நல்ல உள்ளங்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஒரு குடும்பமாக மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தனர். கடந்த பல ஆண்டுகளில் பல படங்களில் பணிபுரிந்திருந்தாலும், இந்த குழுவில் முழுக்க நேர்மறை அதிர்வுகளை உணர்ந்தேன். குறிப்பாக, சிவா, பொன்ராம் கூட்டணி ஏற்கனவே வெற்றிகரமான படங்களை கொடுத்துள்ளது, ரசிகர்கள் எந்த கேள்வியும் இல்லாமல் இந்த படத்தை பார்க்க வருவார்கள். ஆனால் சிவகார்த்திகேயன், பொன்ராம் மற்றும் குழுவில் உள்ள அனைவருமே ரசிகர்களுக்கு முந்தைய படத்தை விடவும் சிறப்பான படத்தை கொடுப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார்கள்" என்றார்.
    நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் காமெடி நடிகர் சூரியின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மிரளவைத்திருக்கிறார். #Soori #Sivakarthikeyan
    இன்றைய தமிழ் படங்களில் சூரி தலைகாட்டும் படங்களுக்கு தனிமவுசு இருக்கிறது. சந்தானம் ஹீரோ ஆனபிறகு புதிய படங்களில் அவரது ‘காமெடி’ இடத்தை சூரி நிரப்பி வருகிறார்.

    ‘ரஜினிமுருகன்’, ‘அரண்மனை–2’, ‘மருது’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ உள்பட இவர் கதாநாயர்களுடன் கைகோர்த்த படங்கள் அனைத்தும் பேசப்படும் படங்களாகவே அமைந்துள்ளன.

    மேலும் சமீபத்தில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் இவருடைய காமெடியும் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘சீமராஜா’ திரைப்படத்தில் சூரி நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளது.



    இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் சூரி சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். மேலும் 8 மாதங்களாக சூரி இதற்காக கடின உழைப்பை கொடுத்திருக்கிறார் என்றும் பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூரியா இது? என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். #Soori #Sivakarthikeyan
    ×