search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Audi"

    • ஆடி நிறுவனத்தின் புதிய A8 L மாடல் சக்திவாய்ந்த வி6 என்ஜின் கொண்டு இருக்கிறது.
    • இந்த கார் ஹைப்ரிட் சிஸ்டம் வசதி கொண்டு இருக்கிறது.

    ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2022 ஆடி A8 L பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் புதிய ஆடி A8 L மாடலின் விலை ரூ. 1 கோடியே 29 லட்சம் என துவங்குகிறது. இதன் டெக்னாலஜி எடிஷன் விலை ரூ. 1 கோடியே 57 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய ஆடி A8 L ஃபிளாக்‌ஷிப் செடான் மாடல் நீண்ட வீல்பேஸ் கொண்டுள்ளது. ஆடி இந்தியா நிறுவனம் புதிய A8 L ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு மே மாதத்திலேயே துவங்கி விட்டது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் ஆகும். 2022 பிப்ரவரி மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட 2022 ஆடி A8 L ஃபேஸ்லிப்ட் மாடல் தற்போது இந்தியாவில்ல் வெளியாகி இருக்கிறது.


    2022 ஆடி A8 L பேஸ்லிப்ட் மாடலில் 3 லிட்டர் TFSI பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 340 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கி.மீ. வேகத்தை 5.7 நொடிகளில் எட்டிவிடும்.

    இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் மட்டுமின்றி 4 லிட்டர் TFSI என்ஜின் ஆப்ஷனாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 460 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது ஆகும்.

    • ஆடிப்பண்டிகை சீசன் விற்பனை இந்த வாரம் முதல் தொடங்கி உள்ளது. மொத்த வியாபாரம் 30 சதவீதம் வரையிலும், சில்லரை வியாபாரம் 40 சதவீதம் வரையும் நடந்துள்ளது.
    • கடந்த சில நாட்களாக நூல் விலை குறைந்து வருவதால் ஜவுளிகளின் விலையும் சற்று குறையும் வாய்ப்பு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தையானது வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடை பெறுவது வழக்கமாகும். கடந்த சில வாரங்களாக வெளியூர் மொத்த வியாபாரிகள், உள்ளூர் சில்லரை வியாபாரிகள் வருகை குறைவாக இருந்ததால் வியாபாரம் மந்த நிலையில் இருந்து வந்தது.

    இந்நிலையில் ஆடி பண்டிகையொட்டி இந்த வாரம் முதல் மீண்டும் வெளியூர் வியாபாரிகள் வரத்தொடங்கி உள்ளதாகவும், மொத்த வியாபாரிகள் 30 சதவீதத்தை தாண்டி நடந்ததாகவும், ஒரு சில ரகங்களுக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்ப ட்டுள்ளதால் சில்லரை விற்பனை அதிக அளவில் நடந்ததாக வியாபாரிகள் கூறினர்.

    இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது:-

    ஆடிப்பண்டிகை சீசன் விற்பனை இந்த வாரம் முதல் தொடங்கி உள்ளது. மொத்த வியாபாரம் 30 சதவீதம் வரையிலும், சில்லரை வியாபாரம் 40 சதவீதம் வரையும் நடந்துள்ளது.

    குறிப்பிட்ட ரெடிமேடு ரகங்களுக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்ப ட்டுள்ளதால் சில்லரை வர்த்தகம் அதிகமாக நடந்தது. வேட்டி, சட்டை, பேண்ட், துண்டு, சேலை, சுடிதார், லுங்கி, துண்டு உள்ளிட்டவைகள் அதிக அளவில் விற்பனையானது.

    கடந்த சில நாட்களாக நூல் விலை குறைந்து வருவதால் ஜவுளிகளின் விலையும் சற்று குறையும் வாய்ப்பு உள்ளது.

    இந்த வாரம் ஏற்னவே இருந்த ஜவுளிகளை பழைய விலைக்கு விற்பனை செய்துள்ளோம். அடுத்த வாரத்தில் இருந்து புதிய ரகங்கள் வரும் போது, விலையும் சற்று குறைய வாய்ப்பு உள்ளது. ஆடிப்பண்டிகை வரை தினசரி கடைகளிலும் வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆடி நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், மெக்லாரென் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.


    மெக்லாரென் குழுமத்தை ஆடி நிறுவனம் முழுமையாக விலைக்கு வாங்கப் போவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. மெக்லாரென் பார்முலா 1 குழுவை முழுமையாக வாங்குவதற்கான பணிகளில் ஆடி ஈடுபட்டு வந்தது. இதன் மூலம் ஆடி நிறுவனம் 2026-இல் நடைபெற இருக்கும் பார்முலா 1 பந்தயத்தில் களமிறங்க இருப்பதாக கூறப்பட்டது.

    ஏற்கனவே லம்போர்கினி மற்றும் வோக்ஸ்வேகன் குழுமத்தில் நிர்வகிக்கும் பங்குகளை ஆடி நிறுவனம் கைப்பற்றி வைத்திருக்கிறது. அந்த வகையில், தற்போது பார்முலா 1 உலகில் கால்பதிக்கவும் ஆடி திட்டமிட்டு வருகிறது. பெருந்தொற்று காலக்கட்டத்தில் மெக்லாரென் நிறுவனம் தொடர் இழப்பு காரணமாக 1,200 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. 

     மெக்லாரென்

    "மெக்லாரென் குழுமம் ஆடி நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக வலம்வரும் செய்திகளை அறிவோம். இந்த தகவலில் துளியும் உண்மையில்லை. ஒப்பந்ததாரர்கள், உதிரிபாகங்களை வினியோகம் செய்வோர் மற்றும் கார் உற்பத்தியாளர்களுடன் தொடர்ந்து சந்திப்புகள் மற்றும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எனினும், மெக்லாரென் குழுமத்தின் உரிமையாளர் பிரிவில் இதுவரை எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை," என மெக்லாரென் தெரிவித்து இருக்கிறது.
    ஆடி நிறுவனம் தனது இ டிரான் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு புது அப்டேட் வழங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆடி நிறுவனம் 2019 மற்றும் 2020 இ டிரான் மாடல்களுக்கு மென்பொருள் அப்டேட் வெளியிட்டு வருகிறது. இலவசமாக வழங்கப்படும் அப்டேட் இ டிரான் மாடலில் முன்பை விட 20 கிலோமீட்டர்கள் அதிக ரேன்ஜ் வழங்குகிறது.

    மென்பொருள் மூலம் வெளியிடப்படும் அப்டேட் செப்டம்பர் 2018 முதல் நவம்பர் 2019 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து இ டிரான் மாடல்களுக்கும் வழங்கப்படுகிறது. அருகாமையில் உள்ள ஆடி சர்வீஸ் மையங்களில் பயனர்கள் தங்களின் இ டிரான் மாடலை இலவசமாக புதிய மென்பொருளுக்கு அப்டேட் செய்து கொள்ளலாம்.

    ஆடி இ டிரான்

    நீட்டிக்கப்பட்ட ரேன்ஜ் மட்டுமின்றி, புது மென்பொருள் அப்டேட் இ டிரான் காரின் முன்புற எலெக்ட்ரிக் மோட்டார் கண்ட்ரோலை மேம்படுத்துகிறது. இதன் காரணமாக தேவையான இடங்களில் முன்புற மோட்டாரை முழுமையாக ஸ்விட்ச் ஆப் செய்ய முடியும்.

    உலகின் பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி ரூ.6,822 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #Audi



    ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி மீது ரூ.6,822 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

    ஆடி நிறுவன கார்களில் 6 மற்றும் 8-சிலின்டர் டீசல் இன்ஜின்களில் அதிக மாசு ஏற்படுத்தியதால் ஆடி நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை எதிர்க்கும் திட்டமில்லை என்றும் அபராதத்தை ஏற்றுக் கொள்வதாக ஆடி அறிவித்துள்ளது.

    கார் எமிஷன் முறைகேடு செய்ததில் உடந்தையாக இருந்ததாக ஆடி தலைமை அதிகாரிகளில் ஒருவரான ரூப்பெர்ட் ஸ்டேட்லர் மீது ஃபோக்ஸ்வேகன் நடவடிக்கை எடுத்தது. விற்பனை பிரிவு அதிகாரியான பிராம் ஸ்காட் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார்.



    முன்னதாக ஜூன் மாதத்தில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் மீது ரூ.85,10,99,78,047 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்திலும் ஃபோக்ஸ்வேகன் தனது கார்களில் முறைகேடு செய்து சாலைகளில் மாசு அதிகரிக்க காரணமாக இருந்தது கண்டறியப்பட்டது. 

    அதிக மாசு ஏற்படுத்தும் நான்கு சிலின்டர் இன்ஜின்களை உற்பத்தி செய்து அவற்றை விற்றதற்காக ஃபோக்ஸ்வேகன் மீது அபராதம் விதிக்கப்பட்டது. 
    ஆடி நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. பெட்ரோல் வேரியன்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




    ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான ஆடி தனது இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. மாடல் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் இன்ஜின் கொண்ட கியூ5 மட்டும் அறிமுகமான நிலையில், ஆடி கியூ5 பெட்ரோல் வேரியன்ட் இன்று இந்தியாவில் அறிமுகமாக செய்யப்பட்டது.

    ஏற்கனவே ஆடி கியூ7 பெட்ரோல் வேரியன்ட் 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், 2020-ம் ஆண்டு வாக்கில் அதிக பெட்ரோல் கார்களை விற்பனை செய்ய ஆடி திட்டமிட்டிருக்கிறது. இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. ஆடி 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்த முதல் தலைமுறை மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய ஆடி கியூ 5 டீசல் வேரியன்ட் 2.0 லிட்டர் TFSI பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜின் 248 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்கியூ மற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. 

    முந்தைய மாடலை விட பெரிதாக காட்சியளிக்கும் புதிய ஆடி கியூ5 உள்புறத்தில் 12.3 இனஅச் டி.எஃப்டி டிஸ்ப்ளே, 8.3 இன்ச் டிஸ்ப்ளே டேஷ்போர்டில் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் இருக்கைகள் பெய்க்-நிறத்திலான லெதர் மற்றும் பெரிய பானாரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் டைனமிக், ஆட்டோ, கம்ஃபர்ட், இன்டிவிடுவல் மற்றும் ஆஃப்ரோடு போன்ற டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. புதிய மாடலில் அடாப்டிவ் சஸ்பென்ஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டும் போது ஹேன்ட்லிங் மற்றும் அனுபவத்தை சிறப்பாக வழங்கும். 

    இந்தியாவில் ஆடி கியூ5 பெட்ரோல் வேரியன்ட் விலை ரூ.55.27 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஆடி நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. மாடலின் பெட்ரோல் வேரியன்ட் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.





    ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான ஆடி தனது இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. மாடலை இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் இன்ஜின் கொண்ட கியூ5 மட்டும் அறிமுகமாகி இருக்கும் நிலையில், ஆடி கியூ5 பெட்ரோல் வேரியன்ட் ஜூன் 28-ம் தேதி அறிமுகமாக இருக்கிறது.

    முன்னதாக கியூ7 பெட்ரோல் வேரியன்ட் 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், 2020-ம் ஆண்டு வாக்கில் அதிக பெட்ரோல் கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறது. இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. ஆடி 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்த முதல் தலைமுறை மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது.

    இரண்டாம் தலைமுறை ஆடி கியூ5 மாடல் MLB இவோ பிளாட்ஃபார்ம் சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் தற்போதைய மாடலை விட இதன் எடை 100 கிலோ வரை குறைக்கப்பட்டிருக்கிறது. புதிய கியூ5 மாடலில் நீண்ட வீல்பேஸ் மற்றும் உயரமாக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்த வடிவமைப்பு கூர்மையாக்கப்பட்டு, முன்பக்கம் சிங்கிள்-ஃபிரேம் கிரில், மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப் மற்றும் ஸ்போர்ட் பொனெட் கொண்டுள்ளது.



    முந்தைய மாடலை விட பெரிதாக காட்சியளிக்கும் புதிய ஆடி கியூ5 உள்புறத்தில் 12.3 இனஅச் டி.எஃப்டி டிஸ்ப்ளே, 8.3 இன்ச் டிஸ்ப்ளே டேஷ்போர்டில் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் இருக்கைகள் பெய்க்-நிறத்திலான லெதர் மற்றும் பெரிய பானாரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆடி கியூ 5 டீசல் வேரியன்ட் 2.0 லிட்டர் TDI இன்ஜின் கொண்டிருக்கிறது. 

    இந்த இன்ஜின் 190 பி.எஸ். 400 என்.எம். டார்கியூ மற்றும் 7-ஸ்பீடு எஸ்-டிரானிக் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. புதிய ஆடி கியூ5 மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.9 நொடிகளில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ARAI சான்று பெற்றிருப்பதால் லிட்டருக்கு 17.01 கிலோமீட்டர் செல்லும் என ஆடி தெரிவித்தது.

    இத்துடன் டைனமிக், ஆட்டோ, கம்ஃபர்ட், இன்டிவிடுவல் மற்றும் ஆஃப்ரோடு போன்ற டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. புதிய மாடலில் அடாப்டிவ் சஸ்பென்ஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டும் போது ஹேன்ட்லிங் மற்றும் அனுபவத்தை சிறப்பாக வழங்கும். 
    அனுமதிக்கப்பட்ட அளவை விட வோல்க்ஸ்வோகன் கார்கள் அதிகளவு கார்பன் டை ஆக்சைடு புகையை வெளியேற்றுவதாக எழுந்த புகாரில் ஆடி கார் நிறுவனத்தின் சி.இ.ஓ ரூபெர்ட் ஸ்டாட்லெர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். #AudiCEO #RupertStadler
    முனிச்:

    ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கார் தயாரிப்பு நிறுவனம் வோல்க்ஸ்வோகன் , ஆடி கார் நிறுவனத்தின் தந்தை நிறுவனமாக இருந்து வருகிறது. இந்நிலையில், மூன்றாண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வோல்க்ஸ்வோகன் டீசல் கார்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, 40 மடங்கு அதிகளவு கார்பன் டை ஆக்சைடு புகையை வெளியேற்றுவது ஆய்வு ஒன்றில் தெரியவந்தது. 

    அமெரிக்காவில் நடந்த புகை மாசு பரிசோதனையில், அந்நிறுவனம் முறைகேடு செய்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. போலியாக விளம்பரம் வெளியிட்டு ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் உலகம் முழுவதும் கடும் நெருக்கடியை சந்தித்த வோல்க்ஸ்வோகன் நிறுவனம், லட்சக்கணக்கான கார்களை திரும்பப்பெற்றது. 

    இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஆடி கார் நிறுவனத்தின் சி.இ.ஓ ரூபெர்ட் ஸ்டாட்லெர் ஜெர்மனியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அந்நிறுவனத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

    ஆடி நிறுவனத்தின் கியூ8 எஸ்யுவி மாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் எஸ்யுவி ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    புதுடெல்லி:

    ஆடி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடல் ஷாங்காய் நகரில் ஜூன் 5-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் ஆடி நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் மாடலின் டீசரை வெளியிட்டிருக்கிறது. ஆடி கியூ5 புதிய டீசர் இரண்டு வரைப்படங்களில் மாடலின் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ஏற்கனவே வெளியான ஸ்பை தகவல்களில் இடம்பெறவில்லை.

    புதிய வரைப்படங்களில் ஆடி கியூ8 முன்புறமும், பின்புறமும் காட்சியளிக்கிறது. இதன் முன்பக்கம் ஹூட் கிரீஸ் மற்றும் ஹெக்சாகோனல் கிரில் மற்றும் செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கும் க்ரோம் ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லைட்களும் பின்புறம் ஹேட்ச் மற்றும் டெயில் லைட்கள் வழங்கப்பட்டிருக்கிறது.



    கிரீஸ் செய்யப்பட்ட ஃபென்டர்கள் சக்கரங்களின் மேல் வழங்கப்பட்டிருப்பதோடு புதிய டிரேப்சாய்ட எக்சாஸ்ட் காரின் தோற்றத்தை மாற்றுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் கியூ சீரிஸ் மாடல்களை போன்று இல்லாமல் புதிய ஆடி கியூ8 வித்தியாச தோற்றம் பெற்றிருக்கிறது.

    புதிய ஆடி கியூ8 ஆடம்பர கூப் மற்றும் ஸ்போர்ட் கூப் மாடல்களை சேர்த்ததாக இருக்கும். ஆடி கியூ8 மாடல் 2017 டெட்ராயிட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட கான்செப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது.
    ×