search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோமொபைல்"

    டொயோட்டா இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை ஏப்ரல் மாதம் முதல் மாற்றப்போவதாக அறிவித்துள்ளது. #Toyota



    டொயோட்டா இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்களின் விலையை அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. உதிரி பாகங்களின் விலை அதிகரித்து வருவதே கார் விலையை உயர்த்துவதற்கான காரணமாக டொயோட்டா தெரிவித்துள்ளது. புதிய விலை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலாகிறது. 

    உற்பத்தியில் விலை குறைக்க நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. உதிரி பாகங்களின் கட்டணம் தொடர்ந்து அதிகமாகி வருவதால் விலை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனினும், தொடர்ந்து விலையை குறைக்கும் முயற்சிகளை டொயோட்டா மேற்கொள்ளும் என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் ராஜா தெரிவித்திருக்கிறார். 

    எந்தெந்த கார்களின் விலை எவ்வளவு அதிகரிக்கப்படுகிறது என்பது பற்றி டொயோட்டா சார்பில் இதுவரை எவ்வித தகவலையும் வழங்கவில்லை. புதிய விலையை விற்பனையின் போது அமலாக்கிக் கொள்ள டொயோட்டா முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.



    சமீபத்தில் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் இன்னோவா க்ரிஸ்டாவின் புதிய மாடலை அறிமுகம் செய்தது. புதிய இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் வேரியண்ட் இந்தியாவில் ரூ.15.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எட்டு பேர் அமரக்கூடிய காரும் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய ஜி பிளஸ் வேரியண்ட் இன்னோவா க்ரிஸடா மாடல்களில் பேஸ் வேரியண்ட் ஆகும். ஜி பிளஸ் வேரியண்ட் தனியார் மற்றும் போக்குவரத்து பயன்பாடு என இருவிதங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக ஜி வேரியண்ட் போக்குவரத்து பயன்பாடுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டது.

    புதிய இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் மாடலில் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 150 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 343 என்.எம். டார்க் செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. புதிய இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் வேரியண்ட் மூலம் இன்னோவா பேஸ் வேரியண்ட் விலை ரூ.38,000 வரை குறைந்திருக்கிறது.
    நாம் பயணம் செய்யும் கார்களுக்கு மேற்கொள்ளப்படும் கிராஷ் டெஸ்ட் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #CrashTest



    நாம் வெளியூர்களுக்கு பயனிக்கும் நேரத்தை சவுகரியமாக்கியதில் கார்களின் பங்கு மிக அதிகம். கார்கள் பாதுகாப்பு கொண்டவைதான் என்பதை யாராவது சான்று அளித்தால்தான் நம்பிக்கை வரும். அதற்குத்தான் ‘கிராஷ் டெஸ்ட்’ எனப்படும் மோதல் சோதனை நடத்தப்படுகிறது. 

    கார்கள் விபத்தை சந்திக்க நேர்ந்தால் அதில் பயனம் செய்வோர் எந்த அளவுக்கு பாதுகாப்பாக உள்ளனர் என்பதை இந்த கிராஷ் டெஸ்ட் உறுதி செய்கின்றன. சோதனைகளின் முடிவில் இவற்றுக்கு நட்சத்திர குறியீடு அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் கார்களைத் தேர்வு செய்யலாம். இதுபோன்ற கிராஷ் டெஸ்ட்களை நடத்துவதற்கு சர்வதேச அளவில் பிரபலமான நிறுவனங்கள் உள்ளன. 

    கார்களில் பயணிகளுக்குப் பதிலாக மனித உருவிலான பொம்மைகள் (டம்மி) பயன்படுத்தப்படும். மனித உருவில் மட்டுமின்றி மனிதனின் சதைப் பகுதி, எலும்பு, உடலின் பிற பாகங்கள், தலைப் பகுதி என அனைத்தும் அசல் மனித உறுப்புகளைப் போலவே இருக்கும். இதனால் வாகன சோதனையின்போது இந்த பொம்மைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை அளவிட்டு அதன் அடிப்படையில் வாகனத்தின் பத்திரத்தன்மை உறுதி செய்யப்படும்.

    சோதனை நடத்துவதற்காக கார்கள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் இயக்கப்படும். பெரும்பாலும் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் கார்கள் இயக்கப்பட்டு மோதல் சோதனைக்கு உள்ளாக்கப்படும். பொதுவாக முன்பக்கத்தில் சோதனை நடத்தப்படும். மிகவும் உறுதியான கான்கிரீட் சுவர்மீது நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் கார் வந்து மோதினால் அது எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பது சோதிக்கப்படும். 



    இத்தகைய மோதலின் போது காரினுள் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் சோதிக்கப்படும். வழக்கமான கார்களுக்கு ஒரு விதமாகவும், எஸ்.யு.வி. கார்களுக்கு ஒரு விதமாகவும் இந்த சோதனை நடத்தப்படும். அதாவது கார்களின் உயரத்துக்கேற்ப முன்புற மோதல் நிகழ்வு பொருள் மாறுபடும்.

    பக்கவாட்டில் மோதல் ஏற்பட்டால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும். அது எந்த அளவுக்கு வாகனம் தாக்குப்பிடிக்கிறது என்பதை சோதிக்க ஓவர்லாப் சோதனை நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து கார் உருண்டு விபத்தை சந்திக்க நேர்ந்தால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதும் சோதிக்கப்படுகிறது. காரின் கதவுகள், மேல் பகுதியை இணைக்கும் தூண்கள் எந்த அளவுக்கு ஸ்திரமாக உள்ளன என்பது இதில் தெரியவரும்.

    வழக்கமான சாலைகளில் காணப்படும் பொருள்கள் நிறைந்த பகுதியில் மோதல் நிகழ்ந்தால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதும் சோதிக்கப்படும். விபத்து ஏற்படும்போது தலையில் எந்த அளவுக்கு காயம் ஏற்படுகிறது என்பது கவனத்தில் கொள்ளப்படும். அடுத்து மார்பு பகுதியில் எந்த அளவுக்கு விபத்தின் பாதிப்பு இருக்கிறது என்பது சோதிக்கப்படும். கால் மற்றும் தொடைப் பகுதியில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் ஆராயப்படும்.

    ஃபோக்ஸ்வேகன் போலோ, டொயோட்டா எடியோஸ், டாடா ஜெஸ்ட் ஆகிய கார்களே இத்தகைய சோதனையில் நட்சத்திரக் குறியீட்டைப்பெற்றிருக்கின்றன. இனிவரும் காலங்களில் பாதுகாப்பான வாகனம் என்பதற்கான சான்று பெற்றால் மட்டுமே அவற்றை சாலைகளில் இயக்க அனுமதிக்கப்படும் என்ற விதிமுறைகள் படிப்படியாக கட்டாயமாக்கப்படலாம். கிராஷ் டெஸ்ட் சோதனையில் வெற்றி பெற்ற கார்களில் பயணம் செய்வது பாதுகாப்பானது என்ற நிலை உருவாகிவிடும்.
    இந்தியாவில் கார் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நீங்கள் வாங்கும் காரில் இ.எஸ்.சி. தொழில்நுட்பம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. #Car
    மகிழுந்து எனப்படும் கார் ஆடம்பரம் அற்ற அத்தியாவசிய தேவைகளின் பட்டியலில் நுழைந்து விட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கார் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கார் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை போன்றே, புதிய கார்களில் வழங்கப்படும் அம்சங்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்ப கார் பயன்படுத்துவோருக்கு பயன்தரும், பாதுகாப்பை அதிகரிக்க பல்வேறு புதிய வசதிகள் புதிய கார்களில் சேர்க்கப்படுகின்றன. அந்த வகையில் நீங்கள் பயன்படுத்தும் அல்லது புதிதாக வாங்க இருக்கும் காரில் இ.எஸ்.சி. எனப்படும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிடி கண்ட்ரோல் சிஸ்டம் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

    சில கார்களில் இந்த தொழில்நுட்பம் முன்னேறிய வகையில் உள்ளது. அதாவது வாகனம் கட்டுப்பாட்டை இழக்கும்போது அது இன்ஜின் செயல்பாட்டைக் குறைக்கும். மீண்டும் வாகனம் கட்டுக்குள் வந்தால் மட்டுமே அது செயல்பட அனுமதிக்கும். வாகனம் கட்டுப்பாடு இழந்து செல்வதைத் தடுக்க இ.எஸ்.சி. உதவும்.


    புகைப்படம் நன்றி: MBWorld

    அமெரிக்காவில் இத்தகைய தொழில்நுட்பம் பின்பற்றப்பட்ட பிறகு நெடுஞ்சாலைகளில் பெருமளவிலான விபத்துகள் குறைந்துவிட்டதாக அந்நாட்டின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை காப்பீடு அமைப்புகள் கூறியுள்ளன.

    மூன்றில் ஒரு பங்கு விபத்துகள் இதனால் குறைவதாக சுட்டிக்காட்டியுள்ளன. ஐரோப்பிய யூனியன் நாடுகளும் இதே கருத்தைத் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் தங்கள் நாடுகளில் தயாராகும் கார்களில் இத்தகைய தொழில்நுட்பம் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளன.

    1983-ம் ஆண்டு முதல் முதலில் கார்களில் ஆன்டி ஸ்கிட் எனும் தொழில்நுட்பத்தை டொயோடா நிறுவனம் அறிமுகம் செய்தது. இதையடுத்து 1987-ல் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் மற்றும் பி.எம்.டபிள்யூ. நிறுவனங்கள் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டத்தை தங்களது தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தின. ஆனால் இவை அனைத்துமே ஸ்டீரிங்குடன் தொடர்பு கொண்டவையாக இருக்கவில்லை.



    1990-ம் ஆண்டில் மிட்சுபிஷி நிறுவனம் முதல் முறையாக ஒருங்கிணைந்த கண்ட்ரோல் சிஸ்டத்தை அறிமுகம் செய்தது. இதற்கு டி.சி.எல். என பெயரிடப்பட்டது. இதன் மேம்பட்ட நுட்பமாக ஆக்டிவ் ஸ்கிட் அண்ட் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (ஏ.எஸ்.டி.சி.) புழக்கத்திற்கு வந்தது.

    திருப்பத்தில் காரின் ஆக்ஸிலரேட்டரை டிரைவர் வேகமாக மிதித்தாலும், இதில் உள்ள சென்சார் (உணர் கருவி) காரின் வேகத்தைக் குறைத்துவிடும். ஆனால் படிப்படியாக இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக பி.எம்.டபிள்யூ. நிறுவனம் 1992-ம் ஆண்டில் புதிய நுட்பத்தைக் கண்டுபிடித்தது.

    1987-ம் ஆண்டிலிருந்து 1992-ம் ஆண்டு வரையான காலத்தில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எலெக்ட்ரானிக் ஸ்டெபிலைசேஷன் கண்ட்ரோல் புரோகிராம் உருவாக்கப்பட்டது.

    Pic 3

    1995-ம் ஆண்டில் பி.எம்.டபிள்யூ., மெர்சிடஸ் பென்ஸ் மற்றும் டொயோடா ஆகிய நிறுவனங்கள் முதல் முறையாக தங்கள் வாகனங்களில் இ.எஸ்.சி. எனப்படும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தன. 2010-ம் ஆண்டுக்குப் பிறகு அனேகமாக அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த தொழில்நுட்பத்தை தங்களது கார்களில் வைக்கத் தொடங்கின.

    பொதுவாக கார் ஓடும்போது பின் சக்கரங்கள் சரியாக இயங்குகின்றனவா என்பதை இது கண்காணிக்கும். காரின் பாதை மாறாமல் இருக்கிறதா என்பதை இது தொடர்ந்து கண்காணிக்கும். ஸ்டீரிங் கட்டுப்பாடு இழக்கும் போது தான் இ.எஸ்.சி. செயல்பட தொடங்கும். உடனடியாக வாகனத்தின் வேகத்தைக் குறைத்து இன்ஜின் செயல்பாட்டை நிறுத்தும்.

    கார் கட்டுப்பாட்டை இழக்கிறது என்பதை டிரைவர் உணர்வதற்கு முன்பாகவே இ.எஸ்.சி. உணர்ந்துவிடும். எத்தகைய தளத்திலும் அதாவது வழுக்கும் தரையாக இருந்தாலும் சரி இது செயல்படும். #Car
    இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமான கார்களில் ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் கார்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம். #cars



    ஒரு காலத்தில் பணக்காரர்கள் தங்களின் அந்தஸ்தை பறைசாற்ற மட்டுமே பயன்படுத்திய கார்கள் இன்று நவீன போக்குவரத்து சாதனங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. நடுத்தர பிரிவினரும், மாதாந்திர சம்பளதாரர்களும் வாங்கும் வகையில் கார்கள் இன்று உற்பத்தியாகின்றன.

    டாடா நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய்க்கு நானோ காரை தயாரிக்கத் தொடங்கி, அதுவும் ரூ. 2 லட்சம் வரை சென்றுவிட்டது. தற்போது நானோ கார் உற்பத்தியும் நின்று போய்விட்டது. ஆனால் மாருதி நிறுவனம் உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் ரூ. 5 லட்சத்திற்குள் வசதியான கார்களை தயாரித்து அளிக்கின்றன.

    அவரவர் வசதி, தேவை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு கார்களை வாங்கி பயன்படுத்தலாம். இன்னும் சில கார்கள் ரூ.5 லட்சம் விலையில் உள்ளன. புதிய கார்களும் இதே விலைப் பிரிவில் அறிமுகமாக உள்ளன. 



    ரெனால்ட் க்விட்

    பிரான்ஸைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் சென்னை ஒரகடத்தில் ஆலை அமைத்துள்ளது.இந்நிறுவனத்தின் குறைந்த விலை கார் க்விட். இது ரூ. 2.78 லட்சம் விலையில் கிடைக்கிறது. குறைந்த விலை பிரிவு கார்களில் இது மிகவும் பிரபலமாகத் திகழ்கிறது. இதில் பிரீமியம் மாடல் விலை ரூ. 4.71 லட்சமாகும். இது 799 சி.சி. திறன் கொண்டது. இது சோதனை ஓட்டத்தில் 25 கி.மீ. தூரம் ஓடியது. இதில் பெட்ரோல் மாடல் மட்டுமே கிடைக்கிறது. 

    மாருதி ஆல்டோ 800

    மாருதி ஆல்டோ 800, இந்த கார் மாருதி நிறுவனம் நீண்ட காலமாக தயாரித்து வந்த மாருதி 800 மாடலுக்கு மாற்றாக வந்தது. இதன் விலை ரூ 2.72 லட்சமாகும். ஒரு டீசன்ட்டான கார் வாங்க விரும்புவோர், குறைந்த பட்ஜெட்டில் வேண்டுமாயின் இந்தக் கார் நிச்சயம் அவர்களுக்கு போதுமானதாக இருக்கும். பேஸ் மாடல் விலை ரூ. 2.72 லட்சமாகும், டாப் என்ட் மாடல் விலை ரூ. 4.01 லட்சம் வரை கிடைக்கிறது.



    டாடா டியாகோ

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே தனது பிரபல மாடலான இண்டிகா கார் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக அறிவித்துவிட்டது. இந்நிலையில் டியாகோ மாடலைத்தான் டாடா பெரிதும் நம்பியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 3.48 லட்சமாகும். இது 1047 சி.சி. திறன் கொண்டது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் இது கிடைக்கிறது.

    மாருதி வேகன் ஆர்

    மாருதி வேகன் ஆர் மாடலின் பேஸ் மாடல் விலை ரூ. 4.37 லட்சமாகும். இது 998 சி.சி. திறன் கொண்டது. இது சோதனை ஓட்டத்தில் லிட்டருக்கு 26 கி.மீ. தூரம் ஓடியதாக நிறுவனம் தெரிவிக்கிறது. இதிலும் பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி.யில் (நிலைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) இயங்கும் மாடல்கள் வந்துள்ளன. இதில் பிரீமியம் மாடல் விலை ரூ. 5.49 லட்சமாகும். 



    மாருதி இக்னிஸ்

    இந்நிறுவனத்தின் பிரபல கார்களில் இதுவும் ஒன்று. இதன் ஆரம்ப விலை ரூ. 4.79 லட்சமாகும். இது 1197 சி.சி. திறன் கொண்டது. இது சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 26 கி.மீ. தூரம் ஓடியுள்ளது. டீசல் மாடல் கார் உற்பத்தியை சமீபத்தில்தான் இந்நிறுவனம் முற்றிலுமாக நிறுத்தியது. இப்போதைக்கு பெட்ரோல் மாடல் மட்டுமே கிடைக்கிறது. 

    டட்சன் கோ

    சிறிய ரகக் கார்களில் மக்களால் பெரிதும் விரும்பப்படுவது. டட்சன் கோ காரின் ஆரம்ப விலை ரூ. 3.50 லட்சமாகும். இதில் 799 சி.சி. என்ஜின் உள்ளது. இதில் இன்னொரு மாடல் 999 சி.சி.யிலும் வெளி வந்துள்ளது. 

    மாருதி ஸ்விப்ட்

    இது 1197 சி.சி. திறன் கொண்டது. ஐந்து பேர் சவுகரியமாக அமர்ந்து செல்லும் வகையில் இட வசதி கொண்டது. பெட்ரோல், டீசல் ஆகிய இரு மாடல்களிலும் இவை வெளி வந்துள்ளன. இதன் ஆரம்ப விலை ரூ. 4.99 லட்சமாகும். சோதனை ஓட்டத்தில் இது லிட்டருக்கு 28 கி.மீ. தூரம் ஓடியுள்ளது. 
    உலகின் பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி ரூ.6,822 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #Audi



    ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி மீது ரூ.6,822 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

    ஆடி நிறுவன கார்களில் 6 மற்றும் 8-சிலின்டர் டீசல் இன்ஜின்களில் அதிக மாசு ஏற்படுத்தியதால் ஆடி நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை எதிர்க்கும் திட்டமில்லை என்றும் அபராதத்தை ஏற்றுக் கொள்வதாக ஆடி அறிவித்துள்ளது.

    கார் எமிஷன் முறைகேடு செய்ததில் உடந்தையாக இருந்ததாக ஆடி தலைமை அதிகாரிகளில் ஒருவரான ரூப்பெர்ட் ஸ்டேட்லர் மீது ஃபோக்ஸ்வேகன் நடவடிக்கை எடுத்தது. விற்பனை பிரிவு அதிகாரியான பிராம் ஸ்காட் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார்.



    முன்னதாக ஜூன் மாதத்தில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் மீது ரூ.85,10,99,78,047 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்திலும் ஃபோக்ஸ்வேகன் தனது கார்களில் முறைகேடு செய்து சாலைகளில் மாசு அதிகரிக்க காரணமாக இருந்தது கண்டறியப்பட்டது. 

    அதிக மாசு ஏற்படுத்தும் நான்கு சிலின்டர் இன்ஜின்களை உற்பத்தி செய்து அவற்றை விற்றதற்காக ஃபோக்ஸ்வேகன் மீது அபராதம் விதிக்கப்பட்டது. 
    இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பேட்டரி வாகனங்களை வாங்க பலரும் முன்வருகின்றனர். #BatteryBike
    பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக பேட்டரியில் இயங்கும் வாகனங்களை அறிமுகம் செய்வதுதான் ஒரே தீர்வு என்கிற ரீதியில் அரசு, பேட்டரி வாகனங்களுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கியுள்ளது.

    சுற்றுப் புறச்சூழலை பாதுகாக்கவும் இத்தகைய வாகனங்கள் பெருமளவு உதவும் என்பதால் அரசு இதற்கு மானியமும் வழங்குகிறது. நடுத்தர மக்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களும், இப்போது பேட்டரியில் வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக ரூ.10 செலவில், 70 கி.மீ. தூரம் ஓடுகின்றன என்றபோது, இத்தகைய பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் பற்றி அறிவது அவசியமாகிறது.

    எதிர்காலத்தில் பேட்டரி வாகனங்கள்தான் என்ற நிலை உருவாகும் சூழல் வெகு தூரத்தில் இல்லை. எனவே இப்போது சந்தைக்கு வந்துள்ள பேட்டரி இரு சக்கர வாகனங்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம். தொழில்நுட்ப ரீதியில் இவை எவ்வாறு சிறப்பாக செயல்படுகின்றன என்பதை தெரிந்துகொள்வதன் மூலம் சிறந்த பேட்டரி வாகனத்தை வாங்க முடியும்.


    ஏதெர் 450

    பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் புதிய தயாரிப்புதான் இந்த பேட்டரி ஸ்கூட்டர். இந்த நிறுவனம் தனியாருடன் கூட்டு சேர்ந்து சார்ஜிங் மையத்தையும் பெங்களூருவில் நிறுவி வருகிறது. இது 3.9 விநாடிகளில் 40 கி.மீ வேகத்தை எட்டும். இதன் முன்பகுதியில் 7 அங்குல தொடு திரை வசதி கொண்ட டேஷ் போர்டு உள்ளது.

    இது வாகனம் செல்ல வேண்டிய பாதையைக் காட்டும். பேட்டரிக்கு 3 ஆண்டு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. விலை ரூ. 1.24 லட்சம். இதில் அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும்.

    ஹீரோ என்.ஒய்.எக்ஸ். இ5

    இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 45 கி.மீ ஆகும். இந்த ஸ்கூட்டரிலும் லித்தியம் அயன் ரக பேட்டரி தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் பிரஷ் இல்லாத டி.சி. ஹப் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு இருக்கைகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் நிலையில், பின்புற இருக்கையை மடித்துவிட்டு அதில் லோடு ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

    பின் இருக்கையை மடித்து ஓட்டுபவர் முதுகுப்பகுதியில் சாய்ந்து கொள்ளலாம். இதன் பேட்டரிக்கு 3 ஆண்டுகள் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இதன் விலை ரூ.50,490. ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கி.மீ. வரை பயணிக்கலாம். சார்ஜ் ஆக 4 மணி நேரம் ஆகும்.

    ஒகினாவா பிரைஸ்

    இந்தியன் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஒகினாவா இரண்டு பேட்டரி ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. பிரைஸ் மற்றும் ரிட்ஜ் என்ற பெயரில் இவை அறிமுகம் ஆகியுள்ளன. இதில் ஒரு கி.மீ. தூரம் பயணிக்க 10 காசு மட்டுமே செலவாகும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது மூன்று கண்கவர் வண்ணங்களில் வெளிவந்துள்ளது.

    பிரைஸ் ஸ்கூட்டரில் டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், நடுப்பகுதியில் லாக் செய்யும் வசதி, திருடு போவதை எச்சரிக்கும் அலாரம், பொத்தானை அழுத்தி ஸ்டார்ட் செய்யும் வசதி, ஸ்கூட்டர் இருக்குமிடம் அறியும் வசதிகள் உள்ளன.

    மேலும் மொபைல் சார்ஜ் செய்வதற்கான போர்ட், தள்ளிச் செல்லும்போது உதவும் முன்புற, பின்புறம் சுழலும் வசதி, பகல் நேரங்களில் ஒளிரும் விளக்கு ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். இதன் விலை ரூ. 59,889. அதிகபட்ச வேகம் மணிக்கு 75 கி.மீ. ஆகும். பேட்டரி சார்ஜ் செய்தால் 170 கி.மீ. முதல் 200 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். சார்ஜ் ஆக 6 மணி முதல் 8 மணி நேரம் வரை ஆகும். #BatteryBike 
    ட்விட்டரில் பாலியல் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்கள் நடத்தி வரும் #MeToo புகார் ஆட்டோமொபைல் துறையிலும் எழுந்துள்ளது.



    அமெரிக்காவில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களின் முகத்திரையை கிழிப்பதற்காக பாதிக்கப்பட்ட பிரபலங்கள் #MeToo (நானும் பாதிக்கப்பட்டேன்) என்னும் பெயரில் ட்விட்டர் மூலம் பிரசார இயக்கத்தை தொடங்கினர். 

    அதேவேளையில், இந்திய திரையுலகிலும் இந்த #MeToo இயக்கம் வேரூன்ற ஆரம்பித்தது. பாலிவுட் நாயகி தனுஸ்ரீ தத்தா, பாடகி சின்மயி உள்ளிட்டோர் பரபரப்பு புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

    பிரபலங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ட்விட்டரில் நடத்தி வரும் மீடூ புகார், ஆட்டோமொபைல் துறையையும் விட்டுவைக்கவிலை. 




    சினிமா துறையை தொடர்ந்து, மீடூ புகார் கார்ப்பரேட் துறையிலும் பரவியுள்ளது. அந்த வகையில் டாடா மோட்டார்ஸ் தலைமை தகவல் பரிமாற்ற அலுவலர் சுரேஷ் ரங்கராஜன் மீது ட்விட்டரில் புகார் எழுந்துள்ளது. 

    பெண் ஊழியர்களை அச்சுறுத்தியதாக ரங்கராஜன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளன. எனினும் இந்த குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை இதுவரை துவங்கவில்லை. இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    டாடா மோட்டார்ஸ் குழுமத்தில், பணியாளர்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அனைத்து புகார்களும் முறையாக விசாரிக்கப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்த நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. 

    மேலும் சட்டத்திற்கு உட்பட்டு உள்புற புகார் அமைப்பு மூலம் விசாரிக்கப்படுகிறது. விசாரணை நிறைவுற்றதும் முறையான நடவடிக்கை எடுக்கப்படும். என டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கார் பயன்படுத்துவோர் அதனை எப்போதும் புதிது போன்று ஜெலிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
    கார் வாங்க வேண்டும் என்பது பலரது விருப்பமாக உள்ளது. கார் வாங்கிய பிறகு அதை சிலர் சரியாக பராமரிப்பதுண்டு. சிலர் பராமரிப்பில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள்.

    ‘கார் வாங்கி ஓராண்டு ஆகிறது’ என்று கூறினாலும் நம்புவதற்கே கடினமாக இருக்கும் அளவுக்கு புத்தம் புதிய கார் போல பராமரிப்பவர்களும் உள்ளனர். அதுபோல, ‘கார் வாங்கி 6 மாதம்தான் ஆகிறதா?, பார்த்தால் 6 ஆண்டுகள் பழைய கார் போல இருக்கிறதே’ என்று நமக்கு ஷாக் கொடுப்பவர்களும் உண்டு.

    காரை வெறும் இயந்திரம்தானே என்று பார்ப்பவர்கள் இரண்டாவது ரகத்தினர். அவர்கள் பயணிக்க ஒரு வாகனம் என்ற அளவில்தான் அவர்களது எண்ணமும் செயலும் இருக்கும். கார் மீது சிறு கீறல் விழுந்தால் கூட துடித்துப் போகும் அளவுக்கு கார் காதலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் காரைப் பராமரிக்கும் அழகே தனி.

    சரி, நம்மால் பராமரிக்க முடியவில்லை, காரை பார்க்க பளபளவென வைத்திருந்தால்தானே மதிப்பு என்று நினைப்பவர்களுக்கு உதவ பல கார் பராமரிப்பு நிறுவனங்கள் வந்துள்ளன.

    பொதுவாக கார்களை வாங்கிய பின் அதற்கு வாட்டர் வாஷ் மற்றும் இயந்திரங்களில் பழுது நீக்குதல் போன்ற தேவைகளுக்காக விற்பனைக்கு பிந்தைய சேவை மையங்களில் காரை விடுபவர்கள்தான் ஏராளம். ஆனால் கார் பராமரிப்பு மையங்கள் என்பவை காருக்கு புது பொலிவு தருபவை. இவை பெரும்பாலும் காரின் வெளிப்புறத் தோற்றத்தை ஜொலிக்கச் செய்பவை.



    பொதுவாக விலை உயர்ந்த மாடல் கார்களை வைத்திருப்பவர்கள்தான், தங்கள் கார் எப்போதும் புதிது போல பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பாலிஷ் செய்து கொள்வது வழக்கம். ஆனால் இப்போது சிறிய ரகக் கார்கள் வைத்திருப்பவர்களும் தங்கள் காருக்கும் பாலிஷ் போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

    கார் எப்போதும் புதிது போன்று ஜொலிக்க, அதனை அவ்வப்போது சரியாக சுத்தம் செய்ய வேண்டும். வெளிப்புறங்களில் சுத்தம் செய்ய ஷாம்பு பயன்படுத்தலாம்.

    மெழுகு மற்றும் பாலிஷ் செய்யும் போது, சரியானதை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது சில வகை பெயின்ட்கள் அனைத்து பாலிஷ் மற்றும் மெழுகு போன்றவற்றுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதனால் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பெயின்ட் வகையை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற பாலிஷ் அல்லது மெழுகு பயன்படுத்தலாம்.

    சமீபத்தில் காருக்கு பெயின்ட் அடித்திருந்தாலோ அல்லது புதிய கார் வாங்கியிருந்தாலோ பெயின்ட் கன்டிஷனர் பயன்படுத்தலாம். கன்டிஷனர் பயன்படுத்தும் போது அதனுடன் வழங்கப்படும் வழிமுறைகளை சரியாக பின்பற்றுவது அவசியமாகும்.

    காரின் வெளிப்புறத்தில் பாலிஷ் மற்றும் வேக்சிங் செய்வது சிறப்பான தோற்றத்தை வழங்கினாலும், அவற்றை நீண்ட காலத்திற்கு பாதுகாக்க அன்டர்கோட்டிங் அல்லது ரஸ்ட்-ப்ரூஃபிங் செய்ய வேண்டியது அவிசயம் ஆகும். இவ்வாறு செய்யும் போது காரில் துரு பிடிக்காது.
    நிசான் மோட்டார் கம்பெனி நிறுவனம் ஒவ்வொரு ஆறு மாதங்களில் புதிய வாகனங்களை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.
    சென்னை:

    பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான நிசான் மோட்டார் கம்பெனி ஒவ்வொரு ஆறு மாதங்களில் புதிய வாகனங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் 2022-ம் ஆண்டு வாக்கில் ஐந்து சதவிகித பங்குகளை அடையும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிசான் மற்றும் டேட்சன் பிரான்டுகளின் புதிய வாகனங்கள் இந்த பண்டிகை காலம் முதல் வெளியிடப்பட இருக்கிறது. இந்தியாவின் ஊரக பகுதிதளை குறிவைத்து ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் வெளியிட நிசான் திட்டமிட்டுள்ளது. இதுதவிர எஸ்யுவி மாடல் மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் ஒன்றை வெளியிட இருக்கிறது.

    2022-ம் ஆண்டு வாக்கில் எட்டக்கூடிய இலக்கு என அந்நிறுவனத்தின் குஹல் தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்டோமொபைல் சந்தையில் நிசான் மாடல் 1.6 சதவிகிதமாக இருக்கிறது. வரும் 12 முதல் 18 மாத காலத்தில் மேலும் ஒரு சதவிகித வரை அதிகரிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான ஏஎம்டி வசதி கொண்ட மாடல்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் இதுவரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான ஏஎம்டி (AMT) வசதி கொண்ட வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

    2014-ம் ஆண்டு மாருதி சுசுகி அறிமுகம் செய்த மாருதி செலரியோ மாடலில் முதல் முறையாக ஏஎம்டி தொழில்நுட்பம் வழங்கப்பட்டது. தற்சமயம் வரை மாருதி சுசுகி நிறுவனம் ஏழு மாடல்களில் ஏஎம்டி வசதியை வழங்குகிறது. 

    மாருதி சுசுகி ஆல்டோ K10, வேகன்ஆர், செலரியோ, ஸ்விஃப்ட், இக்னிஸ், டிசையர் மற்றும் சமீபத்தில் அறிமுகமான விடாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட மாடல்களில் மாருதி ஏஎம்டி வசதியை வழங்குகிறது.


    கோப்பு படம்

    ஏஎம்டி கியர்பாக்ஸ் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. இதுவரை விற்பனையானதில் சுமார் 43 சதவிகித செலரியோ மாடல்கள் ஏஎம்டி வசதி கொண்டிருக்கிறது. இதேபோன்று இக்னிஸ் மற்றும் டிசையர் மாடல்களில் முறையே 28 சதவிகிதம் மற்றும் 17 சதவிகிதம் ஏஎம்டி வசதி கொண்ட மாடல்கள் ஆகும்.

    இத்துடன் 2014-15 ஆண்டுடன் ஒப்பிடும் போது ஏஎம்டி மாடல்கள் அறிமுகமானதில் இருந்து மாருதி சுசுகியின் மொத்த விற்பனை 2017-18 நிதியாண்டு காலக்கட்டத்தில் மும்மடங்கு அதிகரித்துள்ளதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. 2018-19 நிதியாண்டு காலக்கட்டத்தில் சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ஏஎம்டி மாடல்களை விற்பனை செய்ய மாருதி சுசுகி திட்டமிட்டுள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது முதல், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு இதர நிறுவனங்களும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கி வருகின்றன. அந்த வகையில் டாடா, மஹேந்திரா, ரெனால்ட் மற்றும் நிசான் உள்ளிட்டவை தங்களது மாடல்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்குகின்றன.
    ×