search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Audi"

    • ஆடி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
    • 2021 ஆண்டை விட கடந்த ஆண்டு 44 சதவீதம் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை ஆடி வினியோகம் செய்து இருக்கிறது.

    ஆடி நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 1.61 மில்லியன் வாகனங்களை வினியோகம் செய்து இருக்கிறது. 2021 ஆண்டு ஐரோப்பா, ஜெர்மனி மற்றும் இதர முக்கிய சந்தைகளில் விற்றதை விட அதிக வாகனங்களை கடந்த ஆண்டு வினியோகம் செய்து இருக்கிறது. ஆடி நிறுவனத்தின் ஆல் எலெக்ட்ரிக் மாடல்கள்- ஆடி Q4 இ டிரான், ஆடி இ டிரான் GT குவாட்ரோ1 மற்றும் ஆடி இ டிரான் உள்ளிட்டவற்றுக்கு அதிக வரவேற்பு கிடைத்தன.

    எலெக்ட்ரிக் பிரிவில் ஆடி Q8 இ டிரான மாடல் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த மாடல் 2023 மார்ச் முதல் ஜூன் மாதத்திற்குள் விற்பனைக்கு வர இருக்கிறது. அதற்குள் இந்த மாடலை வாங்க பெரும்பாலானோர் முன்பதிவு செய்துள்ளனர். 2026 ஆண்டில் இருந்து ஆடி நிறுவனம் சர்வதேச சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

    கடந்த ஆண்டு ஆடி நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 18 ஆயிரத்து 196 எலெக்ட்ரிக் வாகனங்களை கடந்த ஆண்டு வினியோகம் செய்து இருக்கிறது. இது 2021 ஆண்டுடன் ஒப்பிடும் போது 44.3 சதவீதம் அதிகம் ஆகும். இதில் ஆடி A3 (+12.1 சதவீதம்), ஆடி A4 (+8.0 சதவீதம்) மற்றும் ஆடி Q5 (+2.7 சதவீதம்) வளர்ச்சியை பெற்றுள்ளன.

    "எலெக்ட்ரிக் மொபிலிட்டி சரியான பாதையில் இருப்பதை உணர்த்தும் வகையில் எங்களின் ஆல் எலெக்ட்ரிக் மாடல்கள் அமோக விற்பனையை பதிவு செய்கின்றன. போட்டி மற்றும் புதுமைகள் நிறைந்த சூழலில், எங்களின் சர்வதேச குழு கடந்த ஆண்டு மேலும் ஒரு முறை கடினங்களை எதிர்கொண்டுவிட்டது."

    "குழுவினரின் விடா முயற்சி, தலைசிறந்த நிர்வாக திறன் மற்றும் சீரான விற்பனை இலக்கு உள்ளிட்டவைகளுக்கு நன்றி. இதன் காரணமாக கடந்த ஆண்டு வியாபாரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடிந்தது," என ஆடி நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினர் ஹில்டிகார்ட் வொர்ட்மேன் தெரிவித்து இருக்கிறார். 

    • ஆடி நிறுவனத்தின் Q2 மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் சர்வதேச சந்தையில் இருந்து நீக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ஆடி நிறுவனத்தின் Q3 மாடல் இந்தியாவில் அந்நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் எஸ்யுவி-ஆக மாறுகிறது.

    ஆடி இந்தியா நிறுவம் தனது Q2 ஆடம்பர காம்பேக்ட் எஸ்யுவி மாடலை சத்தமின்றி தனது வலைதளத்தில் இருந்து நீக்கி இருக்கிறது. இந்திய சந்தையில் ஆடி Q2 மாடல் சிபியு முறையில் கொண்டுவரப்பட்டது. இந்தியாவுக்காக ஒதுக்கப்பட்ட Q2 மாடல்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி உலக சந்தையிலும் ஆடி Q2 உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

    வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து இந்தியாவில் ஆடி Q2 விற்பனை முடிவுக்கு வந்துள்ளது. மேலும் ஆடி நிறுவனம் முற்றிலும் புதிய Q3 மாடலை இந்திய சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டது. அந்த வகையில் புதிய தலைமுறை ஆடி Q3 மாடல் இந்திய சந்தையில் ஆடி நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் எஸ்யுவி-ஆக இருக்கும் என தெரிகிறது. முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் ஆடி Q2 மாடல் நிறுத்தப்படும் என ஆடி ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    ஆடி நிறுவனம் பெரிய பிரீமியம் கிராஸ்ஓவர் மற்றும் எஸ்யுவி மாடல்கள் மீது அதிக கவனம் செலுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்திய சந்தையில் ஆடி Q2 மாடல் அக்டோபர் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஸ்யுவி மாடல் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிகுவான் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 190 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் வகையில் டியூன் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 228 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    • ஆடி நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மூன்று முறை தனது கார்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.
    • இதன் மூலம் ஆடி கார்களின் புதிய விலை அடுத்த ஆண்டின் முதல் நாளில் இருந்து அமலுக்கு வருகிறது.

    ஆடி இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை 1.7 சதவீதம் வரை உயர்த்துகிறது. உற்பத்தி மற்றும் உபகரணங்களின் செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதையே ஆடி இம்முறை விலை உயர்வுக்கும் காரணமாக தெரிவித்து இருக்கிறது. விலை உயர்வு 2023 ஜனவரி 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் ஆடி நிறுவனம் மூன்று முறை தனது கார்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.

    2022 ஜனழரி மற்றும் ஏப்ரல் 2022 மாதங்களில் ஆடி கார்களின் விலை அதிகபட்சம் 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. பின் பண்டிகை காலத்தை ஒட்டி செப்டம்பர் மாத வாக்கில் கார்களின் விலை 2.4 சதவீதம் உயர்த்தப்பட்டது.

    "ஆடி இந்தியாவின் வியாபார நுனுக்கம் ஒரு மாடலின் லாபம் மற்றும் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதே ஆகும். உற்பத்தி மற்றும் நிர்வாக செலவீனங்கள் அதிகரிப்பதாலேயே விலை மாற்றம் செய்யப்படுகிறது." என ஆடி இந்தியா தலைவர் பல்பிர் சிங் திலான் தெரிவித்து இருக்கிறார்.

    இந்திய சந்தையில் ஆடி நிறுவனம் தற்போது ஆடி A4, ஆடி A6, ஆடி A8L, ஆடி Q3, ஆடி Q5, ஆடி Q7, ஆடி S5 ஸ்போர்ட்பேக், ஆடி RS 5 ஸ்போர்ட்பேக், ஆடி RS Q8 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் ஆடி இ டிரான் 50, இ டிரான் 55, இ டிரான் ஸ்போர்ட்பேக் 55 மாடல்களை கொண்டிருக்கிறது. இதுதவிர இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் சூப்பர்கார்கள், ஆடி இ டிரான் GT மற்றும் ஆடி RS இ டிரான் GT மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    • ஆடி நிறுவனம் முற்றிலும் புதிய Q8 இ டிரான் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்திய சந்தையில் புதிய Q8 இ டிரான் விற்பனை அடுத்த ஆண்டு வாக்கில் துவங்க இருக்கிறது.

    ஆடி நிறுவனம் 2018 வாக்கில் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடல்- ஆடி இ டிரான் அறிமுகம் செய்தது. அன்று முதல் இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் கார்களை ஆடி விற்பனை செய்துள்ளது. இது உலகளவில் விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கை ஆகும்.

    2023 ஆண்டிற்காக ஆடி தனது இ டிரான் மாடலை ரிபிராண்டு செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் புதிய இ டிரான் மாடல் இனி ஆடி Q8 இ டிரான் என அழைக்கப்பட இருக்கிறது. பெயர் மட்டுமின்றி புது கார் ஏராளமான மாற்றங்களை பெற்று இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் - Q8 இ டிரான், SQ8 இ டிரான் மற்றும் Q8 இ டிரான் ஸ்போர்ட்பேக் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    தற்போது ஆடி நிறுவனம் எட்டு முழுமையான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. 2026 வாக்கில் 20-க்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த ஆடி நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2026 முதல் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே அறிமுகம் செய்ய ஆடி திட்டமிட்டுள்ளது.

    புதிய ஆடி Q8 இ டிரான் மாடல் மூன்று வித டிரைவ்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை 50, 55 மற்றும் டாப் எண்ட் SQ8 என அழைக்கப்படுகின்றன. இதில் அதிக ரேன்ஜ் 55 மாடல்களில் கிடைக்கின்றன. இவை முழு சார்ஜ் செய்தால் 582 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகின்றன. ஸ்போர்ட்பேக் மாடல் 600 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இதன் S ரேன்ஜ் 973 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    • ஆடி இந்தியா நிறுவனம் முற்றிலும் புது Q5 ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • ஆடி இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கும் ஸ்பெஷல் எடிஷன் கார் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    ஆடி இந்தியா நிறுவனம் Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆடி Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடலின் விலை ரூ. 67 லட்சத்தி 05 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஸ்டாண்டர்டு டெக்னாலஜி வேரியண்டை விட ரூ. 84 ஆயிரம் அதிகம் ஆகும். இந்த கார் டாப் எண் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடல் பிளாக் ஸ்டைலிங் பேக்கேஜில் கிடைக்கிறது. இந்த கார் பிளாக்டு-அவுட் லோகோ, கிளாஸ் பிளாக் முன்புற கிரில், பிளாக் ரூப், பிளாக் ORVM கேப்கள், 19 இன்ச் 5-ஸ்போக் அலாய் வீல்கள் கிராபைட் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் கார் ஐபிஸ் வைட் மற்றும் புதிய டிஸ்ட்ரிக்ட் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    இது தவிர ஆடி Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடல் எல்இடி ஹெட்லேம்ப்கள், பானரோமிக் சன்ரூப், 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, 12.2 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, 3 ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 30 நிறங்கள் அடங்கிய ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர், முன்புறம் பவர்டு இருக்கைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    ஆடி Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடலின் என்ஜினில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த காரிலும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 249 ஹெச்பி பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • அனைத்து ஆடி விற்பனை மையங்களில் 22 கிலோ வாட் சார்ஜர் பொறுத்தப்பட்டு இருக்கிறது.

    ஜெர்மன் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தியாளராக ஆடி இந்தியா முழுக்க 60 நகரங்களில் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கட்டமைத்து இருக்கிறது. ஆடி விற்பனை மையங்கள் மற்றும் வொர்க்ஷாப் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் விற்பனை மையங்களில் பாஸ்ட் சார்ஜர் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது.

    இது மட்டுமின்றி நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளிலும் ஆடி பாஸ்ட் சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அனைத்து ஆடி விற்பனை மையங்களிலும் 22 கிலோ வாட் சார்ஜர் இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளது. 16 விற்பனை மையங்களில் 50 கிலோ வாட் டிசி பாஸ்ட் சார்ஜர் பொறுத்தப்பட்டு இருக்கிறது.


    சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் ஆடி இந்திய சந்தையிலும் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது ஆடி நிறுவனம் இ-டிரான் எஸ்யுவி, இ-டிரான் ஸ்போர்ட் பேக், இ-டிரான் ஜிடி மற்றும் ஆர்எஸ் இ-டிரான் ஜிடி போன்ற எலெக்ட்ரிக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    "மாற்று எரிசக்தி கொண்ட மாடல்களை அறிமுகம் செய்ய தெளிவான திட்டம் தீட்டி இருக்கிறோம். நாங்கள் நாடு முழுக்க 100-க்கும் அதிக சார்ஜர்களை இன்ஸ்டால் செய்து இருக்கிறோம். வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த இருக்கிறோம். எதிர்காலம் எலெக்ட்ரிக் தான், அதற்கு ஆடி இந்தியா தயாராக இருக்கிறது," என ஆடி இந்தியா நிறுவன தலைவர் பால்பிர் சிங் திவான் தெரிவித்து இருக்கிறார்.

    • ஆடி நிறுவனத்தின் முற்றிலும் புதிய Q3 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • இந்தியாவில் புதிய ஆடி Q3 மாடல் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    ஆடி இந்தியா நிறுவனம் புதிய Q3 மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய ஆடி Q3 மாடல் விலை ரூ. 44 லட்சத்து 89 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    தோற்றத்தில் புதிய ஆடி Q3 மாடல் சிங்கில் ஃபிரேம் கிரில், ஆக்டகோனல் டிசைன், செங்குத்தான ஸ்லாட்கள், புதிய எல்இடி டிஆர்எல்கள், வெட்ஜ் வடிவ ஹெட்லேம்ப்கள், கிளாஸ் பிளாக் கிளாடிங், 18 இன்ச் அலாய் வீல்கள், பிளாக் ஷார்க் பின் ஆண்டெனா மற்றும் ரூஃப் ரெயில்கள், ராப்-அரவுண்ட் 2 பீஸ் எல்இடி டெயில் லைட்கள், டூயல் டோன் பின்புற பம்ப்பர் வழங்கப்பட்டு உள்ளது.


    இந்த காரின் உள்புறம் பானரோமிக் சன்ரூப், ஆம்பியண்ட் லைட்டிங், ஆடி டிரைவ் செலக்ட், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இரண்டாம் அடுக்கு இருக்கைகள், குரூயிஸ் கண்ட்ரோல், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஆடி ஸ்மார்ட்போன் இண்டர்பேஸ், MMI நேவிகேஷன் பிளஸ், வயர்லெஸ் சார்ஜிங், ஜெஸ்ட்யுர் கண்ட்ரோல் டெயில்கேட், 180 வாட் 10 ஸ்பீக்கர் ஆடி சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஆடி Q3 மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட TFSI டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 187 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும்.

    2022 ஆடி Q3 காரை வாங்கும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் மூன்று ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் வரை சர்வீஸ் வேல்யூ பேக்கேஜ் வழங்கப்படுகிறது. புதிய ஆடி Q3 டெக்னாலஜி வேரியண்ட் விலை ரூ. 50 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ஆடி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.
    • இந்த முறை கார்களின் விலை 2.4 சதவீதம் வரை உயர்த்தப்பட இருக்கிறது.

    ஆடி இந்தியா நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை 2.4 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. விலை உயர்வு ஆடி இந்தியாவின் அனைத்து மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இந்த விலை உயர்வு செப்டம்பர் 20, 2022 முதல் அமலுக்கு வருகிறது.

    ஆட்டோமொபைல் சந்தையில் தொடர் செலவீனங்கள் அதிகரிப்பு மற்றும் வினியோக சிக்கல் போன்ற காரணங்களால் விலை உயர்வு அறிவிக்கப்படுவதாக ஆடி இந்தியா தெரிவித்து இருக்கிறது.


    தற்போது ஆடி இந்தியா நிறுவனம் ஆடி A4, A6, A8 L, Q5, Q7, Q8, S5 ஸ்போர்ட்பேக், RS 5 ஸ்போர்ட்பேக் மற்றும் RS Q8 போன்ற கார்களை பெட்ரோல் பிரிவில் விற்பனை செய்து வருகிறது. இ-டிரான் பிராண்டின் கீழ் ஆடி இந்தியா நிறுவனம் இ-டிரான் 50, இ-டிரான் 55, இ-டிரான் ஸ்போர்ட்பேக் 55, இ-டிரான் GT மற்றும் RS இ-டிரான் GT போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    இது தவிர ஆடி இந்தியா நிறுவனம் சமீபத்தில் தான் முற்றிலும் புதிய Q5 மாடலுக்கான முன்பதிவை இந்தியாவில் துவங்கியது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் ஆகும். இத்துடன் இந்த மாடலின் வேரியண்ட் வாரியான அம்சங்கள் பற்றியும் ஆடி இந்தியா அறிவித்து விட்டது. இந்த காரின் விலை விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது.

    • ஆடி நிறுவனத்தின் 2022 Q3 மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இந்த கார் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

    ஜெர்மனி நாட்டு ஆடம்பர கார் உற்பத்தியாளரான ஆடி புதிய Q3 மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. 2022 ஆடி Q3 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் ஆகும். இந்த கார் பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த காரை வாங்கும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு (2+3 ஆண்டுகள்) நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகையை பெற முடியும்.


    புதிய ஆடி Q3 மாடலில் 2.0 லிட்டர் TFSI என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் ஆல் வீல் டிரைவ் வசதியை கொண்டுள்ளது.

    காரின் வெளிப்புறம் எல்இடி ஹெட்லைட்கள், பானரோமிக் சன்கிளாஸ், ஹை கிளாஸ் ஸ்டைலிங் பேக்கேஜ், கம்பர்ட் கீ மற்றும் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் டெயில்கேட் வழங்கப்பட்டு இருக்கிறது. உள்புறம் ஆடி விர்ச்சுவல் காக்பிட் பிளஸ், MMI நேவிகேஷன் பிளஸ் மற்றும் MMI டச், ஆடி டிரைவ் செலக்ட், வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட ஆடி போன் பாக்ஸ், 30 நிறங்கள் அடங்கிய ஆம்பியண்ட் லைட்டிங் பேககேஜ் பிளஸ் வழங்கப்பட்டுள்ளன. 

    • ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய Q3 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • முன்னதாக ஆடி நிறுவனம் தனது A8L மாடலை அறிமுகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆடி நிறுவனம் பிளாக்‌ஷிப் A8L மாடலை அப்டேட் செய்த கையோடு முற்றிலும் புதிய Q3 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட ஆடி விற்பனையாளர்கள் முற்றிலும் புதிய Q3 மாடலுக்கான முன்பதிவை துவங்கி விட்டன. புதிய தலைமுறை ஆடி Q3 மாடல் Q8 கார் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஆடி Q3 மாடலில் ஹெக்சகன் வடிவம் கொண்ட ரேடியேட்டர் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய டிஆர்எல்-கள், புதிய அலாய் வீல்கள், ரூப் ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய Q3 மாடல் அதிநவீன MQB ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு உள்ளது. காரின் உள்புறம் புதிய இன்போடெயின்மெண்ட் டச் ஸ்கிரீன், புதிய ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டு உள்ளது.


    இத்துடன் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்படுகிறது. இந்த காரில் 10 இன்ச் அளவில் டிரைவர் டிஸ்ப்ளே, 8.8 இன்ச் அல்லது 10.1 இன்ச் அளவில் இன்போடெயின்மெண்ட் டச் ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய ஆடி Q3 மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர், டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    மேலும் குவாட்ரோ ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் வசதியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும் புதிய ஆடி Q3 மாடல் பி.எம்.டபிள்யூ. X1, மெர்சிடிஸ் பென்ஸ் GLA, வால்வோ XC40 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

    • ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் முதல் நாள் புதுமண தம்பதிகள் அதிகாலை காவிரியாற்றுக்கு சென்று புனித நீராடி பின்னர் கோவிலுக்கு சென்று வழிபடுவர்.
    • பொதுமக்களும்,குழந்தைகளும்,புதுமண தம்பதியினரும் தேங்காய் சுட்டு வழிபட்டனர்.

    பரமத்திவேலூர்:

    ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் முதல் நாள் புதுமண தம்பதிகள் அதிகாலை காவிரியாற்றுக்கு சென்று புனித நீராடி பின்னர் கோவிலுக்கு சென்று வழிபடுவர். ஆனால் தற்போது காவிரியில் வெள்ளப்பெருக்கால் அவரவர் வீட்டிலேயே நீராடி கோயில்களுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் மாலை பொதுமக்களும்,குழந்தைகளும்,புதுமண தம்பதியினரும் தேங்காய் சுட்டு வழிபட்டனர்.

    மாலை புதுமண தம்பதியினர்,குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவுல்,பொட்டு கடலை, நாட்டுச்சர்க்கரை,எள்,அரிசி,பாசிப்பருப்பு ஆகிய பொருட்களை இளம் தேங்காயில் அடைத்து வாதனா மரக்குச்சியில் இணைத்து தெருமக்கள் ஒன்று கூடி தீயில் சுட்டு மகிழ்ந்தனர். தீயில் சுட்டு வெடித்த தேங்காய்களை அந்தந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் படைத்து வழிபட்டனர். பின்னர் அந்த தேங்காயை உடைத்து உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்தவற்றை அக்கம்,பக்கத்தில் உள்ளவர்களுடன் பகிர்ந்து உண்டு தலையாடி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    • ஆடி நிறுவனத்தின் புதிய A8 L மாடல் சக்திவாய்ந்த வி6 என்ஜின் கொண்டு இருக்கிறது.
    • இந்த கார் ஹைப்ரிட் சிஸ்டம் வசதி கொண்டு இருக்கிறது.

    ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2022 ஆடி A8 L பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் புதிய ஆடி A8 L மாடலின் விலை ரூ. 1 கோடியே 29 லட்சம் என துவங்குகிறது. இதன் டெக்னாலஜி எடிஷன் விலை ரூ. 1 கோடியே 57 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய ஆடி A8 L ஃபிளாக்‌ஷிப் செடான் மாடல் நீண்ட வீல்பேஸ் கொண்டுள்ளது. ஆடி இந்தியா நிறுவனம் புதிய A8 L ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு மே மாதத்திலேயே துவங்கி விட்டது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் ஆகும். 2022 பிப்ரவரி மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட 2022 ஆடி A8 L ஃபேஸ்லிப்ட் மாடல் தற்போது இந்தியாவில்ல் வெளியாகி இருக்கிறது.


    2022 ஆடி A8 L பேஸ்லிப்ட் மாடலில் 3 லிட்டர் TFSI பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 340 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கி.மீ. வேகத்தை 5.7 நொடிகளில் எட்டிவிடும்.

    இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் மட்டுமின்றி 4 லிட்டர் TFSI என்ஜின் ஆப்ஷனாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 460 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது ஆகும்.

    ×