search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asia Cup 2018"

    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். #AsiaCup2018 #INDvBAN
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை 5 மணிக்கு துபாயில் தொடங்குகிறது. இதில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சரியாக மாலை 4.30 மணிக்கு சுண்டப்பட்டது. வங்காள தேச அணி கேப்டன் மோர்தசா ‘ஹெட்’ என அழைத்தார். ஆனால் ‘டெய்ல்’ விழ ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.
    இந்தியாவிற்கு எதிராக இறுதிப் போட்டியில் 260 முதல் 270 வரை அடித்தால் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்க முடியும் என வங்காள தேசம் கேப்டன் தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை 5 மணிக்கு துபாயில் தொடங்குகிறது. இதில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. துபாய் மைதானத்தில் இந்தியா ஒரேயொரு முறைதான் முதலில் பேட்டிங் செய்தது. அந்த போட்டியில் இந்தியா நிர்ணயித்த ஸ்கோரை ஹாங் காங் விரட்டியது. மற்ற போட்டிகளில் இந்தியா 2-வது பேட்டிங் செய்து வெற்றிகளை பெற்றது. கடைசி போட்டி ‘டை’யில் முடிந்தது.

    இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக 260 முதல் 270 ரன்கள் அடித்தால் சிறந்த முறையில் நெருக்கடி அளிக்க முடியும் என வங்காள தேச அணி கேப்டன் மோர்தசா தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து மோர்தசா கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக நாங்கள் 260 முதல் 270 ர ன்கள் அடித்தால், அது நெருக்கடி கொடுக்கும் அளவிற்கான ஸ்கோராக இருக்கும். எனினும், அது வெற்றிக்கான ரன்கள் என்னால் உறுதியாக கூற இயலாது. நாங்கள் முதலில் பந்து வீசினால், அவரைகள் குறைந்த ரன்னில் கட்டுப்படுத்த வேண்டும். அப்படி என்றால்தான் அது சிறப்பானதாக இருக்கும்.

    இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்தான் வங்காள தேசத்தின் அழகான போட்டியை கண்டேன். முஷ்பிகுர் ரஹிம், மிதுன் பேட்டிங்கிலும், மிராஜ் மற்றும் முஷ்டாபிஜுர் ரஹ்மான் பந்து வீச்சிலும் அசத்தினார்கள்’’ என்றார்.
    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டத்திற்காக இந்தியா-வங்காளதேச அணிகள் இன்று கோதாவில் இறங்குகின்றன. #AsiaCup2018 #INDvBAN
    துபாய்:

    14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் சூப்பர்-4 சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, பாகிஸ்தான் உள்பட 4 அணிகள் வெளியேற்றப்பட்டன.



    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியாவும், வங்காளதேசமும் துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) மோதுகின்றன.

    இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி இந்தியா தான். ஆனால் பெரிய அணிகளுக்கு எதிராக அமர்க்களப்படுத்திய இந்தியா, குட்டி அணிகளுக்கு எதிராக தகிடுதத்தம் போட்டது. ஹாங்காங்குக்கு எதிரான லீக்கில் பெரும் போராட்டத்திற்கு பிறகே வெற்றி கிடைத்தது. 

    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வியில் இருந்து தப்பித்து சமன் (டை) செய்ததே பெரிய விஷயமாகும். அதே சமயம் பாகிஸ்தானை இரண்டு முறையும், வங்காளதேசத்தை ஒரு முறையும் குறைந்த ரன்களில் சுருட்டி புரட்டியெடுத்தது.

    தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும் (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 269 ரன்), துணை கேப்டன் ஷிகர் தவானும் (2 சதம் உள்பட 327 ரன்) தான் இந்தியாவின் பேட்டிங் தூண்கள் ஆவர். அவர்கள் விளையாடிய 4 ஆட்டங்களிலும் பிரமாதமான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்து வெற்றிக்கு வழிவகுத்தனர். 

    அதே போல் முக்கியமான இந்த ஆட்டத்திலும் அவர்கள் பதற்றமின்றி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் நன்றாக ஆடுகிறார்கள். மிடில் வரிசையில் விக்கெட் கீப்பர் டோனி, கேதர் ஜாதவின் தடுமாற்றம் பலவீனமாக பார்க்கப்படுகிறது. இதே நிலை நீடித்தால் 2-வது பேட்டிங்கில் 240 ரன்களை ‘சேசிங்’ செய்வது கூட கடினமாகி விடும். இவர்கள் பார்முக்கு திரும்பினால் அணி மேலும் வலுவடையும்.

    வேகம் குறைந்த இங்குள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜாவின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும். வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, புவனேஷ்வர்குமாரும் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

    மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணியில் காயம் காரணமாக தமிம் இக்பால், ஷகிப் அல்-ஹசன் ஆகிய முன்னணி வீரர்கள் விலகி விட்டனர். முஷ்பிகுர் ரஹிம் (ஒரு சதம் உள்பட 297 ரன்), முகமத் மிதுன், மக்முதுல்லா ஆகியோரைத் தான் அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது. இவர்கள் நிலைத்து நின்று ஆடினால், நிச்சயம் இது பரபரப்பான போட்டியாக அமையும்.

    சர்வதேச கிரிக்கெட்டில் வங்காளதேச அணி இதுவரை 8 ‘நாக்-அவுட்’ சுற்றில் விளையாடி இருக்கிறது. அவை அனைத்திலும் தோல்வியே மிஞ்சியது. இதில் இந்தியாவுக்கு எதிராக 4 ஆட்டங்களும் அடங்கும். எனவே இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அது வங்காளதேசத்துக்கு வரலாற்று சாதனையாக பதிவாகும்.

    ஆசிய கிரிக்கெட்டில் இரண்டு முறை இறுதி ஆட்டத்தில் கோட்டைவிட்ட வங்காளதேசம் இந்த முறை கூடுதல் உத்வேகத்துடன் களத்தில் வரிந்து கட்டும். ஏற்கனவே சூப்பர்-4 சுற்றில் இந்தியாவிடம் அடைந்த படுதோல்விக்கும் பழிதீர்க்க தீவிரம் காட்டுவதால், இன்றைய மோதலில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    வங்காளதேசத்துடன் ஒப்பிடும் போது இந்தியாவின் கையே ஓங்கி நிற்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்திய வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். ஒருங்கிணைந்த முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்தியாவின் கையில் 7-வது முறையாக ஆசிய கோப்பை தவழ்வதை யாராலும் தடுக்க முடியாது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், டோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், பும்ரா.

    வங்காளதேசம்: லிட்டான் தாஸ், சவும்யா சர்கார், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம், முகமத் மிதுன், இம்ருல் கேயஸ், மக்முதுல்லா, மெஹிதி ஹசன், மோர்தசா (கேப்டன்), ருபெல் ஹூசைன், முஸ்தாபிஜூர் ரகுமான்.

    இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.  #AsiaCup2018 #INDvBAN
    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்காள தேசத்தை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம் என்று தவான் தெரிவித்துள்ளார். #AsiaCup2018 #INDvBAN
    இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆறு அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபு தாபி மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதுவரை லீக் மற்றும் சூப்பர் 4 சுற்று முடிந்து நாளை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்திய அணி தோல்வியை சந்திக்காமலும், வங்காள தேசம் இரண்டு தோல்வியுடனும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளன.

    சூப்பர் 4 சுற்றில் இந்தியா வங்காள தேசத்தை வீழ்த்தியிருந்தாலும். என்றாலும் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் வங்காள தேசத்தை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோன் என்று துணைக் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷிகர் தவான் கூறுகையில் ‘‘வங்காள தேசம் அணி மிகவும் பேலன்ஸ் ஆன அணி. அவர்களுடைய பலம் அவர்களுக்குத் தெரியும். கடந்த சில வருடங்களாக அவர்கள் நின்றாக முன்னேற்றம் அடைந்து, தரமான அணியாக மாறியுள்ளனர். பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்படுகின்றன. அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டா், முடிவுகள் இயற்கையாகவே வந்து சேரும்.



    வங்காள தேசம் அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். வங்காள தேசத்தை தவிர ஐக்கிய அரபு எமிரேட்சிலும் அந்த அணியை வீழ்த்துவது கடினம். அனுபவமான வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். அவர்களுக்கு நெருக்கடியான நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பது தெரியும். பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடும்போது கூட நெருக்கடிக்கு உள்ளாவது கிடையாது. இது சிறந்த விஷயமாகும். சூப்பர் 4 சுற்றில் அவர்களை தோற்கடித்திருந்தாலும், நாளைய போட்டியை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம்’’ என்றார்.
    வங்காள தேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் அணி 2014-ம் ஆண்டிற்கு முன் 32 போட்டிகளில் 31 வெற்றிகளை ருசித்த நிலையில், தற்போது தடுமாறி வருகிறது. #AsiaCup2018 #BANvPAK
    பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய 6 அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை அணிகள் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் வளர்ந்து வரும் அணிகள் என்பதால் அவ்வப்போது பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும்.

    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை வங்காள தேசம் 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    இந்தியா - பாகிஸ்தான், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆட்டம் எவ்வளவு முக்கியமானதாக கருதப்படுகிறதோ, அதேபோல் பாகிஸ்தான் - வங்காள தேச அணிகள் இடையிலான ஆட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    ஆரம்ப கால கட்டத்தில் வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் எளிதில் வெற்றி பெற்று விடும். தற்போது பாகிஸ்தான் கடும் சவாலை சந்திக்க வேண்டியுள்ளது.



    1986-ம் ஆண்டு முதல் 2014 வரை பாகிஸ்தான் - வங்காள தேசம் இடையில் 32 போட்டிகள் நடைபெற்றன. இதில் 25 போட்டிகளில்  தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பாகிஸ்தான் 31 வெற்றிகளை ருசித்தது. ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை சந்திதது.

    ஆனால் 2015-க்குப் பிறகு பாகிஸ்தான் நிலைமைய தலைகீழாக மாறியுள்ளது. 2015 முதல் நேற்று வரை நான்கு போட்டிகளில் மோதியுள்ளன. இந்த நான்கிலும் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது.
    வங்காள தேசத்திடம் தோல்வியடைந்து இறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான், பயிற்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அப்ரிடி வலியுறுத்தியுள்ளார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேற இயலும் என்ற நிலையில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் பேட்டிங் வங்காள தேசம் 239 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. பாகிஸ்தான் அணியால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது.

    வங்காள தேசம் அணியிடம் தோல்வியடைந்து பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஷாகித் அப்ரிடி ‘டுவிட்டர்’ மூலம் அறிவுரை வழங்கியுள்ளார்.

    அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வங்காள தேச அணிக்கு வாழ்த்துக்கள். அனைத்து துறையிலும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு ஏமாற்றம் அளித்தது. மைதானத்தில் ஆக்ரோசமான ஆட்டம் அனைத்து துறைகளிலும் மிஸ். கடந்த தொடரில் இளம் வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அணி மீது அதிக அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. திரும்பவும் நல்ல நிலைக்கு திரும்பி பயிற்சி ஆட்டத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்’’  என பதிவிட்டுள்ளார்.
    ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் நாளை நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா-மொர்தாசா தலைமையிலான வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன. #AsiaCupfinal #AsiaCup2018 #INDvBAN
    துபாய்:

    6 நாடுகள் பங்கேற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. கடந்த 15-ந் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 6 நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. 20-ந் தேதியுடன் ‘லீக்’ ஆட்டம் முடிந்தது. இதன் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    5 முறை சாம்பியனான இலங்கை, ஹாங்காங் தொடக்க சுற்றிலேயே வெளியேறின. ‘சூப்பர்4’ சுற்று 21-ந் தேதி தொடங்கியது.

    இந்திய அணி வங்காள தேசம், பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஆப்கானிஸ்தானுடன் ‘டை’ செய்தது. ஆப்கானிஸ்தான் அணி 2 தோல்வியை தழுவியதால் வாயப்பை இழந்து வெளியேறியது. இறுதிப்போட்டிக்கு நுழையும் இன்னொரு அணியை முடிவு செய்வதற்கான ஆட்டம் அபுதாபியில் நேற்று நடந்தது.


    இதில் பாகிஸ்தான் அணி வங்காளதேசத்திடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியது. முதலில் விளையாடிய வங்காளதேசம் 48.5 ஓவரில் 239 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் வங்காள தேசம் 37 ரன்னில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா-மொர்தாசா தலைமையிலான வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.

    பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் இருக்கும் இந்திய அணி ஆசிய கோப்பையை 7-வது முறையாக வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016 (20 ஓவர்) ஆகிய ஆண்டுகளில் ஆசிய கோப்பையை வென்று இருந்தது.

    இந்த போட்டித்தொடரில் ஏற்கனவே வங்காள தேசத்தை ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. அதே நேரத்தில் வங்காள தேசம் அணியை சாதாரணமாக எடை போட இயலாது. பாகிஸ்தானை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்து இருந்தது. இதனால் இந்திய வீரர்கள் மிகுந்த கவனத்துடன் விளையாடவேண்டும்.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா, தவான், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. நாளைய இறுதிப் போட்டிக்கு அவர்கள் திரும்புவார்கள்.


    தொடக்க வீரர்களான தவான் (327 ரன்), ரோகித் சர்மா (269 ரன்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதில் தவான் இரண்டு சதமும், ரோகித் சர்மா ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதமும் அடித்துள்ளனர். இருவரது ஆட்டத்தை பொறுத்தே அணியின் ரன் குவிப்பு இருக்கும் இதே போல் அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், டோனி, கேதர் ஜாதவ் ஆகியோரும் அணிக்கு பலம் சேர்க்க கூடியவர்கள்.

    பந்து வீச்சில் பும்ரா, குல்தீப் யாதவ் (இருவரும் தலா 7 விக்கெட்), புவனேஷ்வர் குமார் (6 விக்கெட்), யசுவேந்திர சாஹல் (5 விக்கெட்), ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    வங்காள தேசம் அணி 3-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. 2012-ல் பாகிஸ்தானிடமும், 2016-ல் இந்தியாவிடமும் தோற்று கோப்பையை இழந்தது. இதனால் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து முதல் முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது.

    அந்த அணியில் முஷ்பிகுர் ரகிம் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளார். அவர் ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் 297 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருப்பார்.

    பந்துவீச்சில் முஷ்டாபிசுர் ரகுமான் 8 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை கொடுக்க கூடியவர். முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டருமான ஹகீப்-அல்-ஹசன் காயத்தால் விலகியது வங்காளதேச அணிக்கு பாதிப்பே.

    இரு அணிகளும் ஆசிய கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AsiaCupfinal #AsiaCup2018 #INDvBAN
    முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுன் அரைசதங்களால் பாகிஸ்தான் வெற்றிக்கு 240 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம். #AsiaCup2018 #BANvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியில் பாகிஸ்தான் - வங்காள தேசம் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் முகமது அமிர் நீக்கப்பட்டு ஜுனைத் கான் சேர்க்கப்பட்டிருந்தார். வங்காள தேச அணியில் ஷாகிப் அல் ஹசன் இடம்பெறவில்லை.

    லிட்டோன் தாஸ், சவுமியா சர்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சவுமியா சர்கார் ரன்ஏதும் எடுக்காமல் ஜுனைத் கான் பந்தில் ஆட்டமிழந்தார். லிட்டோன் தாஸ் 6 ரன்னில் ஜுனைத் கான் பந்திலும், அடுத்து வந்த மொமினுல் ஹக்யூ 5 ரன்னில் ஷஹீன் அப்ரிடி பந்திலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

    இதனால் வங்காள தேசம் 12 ரன்கள் எடுப்பதற்குள் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் முகமது மிதுன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வங்காள தேசத்தை சரிவில் இருந்து மீட்டது. இவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

    வங்காள தேச அணியின் ஸ்கோர் 156 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. முகமது மிதுன் 60 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் குவித்து அணியை மீட்டனர்.



    அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 9 ரன்னில் வெளியேறினார். 7-வது வீரராக மெஹ்முதுல்லா களம் இறங்கினார். அரைசதம் அடித்த முஷ்பிகுர் ரஹிம் சதத்தை நோக்கி முன்னேறினார். 99 ரன்கள் அடித்த நிலையில் துரதிருஷ்டவசமாக ஷஹீன் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். 7-வது விக்கெட்டுக்கு மெஹ்முதுல்லா உடன் மெஹிதி ஹசன் ஜோடி சேர்ந்தார்.

    இருவரும் அடித்து விளையாடி விரும்பினார்கள். ஆனால் மெஹித் ஹசன் 11 பந்தில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஜுனைத் கான் பந்தில் ஆட்டமிழந்தார். மெஹ்முதுல்லா 25 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 49-வது ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழக்க வங்காள தேசம் 48.5 ஓவரில் 239 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் பாகிஸ்தானுக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் ஜூனைத் கான் நான்கு விக்கெட்டுக்களும், ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் ‘டை’ ஆனதால் கண்ணீர் விட்டு கதறிய சிறுவனுக்கு ரஷித் கான், ஷேசாத் ஆறுதல் கூறினார்கள். #INDvAFG #AsiaCup2018
    இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா தோல்வியை நோக்கிச் சென்றது.

    கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ரஷித் கான் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் போட்டி ‘டை’யில் முடிந்தது. கடைசி ஓவரை சந்தித்த ஜடேஜா முதல் பந்தில் ரன்ஏதும் அடிக்கவில்லை. 2-வது பந்தை பவுண்டரிக்கு தூக்கினார். இதனால் கடைசி நான்கு பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. 3-வது பந்தில் ஜடேஜா ஒரு ரன்னும், 4-வது பந்தில் கலீல் அகமது ஒரு ரன்னும் எடுத்தனர்.

    இதனால் ஸ்கோர் 252 என சமநிலைப் பெற்றது. கடைசி இரண்டு பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தை ஜடேஜா சந்தித்தார். கைவசம் விக்கெட் இல்லாததால் ரசிகர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர். ஜடேஜா ஒரு ரன் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி ‘டை’ ஆனது.



    இந்நிலையில் ஜடேஜா அவுட் ஆனவுடன் மைதானத்தில் இருந்த ஒரு சீக்கிய சிறுவன் மிகவும் கவலையடைந்து அழுதான். இக்காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து அச்சிறுவனை நேரில் சந்தித்து ஆப்கானிஸ்தான் வீரர்களான ரஷித் கான் மற்றும்  முகமது ஷேசாத் ஆகியோர் அறுதல் கூறினார்கள்.

    அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. சிறுவனுக்கு ஆறுதல் கூறிய ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
    ஆசிய கோப்பை ‘சூப்பர் 4’ கடைசி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்காள தேசம் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #AsiaCup2018
    ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றின் கடைசி ஆட்டம் அபு தாபியில் இன்று நடக்கிறது. இதில் பாகிஸ்தான் - வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வங்காள தேச அணி கேப்டன் மோர்தசா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.



    வங்காள தேச அணியில் ஷாகிப் அல் ஹசன் இடம்பெறவில்லை. சர்கார், ருபெல், மொமினுல் ஹக்யூ ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
    கேப்டன் பதவியில் அதிக ‘டை’ முடிவுகளை சந்தித்தவர்களில் மகேந்திர சிங் டோனியே முதல் இடம் பிடித்துள்ளார். #MSDhoni #AsiaCup2018
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. டி20 மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றிய ஒரே இந்திய அணி கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ள டோனி, இந்தியாவிற்காக அதிக போட்டிகளில் விளையாடிய 2-வது வீரரும், கேப்டனாக 200 போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரரும் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    நேற்று இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டி எம்எஸ் டோனி கேப்டனாக களம் இறங்கிய 200-வது போட்டியாகும். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. இதன்மூலம் டோனி தலைமையில் இந்தியா 5-வது முறையாக ‘டை’ முடிவை சந்தித்துள்ளது.



    இதன்மூலம் கேப்டனாக அதிக ‘டை’ போட்டிகளை சந்தித்த முதல் வீரர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார். ஆர் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் வாக், பொல்லாக் ஆகியோர் தலைமையில் அந்தந்த அணிகள் தலா மூன்று முறை ‘டை’ முடிவை சந்தித்துள்ளது.

    இந்த போட்டிக்கு முன்னர் எம்எஸ் டோனி தலைமையில் இந்தியா 199 போட்டிகளில் விளையாடி 110-ல் வெற்றியை ருசித்துள்ளது. 74 போட்டியில் தோல்வியும் சந்தித்துள்ளது. 4 போட்டிகள் ‘டை’யில் முடிந்துள்ளன. 11 போட்டிகள் எந்தவித முடிவையும் சந்திக்கவில்லை.
    இந்தியாவிற்கு எதிராக 6 மணி நேரம் போராடியும் வெற்றி கிடைக்கவில்லை என்று ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் மகமது ஷேசாத் தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் ஸ்கோர் 250-ஐ தாண்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன முகமது ஷேசாத் முக்கிய காரணமாக இருந்தார். அவர் 116 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 124 ரன்கள் குவித்தார்.

    இந்திய அணி 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் 252 ரன்னில் ஆல்அவுட் ஆனது போட்டி ‘டை’யில் முடிந்தது.

    சதம் அடித்த ஷேசாத் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். சதம் அடித்தும் போட்டியில் முடிவு கிடைக்காதது ஷேசாத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



    இதுகுறித்து முகமது ஷேசாத் கூறுகையில் ‘‘இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி முடிவு எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. கடுமையான வெப்பம், 6 மணி நேரம் கஷ்டப்பட்டு மைதானத்தில் விளையாடியுள்ளோம். இந்த முடிவு ஏற்றுக் கொள்ளதக்கதல்ல.

    இது எங்களுக்கு கடைசி போட்டி என்பதால் ஒவ்வொரு பந்தையும் விளாச முடிவு செய்தேன். அதனால் பந்தை பார்த்ததும் விளாசினேன். ஆசியாவில் உள்ள சில சிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடியதை பெருமையான கருதுகிறேன்’’ என்றார்.
    ×