search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amma Unavagam"

    நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை அந்த பெயரிலேயே விரிவுபடுத்தாமல் புதிதாக அதற்கு கலைஞர் உணவகம் என்று பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    500 சமுதாய உணவகங்கள் 'கலைஞர் உணவகம்' என்ற பெயரில் அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியது 'அம்மா உணவகம்' என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாக உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகவும் உள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 2013ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகங்கள், படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டன. இன்று தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 700 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.

    நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை அந்த பெயரிலேயே விரிவுபடுத்தாமல் புதிதாக அதற்கு கலைஞர் உணவகம் என்று பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். காலப்போக்கில் அம்மா உணவகம் என்ற திட்டத்தையே கலைஞர் உணவகம் என்று மாற்றுவதற்கான முயற்சியாக அமைச்சரின் பேச்சு அமைந்திருக்கிறது. 

    ஏழை எளிய மக்களுக்காக குறைந்த விலையில் உணவு வழங்கும் இந்த திட்டம் அம்மா உணவகம் என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்படவேண்டும். 

    எனவே, இதில் முதல்வர் உடனடியாக தலையிட்டு புதிதாக எத்தனை உணவகங்கள் அமைக்கப்பட்டாலும் அவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும்  'அம்மா உணவகம்' என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம்  கூறி உள்ளார்.

    நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை இரு பெயர்களில் செயல்படுத்துவது என்பது இதுவரை நடைமுறையில் இல்லாத வினோதமான ஒன்று என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவில் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நேற்று புதுடெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உணவுத்துறை அமைச்சர் வருங்காலத்தில் 500 சமுதாய உணவகங்கள் “கலைஞர் உணவகம்” என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளதாக கூறி உள்ளார். இது அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாக உள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்களும், பணி நிமித்தமாக பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்து செல்லும் ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 2013-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகங்கள் படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டன.

    இது மட்டுமல்லாமல், சென்னையில் உள்ள பெரிய மருத்துவமனைகளிலும், மாவட்ட தலைநகரங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மற்றும் அரசு தலைமை மருத்துவமைகைளிலும் அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் ஏழை எளிய வெளிப்புற நோயாளிகள், நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் பயன் அடைந்து வருகின்றனர். இன்று தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 700 அம்மா உணவங்கள் செயல்படுகின்றன.

    அம்மா உணவகம்


    அம்மா உணவகம் என்று நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை அந்தப் பெயரிலேயே விரிவுபடுத்தாமல் புதிதாக அதற்கு “கலைஞர் உணவகம்” என்று பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். காலப்போக்கில், அம்மா உணவகம் என்ற திட்டத்தையே கலைஞர் உணவகம் என்று மாற்றுவதற்கான ஒரு முயற்சியாக அமைச்சரின் பேச்சு அமைந்து இருக்கிறது.

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், புதிதாக திட்டங்களை தீட்டுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    எனவே, புதிதாக தீட்டப்படும் இதுபோன்ற திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதில் அ.தி.மு.க.வுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

    அதே சமயத்தில் நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை இரு பெயர்களில் செயல்படுத்துவது என்பது இதுவரை நடைமுறையில் இல்லாத வினோதமான ஒன்று. இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றே நான் கருதுகிறேன்.

    ஏழை எளிய மக்களுக்காக குறைந்த விலையில் உணவகங்களை அமைப்பது என்பது அம்மாவின் சிந்தனையில் உதித்த ஓர் அற்புதமான திட்டம். எனவே, இந்த திட்டம் “அம்மா உணவகம்” என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பது தான் பொதுமக்களின் விருப்பம் ஆகும்.

    எனவே முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, பொதுமக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், புதிதாக எத்தனை உணவகங்கள் அமைக்கப்பட்டாலும், அவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் “அம்மா உணவகம்” என்ற பெயரிலே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


    கடந்த மாதத்தில் அம்மா உணவகங்களை ஆய்வு செய்து சரி செய்யும் பணி நடந்தது. இதன் மூலம் ஒரே மாதத்தில் விற்பனை அதிகரித்து உள்ளது.
    சென்னை:

    சென்னையில் 403 அம்மா உணவகங்கள் மாநகராட்சி மூலம் நடத்தப்படுகின்றன. கடந்த சில வருடமாக அம்மா உணவகங்களில் விற்பனை சரிந்தது.

    இதனால் மாநகராட்சிக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். தனி அதிகாரி நியமிக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன.

    அம்மா உணவகங்களில் ஊழியர்கள் அதிகளவு இருப்பதால் அதனை சரிசெய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 4355 ஊழியர்கள் தற்போது பணியாற்றி வருகிறார்கள்.

    இதில் 170 அம்மா உணவகங்களில் சரியான அளவு ஊழியர்கள் உள்ளனர். 171 உணவகங்களில் 2 முதல் 5 பேர் வரை அதிகமாகவும் 60 அம்மா உணவகங்களில் 5 பேர் முதல் 10 பேர் வரை அதிகம் இருப்பதும் தெரிய வந்தது.

    இவர்கள் யாரையும் பணியில் இருந்து நீக்காமல் அனைவருக்கும் வேலை கொடுக்கும் வகையில் சுழற்சி முறையில் ஊழியர்கள் நிர்ணயிக்கப்பட்டனர். கூடுதலாக இருந்த உணவகங்களில் ஊழியர்களுக்கு பணிகள் பரவலாக்கப்பட்டு விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

    அதிகாலை 5 மணி முதல் பகல் 1 மணி வரை ஒரு ஷிப்டும், பகல் 1 மணி முதல் இரவு 9 மணி வரை மற்றொரு ஷிப்டும் ஒதுக்கப்பட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதன் காரணமாக தற்போது அம்மா உணவகங்களில் விற்பனை அதிகரித்து உள்ளது.

    அம்மா உணவகத்தில் உணவு சாப்பிடும் பொதுமக்கள்.


    கடந்த ஆண்டுகளில் தினமும் 1.25 லட்சம் பேர் மட்டுமே உணவு சாப்பிட்டார்கள். ஆனால் தற்போதைய நடவடிக்கையின் மூலம் இது 1.73 லட்சமாக உயர்ந்து உள்ளது.

    அம்மா உணவகங்களில் சாப்பிடுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரம் பேர் அதிகரித்து உள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கடந்த மாதத்தில் அம்மா உணவகங்களை ஆய்வு செய்து சரி செய்யும் பணி நடந்தது. இதன் மூலம் ஒரே மாதத்தில் விற்பனை அதிகரித்து உள்ளது.

    தரமான உணவுகளை தயாரித்து வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அம்மா உணவகங்களில் பணியாற்றிய ஒருவரையும் பணியில் இருந்து நீக்கவில்லை. சம்பளமும் குறைக்கப்படவில்லை.

    இன்னும் படிப்படியாக இதன் தரம் உயர்த்தப்படும். சரியான அளவில் பணியாளர்கள் நிர்ணயிக்கப்பட்டதால் செலவினம் குறைந்து உள்ளது. மாதத்திற்கு 1 கோடி ரூபாய் வீதம் ஆண்டுக்கு 12 கோடி செலவினம் குறைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    அம்மா உணவகங்களில் கடந்த 5 நாட்களில் சுமார் 13 லட்சம் பேர் இலவசமாக சாப்பிட்டு உள்ளனர்.
    சென்னை:

    சென்னையில் கன மழை பெய்து தண்ணீர் சூழ்ந்ததால் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் 3 வேளையும் உணவு அளிக்கப்பட்டது.

    மேலும் 403 அம்மா உணவகங்கள் மூலமும் அந்தந்த பகுதிகளில் உள்ள ஏழைகள், ஆதரவற்றவர்கள், கூலி தொழிலாளர்களுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது.

    மழை நிற்கும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த 10-ந்தேதி முதல் அம்மா உணவுகங்களில் உணவு விநியோகிக்கப்பட்டது.

    தற்போது மழை முற்றிலுமாக நின்றதால் இன்று முதல் அனைத்து அம்மா உணவங்களிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதுகுறித்து அம்மா உணவக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னையில் மழை நின்றதோடு பாதிப்பும் குறைந்துள்ளது. இதனால் அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்ட உணவு நிறுத்தப்பட்டுள்ளது.

    இன்று முதல் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் சுமார் 13 லட்சம் பேர் அம்மா உணவகங்களில் இலவசமாக சாப்பிட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    கடந்த சில மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட அம்மா உணவகங்கள் இலவசமாக உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து விறுவிறுப்படைந்தது.
    சென்னை:

    சென்னையில் மழை பாதிப்பு அதிகம் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

    முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கும், தண்ணீர் சூழ்ந்த வீடுகளில் உள்ளவர்களுக்கும் தரமான உணவு விநியோகிக்கப்படுகிறது. இது தவிர அம்மா உணவகங்கள் மூலமாகவும் மழை பாதிப்பு முடியும் வரை விலையில்லாமல் உணவு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள 403 அம்மா உணவகங்களில் 10-ந்தேதி முதல் 3 வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

    காலையில் இட்லி, பொங்கல், மதியம் சாம்பார் சாதம், இரவில் சப்பாத்தி ஆகியவை தயாரிக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள ஏழை, எளிய, ஆதரவற்றோர், கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    அம்மா உணவகம்

    கடந்த சில மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட  அம்மா உணவகங்கள்  இலவசமாக உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து விறுவிறுப்படைந்தது.

    காலையிலேயே நீண்ட வரிசையில் நின்று சிற்றுண்டி சாப்பிடுகிறார்கள். மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்ட அம்மா உணவகங்கள் இப்போது களை கட்டியுள்ளது. காலை, மதியம், இரவு 3 வேளையும் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு கூடுவதால் சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கியுள்ளது.

    கடந்த 2 நாட்களில் (10, 11-ந்தேதி) அம்மா உணவகங்களில் சுமார் 5 லட்சம் பேர் இலவசமாக வயிறாற சாப்பிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    10-ந் தேதி 2 லட்சத்து 32 ஆயிரத்து 400 பேரும், 11-ந்தேதி 2 லட்சத்து 65 ஆயிரம் பேரும் ஆக மொத்தம் 4 லட்சத்து 97 ஆயிரம் பேர் உணவருந்தி உள்ளனர்.

    2 நாட்களில் காலை சிற்றுண்டியாக சுமார் 5 லட்சம் இட்லி தயாரிக்கப்பட்டு ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மதியம் 1 லட்சத்து 39 பேருக்கு சாம்பார் சாதம் விநியோகிக்கப்பட்டுள்ளது. 10-ந்தேதி 65 ஆயிரம் பேரும், 11-ந்தேதி 74 ஆயிரம் பேரும் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர்.

    இதேபோல இரவில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் சப்பாத்தி சாப்பிட்டனர். 10-ந்தேதி 56 ஆயிரம் பேருக்கும், 11-ந்தேதி 63 ஆயிரம் பேருக்கும் சப்பாத்தி வழங்கப்பட்டுள்ளது. ஒருசில அம்மா உணவகங்களில் இரவில் புதினா சாதமும் விநியோகிக்கப்பட்டது.

    ஒருசில அம்மா உணவகங்களில் மழைநீர் தேங்கியதால் உணவு தயாரித்து வழங்க முடியவில்லை. 6 அம்மா உணவகங்கள் பாதிக்கப்பட்டதால் வேறு இடங்களில் சமையல் செய்து உணவு விநியோகிக்கப்பட்டது. தற்போது 403 அம்மா உணவகங்களும் முழு அளவில் செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னையில் 200 வார்டுகளில் 396 அம்மா உணவகங்களிலும், அரசு மருத்துவமனைகளில் 7 இடங்களிலும் இன்று காலையில் இருந்து உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
    சென்னை:

    சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் இலவசமாக 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் மழை பாதிப்புகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்ட போது அம்மா உணவகத்துக்கு சென்றார். அங்குள்ள உணவை சாப்பிட்டார். உணவு தரமாக இருப்பதாக அவர் ஊழியர்களிடம் தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து அனைத்து அம்மா உணவகங்களிலும் மழை முற்றிலும் நிற்கும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதையடுத்து இன்று முதல் சென்னையில் உள்ள 403 அம்மா உணவகங்களில் 3 வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. காலையில் இட்லி, மதியம் சாம்பார் சாதம், இரவு சப்பாத்தி போன்றவை அம்மா உணவகங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக அந்தந்த பகுதியில் உள்ள ஏழைகள், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விலையின்றி இலவசமாக வினியோகிக்கப்பட்டது.

    அம்மா உணவகம்


    சென்னையில் 200 வார்டுகளில் 396 அம்மா உணவகங்களிலும், அரசு மருத்துவமனைகளில் 7 இடங்களிலும் இன்று காலையில் இருந்து உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

    குறைந்த விலையில் விற்கப்பட்ட உணவுகள் இன்று முதல் கட்டணமின்றி 3 வேளையும் வழங்கப்படுவதால் கூலித் தொழிலாளர்கள், ஆதரவற்றோர்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் போன்றவர்கள் அம்மா உணவகங்களில் இன்று ஆர்வத்துடன் சாப்பிடுவதை காண முடிந்தது.

    கொரோனா பாதிப்பின் காரணமாக அம்மா உணவகங்களில் விற்பனை குறைந்தது. கூட்டம் இல்லாததால் வருவாய் இழப்பு அதிகரித்து அதிக நஷ்டத்தை சந்தித்து வந்தது.

    இந்த நிலையில் பருவமழை பாதிப்பின் காரணமாக அம்மா உணவகங்களில் உணவு இலவசமாக வழங்கப்படுவதை அறிந்த அந்தந்த பகுதி மக்கள் காலையிலேயே அங்கு குவியத் தொடங்கினர்.

    வயதானவர்கள், கூலித்தொழிலாளர்கள் அம்மா உணவகங்களில் ஆர்வத்தோடு உணவு அருந்தினார்கள். மழை பாதிப்பால் தொழில் இல்லாமல் வருவாய் இழந்தவர்களும் அம்மா உணவகங்களை நாடினார்கள்.

    கொரோனா காலத்தில் கடந்த ஆண்டு அம்மா உணவகங்களில் 3 வேளையும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. அப்போது கூட்டம் நிரம்பி வழிந்தது. அதேபோல தற்போதும் அம்மா உணவகங்களில் ஏழை மக்கள் சாப்பிடுவதற்காக காத்திருந்தனர்.

    உணவிற்காக பணம் செலவழிக்க வேண்டிய நிலை இல்லாததால் ஏராளமான மக்கள் அம்மா உணவகங்களில் கூடினார்கள். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘அம்மா உணவகங்களில் தேவையான அளவு உணவு தயாரித்து வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    வழக்கமான அளவு தற்போது உணவு தயாரிக்கப்பட்டாலும் மக்கள் கூட்டம் அதிகரித்தால் அதற்கேற்றவாறு கூடுதலாக சமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

    3 வேளையும் அம்மா உணவகங்களில் எவ்வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக உணவு கிடைப்பதால் மக்கள் வயிறாற சாப்பிட்டு செல்கிறார்கள். ஏழை-எளிய மக்களின் அட்சய பாத்திரமாக அம்மா உணவகங்கள் இந்த மழைக் காலத்திலும் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


    இதையும் படியுங்கள்... பள்ளிக்கூட வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்
    வெள்ளம் பாதித்த பகுதிகளில் செயல்படும் 2 அம்மா உணவகங்களில் இலவசமாக சாப்பிடவும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் பருவமழையின் தாக்கம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாநகராட்சி செய்து வருகிறது.

    ஏரிகள் திறக்கப்பட்டு இருப்பதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோரத்தில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையையும் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

    அடையார், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் கரையோர மக்கள் பாதுகாப்பாக தங்கும் முகாமிற்கு அழைத்து வரப்படுகிறார்கள். 200 வார்டுகளில் செயல்படும் 403 அம்மா உணவகங்கள் முழுமையாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொது மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் உணவு அருந்தவும் போதுமான அளவு உணவுப் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அம்மா உணவக ஊழியர்கள் 3 வேளையும் தேவைக்கு ஏற்ப உணவுகளை தயாரித்து பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் செயல்படும் 2 அம்மா உணவகங்களில் இலவசமாக சாப்பிடவும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. 20 உணவு தயாரிக்கும் கூடங்களில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் சாப்பிடுவதற்கு உணவு தயாரிக்கப்படுவதாக துணை கமி‌ஷனர் விஷ்ணு மகாஜன் தெரிவித்தார்.

    இதையும் படியுங்கள்... புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 11-ந்தேதி சென்னையை நெருங்கும்: மிக மிக பலத்த மழை எச்சரிக்கை

    ஈஞ்சம்பாக்கத்தில் அம்மா உணவகத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கையில் தட்டு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். #AmmaUnavagam
    சோழிங்கநல்லூர்:

    நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த இடம் வனத்துறைக்கு சொந்தமான சதுப்பு நிலத்தில் இருப்பதாகவும் இதனால் பறவைகள் பாதிக்கப்படுவதாகவும் அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி ‘அம்மா’ உணவகத்தை இடித்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் இன்று காலை அங்கு வந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் அம்மா உணவகத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கையில் தட்டு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்துக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர், தே.மு.தி.க.வினர் ஏராளமானோர் திரண்டனர்.

    அவர்கள் உணவகத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

    நீலாங்கரை இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #AmmaUnavagam

    ×