என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்மா உணவகங்களில் இன்று முதல் கட்டணம்
Byமாலை மலர்15 Nov 2021 6:32 AM GMT (Updated: 15 Nov 2021 6:32 AM GMT)
அம்மா உணவகங்களில் கடந்த 5 நாட்களில் சுமார் 13 லட்சம் பேர் இலவசமாக சாப்பிட்டு உள்ளனர்.
சென்னை:
சென்னையில் கன மழை பெய்து தண்ணீர் சூழ்ந்ததால் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் 3 வேளையும் உணவு அளிக்கப்பட்டது.
மேலும் 403 அம்மா உணவகங்கள் மூலமும் அந்தந்த பகுதிகளில் உள்ள ஏழைகள், ஆதரவற்றவர்கள், கூலி தொழிலாளர்களுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது.
மழை நிற்கும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த 10-ந்தேதி முதல் அம்மா உணவுகங்களில் உணவு விநியோகிக்கப்பட்டது.
தற்போது மழை முற்றிலுமாக நின்றதால் இன்று முதல் அனைத்து அம்மா உணவங்களிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து அம்மா உணவக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னையில் மழை நின்றதோடு பாதிப்பும் குறைந்துள்ளது. இதனால் அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்ட உணவு நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் சுமார் 13 லட்சம் பேர் அம்மா உணவகங்களில் இலவசமாக சாப்பிட்டு உள்ளனர்.
சென்னையில் கன மழை பெய்து தண்ணீர் சூழ்ந்ததால் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் 3 வேளையும் உணவு அளிக்கப்பட்டது.
மேலும் 403 அம்மா உணவகங்கள் மூலமும் அந்தந்த பகுதிகளில் உள்ள ஏழைகள், ஆதரவற்றவர்கள், கூலி தொழிலாளர்களுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது.
மழை நிற்கும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த 10-ந்தேதி முதல் அம்மா உணவுகங்களில் உணவு விநியோகிக்கப்பட்டது.
தற்போது மழை முற்றிலுமாக நின்றதால் இன்று முதல் அனைத்து அம்மா உணவங்களிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து அம்மா உணவக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னையில் மழை நின்றதோடு பாதிப்பும் குறைந்துள்ளது. இதனால் அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்ட உணவு நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் சுமார் 13 லட்சம் பேர் அம்மா உணவகங்களில் இலவசமாக சாப்பிட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கு ‘ஆதார்’ கட்டாயம்- தமிழக அரசு உத்தரவு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X