search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amma Makkal Munnetra kazhagam"

    அனைத்து வாக்காளர்களிடமும் பரிசு பெட்டகம் சின்னத்தை கொண்டு சென்று வெற்றி பெறுவோம் என்று தேனி பாராளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். #LokSabhaElections2019 #AMMK #ThangaTamilselvan #GiftPack
    ஆண்டிப்பட்டி:

    டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. அதற்கு பின்னர் பொதுவான சின்னம் தேர்வு செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி டி.டி.வி. தினகரன் அணிக்கு பரிசு பெட்டகம் சின்னம் இன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தேனி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் டெலிபோனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    எங்களிடம்தான் பூத் கமிட்டி உள்பட அனைத்து வேலைகளுக்கும் நிர்வாகிகள் உள்ளனர். அடிமட்ட தொண்டனும் அ.ம.மு.க.விடம் உள்ளனர். எனவே எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சின்னம் ஒரு பெரிதல்ல. ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றியே தீருவோம்.



    தற்போது பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கியது மகிழ்ச்சியளிக்கிறது. இதனை அனைத்து வாக்காளர்களிடமும் கொண்டு சென்று வெற்றி பெறுவோம். எங்களுக்குதான் மக்கள் செல்வாக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #AMMK #ThangaTamilselvan #GiftPack
    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று முதல் 10 நாட்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறார். #LSPolls #AMMK #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் முதல் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னை ராயபுரம் கல்மண்டப போலீஸ் நிலையம் அருகில் இருந்து தொடங்குகிறார்.

    27-ந்தேதி புதன்கிழமை

    மாலை 4 மணி- ராயபுரம், 5 மணி- காசிமேடு சிக்னல், 5.30 மணி- திருவொற்றியூர் தேரடி, 6 மணி- மாதவரம்.
    இரவு 7 மணி- மீஞ்சூர், 8 மணி- பொன்னேரி பஜார், 9 மணி- கும்மிடிப்பூண்டி பஜார்.

    28-ந்தேதி வியாழன்கிழமை

    மாலை 3 மணி- எம்.ஜி.ஆர். மார்க்கெட், 4 மணி- கோயம்பேடு, 5 மணி- திருமங்கலம், 5.30 மணி- பாடி, 6 மணி- அம்பத்தூர் பஸ் நிலையம்.
    இரவு 7 மணி- ஆவடி செக்போஸ்ட், 8 மணி- திருவள்ளூர் பஜார், 9 மணி - பூந்தமல்லி பஜார்.

    29-ந்தேதி வெள்ளிக்கிழமை

    மாலை 3 மணி- காவேரிப்பாக்கம், 4 மணி- வாலாஜா பேட்டை பஸ் நிலையம், 4.15 மணி- ராணிப்பேட்டை முத்துக்கடை, 4.30 மணி- ஆற்காடு அண்ணா சிலை பஸ் நிலையம், 5 மணி- விசாரம் பஸ் நிலையம், 5.30 மணி- வேலூர், 6 மணி- காட்பாடி சித்தூர் பஸ் நிலையம், 6.30 மணி- கே.வி.குப்பம் பஸ் நிலையம்.

    இரவு 7 மணி - குடியாத்தம் பஸ் நிலையம், 7.30 மணி - பேரணாம்பட்டு பஸ் நிலையம், 8 மணி- ஆம்பூர் பஜார், 8.30 மணி- மாதனூர் பஸ் நிலையம், 9 மணி - வாணியம்பாடி பஸ் நிலையம், 9.30 மணி - பர்கூர் பஸ் நிலையம்.

    30-ந்தேதி சனிகிழமை

    மாலை 3 மணி- சூளகிரி பஸ் நிலையம், 3.30 மணி- ஓசூர் எம்.ஜி.ஆர். சிலை, 4.30 மணி- கிருஷ்ணகிரி கார்னேசன் திடல், 5 மணி- காவேரிப்பட்டினம் பஸ் நிலையம், 5.30 மணி- பாலக்கோடு பஸ் நிலையம், 6 மணி- பாப்பரப்பட்டி எம்.ஜி.ஆர். சிலை, 6.30 மணி- பென்னாகரம் பஸ் நிலையம் அருகில்.

    இரவு 7 மணி- இண்டூர் பஸ் நிலையம் அருகில், 7.30 மணி- தர்மபுரி நான்கு ரோடு அண்ணாசிலை, 8 மணி- செட்டிக்கரை பொறியியல் கல்லூரி அருகில், 9 மணி- ஒடசல்பட்டி கூட்ரோடு, 10 மணி - கம்பைநல்லூர்.

    31-ந்தேதி ஞாயிறு

    மாலை 3 மணி- அயோத்தியா பட்டினம் ராமர்கோவில், 3.30 மணி- சீலநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் திடல், 4 மணி- மல்லூர் பேரூராட்சி, 5 மணி- ராசிபரம் பஸ் நிலையம், 5.30 மணி- நாமக்கல் பஸ் நிலையம், 6.30 மணி- திருச்செங்கோடு.

    இரவு 7 மணி- சங்ககிரி மெயிரோடு, 8 மணி- எடப்பாடி பஸ் நிலையம், 9 மணி- குமாரபாளையம் மூன்றுரோடு ஜங்‌ஷன்.

    ஏப்ரல் 1-ந்தேதி திங்கட்கிழமை

    மாலை 3 மணி- குமலான்பேட்டை, நசியனூர், 3.30 மணி- விஜயமங்கலம், பெருமாநல்லூர், கணக் கம்பாளையம், 4 மணி- வாவிபாளையம், பாண்டி யன் நகர், எம்.எஸ்.நகர், 4.30 மணி- கோல்டன் நகர், 4.45 மணி- பாளையக்காடு, 5 மணி- சி.டி.சி. காங்கேயம் ரோடு, 5.30 மணி- வெள் ளியங்காடு, 6 மணி- வித்யா லயம், 6.30 மணி- முருகன் பாளையம்.

    இரவு 7 மணி- செல்லம் நகர், 7.30 மணி- ஆண்டி பாளையம், 8 மணி- சிறுபூலுவபட்டி, 8.30 மணி- வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி, 9 மணி - அவினாசி.

    ஏப்ரல் 2-ந்தேதி செவ்வாய்கிழமை

    காலை 9 மணி- ஊட்டி, மாலை 4 மணி- மேட்டுப் பாளையம், 4.45 மணி- காரமடை, 5.15 மணி- பெரியநாயக்கன்பாளையம், 5.50 மணி- துடியலூர், 6.10 மணி - கவுண்டம்பாளையம், 6.25 மணி- சாய்பாபா கோவில் தெரு, 6.50 மணி- வடவள்ளி.

    இரவு 7.10 மணி- செல்வ புரம், 7.30 மணி- உக்கடம், 7.50 மணி ஆத்துப்பாலம், 8.05 மணி- போத்தனூர், 8.30 மணி- ராமநாதபுரம், 8.50 மணி சிங்காநல்லூர், 9.30 மணி- சூலூர், 9.45 மணி- பல்லடம்.

    ஏப்ரல் 3-ந்தேதி புதன்கிழமை

    மாலை 3 மணி- பொள்ளாச்சி, 4 மணி- உடுமலை, 5 மணி- மடத்துக்குளம், 6 மணி- பழனி ரவுண்டானா, இரவு 7 மணி- ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் எதிரில், 7.30 மணி- வேடசந்தூர் ஆத்துமேடு, 8 மணி- அரவக்குறிச்சி, 9 மணி - கரூர்.

    ஏப்ரல் 4-ந்தேதி வியாழன்கிழமை

    மாலை 4 மணி- கரூர், 4.30 மணி- கிருஷ்ணராயபுரம், 5 மணி- குளித்தலை, 5.30 மணி- முசிறி, 6.30 மணி- டோல்கேட், இரவு 7 மணி- ஸ்ரீரங்கம், 7,30 மணி- திருச்சி கிழக்கு, 8 மணி- திருச்சி மேற்கு.

    ஏப்ரல் 5-ந்தேதி வெள்ளிக்கிழமை

    காலை 10 மணி - விராலிமலை, 11 மணி- மணப்பாறை, மாலை 4 மணி- திண்டுக்கல், 4.30 மணி- செம்பட்டி, 5 மணி- நிலக்கோட்டை, 5.30 மணி- வத்தலக்குண்டு, 6.30 மணி- தேவதானப்பட்டி, இரவு 7 மணி- பெரியகுளம், 7.30 மணி- தேனி, 8 மணி- ஆண்டிப்பட்டி, 9.30 மணி- உசிலம்பட்டி. #LSPolls #AMMK #TTVDhinakaran
    பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் கோரும் சின்னத்தை அளித்தாலும் அல்லது தேர்தல் ஆணையமே சின்னத்தை அளித்தாலும் அதில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியை பெறுவோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். #LokSabhaElections2019
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற-சட்டசபை இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களின் வெற்றி தமிழக மக்களின் ஆயுதங்களாக இருக்கும். சின்னம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதி வழங்கி உள்ளது. எங்களுக்கு பொது சின்னம் கொடுக்க அறிவுறுத்தி உள்ளது.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தை அளித்தனர். அதை அந்த தொகுதி வாக்காளர்கள் வெற்றிச்சின்னமாக்கினர். இந்த தேர்தலில் நாங்கள் கோரும் சின்னத்தை அளித்தாலும் அல்லது தேர்தல் ஆணையமே சின்னத்தை அளித்தாலும் அதில் போட்டியிடுவோம். மாபெரும் வெற்றியை பெறுவோம்.

    சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள உத்தரவு தொடர்பான நகலை எங்களது வக்கீல்கள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளனர். தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் வகையில் சுயேச்சையாக மனுக்களை தயார் செய்து வைத்திருந்தோம். சின்னம் கோரும் இடத்தில் இப்போது சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை தெரிவித்துள்ளோம்.

    கட்சியை பதிவுசெய்ய தயாராக இருப்பதாக கோர்ட்டில் தெரிவித்திருந்தோம். எனவே கட்சியை பதிவு செய்வதற்கான பணிகளில் இறங்குவோம். சின்னம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு எங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு சென்றோம். வழக்கை விசாரித்த கோர்ட்டு தேர்தலில் போட்டியிட வேண்டுமென்பதால் அ.ம.மு.க.வை சேர்ந்த வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னம் கொடுக்குமாறு கூறியுள்ளது.

    இரட்டை இலை தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்துள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம். குக்கர் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் நினைக்கிறது. எதிரிகளையும், துரோகிகளையும் எங்கள் வேட்பாளர்கள் வீழ்த்துவார்கள். தேர்தலில் போட்டியிட அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    எங்களுக்கு அனைத்து தொகுதிகளிலும் தனித்தனியாக சின்னங்களை கொடுத்தாலும் அந்த சின்னங்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். எனது பயணம் தொடரும். அ.தி.மு.க.வுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டே தெரிவித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019
    பாராளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தங்களுக்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #LSPolls #TTVDhinakaran #PressureCookerSymbol
    புதுடெல்லி:

    டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேசமயம் வரும் தேர்தலில் அமமுக தரப்புக்கு பொது சின்னம் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    குக்கர் சின்னம் கிடைக்காதது டிடிவி தரப்புக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. அதேசமயம், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று வேறு பொது சின்னத்தை ஒதுக்குமாறு கூறியிருப்பதால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது.

    இந்த  தீர்ப்பு குறித்து டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில், “அமமுகவின் 59 வேட்பாளர்களையும் சுயேட்சைகளாக கருதி ஒரே பொது சின்னம் ஒதுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பொது சின்னம் வழங்கும்படி  உத்தரவிட்டிருப்பதன்மூலம், மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறோம். அமமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் தரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, பொது சின்னம் ஒதுக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடக்கோரி தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளோம்” என்றார்.



    இந்நிலையில்  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாராளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தங்களுக்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.  #LokSabhaElections2019 #LSPolls #TTVDhinakaran #PressureCookerSymbol
    உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வேறு ஒரு பொது சின்னத்தை ஒதுக்கும்படி தலைமை தேர்தல் ஆணையத்தை அமமுக அணுக உள்ளது. #LokSabhaElections2019 #LSPolls #TTVDhinakaran #PressureCookerSymbol
    புதுடெல்லி:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவடைய உள்ள நிலையில், டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேசமயம் வரும் தேர்தலில் அமமுக தரப்புக்கு பொது சின்னம் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    குக்கர் சின்னம் கிடைக்காதது டிடிவி தரப்புக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. அதேசமயம், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று வேறு பொது சின்னத்தை ஒதுக்குமாறு கூறியிருப்பதால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது.



    இந்த  தீர்ப்பு குறித்து டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில், “அமமுகவின் 59 வேட்பாளர்களையும் சுயேட்சைகளாக கருதி ஒரே பொது சின்னம் ஒதுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பொது சின்னம் வழங்கும்படி  உத்தரவிட்டிருப்பதன்மூலம், மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறோம். அமமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் தரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, பொது சின்னம் ஒதுக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடக்கோரி தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளோம்” என்றார்.

    எனவே, பொது சின்னம் தொடர்பாக நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கையில் அமமுக தலைமை உள்ளது. அமமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று பிற்பகல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். #LokSabhaElections2019 #LSPolls #TTVDhinakaran #PressureCookerSymbol
    டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வேறு ஒரு பொது சின்னத்தை பரிசீலிக்கும்படி கூறியுள்ளது. #TTVDhinakaran #AMMK #ElectionCommission #PressureCooker
    புதுடெல்லி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். ஆனால், அவரது கட்சிக்கு பொது சின்னம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது.

    ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரன், தேர்தல் ஆணையம் ஒதுக்கிய குக்கர்  சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், அந்த சின்னத்தையே தனது கட்சிக்கு பொது சின்னமாக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த விஷயத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் கைவிரித்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாகவே, இடைக்கால சின்னமாக தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெறுகிறது. நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து வாதிட்டது.



    குக்கர் சின்னம் வழங்க முடியாததற்கான காரணத்தையும் தெரிவித்தது. பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டும்தான் பொது சின்னம் கொடுக்க முடியும். அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை பொது சின்னமாக கொடுக்க முடியாது, என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த வாதத்தால் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடும் அதிருப்தி தெரிவித்தார். அத்துடன், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார். அதன்படி இன்று காலை இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதால், பழைய சின்னத்தை வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குக்கர் சின்னம் வழங்க முடியாவிட்டால் வேறு ஒரு பொதுவான சின்னத்தை வழங்கும்படி டிடிவி தினகரன் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

    அமமுக பதிவு செய்யப்பட்ட கட்சியா? பதிவு செய்யப்படாத கட்சிக்கு எப்படி பொது சின்னத்தை கேட்கிறீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அமமுகவை கட்சியாக இன்றே பதிவு செய்ய தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு இப்போது நேரம் இல்லை என்றும் தினகரன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணைய வழக்கறிஞர், கட்சியை இன்றே பதிவு செய்தாலும், உடனடியாக குக்கர் சின்னம் தர முடியாது. கட்சியை பதிவு செய்த பின்னர், குக்கர் சின்னமோ அல்லது அவர்கள் கேட்கும் பொது சின்னத்தையோ ஒதுக்க 30 நாட்களுக்கு மேல் ஆகும் என வாதிட்டார்.

    அமமுகவுக்கு குக்கர் சின்னம் இல்லையெனில் வேறு ஒரு பொது சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கலாமே? என்று தலைமை நீதிபதி கூறினார். ஒருவர் எவ்வளவு வலுவுள்ளவராக இருந்தாலும் சின்னம்தான் அவரது அடையாளம். ஒரே குழுவில் உள்ளவர்களுக்கு வேறுவேறு சின்னம் வழங்கினால், அவர்களின் அரசியல் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும். எனவே, வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் முடிந்தபிறகு பொது சின்னம் வழங்க முயற்சிக்கலாம் என்றும் தலைமை நீதிபதி ஆலோசனை வழங்கினார்.

    ஆனால், அமமுக வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்கள் என்பதால் அவர்களுக்கு தனித்தனியாகத்தான் சின்னம் ஒதுக்க முடியும் என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் திட்டவட்டமாக கூறினார்.

    அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க மறுத்துவிட்டனர். குக்கர் சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்தனர். அதேசமயம், பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு வேறு ஒரு பொது சின்னம் வழங்குவதற்கு பரிசீலிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #TTVDhinakaran #AMMK #ElectionCommission #PressureCooker
    டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. #TTVDhinakaran #AMMK #ElectionCommission #PressureCooker
    புதுடெல்லி:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். ஆனால், அவரது கட்சிக்கு பொது சின்னம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது.

    ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரன், தேர்தல் ஆணையம் ஒதுக்கிய குக்கர்  சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், அந்த சின்னத்தையே தனது கட்சிக்கு பொது சின்னமாக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த விஷயத்தில் உயர்நீதிமன்றம் ஏற்கனவே கைவிரித்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து, 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் வாதிட்டது.


    பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டும்தான் பொது சின்னம் கொடுக்க முடியும். அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை பொது சின்னமாக கொடுக்க முடியாது, என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் தெரிவித்தார்.

    தேர்தல் ஆணையத்தின் இந்த வாதத்திற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடும் அதிருப்தி தெரிவித்தார். அத்துடன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார். #TTVDhinakaran #AMMK #ElectionCommission #PressureCooker
    பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஓசூரில் புகழேந்தியும், நெல்லையில் மைக்கேல் ராயப்பனும் போட்டியிடுவார்கள் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். #LSPolls #AMMK #TTVDhinakaran
    சென்னை:

    தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கட்சி 38 பாராளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டசமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிடுகிறது.

    அ.ம.மு.க. சார்பில் பாராளுமன்ற தொகுதிக்கு 36 வேட்பாளர்களும் கூட்டணி கட்சியான எஸ்.பி.டி.ஐ. சார்பில் ஒரு வேட்பாளரும் போட்டியிடுகிறார்கள். 17 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    ஓசூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.



    ஓசூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக கட்சியின் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், கர்நாடக மாநில அ.ம.மு.க.வின் செயலாளருமான வி.புகழேந்தி போட்டியிடுவார் என்று டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் பிறந்த இவர் ஓசூரில் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். அ.தி.மு.க.வில் கர்நாடக மாநில ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்தார். தினகரன் தீவிர ஆதரவாளரான இவர் தற்போது அ.ம.மு.க.வில் உள்ளார்.

    ஓசூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த பாலகிருஷ்ணரெட்டி வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்தார். இதனால் இந்த தொகுதி காலியானது. தற்போது இங்கு அ.தி.மு.க. வேட்பாளராக பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் சத்யா வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

    திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக ஆர்.ஞான அருள்மணி அறிவிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பதிலாக கட்சியின் அம்மா பேரவை இணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மைக்கேல் ராயப்பன் அ.ம.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    புதுச்சேரி மாநில அ.ம.மு.க. இளைஞர் அணி செயலாளர் என்.தமிழ்மாறன் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ளார். #LSPolls #AMMK #TTVDhinakaran
    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை மற்றும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #AMMK
    திருச்சி:

    அம்மா மக்கள் முன்னேற் கழகத்தின் திருச்சி பாராளு மன்ற தொகுதியின் தலைமை தேர்தல் அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திருச்சி கலெக்டர் அலுவலக சாலை புதுக்கோட்டை அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    யார் எந்த தடையினை ஏற்படுத்தினாலும் அ.ம.மு.க. தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க முடியாது. ஏற்கனவே அதிகார துஷ்பிரயோகம், மத்திய அரசின் அச்சுறுத்தல் ஆகியவற்றினை மீறி தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு எதிரிகளையும், துரோகிகளையும் எதிர் கொண்டு வெற்றி பெற்றோம். அ.ம.மு.க. மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது.

    திருவாரூரில் அ.ம.மு.க. வெற்றி பெற்றுவிடுவோம் என்ற பயத்தால் தேர்தலை திட்டமிட்டு தள்ளிவைத்தனர். ஆனால் லோக்சபா தேர்தலை தள்ளி வைக்க முடியாது. இதனால் இந்த தேர்தல் வருகிறது. இதில் நாங்கள் வெற்றி பெறுவோம். தமிழக மக்கள் யார் பக்கம் என்பதை மே 23-ல் அனைவருக்கும் தெளிவாக தெரியப்படுத்துவார்கள்.

    அ.ம.மு.க.வின் தேர்தல் அறிக்கை மற்றும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் 22-ந்தேதி வெளியிடப்படும். முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அ.ம.மு.க.வில் இணைந்துள்ளார். அ.ம.மு.க. வேட்பாளர்கள் வருகிற 26-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார்கள். 27-ந்தேதி முதல் 20 நாட்கள் தொடர் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

    அ.தி.மு.க.விற்கு 45 சதவிதம் 50 சதவிதம் மக்கள் ஆதரவு இருக்கிறது என கூறுவதற்கெல்லாம் மே 23-ல் முடிவு வரும். அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டும் தான். 95 சதவிதம் அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர்.

    மேலும் அ.தி.மு.க.வில் உள்ள ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களும் விரைவில் எங்களுடன் சேருவார்கள். மக்களை வசப்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் தான் கவர்ச்சியான வாக்குறுதி யுத்திகளை கையாள வேண்டும். தேர்தலில் எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்ட வெற்றி. மற்ற கட்சிகள் எல்லாம் 2-ம் இடத்திற்குதான் போட்டியிட வேண்டும்.

    கருத்து திணிப்புகளை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள். அ.ம.மு.க.விற்கு சின்னம் வழங்கும் வி‌ஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை உள்ளது என கூறவில்லை. நீதிமன்றத்தின் மீது தான் நம்பிக்கை வைத்துள்ளோம். வருகின்ற 25-ந்தேதி அ.ம.மு.க.விற்கு சின்னம் ஒதுக்கும் வி‌ஷயத்தில் நீதிமன்றமும் நல்ல முடிவை தராவிட்டால் மக்கள் மன்றத்தை சந்திக்க உள்ளோம்.

    ஒவ்வொரு தொகுதிகளிலும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் தனித்தனி சின்னத்தில் நின்றாலும், மக்கள் அ.ம.மு.க. வேட்பாளர்களின் சின்னத்தினை தேடிப்பிடித்து வாக்களித்து வெற்றியைத் தருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #AMMK
    அ.ம.மு.க. கட்சி ஒரு பதிவு செய்யாத கட்சி. குழந்தையே பிறக்காமல், பெயர் வைத்துக்கொண்டு அலைவதுபோல் அக்கட்சியினர் பேசி வருகிறார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalaniswami #AMMK
    சேலம்:

    சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடியால் மட்டுமே நிலையான ஆட்சியை தர முடியும். பிரதமர் மோடி மீண்டும் பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு வர உள்ளார். 3 அல்லது 4 மாவட்ட தலைநகரங்களில் அவர் பிரசாரம் செய்கிறார். அ.ம.மு.க. கட்சி ஒரு பதிவு செய்யாத கட்சி. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் குழந்தையே பிறக்காமல், பெயர் வைத்துக்கொண்டு அலைவதுபோல் பேசி வருகிறார்கள். அவர்களை நாங்கள் பெரிதாக பொருட்படுத்தவில்லை.



    சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் 2-ம் கட்டமாக செயல்படுத்த அனுமதி கேட்டுள்ளோம். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையிலும் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்படும் என ஏற்கனவே சட்டசபையில் தெரிவித்து உள்ளோம். ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது வெறும் வெற்று அறிவிப்புகள்தான். தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் அனைத்தும் அ.தி.மு.க. அறிக்கையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி எந்த பதிலும் கூறவில்லை. #EdappadiPalaniswami #AMMK
    ஜெயலலிதா பாணியில் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து டி.டி.வி.தினகரன் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். #LSPolls #AMMK #TTVDhinakaran #Jayalalithaa
    சென்னை:

    டி.டி.வி. தினகரன் கடந்த ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை தொடங்கினார். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை அ.ம.மு.க. தனித்தே சந்திக்கிறது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலை ஜெயலலிதா தனித்தே சந்தித்தார். அவரது பாணியில் இந்த பாராளுமன்ற தேர்தலை தினகரன் தனித்து சந்திக்கிறார்.


    அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையிலும் தினகரன் தனித்தே களம் இறங்கியுள்ளார். திட்டமிட்டபடி பிரசாரத்தை தொடங்கி மக்களையும் சந்தித்து வருகிறார்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 24 வேட்பாளர்களையும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் 9 வேட்பாளர்களையும் தினகரன் நேற்று அறிவித்தார். ஜெயலலிதா பாணியில் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து அவர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

    இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    அரசியலில் ஜெயலலிதா பாணியை தினகரன் மட்டும்தான் பின்பற்றுகிறார். தேர்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஜெயலலிதா நல்ல நேரம் பார்ப்பது வழக்கம். பல நேரங்களில் அவருக்கு உகந்த எண்ணாக 9 போன்ற ஒற்றை இலக்க எண்ணை தேர்வு செய்வார். அதன்படி தினகரனும் ராசி பார்த்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்காக தலா 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை நேற்று காலை 9 மணிக்கு வெளியிட்டார்.

    சிறிது நேரம் கழித்து 15 பேர் கொண்ட பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களின் 2-வது பட்டியலை அறிவித்தார்.

    ஜெயலலிதா போலவே தினகரனுக்கும் ஆன்மீகத்தில் நம்பிக்கை உண்டு. ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலை முதன் முதலில் அறிவிப்பது போன்று தினகரனே முதலில் வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #AMMK #TTVDhinakaran #Jayalalithaa
    பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை நாளை டி.டி.வி. தினகரன் அறிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #AMMK #TTVDhinakaran #LSPolls
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 38 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒரு தொகுதியை கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒதுக்கி உள்ளது.

    வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்து இருந்தார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தினகரன் தீவிரமாக ஈடுபட்டார்.

    இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என்று தெரிகிறது.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 2-ம் ஆண்டு விழா நாளை காலை சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. இதில் தினகரன் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றுகிறார். இந்த விழாவின்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களை தினகரன் அறிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #AMMK #TTVDhinakaran #LSPolls
    ×