search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "America"

    • சுற்றுலா மற்றும் விசா பெறும் மாணவர்களுக்கான கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
    • வரும் மே 30, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என அமெரிக்க அரசின் அறிவிப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.

    உலகம் முழுவதிலும் உள்ள விசாக்கள் மற்றும் பிற சேவைகளை வழங்குவது தொடர்பான செலவினங்களை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை தூதரக கட்டணங்களுக்கான செலவு அட்டவணையை திருத்தி உள்ளது.

    அமெரிக்காவிற்கான மாணவர் விசாக்கள் இப்போது கூடுதலாக 25 டாலர் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறையால் வெளியிடப்பட்ட புலம்பெயர்ந்தோர் அல்லாத விசா செயலாக்கக் கட்டணங்களின் அதிகரிப்பின் படி, வணிகம் அல்லது சுற்றுலா (பி1/பி2எஸ் மற்றும் பிசிசிகள்) வருகைக்கான விசாக்களின் செலவு, அத்துடன் மாணவர் போன்ற பிற மனு-அடிப்படையிலான என்IVகள் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் விசாக்கள், 160 டாலரில் இருந்து 185 டாலராக ஆக அதிகரிக்கவுள்ளது.

    தற்காலிக பணியாளர்களுக்கான (எச், எல், ஒ, பி, கியூ மற்றும் ஆர்பிரிவுகள்) குறிப்பிட்ட மனு அடிப்படையிலான குடியேற்றம் அல்லாத விசாக்களுக்கான கட்டணம் 190 டாலரில் இருந்து 205 டாலராக ஆக உயரும் என்று அரசாங்கம் ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.

    ஒப்பந்த வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஒரு சிறப்புத் தொழிலுக்கான (இ வகை) பயணிகள் 205 டாலரிருந்து 315 டாலராக அதிகரித்த செலவைச் செலுத்த வேண்டும். மேலும், இந்த ஆண்டு 1 மில்லியன் விசாக்களை வழங்க வெளியுறவுத்துறை விரும்புவதாக விசா சேவைகளுக்கான துணை உதவி செயலாளரான ஜூலி ஸ்டப்ட்டின் கூறியுள்ளார். இது வரும் மே 30, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என அமெரிக்க அரசின் அறிவிப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.

    • கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் பனிப்புயல் வீசியது.
    • பனிப்புயலில் 700-க்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழுந்தன.

    வாஷிங்டன் :

    அமெரிக்கா தற்போது வரலாறு காணாத அளவுக்கு மோசமான வானிலையை சந்தித்து வருகிறது. அங்கு பெரும்பாலான மாகாணங்கள் பனிப்புயல் பாதிப்பை எதிர்கொள்கின்றன.

    கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் பனிப்புயல் வீசியது. இதில் பல வீடுகள் மற்றும் அலுவலகங்களின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தது. மேலும் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சுற்றுப்பகுதிகளில் பல நகரங்கள் இருளில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இந்த பனிப்புயல் காரணமாக சான் பிரான்சிஸ்கோவின் வீதிகளில் காணும் இடமெங்கும் பனியால் மூடப்பட்டு இருந்தது. அங்கு சாலைகளில் நிறுத்தியிருந்த கார்கள் மறையும் அளவுக்கு பனி படர்ந்திருந்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஆம்புலன்சுகள் வந்து செல்வதற்கே மணிக்கணக்கில் பயண நேரம் ஆகியது. எனவே பலர் ஆஸ்பத்திரிக்கு கூட செல்ல முடியாமல் அவதியடைந்தனர். தற்போது அங்கு ஓரளவு இயல்பு நிலை திரும்பியது.

    இந்த பனிப்புயலில் 700-க்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழுந்தன. இந்த மரங்கள் விழுந்ததில் 2 பேர் பலியானார்கள். மேலும் கடும் குளிருக்கு 3 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    உயிருக்கே அச்சுறுத்தல் நிலவும் இந்த பனிப்புயல் காரணமாக பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசாங்கம் எச்சரித்து உள்ளது.

    • இயற்கை முறையில் பயிரிட்டு அமெரிக்காவுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்தனர்.
    • சம்பாமிளகாயை 5 வருடங்களாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோரைப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இயற்கை விவசாயி ராமர். இவர் செயற்கை உரங்கள் இல்லாமல் இயற்கை முறையிலான உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்.

    ரசாயன உரங்களை பயன் படுத்தாமல் நாட்டு மாட்டுச் சாணங்களை உரமாக பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக, வண்ண பூச்சி ஒட்டிகளை பயன்படுத்தி வருகிறார்.மற்ற விவசாயிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்து வரும் இவர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது பெற்றுள்ளார்.

    இவரது வயலில் விளையும், சம்பாமிளகாயை 5 வருடங்களாக அமெரிக்கா வுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்த வருடம் இயற்கை விவசாயம் மூலம் இவரது தோட்டத்தில் விளைந்த சம்பாமிளகாயை, கொள்முதல் செய்வதற்கு முன்பு அமெரிக்கநாட்டில் இருந்து 2 பேர் வந்தனர்.

    அவர்கள் கோரைப் பள்ளம் கிராமத்தில் ராமர் தோட்டத்திற்கு சென்று மிளகாய் செடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அவர்களுக்கு விவசாயி ராமர் தலைமையில் கிராம மக்கள் குலவையிட்டு, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    இந்த வருடம் 200 டன் சம்பாமிளகாய், இந்த பகுதியில் உள்ள 20 கிராமங்களில் இருந்து, கொள்முதல் செய்ய உள்ளதாக அமெரிக்க நாட்டினர் கூறினர். மேலும் இருவரும் பாக்குவெட்டி கிராமத்தில் உருவாட்டி என்பவரின் மிளகாய் தோட்டத்திலும் ஆய்வு செய்தனர். பின்னர் கமுதி விவசாய கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொள்முதல் செய்யப்படும் மிளகாயை ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, பாதுகாத்து வைக்கப்படும் குடோனை பார்வையிட்டனர்.

    இந்த ஆய்வின் போது, கூட்டுறவு விற்பனை சங்க பொது மேலாளர் போஸ், தனியார் நிறுவன அதிகாரி சவுரப், கொள்முதல் மேலாளர் சஞ்ஜய், ஜோசப்ராஜ், கள ஆய்வாளர் வெற்றிச்செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • பனிப்பொழிவால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • அமெரிக்கா முழுவதும் பனிப்புயலுக்கு இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    நியூயார்க் :

    அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் குளிர், மின்தடை, போக்குவரத்து இடையூறு என பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டிருந்த மக்களை வீடுகளுக்குள்ளேயே முடக்கியுள்ளது பனிப்புயல். அமெரிக்கா முழுவதும் பனிப்புயலுக்கு இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் பனிப்புயல் காரணமாக உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போய் காணப்படுகிறது. நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் பனிக்கட்டிகள் மற்றும் பனி மூடிய பாறைகள் காணப்படுகின்றன.

    இதனை பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு இதேபோல் நயாகரா நீர்வீழ்ச்சி பனியில் உறைந்தபோது, கனடா நாட்டை சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவர் பனிஉறைந்த நீர்வீழ்ச்சியில் ஏறி பார்வையாளர்களை திகைக்க வைத்து நினைவுகூரத்தக்கது.

    • பனிப்புயல் அமெரிக்க மாகாணங்களை புரட்டி எடுத்து வருகிறது.
    • பனிப்புயல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முடக்கியது.

    வாஷிங்டன் :

    அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் மோசமான பனிப்புயலை எதிர்கொண்டு வருகிறது. வெடிகுண்டு சூறாவளி என்று அழைக்கப்படும் பயங்கர பனிப்புயல் கடந்த இரு தினங்களாக அமெரிக்க மாகாணங்களை புரட்டி எடுத்து வருகிறது.

    இந்த புயல் தற்போது கனடாவின் கிழக்கு பகுதியிலும் மையம் கொண்டிருந்தாலும் கூட, கடுமையான காற்று, கடுமையான பனியுடன் அமெரிக்க மாகாணங்களை தொடர்ந்து தாக்கி வருவதாக அமெரிக்க வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    இந்த பனிப்புயல் அங்கு ஆண்டின் மிக முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முடக்கியது. கடும் குளிரால் மக்கள் வீடுகளுக்குளேயே முடங்கியுள்ளனர். அதோடு, பனிப்புயல் காரணமாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பல லட்சம் மக்கள் கிறிஸ்துமஸ் இரவில் மின்சாரம் இன்றி பரிதவிப்புக்கு ஆளாகினர். மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட வேறு ஊர்களுக்கு சாலை மற்றும் வான் வழியாக பயணிக்கும் கோடிக் கணக்கானவர்களின் பயணம் தடைபட்டது.

    இதனிடையே சாலை விபத்துகள் உள்பட பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் பல உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. அந்த வகையில் ஓஹியோ மாகாணத்தில் நிகழ்ந்த சங்கிலி தொடர் விபத்தில் உயிரிழந்தவர்கள் உள்பட 12 பேர் பனிப்புயலால் பலியனாதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன.

    இந்த நிலையில் பனிப்புயலால் அமெரிக்கா முழுவதும் மேலும் பலர் உயிரிழந்ததாகவும், இதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஓக்லஹோமா, கென்டக்கி, மிசோரி, டென்னசி, விஸ்கான்சின், கன்சாஸ், நெப்ராஸ்கா, ஓஹியோ, நியூயார்க், கொலராடோ மற்றும் மிச்சிகன் ஆகிய மாகாணங்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • கடும் பனிப்பொழிவால் வெளியில் செல்ல முடியாத சூழலில் வீட்டுக்குள் மின்சாரம் இல்லாமல் குளிரில் உறைந்து போய் கிடக்கிறார்கள்.
    • அமெரிக்காவில் பனிப்பொழிவு காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களையிழந்தது.

    அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. வெடிகுண்டு சூறாவளி என்று அழைக்கப்படும் இந்த பனிப்புயல் பல மாகாணங்களை தாக்கி வருகிறது. இதனால் தொடர்ந்து பனி கொட்டியபடியே இருக்கிறது.

    பனிப்புயலால் அமெரிக்காவில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மலைபோல் பனி குவிந்து கிடக்கிறது. ரெயில் பாதைகள், விமான ஓடுபாதைகளில் பனி கொட்டிக்கிடக்கிறது.

    இதனால் விமானங்கள், ரெயில்கள் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. பல இடங்களில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கள் ஏற்பட்டன. இதில் உயிரிழப்புகளும் உண்டாகி இருக்கிறது.

    அமெரிக்காவில் சூறாவளி பனிப்புயலுக்கு 18 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரை தாங்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். தங்கள் வீடுகளில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தாலும் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரி வரை சென்றுள்ளதால் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    மேலும் பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 17 லட்சம் பேர் மின்சாரமின்றி இருளில் தவிக்கிறார்கள். கடும் பனிப்பொழிவால் வெளியில் செல்ல முடியாத சூழலில் வீட்டுக்குள் மின்சாரம் இல்லாமல் குளிரில் உறைந்து போய் கிடக்கிறார்கள்.

    சாலைகள், மற்ற இடங்களில் கிடக்கும் பனிகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஆனாலும் இடைவிடாத பனிப்பொழிவு இருப்பதால் தொடர்ந்து பனி குவிந்துகொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் பனிப்பொழிவு காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களையிழந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தாக்குதல் நடத்திய நபர் யார்? எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார்? உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.
    • அந்த நபர் 20 வயது உடையவர் என்று மட்டும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் உயர்நிலைப்பள்ளியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து சரமாரியாக சுட்டார்.

    இதனால் பள்ளியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். துப்பாக்கி சூட்டில் இரண்டு பெண்கள் பலியானார்கள். 6 பேர் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்றனர். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

    பின்னர் பள்ளிக்குள் இருந்தவர்களை பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

    தாக்குதல் நடத்திய நபர் யார்? எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார்? உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    அந்த நபர் 20 வயது உடையவர் என்று மட்டும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரலாற்று ரீதியாக தொடர்ந்து பின்னால் நிற்கிறோம்.
    • இந்தியா நிரந்தர உறுப்பினராக அமரவில்லை என்றால் எங்களுக்கு மட்டும் அல்ல, சர்வதேச அமைப்புகளுக்கும் அது நல்லதல்ல.

    உலக தலைவர்கள் பங்கேற்ற ஐ.நா.சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசினார். அப்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீர்திருத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. நாங்கள் நீண்ட காலமாக ஆதரித்து வரும் நாடுகளுக்காக நிரந்தர இடங்களும் இதில் அடங்கும் என்றார்.

    இந்தநிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, சீர்திருத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை கொண்டு வர அதிபர் ஜோபைடன் ஆதரிக்கிறார்.

    இந்த 3 நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரலாற்று ரீதியாக தொடர்ந்து பின்னால் நிற்கிறோம் என்றார்.

    அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது, இந்தியா இன்னும் சில ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும்.

    எனவே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமரவில்லை என்றால் எங்களுக்கு மட்டும் அல்ல, சர்வதேச அமைப்புகளுக்கும் அது நல்லதல்ல என்றார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.
    • அல்காரஸ் முதல்முறையாக கிராண்ட்சிலாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) சாம்பியன் பட்டம் வென்றார்.

    ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்தது. இதில் 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) ஐந்தாவது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே) மோதினார்கள்.

    முதல் செட்டை அல்காரஸ் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக ரூட் 2-வது செட்டை 6-2 என்ற கணக்கில் வென்றார். 3-வது செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை பெற்றனர். இதனால் 6-6 என்ற சமநிலை ஏற்பட்டு டைபிரேக்கருக்கு அந்த செட் சென்றது. இதில் அல்காரஸ் 7-1 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார்.

    அல்காரஸ் அதே உத்வேகத்துடன் ஆடி 4-வது செட்டையும் 6-3 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். ஸ்கோர் 6-4 , 2-6, 7-6 (7-1 ), 6-3. இந்த வெற்றியை பெற அவருக்கு 3 மணி 20 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    19 வயதான அல்காரஸ் முதல்முறையாக கிராண்ட்சிலாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். இதற்கு முன்பு இந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபனில் கால்இறுதியில் நுழைந்ததே இவரது சிறந்த நிலையாக இருந்தது.

    அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் அல்காரஸ் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.  குறைந்த வயதில் 'நம்பர் 1' இடத்தை பிடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதன்மூலம் நம்பர் ஒன் கனவு நிறைவேறியது.

    கேஸ்பர் ரூட்டின் முதல் கிராண்ட்சிலாம் கனவு இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் கலைந்து போனது. 

    • கார்சியா அரையிறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜபேரை (துனிசியா) சந்திக்கிறார்.
    • கேஸ்பர்ரூட் முதல் முறையாக அமெரிக்க ஓபனில் அரையறுதிக்கு நுழைந்துள்ளார்.

    நியூயார்க்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் 12-ம் நிலை வீராங்கனையான கோகோ கவூப் (அமெரிக்கா)-கரோலின் கார்சியா ( பிரான்ஸ் ) மோதினார்கள்.

    இதில் 17-வது வரிசையில் உள்ள கார்சியா 6-3 , 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார். 28 வயதான அவர் முதல் முறையாக கிராண்ட் சிலாம் அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளார்.

    கார்சியா அரையிறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜபேரை (துனிசியா) சந்திக்கிறார். ஜபேர் காலிறுதி ஆட்டத்தில் 6-4 , 7-6 ( 7-4 ) என்ற நேர் செட் கணக்கில் அஜ்லா டாம்லிஜோனோ விச்சை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார்.

    28 வயதான அவர் அமெரிக்க ஓபன் போட்டியில் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் 5-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே)-மேட்டோ பெரிடினி (இத்தாலி) மோதினார்கள்.

    இதில் ரூட் 6-1, 6-4, 7-6(7-4) என்ற நேர் செட் கணக்கில் 13-வது வரிசையில் உள்ள பெரிடினியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    23 வயதான கேஸ்பர்ரூட் முதல் முறையாக அமெரிக்க ஓபனில் அரையறுதிக்கு நுழைந்துள்ளார்.

    • நடால் 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னினியை சந்திக்கிறார்.
    • எம்மா ரடுகானு முதல் சுற்றிலேயே தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் இரண்டாம் நிலை வீரரும், 22 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிங்கி ஹிஜிகடாவை எதிர்கொண்டார்.

    'வைல்டு கார்டு' வீரரான ரிங்கி முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்று அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் பின்னர் நடால் சுதாரித்து விளையாடி தொடர்ந்து 3 செட்களையும் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 4-6, 6-2, 6-3, 6-3

    நடால் 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னினியை சந்திக்கிறார்.

    செபாஸ்டியனுக்கு (அர்ஜென்டினா) எதிரான ஆட்டத்தில் 3-வது வரிசை யில் உள்ள கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 7-5, 7-5, 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.அப்போது செபாஸ்டியன் காயத்தால் வெளியேறினார். இதனால் அல்காரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    மற்ற ஆட்டங்களில் ஜான் இஸ்னெர் (அமெரிக்கா), சின்னெர் (இத்தாலி), டிமிட்ரோவ் (பல்கேரியா) போன்ற முன்னணி வீரர்கள் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 8-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) தொடக்க சுற்றில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த கோல் பிக்கை எதிர்கொண்டார்.

    இதில் பெகுலா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் ஸ்டெப் ஹென்ஸ் (அமெரிக்கா), யுலியா புதின் சேவா (ரஷியா) ஜூலி நெய்மா (ஜெர்மனி) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    11-வது வரிசையில் உள்ள எம்மா ரடுகானு (இங்கிலாந்து), முதல் சுற்றிலேயே தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறினார். பிரான்சை சேர்ந்த அலிசியா தோர்னெட் 6-3, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ரடுகானுவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதே போல 16-வது வரிசையில் உள்ள ஜெலீனா ஒஸ்டாபென்கோ (லாத்வியா), 24-ம் நிலை வீராங்கனையான அமண்டா அனிஷ்மோவா (அமெரிக்கா), 25-வது வரிசையில் உள்ள எலீனா ரைபகினா (கஜகஸ்தான்), 32-வது இடத்தில் இருக்கும் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) ஆகியோரும் முதல் சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.

    • மசோதாவை நிறைவேற்ற குடியரசுக் கட்சியின் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
    • சென்ட் சபையில் மசோதா ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்த நிலையில் தற்போது கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் இரு மசோதாக்கள், பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

    கடந்த மாதம் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை ரத்து செய்துள்ளது.

    தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    கருகலைப்பிற்கு அனுமதி அளிக்க பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் அளித்த நிலையில், சென்ட் சபையில் மசோதா ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

    சென்ட் சபையில் ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. மசோதாவை நிறைவேற்ற குடியரசுக் கட்சியின் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

    ×