என் மலர்

    நீங்கள் தேடியது "snow storm"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் பனிப்புயல் வீசியது.
    • பனிப்புயலில் 700-க்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழுந்தன.

    வாஷிங்டன் :

    அமெரிக்கா தற்போது வரலாறு காணாத அளவுக்கு மோசமான வானிலையை சந்தித்து வருகிறது. அங்கு பெரும்பாலான மாகாணங்கள் பனிப்புயல் பாதிப்பை எதிர்கொள்கின்றன.

    கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் பனிப்புயல் வீசியது. இதில் பல வீடுகள் மற்றும் அலுவலகங்களின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தது. மேலும் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சுற்றுப்பகுதிகளில் பல நகரங்கள் இருளில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இந்த பனிப்புயல் காரணமாக சான் பிரான்சிஸ்கோவின் வீதிகளில் காணும் இடமெங்கும் பனியால் மூடப்பட்டு இருந்தது. அங்கு சாலைகளில் நிறுத்தியிருந்த கார்கள் மறையும் அளவுக்கு பனி படர்ந்திருந்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஆம்புலன்சுகள் வந்து செல்வதற்கே மணிக்கணக்கில் பயண நேரம் ஆகியது. எனவே பலர் ஆஸ்பத்திரிக்கு கூட செல்ல முடியாமல் அவதியடைந்தனர். தற்போது அங்கு ஓரளவு இயல்பு நிலை திரும்பியது.

    இந்த பனிப்புயலில் 700-க்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழுந்தன. இந்த மரங்கள் விழுந்ததில் 2 பேர் பலியானார்கள். மேலும் கடும் குளிருக்கு 3 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    உயிருக்கே அச்சுறுத்தல் நிலவும் இந்த பனிப்புயல் காரணமாக பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசாங்கம் எச்சரித்து உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பனிப்பொழிவால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • அமெரிக்கா முழுவதும் பனிப்புயலுக்கு இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    நியூயார்க் :

    அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் குளிர், மின்தடை, போக்குவரத்து இடையூறு என பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டிருந்த மக்களை வீடுகளுக்குள்ளேயே முடக்கியுள்ளது பனிப்புயல். அமெரிக்கா முழுவதும் பனிப்புயலுக்கு இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் பனிப்புயல் காரணமாக உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போய் காணப்படுகிறது. நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் பனிக்கட்டிகள் மற்றும் பனி மூடிய பாறைகள் காணப்படுகின்றன.

    இதனை பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு இதேபோல் நயாகரா நீர்வீழ்ச்சி பனியில் உறைந்தபோது, கனடா நாட்டை சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவர் பனிஉறைந்த நீர்வீழ்ச்சியில் ஏறி பார்வையாளர்களை திகைக்க வைத்து நினைவுகூரத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பனிப்புயல் அமெரிக்க மாகாணங்களை புரட்டி எடுத்து வருகிறது.
    • பனிப்புயல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முடக்கியது.

    வாஷிங்டன் :

    அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் மோசமான பனிப்புயலை எதிர்கொண்டு வருகிறது. வெடிகுண்டு சூறாவளி என்று அழைக்கப்படும் பயங்கர பனிப்புயல் கடந்த இரு தினங்களாக அமெரிக்க மாகாணங்களை புரட்டி எடுத்து வருகிறது.

    இந்த புயல் தற்போது கனடாவின் கிழக்கு பகுதியிலும் மையம் கொண்டிருந்தாலும் கூட, கடுமையான காற்று, கடுமையான பனியுடன் அமெரிக்க மாகாணங்களை தொடர்ந்து தாக்கி வருவதாக அமெரிக்க வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    இந்த பனிப்புயல் அங்கு ஆண்டின் மிக முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முடக்கியது. கடும் குளிரால் மக்கள் வீடுகளுக்குளேயே முடங்கியுள்ளனர். அதோடு, பனிப்புயல் காரணமாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பல லட்சம் மக்கள் கிறிஸ்துமஸ் இரவில் மின்சாரம் இன்றி பரிதவிப்புக்கு ஆளாகினர். மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட வேறு ஊர்களுக்கு சாலை மற்றும் வான் வழியாக பயணிக்கும் கோடிக் கணக்கானவர்களின் பயணம் தடைபட்டது.

    இதனிடையே சாலை விபத்துகள் உள்பட பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் பல உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. அந்த வகையில் ஓஹியோ மாகாணத்தில் நிகழ்ந்த சங்கிலி தொடர் விபத்தில் உயிரிழந்தவர்கள் உள்பட 12 பேர் பனிப்புயலால் பலியனாதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன.

    இந்த நிலையில் பனிப்புயலால் அமெரிக்கா முழுவதும் மேலும் பலர் உயிரிழந்ததாகவும், இதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஓக்லஹோமா, கென்டக்கி, மிசோரி, டென்னசி, விஸ்கான்சின், கன்சாஸ், நெப்ராஸ்கா, ஓஹியோ, நியூயார்க், கொலராடோ மற்றும் மிச்சிகன் ஆகிய மாகாணங்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடும் பனிப்பொழிவால் வெளியில் செல்ல முடியாத சூழலில் வீட்டுக்குள் மின்சாரம் இல்லாமல் குளிரில் உறைந்து போய் கிடக்கிறார்கள்.
    • அமெரிக்காவில் பனிப்பொழிவு காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களையிழந்தது.

    அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. வெடிகுண்டு சூறாவளி என்று அழைக்கப்படும் இந்த பனிப்புயல் பல மாகாணங்களை தாக்கி வருகிறது. இதனால் தொடர்ந்து பனி கொட்டியபடியே இருக்கிறது.

    பனிப்புயலால் அமெரிக்காவில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மலைபோல் பனி குவிந்து கிடக்கிறது. ரெயில் பாதைகள், விமான ஓடுபாதைகளில் பனி கொட்டிக்கிடக்கிறது.

    இதனால் விமானங்கள், ரெயில்கள் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. பல இடங்களில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கள் ஏற்பட்டன. இதில் உயிரிழப்புகளும் உண்டாகி இருக்கிறது.

    அமெரிக்காவில் சூறாவளி பனிப்புயலுக்கு 18 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரை தாங்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். தங்கள் வீடுகளில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தாலும் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரி வரை சென்றுள்ளதால் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    மேலும் பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 17 லட்சம் பேர் மின்சாரமின்றி இருளில் தவிக்கிறார்கள். கடும் பனிப்பொழிவால் வெளியில் செல்ல முடியாத சூழலில் வீட்டுக்குள் மின்சாரம் இல்லாமல் குளிரில் உறைந்து போய் கிடக்கிறார்கள்.

    சாலைகள், மற்ற இடங்களில் கிடக்கும் பனிகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஆனாலும் இடைவிடாத பனிப்பொழிவு இருப்பதால் தொடர்ந்து பனி குவிந்துகொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் பனிப்பொழிவு காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களையிழந்தது.

    ×