search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amaravati dam"

    • ஒவ்வொரு பகுதிகளில் ஒரு யானைக்கூட்டம் என ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான யானைகள் அணைக்குள் காணப்படுகின்றன.
    • ஆண்டு தோறும் இந்த சமயத்தில் யானைகள் வருகை அதிக அளவு காணப்படும்.

    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திருப்பூர் வனக்கோட்டம் அமராவதி, உடுமலை, கொழுமம், வந்தரவு வனச்சரகங்கள் அரிய வகை விலங்குகள் வசிக்கும் பகுதியாக உள்ளது.வனப்பகுதிகளில் வறட்சி, தென்மேற்கு பருவ மழை தொடங்க தாமதம் காரணமாக காடுகளில் உள்ள ஓடைகள், சிற்றாறுகள் வறண்டு காணப்படுகின்றன.

    இதனால் குடிநீர் மற்றும் உணவுக்காக அமராவதி அணைக்கு யானைக்கூட்டங்கள் படையெடுத்து வருகின்றன. அணையிலும் நீர் இருப்பு குறைந்து புல்வெளிகளாக, நிலப்பகுதிகளாக காணப்படுகிறது. ஒவ்வொரு பகுதிகளில் ஒரு யானைக்கூட்டம் என ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான யானைகள் அணைக்குள் காணப்படுகின்றன.

    உடுமலை - அமராவதி வனச்சரகங்களுக்கு மத்தியில் உடுமலை - மூணாறு சாலை காணப்படுகிறது. இந்த சாலையில் போக்குவரத்து அதிகம் உள்ள நிலையில் காலை, மாலை நேரங்களில் யானைக்கூட்டங்கள், ஒவ்வொன்றாக இந்த சாலையை கடக்கின்றன.

    மேலும் சாலையோரத்தில் உள்ள வனப்பகுதிகளிலும் நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டுனர்கள் எச்சரிக்கையாக செல்லுமாறு வனத்துறை சோதனை சாவடிகளில் அறிவுறுத்தப்படுவதோடு வனத்துறையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ஆண்டு தோறும் இந்த சமயத்தில் யானைகள் வருகை அதிக அளவு காணப்படும். யானைகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்படுகிறது. மூணாறு சாலையிலும் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது என்றனர்.

    • மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக அமராவதி அணை அமைந்துள்ளது.
    • அணையில் படகு சவாரியும் துவக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக அமராவதி அணை அமைந்துள்ளது. பொதுப்பணித்துறை சார்பில் அணைக்கரையில் பூங்காவும் அமைக்க ப்பட்டுள்ளது. கேரளாவிலுள்ள முக்கிய சுற்றுலா தலமான மூணாறுக்கு செல்லும் வழியில் இருப்பதால் அமராவதி அணை பூங்காவுக்கும், சுற்றுலா பயணிகளிடையே முன்பு வரவேற்பு இருந்தது.

    எனவே அப்பகுதியில் முதலை பண்ணை, அரிய வகை கள்ளிச்செடிகளை உள்ளடக்கிய கள்ளிப்பூங்கா, உயிரியல் பூங்கா, மலைவாழ் மக்களுக்கான விற்பனையகம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா அம்சங்கள் மேம்படுத்த ப்பட்டது. அணையில் படகு சவாரியும் துவக்கப்பட்டது.இவ்வாறு வார விடுமுறை நாட்களிலும் கோடை விடுமுறையின் போதும் பிசியாக இருந்த அமராவதி அணை மற்றும் பூங்கா தற்போது எட்டிப்பார்க்க ஆளில்லாமல் பரிதாப நிலையில் உள்ளது. காரணம் அணை பூங்காவில் பசுமை காணாமல் போய் நீருற்றுகள், நடைபாதை, சிலைகள் அனைத்தும் உடைந்து உள்ளே செல்லவே பயப்பட வேண்டியுள்ளது.

    உயிரியல் பூங்காவில் பறவைகள், விலங்குகள் எதுவும் இல்லாமல் வெறும் கட்டடம் மட்டுமே காணப்படுகிறது. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து மாயமாகி உள்ளது.அணை பூங்காவை பராமரித்து மேம்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பிட்ட இடைவெளியில் பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்படும் குறைந்த அளவு நிதியிலும் எவ்வித முறையான பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.ஒவ்வொரு முறையும் அமராவதிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகள் தற்போது அப்பகுதிக்கு செல்வதை தவிர்த்து விடுகின்றனர்.இனியாவது திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அணை பூங்காவை மேம்படுத்தவும், படகு சவாரி விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

     உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன. அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாகக்கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெப்ப சலனத்தின் காரணமாக அணையின் நீராதாரங்களில் கோடை மழை பெய்தது. இதன் காரணமாக நீர் வரத்து ஏற்பட்டதை தொடர்ந்து போதுமான அளவு நீர்இருப்பு இருந்தது.

    இந்த சூழலில் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அதிகாரிகள் தண்ணீர் திறப்பதற்கு உண்டான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று அமராவதி ஆற்றை பிரதானமாக கொண்டுள்ள முதல் 8 பழைய ராஜவாய்க்கால்களுக்கு (ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு) பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    வரு–கிற அக்டோபர் மாதம் 13-ந் தேதி வரையில் 135 நாட்களில் 80 நாட்களுக்கு திறப்பு 55 நாட்களுக்கு அடைப்பு என்ற முறையில் உரிய இடைவெளி விட்டு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்துக்கு ஏற்றவாறு 2,074 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதன் மூலம் 7 ஆயிரத்து 520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர். 

    • அலங்கியம் முதல் கரூர் வரை 21,867 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • அக்டேபர் 13-ந் தேதி வரை 2 ஆயிரத்து 74 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

    உடுமலை  :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் கல்லாபுரம், ராகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜவாய்க்கால்களுக்கு உட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு வரும் ஜூன் 1 முதல் குறுவை நெல் சாகுபடிக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கையின் அடிப்படையில் நீர்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு கருத்துரு அனுப்பினர். அதிகாரிகள் கூறுகையில், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஜூன் 1 முதல் 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு நீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசாணை வெளியிட்டதும் நீர் திறக்கப்படும் என்றனர்.

    மேலும் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21,867 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அதேபோல் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.

    பாசன பகுதிகளிலுள்ள நிலைப்பயிர்கள் மற்றும் கரும்பு அறுவடை முடிந்ததும் கட்டை கரும்பு மற்றும் நடவு மேற்கொள்ள அமராவதி அணையில் இருந்து உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.ஜூனில் தென்மேற்கு பருவ மழை துவக்கியதும் அணை நீர் இருப்பை பொருத்து நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இன்று முதல் உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை பழைய பாசனத்திற்கு உட்பட்ட முதல் 8 பழைய ராஜ வாய்க்கால்களின் (ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) பாசனப்பகுதிகளுக்கு ஜூன் 1-ந் தேதி (இன்று) முதல் அக்டேபர் 13-ந் தேதி வரை 2 ஆயிரத்து 74 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஜூன் 1 முதல் 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு நீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
    • அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் 8 ராஜவாய்க்கால்களுக்கு உட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் கல்லாபுரம், ராகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜவாய்க்கால்களுக்கு உட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு வரும் ஜூன் 1 முதல் குறுவை நெல் சாகுபடிக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கையின் அடிப்படையில் நீர்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஜூன் 1 முதல் 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு நீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசாணை வெளியிட்டதும் நீர் திறக்கப்படும் என்றனர்.

    அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21,867 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அதேபோல் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.

    பாசன பகுதிகளிலுள்ள நிலைப்பயிர்கள் மற்றும் கரும்பு அறுவடை முடிந்ததும் கட்டை கரும்பு மற்றும் நடவு மேற்கொள்ள அமராவதி அணையில் இருந்து உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.ஜூனில் தென்மேற்கு பருவ மழை துவக்கியதும் அணை நீர் இருப்பை பொருத்து நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • புதிய ஆயக்கட்டு பகுதியில் கரும்பு பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை அமராவதி அணை புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அணையில் இருந்து பிரதான கால்வாய் வாயிலாக இந்த பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.புதிய ஆயக்கட்டு பகுதியில் கரும்பு பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது போதிய மழை பெய்யாத நிலையில் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அமராவதி அணை பாசனப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். கோடை காலத்தில் போதிய மழை பெய்யாததால் நிலைப்பயிராக உள்ள கரும்புக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.மேலும் மக்காச்சோளம் உள்ளிட்ட இதர பயிர்களும் போதிய தண்ணீரின்றி பாதிக்கப்படும் நிலை உள்ளது.அணை மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.நீர் இருப்பும் திருப்திகரமாக உள்ளது.எனவே, நிலைப்பயிர்களை காப்பாற்றவும், குடிநீர் தேவைக்காகவும், அமராவதி அணையிலிருந்து பிரதான கால்வாயில் சிறப்பு உயிர் தண்ணீர் திறக்க வேண்டும்.

    இதனால் பல ஆயிரம் ஏக்கரில் நிலைப்பயிர்கள் காப்பாற்றப்படும். மேலும் வழியோர கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடும் தவிர்க்கப்படும். இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.
    • அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது

    உடுமலை :

    உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.இந்த அணையின் மூலமாக பாசனத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதுடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணைப்பகுதியில் உள்ள இயற்கை சூழலை ரசிக்கவும் புகைப்படம் எடுத்து மகிழவும் முதலைப் பண்ணையை பார்வையிடவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அமராவதிக்கு வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை மேலும் மகிழ்விக்கும் விதமாக மகளிர் சுய உதவி குழுவினர் சார்பில் அணைப்பகுதியில் படகு சவாரியும் நடைபெற்று வருகிறது. இதற்காக பத்து நிமிட பயணத்திற்கு நபர் ஒன்றுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    அணையிலும் போதுமான அளவு நீர்இருப்பு உள்ளதால் படகு சவாரி மனதிற்கு புத்துணர்வை அளிப்பதுடன் இனிமையான நிகழ்வாக உள்ளது.கடல் போன்று காட்சி அளிக்கும் அணையில் படகில் திகிலுடன் சென்று திரும்பும் சில வினாடிகள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும். அந்த அனுபவத்தை மீண்டும் மீண்டும் பெறுவதற்காக அணைப்பகுதிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் படகில் ஏறி சவாரி செய்து வருகின்றனர். குறிப்பாக வார,கோடை,பொது விடுமுறை நாட்களில் படகு சவாரி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில் அமராவதி அணைக்கு வருகை தந்த வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் அணைப்பகுதி, பூங்கா, முதலைப் பண்ணை உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.பின்பு படகு சவாரிக்கு சென்றனர். இதையடுத்து படகில் ஏறி குடும்பத்துடன் சென்று உற்சாகமாக சவாரி செய்து மகிழ்ந்தனர். அதற்கு முன்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு படகோட்டியின் சார்பில் விழிப்புணர்வும் உயிர் கவசமும் வழங்கப்பட்டது. மேலும் திருமூர்த்தி அணையில் நீண்ட நாட்களாக இயக்கப்படாமல் உள்ள படகு சவாரியை துவக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    • அமராவதி அணையில் தற்போது 54.5 அடிக்குத் தண்ணீா் இருப்பு உள்ளது.
    • மே 10 ஆம் தேதிக்குள் தண்ணீா் திறக்க பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட அளவில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டகலெக்டர் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இதில், தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவா் ஏ.காளிமுத்து அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- தாராபுரம் வட்டம், அமராவதி பாசனப் பகுதிகளான அலங்கியம், தாராபுரம், தளவாய்பட்டிணம், கொழிஞ்சிவாடி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தற்போது மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனா். தண்ணீா் பற்றாக்குறையால் மக்காச்சோளப் பயிா்கள் தற்போது காயும் தருவாயில் உள்ளது. அமராவதி அணையில் தற்போது 54.5 அடிக்குத் தண்ணீா் இருப்பு உள்ளது. மேலும், ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை பெய்யும். ஆகவே, அமராவதி அணையில் இருந்து மே 10 ஆம் தேதிக்குள் தண்ணீா் திறக்க பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளா் எஸ்.கே.கொளந்தசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- ஊத்துக்குளி வட்டம் தளவாய்பாளையம் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் முன்பாக அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் குழாய் பதிக்கும் பணிகளுக்காக தாா் சாலைகள் தோண்டப்பட்டது. இதன் பின்னா் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் சேதமான தாா் சாலைகள் சீரமைக்கப்படாததால் விபத்துகள் ஏற்பட்டு பலா் காயமடைந்து வருகின்றனா். ஆகவே, தாா் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்..

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், இணை இயக்குநா் (வேளாண்மை) மா.மாரியப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    • திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • கடந்த ஆண்டு பெரும்பாலான நாட்கள் அணை நீர்மட்டம் ததும்பிய நிலையிலேயே இருந்தது.

     உடுமலை :

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயி லாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் வழியோர கிராமங்களின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும் உள்ளது.

    தென்மேற்கு பருவ மழை துவங்கி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் கடந்த ஆண்டு ஜூலை 15-ந் தேதி அணை நிரம்பி யது. பருவ மழை தீவிர மடைந்ததால் கடந்த ஆண்டு பெரும்பாலான நாட்கள் அணை நீர்மட்டம் ததும்பிய நிலையிலேயே இருந்தது. நடப்பாண்டு பாசனம் வழக்கத்தை விட முன்னதாகவே துவங்கியது. கடந்த ஆண்டு மே 16-ந்தேதி அணையில் இருந்து அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், 8 ராஜ வாய்க்கால் பாசன நிலங்க ளுக்கு குறுவை சாகு படிக்கு நீர் திறக்கப்பட்டது.

    மேலும் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், திருப்பூர், கரூர் மாவட்டங்க ளில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை, வலது கரையிலுள்ள 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 867 ஏக்கர் நிலங்களுக்கு கடந்த செப்ட ம்பரில் நீர் திறக்கப்பட்டு பிப்ரவரி 28-ந் தேதி நிறைவு செய்யப்பட்டது. அதே போல் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவில் உள்ள 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்களுக்கும் நீர் வழங்கப்பட்டு, பிப்ரவரி 28-ந் தேதி நிறைவு பெற்றது.

    அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணா டிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜ வாய்க்கால் பாசன த்திலுள்ள 7,520 ஏக்கர் நிலங்களுக்கு குறுவை நெல் சாகுபடிக்கு கடந்த ஆண்டு மே 16 ல் தண்ணீர் திறக்கப்பட்டு செப்டம்பர் வரை நீர் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் பருவம் சம்பா சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டு பிப்ரவரி 28-ந் தேதி வரை நீர் வழங்க அரசு அனுமதியளித்திருந்தது. இந்நிலையில் பாசன நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயி ர்களுக்கு நீர் தேவை என்பதால் பாசன காலம் நீடிக்க விவசாயிகள் வலியு றுத்தினர். அதன் அடிப்ப டையில் பழைய ஆயக்கட்டு, ராஜவா ய்க்கால்கள் பாசன நிலங்க ளுக்கு நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், நடப்பாண்டு பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் வழங்கி பாசன காலம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அணை நீர் இருப்பை பொறுத்து பாசன நிலங்களுக்கு உயிர்த்தண்ணீ ர் மற்றும் குடிநீருக்கு அரசு அனுமதி வழங்கினால் திறக்கப்படும் என்றனர்.

    • அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • கிராமங்களுக்கு குடிநீர், நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஆற்றின் வழியோரத்திலுள்ள கிராமங்களுக்கு குடிநீர், நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.இரு மாவட்ட பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு மட்டும் இம்மாத இறுதி வரை நீர் வழங்க வேண்டியுள்ளது.இந்நிலையில் அணை நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, அணை நீர் மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 51.87 அடியாகவும், மொத்த கொள்ளளவான 4,047 மில்லியன் கன அடியில், 1,269.45 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது.அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 170 கன அடியாகவும், அணையிலிருந்து பாசனத்திற்கு 90 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது.

    நடப்பாண்டு நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளதால் கோடை காலத்தை சமாளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில், அணையில் குடிநீர் தேவைக்கான நீர் இருப்பு உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரு நாட்களாக மழை பெய்து நீர் வரத்து காணப்படுகிறது. கோடை காலத்தில் பாதிப்பு ஏற்படாது என்றனர்.

    • வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கணிசமான அளவு நீர் வரத்து இருக்கும்.
    • அணையின் நீர்மட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் முழு கொள்ளளவில் இருந்து வருகிறது.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன .

    ஆண்டுதோறும் பழைய ஆயகட்டுப்பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும் புதிய ஆயகட்டுப்பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இது தவிர கல்லாபுரம், ராமகுளம் நேரடி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    மேலும் தென்மேற்கு பருவமழை காலம் அனைத்து முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் பாம்பாறு, கூட்டாறு, தேனாறுகளில் நீர் பெருக்கெடுத்து தூவானம் அருவி வழியாக அணைக்கு வருகிறது. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கணிசமான அளவு நீர் வரத்து இருக்கும்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் முழு கொள்ளளவில் இருந்து வருகிறது. தற்போது நீர்மட்டம் 89.47 அடியாக உள்ளது. 830 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 767 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    • அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக கடந்த 11ந் தேதி நிரம்பியது.
    • அமராவதி அணையில் தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 90 அடியில் 89.47 அடியாக உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தென்மேற்கு பருவ மழையால் கடந்த ஜூலை 15ந்தேதி அணை நிரம்பி தொடர்ந்து 3 மாதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக கடந்த 11ந் தேதி நிரம்பியது.தொடர்ந்து அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் மழை குறைந்து அணைக்கு நீர்வரத்து சரிந்தது.

    இதனையடுத்து அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது.இருப்பினும், வரத்தும் நீர் திறப்பும் சமமாக உள்ளதால் அணை நீர்மட்டம் கடந்த 20 நாட்களாக ததும்பிய நிலையில் காணப்படுகிறது. அணை மொத்த நீர்மட்டத்தில், அரை அடி மட்டுமே மீதம் உள்ளது. அணை முழு கொள்ளளவில் நீர் தேங்கியுள்ளதால் கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது.

    அமராவதி அணையில் தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 90 அடியில் 89.47 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 4,047 மில்லியன் கனஅடியில் 3,999.12 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 626 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்கு வினாடிக்கு ஆற்றில் 438 கனஅடி நீரும், பிரதான கால்வாயில் 250 கனஅடி நீரும், கல்லாபுரம், ராமகுளம் கால்வாய்களில் 35 கனஅடி நீர் என 723 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ×