என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Irrigation Period"
- திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
- கடந்த ஆண்டு பெரும்பாலான நாட்கள் அணை நீர்மட்டம் ததும்பிய நிலையிலேயே இருந்தது.
உடுமலை :
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயி லாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் வழியோர கிராமங்களின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும் உள்ளது.
தென்மேற்கு பருவ மழை துவங்கி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் கடந்த ஆண்டு ஜூலை 15-ந் தேதி அணை நிரம்பி யது. பருவ மழை தீவிர மடைந்ததால் கடந்த ஆண்டு பெரும்பாலான நாட்கள் அணை நீர்மட்டம் ததும்பிய நிலையிலேயே இருந்தது. நடப்பாண்டு பாசனம் வழக்கத்தை விட முன்னதாகவே துவங்கியது. கடந்த ஆண்டு மே 16-ந்தேதி அணையில் இருந்து அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், 8 ராஜ வாய்க்கால் பாசன நிலங்க ளுக்கு குறுவை சாகு படிக்கு நீர் திறக்கப்பட்டது.
மேலும் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், திருப்பூர், கரூர் மாவட்டங்க ளில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை, வலது கரையிலுள்ள 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 867 ஏக்கர் நிலங்களுக்கு கடந்த செப்ட ம்பரில் நீர் திறக்கப்பட்டு பிப்ரவரி 28-ந் தேதி நிறைவு செய்யப்பட்டது. அதே போல் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவில் உள்ள 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்களுக்கும் நீர் வழங்கப்பட்டு, பிப்ரவரி 28-ந் தேதி நிறைவு பெற்றது.
அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணா டிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜ வாய்க்கால் பாசன த்திலுள்ள 7,520 ஏக்கர் நிலங்களுக்கு குறுவை நெல் சாகுபடிக்கு கடந்த ஆண்டு மே 16 ல் தண்ணீர் திறக்கப்பட்டு செப்டம்பர் வரை நீர் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் பருவம் சம்பா சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டு பிப்ரவரி 28-ந் தேதி வரை நீர் வழங்க அரசு அனுமதியளித்திருந்தது. இந்நிலையில் பாசன நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயி ர்களுக்கு நீர் தேவை என்பதால் பாசன காலம் நீடிக்க விவசாயிகள் வலியு றுத்தினர். அதன் அடிப்ப டையில் பழைய ஆயக்கட்டு, ராஜவா ய்க்கால்கள் பாசன நிலங்க ளுக்கு நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், நடப்பாண்டு பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் வழங்கி பாசன காலம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அணை நீர் இருப்பை பொறுத்து பாசன நிலங்களுக்கு உயிர்த்தண்ணீ ர் மற்றும் குடிநீருக்கு அரசு அனுமதி வழங்கினால் திறக்கப்படும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்